தினசரி இலவசப் பகுதி ஏன் திறக்கப்படாமல் (Unlock) உள்ளது?

தினசரி இலவசப் பகுதி ஏன் திறக்கப்படாமல் (Unlock) உள்ளது?

பிரதிலிபி ‘காத்திருந்து திறக்கும்’ முறையின் மூலம் கதைகளை இலவசமாகப் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஒரு தொடரின் பூட்டப்பட்ட அத்தியாயத்தை நீங்கள் படிக்க விரும்பினால், அதற்கு முன்பு இலவசமாகத் திறக்கப்பட்ட அத்தியாயத்தை நீங்கள் முழுமையாகப் படித்து முடிக்க வேண்டும், மேலும் அடுத்த அத்தியாயம் திறக்கப்படும் நேரம் வரை காத்திருக்க வேண்டும்.

இந்த முறை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் உங்களது அடுத்த இலவச பகுதி திறக்கப்படாவிட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பகுதி விளக்குகிறது.

 

தினசரி இலவசமாக திறக்கும் முறை

ஒரு தொடரில் அடுத்த இலவச அத்தியாயத்தை திறக்க :

  1.  தொடரைத் திறந்து, கடைசியாக அன்லாக் செய்யப்பட்ட அத்தியாயத்தை முழுமையாகப் படிக்கவும்.
  2. நீங்கள் கடைசி அத்தியாயத்தை அடைந்ததும், அடுத்த பூட்டப்பட்ட அத்தியாயத்தில் ஒரு டைமர் தொடங்கப்படும்.
  3. இந்த டைமர் தினமும் ரீசெட் செய்யப்பட்டு, நள்ளிரவு 12:00 AM மணிக்கு முடிவடையும்.
  4. டைமர் 00:00:00 ஐ எட்டும்போது, அடுத்த அத்தியாயம் தானாகவே அன்லாக் ஆகிவிடும்.
  5. உங்களுடைய புதிய அத்தியாயம் படிக்கக் கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் அறிவிப்பும் உங்களுக்கு அனுப்பப்படும்.

குறிப்பு: முந்தைய அன்லாக் செய்யப்பட்ட அத்தியாயத்தை முழுமையாகப் படித்து முடித்த பிறகு மட்டுமே இந்த டைமர் தோன்றும்.

உங்கள் இலவச அத்தியாயம் ஏன் அன்லாக் ஆகாமல் இருக்கலாம் 

அடுத்த அத்தியாயம் எதிர்பார்த்தபடி அன்லாக் ஆகாமல் போவதற்கு சில பொதுவான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. உங்கள் வாசிப்பு பதிவு செய்யப்படாமை  

சில நேரங்களில், தற்காலிக நெட்வொர்க் அல்லது சர்வர் சிக்கல்கள் காரணமாக, நீங்கள் படித்த விவரங்கள் எங்கள் சர்வருடன் சரியாக இணையாமல் போகலாம்.

இந்த சிக்கலின் அறிகுறிகள்:

  • நீங்கள் அத்தியாயத்தை படித்து முடித்திருப்பீர்கள்.
  • ஆனால், அன்லாக் டைமர் தோன்றியிருக்காது.

இதைச் சரிசெய்வது எப்படி:

  1. செயலியை முழுமையாக மூடிவிடவும்.
  2. தொடரை மீண்டும் திறக்கவும்.
  3. கடைசியாக அன்லாக் செய்யப்பட்ட அத்தியாயத்தை இறுதிப் பக்கம் வரை மீண்டும் படிக்கவும்.

டைமர் அப்போதும் தோன்றவில்லை என்றால்:

  1. உங்கள் மொபைலில் பிளைட் மோடை ஆன் செய்து, பின் ஆஃப் செய்யவும்.
  2. செயலியை மீண்டும் திறக்கவும்.
  3. கடைசியாக அன்லாக் செய்யப்பட்ட அத்தியாயத்தை மீண்டும் முழுமையாகப் படிக்கவும்.
  4. உங்கள் வாசிப்பு விவரம் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டவுடன், டைமர் தோன்றிவிடும்.


2. முந்தைய பகுதி முழுமையாகப் படிக்கப்படவில்லை

முந்தைய அன்லாக் செய்யப்பட்ட அத்தியாயம் கடைசிப் பக்கம் வரை படிக்கப்பட்ட பிறகுதான் டைமர் தொடங்கும்.

இதைச் சரிசெய்வது எப்படி:

  1. தொடரைத் திறக்கவும்.
  2. கடைசியாக அன்லாக் செய்யப்பட்ட பகுதியை முழுமையாகப் படிக்கவும்.
  3. செயலியை ரீஸ்டார்ட் செய்யவும்.
  4. அடுத்த பூட்டப்பட்ட பகுதியில் டைமர் தோன்றுகிறதா என்று பார்க்கவும்.

டைமர் 00:00:00 ஐ அடைந்ததும், அடுத்த பகுதி தானாகவே அன்லாக் ஆகிவிடும்.


3. இன்றைய இலவச அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே படித்துவிட்டீர்கள்

சில நேரங்களில் வாசகர்கள் நள்ளிரவுக்குப் பிறகு புதிதாக அன்லாக் செய்யப்பட்டப் அத்தியாயத்தை படித்துவிட்டு, அதே நாளில் மற்றொரு அத்தியாயமும் அன்லாக் ஆகும் என்று எதிர்பார்ப்பார்கள்.

இதைச் சரிபார்ப்பது எப்படி:

  • தொடரின் பக்கத்தைத் திறக்கவும்.
  • அடுத்த பூட்டப்பட்ட பகுதியின் அருகில் காட்டப்படும் டைமரைச் சரிபார்க்கவும்.

தற்போது ஓடிக்கொண்டிருக்கும் டைமர் முடிந்த பிறகுதான் புதிய பகுதி அன்லாக் ஆகும்.


இன்னமும் சிக்கலை எதிர்கொள்கிறீர்களா? 

டைமர் காட்டப்படாவிட்டாலோ, டைமர் 00:00:00 ஐ எட்டிய பிறகும் அத்தியாயம்  பூட்டப்பட்டிருந்தாலோ, அல்லது மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகும் சிக்கல் தொடர்ந்தால், தயவுசெய்து சிக்கல் குறித்த விவரங்களுடன் செயலியின் வழியாக எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளவும்.

இந்தச் சிக்கலைத் தீர்க்கவும்,  உங்களுக்கு உதவுவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.







இந்தப் பதிவு உதவியதா?