### அத்தியாயம் 1:
சித்தார்த் உடன் மூன்று ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்தியிருந்தாலும், அவன் ஒரு முறை கூட ரோஜாவைத் தொட்டதில்லை. சித்தார்த் தனது முதல் காதலியான ஆர்த்தியை திருமணம் செய்து கொள்ள விரும்பியதால், ரோஜாவிடமிருந்து விலகியேதான் இருந்தான்..
இறுதியாக தனது ஒருதலைப் பாசத்திற்கு பலனில்லை என உணர்ந்த ரோஜா, தனது திருமணத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தாள்.
அன்று இரவு, தனது உணர்வுகளை ஒருமுறையாவது வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தாள்.
“சித்தார்த், நான் உங்களை மூணு வருஷமா கல்யாணம் பண்ணி வாழ்ந்திருக்கேன், ஆனா நீங்க ஒரு தடவ கூட என்னைத் தொட்டதில்ல. நான் இனிமே உங்களை டிஸ்டர்ப் பண்ண போறதில்லை. நாளைக்கே கூட நீங்க உங்க முதல் காதலியோட சந்தோசமா வாழலாம்.. ஆனா எனக்கு நீங்க ஒரே ஒரு உதவி பண்ணுங்க..இத்தனை நாள் நான் உங்க மனைவியா இருந்ததுக்கு இந்த ஒரு நாளாவது எனக்கு அந்த அந்தஸ்தை தாங்க !” என்று கூறியபடி, ரோஜா அவனை நோக்கி நெருங்கி, அவனது உதடுகளில் முத்தமிட்டாள்.
அவளது முத்தங்கள் வேகமாகவும், அவசரமாகவும் இருந்தன. அவளது அனுபவமற்ற கைகள் அவனது உடலைத் தடுமாறித் தொட்டன. ஒரு முறையாவது அவனை முழுமையாக உணர வேண்டும் என்று அவள் விரும்பினாள்.
“ரோஜா, உனக்கு இவ்வளவு தைரியமா?” என்று சித்தார்த் கோபத்துடன் கத்தினான். அவனது அழகான முகம் கோபத்தில் கறுத்தது.
அவளைத் தள்ளிவிட முயன்றான், ஆனால் அவனது உடலில் எழுந்த ஆசை அவனது செயலை தடுமாற செய்தது. “இன்னைக்கு நீங்க என்ன பண்ணாலும் நான் பயப்பட போறதில்ல ...” என்று ரோஜா முணுமுணுத்தாள். அவளது கண்ணில் ஒரு துளி கண்ணீர் வழிந்தது.
சித்தார்த்தின் கோபம் அவனை ஆட்கொண்டது, ஆனால் அவனால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனது உடல் ஆசையில் தகித்தது, இறுதியில் அவன் தனது கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்தான்.
மறுநாள் ரோஜா விடியற்காலையில் எழுந்தாள். உடலில் இருந்த வித்யாசமான உணர்வுகளை அடக்கிக்கொண்டு, அவள் படுக்கையை விட்டு எழுந்து உடைகளை அணிந்தாள். பின்னர், முன்பே தயார் செய்திருந்த விவாகரத்து ஒப்பந்தத்தை எடுத்து, மேசையில் வைத்தாள். வெளியேறுவதற்கு முன், பெட்டில் இருந்த சித்தார்த்தை ஒரு முறை பார்த்தாள்.
“சித்தார்த், நான் உங்களுக்கு விடுதலை தர்றேன்.இதுக்கு மேல நம்ம தனித்தனி பாதையில போவோம். இனி நமக்கு எந்த சம்பந்தமும் இல்ல,” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
அதன் பிறகு பார்வையைத் திருப்பிக்கொண்டு, அவள் வெளியேறினாள். சித்தார்த் இல்லத்தை விட்டு வெளியேறும்போது, அவளது இதயத்தில் கசப்பும் வேதனையும் நிறைந்திருந்தது.
ரோஜா சித்தார்த்தை ஏழு ஆண்டுகளாக நேசித்திருந்தாள். டீனேஜ் வயதிலிருந்து கல்லூரி காலம் வரை அவனை காதலித்து வந்தவள், அவனை திருமணம் செய்ய வேண்டும் என்பதையே தனது மிகப்பெரிய கனவாகக் கொண்டிருந்தாள்.
ஆனால்,சித்தார்த் அவளை திருமணம் செய்தவுடன் அவளை வெறுத்தான்..சித்தார்த்தின் தாத்தா மரண படுக்கையில் இருந்த காரணத்தினால்தான் சித்தார்த்திற்கு உடனே திருமணம் செய்ய நினைத்தார்கள்... அதிர்ஷ்டவசமாக ரோஜா அவனது மனைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
அவளது பேராசை கொண்ட தந்தையும் சித்தியும் உடனடியாக இந்தத் திருமணத்திற்கு சம்மதித்தனர். தனது திருமணம் முடிந்த பிறகு தன் கணவனுடன் ஒன்றாக இருக்க போகும் இரவை எதிர்நோக்கி, ரோஜா மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள். ஆனால்,சித்தார்த் வந்தபோது, அவன் முகத்தில் வெறுப்பு தெரிந்தது.
“ரோஜா, நான் கல்யாணம் பண்ண விரும்புறது ஆர்த்தியைதான்... உன்னை நான் ஒரு போதும் கல்யாணம் பண்ண விரும்பலை. என் மனைவியா இருக்க தகுதி ஆர்த்திக்கு மட்டும்தான் இருக்கு. நீ எனக்கு பொருத்தமில்லாதவ!” என்று அவன் கூறினான்.
சித்தார்த் தன்னை காதலிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று ரோஜாவிற்கு தெரியும். இருப்பினும், ஒரு நாள் அவன் தன்னை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தாள்.
கடந்த மூன்று ஆண்டுகளில், அவள் ஒரு நல்ல மனைவியாக இருக்க முயற்சித்தாள். ஒவ்வொரு இரவும், அவன் வீட்டிற்கு வந்தவுடன் சூடான உணவு கிடைக்கும்படி இரவு உணவு தயார் செய்தாள். எவ்வளவு தாமதமானாலும், அவன் திரும்பிய பின்னரே அமைதியாக உறங்கச் செல்வாள்.
அவன் சமூக நிகழ்வுகளில் குடித்துவிட்டால், அவனை கவனமாக பராமரிப்பாள். அவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், மற்றவர்களை விட அவளுக்கு அதிக கவலை இருக்கும். குளிர்காலத்தில், அவனுக்கு சூடான நீர் குளிக்க முன்பே தயாராக இருக்கும்.. காலையில் அவனது உடைகளை ஐயன் செய்து வைப்பாள்.
ஆனால், அவன் ஒரு போதும் அவளை நேசிக்கவில்லை, நேசிக்கவும் மாட்டான்.
முன்தினம் ரோஜாவின் பிறந்தநாள். ஆனால்,சித்தார்த் ஆர்த்தியுடன் மருத்துவமனையில் இருந்தான். அப்போதுதான், தனது ஒருதலை காதல் ஒரு போதும் பலனளிக்காது என ரோஜா உணர்ந்தாள். அவனது இதயம் வேறொரு பெண்ணுக்கு சொந்தமானது. அதனால், ரோஜா விட்டுக்கொடுக்க முடிவு செய்தாள்.
காலை பத்து மணிக்கு சித்தார்த் எழுந்தான். எழுந்தவுடன் ரோஜாவை கழுத்தை நெறித்து கொல்ல வேண்டும் என்று நினைத்தான்.
சித்தார்த், SN குழுமத்தின் தலைமை நிர்வாகி. அவனது கூர்மையான புத்திசாலித்தனத்திற்கு யாரும் ஈடாக முடியாது. ஆனால், முதல் முறையாக ஒரு பெண்ணின் சூழ்ச்சியில் விழுந்துவிட்டான்.
கோபத்தில் கொதித்தவனாக, அறையைப் பார்த்தான். ரோஜா எங்கும் இல்லை. மேசையில் இருந்த ஆவணத்தை கவனித்தான். “விவாகரத்து ஒப்பந்தம்” என்று தடித்த எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
“இது என்ன?” என்று யோசித்தவாறு , அதை எடுத்தான். அவனது புருவங்கள் கோபத்தில் சுருங்கின.
“முதலில் என்னை மயக்கி என்ன அவ கூட இருக்க வச்சா.. இப்போ அவளுக்கு விவாகரத்து வேணுமா? இவ மனசுக்குள்ள என்னதான் நினைச்சுட்டு இருக்கா ? என்று நினைத்தான். ரோஜா உண்மையாகவே விவாகரத்து விரும்புவதை அவனால் நம்ப முடியவில்லை.
கோபத்துடன் கீழே சென்றவன், வேலைக்காரன் அன்புவிடம், “ரோஜாவைப் பாத்தியா?” என்று கேட்டான்.
“சார், மேடம் விடியற்காலையில தன் லக்கேஜோட வீட்டை விட்டு போய்ட்டாங்க,” என்று அன்பு பதிலளித்தான்.
அதைக் கேட்டு,சித்தார்த் ஆச்சரியத்தில் நின்றான். அவனால் ரோஜா தன் வாழ்க்கையை விட்டு சென்று விட்டாள் என்று நம்ப முடியவில்லை. அதிசயமாக அவள் சென்றது அவனுக்கு சந்தோசமாக கூட இல்லை.
……………………………………..
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு
சிட்டியின் மையத்தில் உள்ள வி.ஆர். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், ரோஜா தனது ஆய்வகத்திலிருந்து வெளியே வந்தாள். அவளது உதவியாளர் லியா , “ரோஜா மேம் உங்களை லிங்கேஸ்வரன் சார் அவரோட ஆபீஸ்ல பாக்கணும்னு சொன்னாரு,” என்று கூறினாள்.
முழு இரவு விழித்திருந்த ரோஜா, தூக்கத்தில் இருந்தாள். ஆனால், லியாவின் வார்த்தைகளைக் கேட்டவுடன் அவள் தெளிவடைந்தாள்.
“அவர் ஏதாவது சொன்னாரா? என் குட்டி ராஸ்கல்கள் மறுபடியும் ரிசெர்ச் ரிப்போர்ட்சை ஏதாவது பண்ணிட்டாங்களா ?” என்று கேட்டாள்.
“அப்படித்தான் தெரியுது,” என்று லியா பதிலளித்தாள்.
ரோஜா ஒரு திறமையான பெண். இளம் வயதில், மருத்துவ உலகின் சிறந்த பேராசிரியரின் மாணவியானாள். அவளது திறமைக்கு எப்போதும் பாராட்டு கிடைத்தது. ஆனால், அவளது குறும்பு மகன்களால் அவள் அடிக்கடி தண்டிக்கப்பட்டாள்.
“நீங்க மூணு நாளா லேப்ல இருந்திங்க , அதனால உங்க பசங்க ரெண்டு பேரும் அவர வச்சி செஞ்சுட்டாங்க. இவங்க பண்ண டார்ச்சர்ல அவருக்கு புதுசா நரை முடி வந்துடுச்சு போல,” என்று லியா கூறினாள்.
அதைக் கேட்டு, ரோஜாக்கு தலைவலி வந்தது. ஆனால், அதே நேரம் அது வேடிக்கையாகவும் இருந்தது.
ஆறு ஆண்டுகளுக்கு முன், அவள் சித்தார்த் இல்லத்தை விட்டு வெளியேறி வெளிநாடு சென்றாள். முதலில் படிப்பைத் தொடர நினைத்தவள் பின்னர் கர்ப்பமாக இருப்பதை அறிந்தாள்.
குழந்தைகளை கலைக்க வேண்டுமா என்று யோசித்தவள், மருத்துவமனையில் மனம் மாறினாள். குழந்தைகளை இழக்க மனமில்லாமல் இருந்த அவளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.இரு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. ஆனால் பெண் குழந்தை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது. ஆண் குழந்தைகளுக்கு ஆரவ் மற்றும் ஆதித்யா என்று பெயரிட்டாள்.
தனது புத்திசாலி மகன்களை நினைத்து ரோஜா மகிழ்ந்தாள். ஆனால், அவர்களது குறும்புகளால் தண்டனை கிடைக்கப்போவதை நினைத்து அவளுக்கு ஒரு பக்கம் தலைவலி வந்தது…
---
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு