எங்கள் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டால், குறைதீர்ப்பு அதிகாரி திரு. ஜிதேஷ் டோங்காவிடம் contact@pratilipi.com மூலம் புகார் செய்யலாம்.
அத்தகைய புகார்களுக்கு பின்வரும் காலக்கெடு பொருந்தும்:
1. 24 மணி நேரத்திற்குள் புகாருக்கு ஒப்புகை.
2. 15 வேலை நாட்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வு.
புகாரளிக்கப்பட்ட மீறல் அல்லது சிக்கலின் தன்மை மற்றும் அது மீண்டும் மீண்டும் நிகழும் பிரச்சனையா என்பதைப் பொருத்து, நிறுவனம், அதன் சுய விருப்பத்தின் பேரில், பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்களை மேற்கொள்ளும்:
1. பயனருக்கு எச்சரிக்கை விடுதல்.
2. மீறல் அல்லது பிரச்சனையை சரிசெய்ய பயனரை உட்படுத்துதல்.
3. பயனரின் ப்ரொஃபைலை முடக்குவது (தடுக்கப்பட்ட ப்ரொஃபைலின் உள்நுழைவு விவரங்களை பயன்படுத்தி பயனர் இணையத்தளம்/செயலியில் உள்நுழைவதை இது முடக்குகிறது. பதிப்பிக்கப்பட்டப் படைப்புகள் மற்றும் உள்ளீடுகள் உட்பட பயனரின் அனைத்து உள்ளடக்கங்களும் அகற்றப்படும். முடக்கப்படுவதற்கு முன் படைப்புகளை சேமிப்புப் பிரதி எடுத்துக்கொள்ள நிறுவனம் பயனருக்கு 24 மணிநேரம் ஒதுக்கும்).
சட்டத்தின்படி சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நிறுவனம் ஏதேனும் தகவலை வழங்க வேண்டியிருந்தால், அத்தகைய அதிகாரிகளுக்குத் தேவைப்படும் விவரங்களை நிறுவனம் பகிர்ந்து கொள்ளும். மேற்கூறியவற்றைத் தவிர, நீதிமன்றம் அல்லது தொடர்புடைய அரசு நிறுவனங்களால் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும்/அல்லது உத்தரவுகளுக்கு இணங்க 180 நாட்கள் அல்லது அதற்கும் கூடுதல் காலத்திற்கு எங்கள் பயன்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும்/அல்லது தொடர்புடைய வழிகாட்டுதல்களை மீறியதற்காக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அகற்றி அல்லது முடக்கப்பட்ட படைப்புகள் உள்ளிட்ட எந்தத் தகவலையும் நிறுவனம் பாதுகாக்கலாம்,