சாதாரணத்திலும் சாதாரணன்... எழுதுவதில் ஆர்வம் கொண்டு அவப்போது எழுதிக் கொண்டிருப்பவன். புத்தகம் படிப்பாளனாக நிறைய புத்தகங்ளை ஒரு எழுத்தாளர் விடாமல் படிக்க ஆரம்பித்து,
இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்..
"உனக்கு என்னடா திறமை இருக்கு என நட்பு வட்டத்தாலும், உற்றார் உறவினராலும் கேலி செய்யப்பட்ட ஒருநாளில் என்னை நானே கேட்டுக் கொண்டேன். "எனக்குள் என்ன திறமை இருக்கு.?"
எழுத்து.!! ஆம், எழுத்து தான் எனக்கு கிடைத்த திறமை எனக் கண்டுபிடித்து, என்னை நானே செதுக்கி வருகிறேன். கல்லூரி படிக்கும் போது கவிதை பக்கம் தான் என் கவனம் இருந்தது. கவிதை கவிதை என்று சுற்றிக் கொண்டிருந்தவனை எழுத தூண்டியது அய்யா ஜெயகாந்தன். என் குரு. ஆனால் நான் அதிகம் எழுதி வருவது என்னோவோ திகில், த்ரில்லர் கதைகள் என்பது முரண். எழுத்து சம்மந்தமான போட்டிகளில் கலந்து கொள்வதில் பெரும்பாலும் ஆர்வம் இருந்ததில்லை, ஒருமுறை கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு சாகித்திய அகாடமி விருது பெற்ற சூழ் நாவல் எழுதிய எழுத்தாளர் தர்மன் அய்யாவிடம் கவிதை போட்டிகாக்க சிறப்பு பரிசு வாங்கிருக்கிறேன். இருளின் நிறம் சிகப்பு என்ற தலைப்பில் எனது மூன்று குறுநாவல்களைத் தொகுத்து புத்தகமாக்கிருக்கிறேன். இரண்டாவதாக எனது சிறுகதைகளை வெளிச்சமற்ற நிழல்கள் என்ற தலைப்பில் தொகுத்து புத்தகமாக்கிருக்கிறேன் என்பதை தவிர சொல்லிக்கொள்ளும் படியாக பெரிய சாதனை என்று வேறு இல்லை.
எண்ணில் குறைகள் இருக்கிறது. மறுப்பதற்கில்லை.
குறைகளை சொல்ல Massage Box வாங்க.. நிறுத்திக் கொள்கிறேன்.. நிறைகளை வெளில சொல்லுங்க..
உங்க ஆதரவு என்றைக்கும் வேணும்..
அன்புடன்
அருள் ஜெ
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு