உயிர் கொல்லி மருந்தடா நீ...

உயிர் கொல்லி மருந்தடா நீ...

இந்த கதை என் மற்ற கதைகளை விட மாறுபட்டது. வழமை போல் நல்ல உள்ளங்கள் கதையை படித்து விட்டு கருத்தை கூறுங்கள்.18+ என்றே சொல்லலாம்.


தன் கடந்த காலத்தை மறைத்து தன் ஆண்மையை நிரூபிக்க நாயகியை திருமணம் செய்யும் நாயகன். அவளை குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாக மட்டுமே பார்ப்பவன்.

சராசரி ஆசைகளுடன் திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் நாயகி. அவள் ஆசைகள் அனைத்தும் பொய்த்து போகிறது. நாயகனின் கடந்த காலம் அறிவாளா?

நாயகன் மனம் மாறி அவள் மேல் காதல் கொள்வானா?.


திருமணம் நடை பெறுவதற்கான எந்த அடையாளமும் இல்லை அந்த வீட்டில். ஓர் குடிசை வீட்டு வாசலில் நடைபெறும் திருமணம். அங்கு கூடி இருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் மொத்தமே பதினைந்து நபர்கள் தான் இருப்பார்கள்.


தாலி கட்ட வேண்டியவனோ சாதாரண சட்டை, பேண்டில் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் திருமணம் குறித்த சந்தோஷம் இல்லை அதற்க்கு மாறாக எரிச்சல் முட்டி நின்றது.


ஆறடி ஆண் மகன் மீசை இல்லாத தமிழ் மகன். படித்தவன் என்பது அவன் உடை நாகரீகத்தில் தெரிந்தது.


அவனை சுற்றி நின்றவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் படிக்காத மக்கள். சின்ன சிறு பெண்ணை அழைத்து வந்து நாயகன் அருகில் நிற்க்க வைத்ததும் அவள் முகம் கூட பார்க்காது ஓரமாக கிடந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டி விட்டான்.


அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர் இப்போது என்ன நடந்தது என்று. ஏன் மனபெண்ணே உணரும் முன்பே தாலி கட்டியவன் தன் அருகில் நின்ற தன் தம்பியிடம் சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருங்க என்றவன் தான் தாலி கட்டியவளை எதோ பொம்மையை இழுத்து செல்வது போல் இழுத்து சென்றான்.


அவளின் தாயும், தங்கையும் அழுதபடி விடை கொடுத்தனர். நாயகி ரொம்ப சின்ன பெண் இல்லை 20 வயது முடிந்து விட்டது. ஆனால் நாயகன் அருகில் நிற்க்கும் போது குழந்தையாக தெரிவாள்.
அதுவும் நாயகனின் இடுப்பு வரை மட்டுமே இருக்க கூடியவள். அவனை விட நிறம் கம்மி மங்களான நிறம்.


அழுதபடி காரில் ஏறிய மகளை பார்த்து கண்ணீர் சிந்த கை அசைத்தனர் தாயும்,மகளும். அவளின் அம்மா அழுதபடி
பத்திரமா இரு பானு என்று கூறியது அவள் காதில் விழும் முன்பே கார் சீரி பாய்ந்தது.


மாப்பிள்ளை சார்பாக வந்த சிலரும் திரும்பி பார்க்காமல் கிளம்பி விட்டனர்.

காருக்குள் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் பானுமதி. அவள் கண்ணீர், அழுகை அருகில் அமர்ந்து இருந்தவனை கொஞ்சமும் அசைத்து பார்க்கவில்லை.


கொஞ்ச நேரம் வரை அமைதியாக இருந்தவன் ஏய் இப்போ வாய மூட போறியா இல்லையா எதுக்கு இப்போ எழவு வீட்டுல ஒக்காந்து அழற மாதிரி அழற ஒப்பாரிய நிறுத்து எனக்கு வெறுப்பாகுது என்று கத்தவும் பானு உடல் நடுங்கியது.

இரு கையால் வாயை அழுந்த மூடிக் கொண்டவள் அழுகையை வாய்க்குள் அடக்கி கொண்டாள்.


அவனின் கார் நேராக சென்று நின்றது பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கொண்ட குடியிருப்பில். முதலில் இறங்கியவன் சீக்கிரம் இறங்கு என்று கத்தினான்.


பானுக்கு கார் கதவை திறக்க தெரியாமல் தவித்து கொண்டிருக்க பட்டென்று கதவை திறந்தவன் அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.


குடியிருப்பில் ஒருவர் பிரச்சனையில் மற்றவர் தலையிட மாட்டார்கள் அவரவர் வேலையை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். அப்படி இருந்தும் லிஃப்ட் நுழைந்ததும் பானுக்கு உதறல் எடுத்தது அவளுக்கு இதில் எல்லாம் சென்று பழக்கம் கிடையாது.


அருகில் நிற்பவன் கணவன் தானே என்ற தைரியத்தில் அவன் கையை பிடித்து விட்டாள். எதோ அசிங்கத்தை உதறி தள்ளுவது போல் அவளை உதறி தள்ளியவன் அவள் கை பட்ட இடத்தை கர்ச்சீப் வைத்து துடைத்துக் கொண்டிருந்தான் முட்டாள்.


இவ்வளவு நேரம் அதே கை பிடித்து தான் இழுத்து வந்ததை மறந்து விட்டான் போல. ஒன்பதாவது தளம் வந்ததும் வா என்று வெளியே வர அவனுடன் வேலை செய்யும் ஒருவர் வெற்றியையும் அவன் அருகில் நின்ற பானுவையும் பார்த்து விட்டு என்ன வெற்றிமாறன் சார் என்று ஆரம்பிக்கும் போதே வெற்றி திரும்பி முறைத்ததில் வாயை கம் போட்டு ஒட்டிக் கொண்டு சென்று விட்டான்.


வெற்றி வீட்டை திறந்ததும் வீடு பளிச்சென்று வரவேற்றது இருவரையும்
பானுமதி தயங்கி தயங்கி உள்ளே சென்றாள். வெற்றி வேகமாக ஒரு அறைக்குள் புகுந்து கொண்டவன் குளித்து உடை மாற்றி கிச்சன் சென்று ஒரு பிரட் எடுத்து வந்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.


அங்கு ஒருவள் நிற்பதே அவன் கண்ணுக்கு தெரிய வில்லையா? இல்லை தெரியாதது போல் நடிக்கிறானா?தெரியவில்லை.

ரொம்ப நேரமாக நின்றவள் வாயை திறக்காமல் அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள் இரண்டு மணி நேரம்.


கம்ப்யூட்டரில் தன் வேலையை முடித்து விட்டு நிமிர்ந்து அங்கு நின்றுக் கொண்டிருப்பவளை பார்த்தவன் திரும்பி கடிகாரத்தை பார்த்தான் அதில் மணி மாலை 5 காட்டியது. தன் கம்பியூட்டரை மூடி வைத்தவன் நீ போய் சுத்தமா குளிச்சிட்டு தயாரா இரு.


உள்ள புடவை இருக்கு நல்லா சோப்பு போட்டு குளி எனக்கு வியர்வை நாத்தம் வந்தா பிடிக்காது. தலைல இருக்க எண்ணெயை சுத்தமா எடுத்துடு பூலாம் வைக்காத அந்த ரூம்க்கு போய் குளிச்சிட்டு தயாரா இரு என்றவன் அவ்வளவு தான் என்பது போல எழுந்து சென்று விட்டான்.


மாறன் கை காட்டிய அறைக்குள் சென்றவள் குளியல் அறையை கண்டு பிடித்து உள்ளே சென்றவலுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவள் எப்போதும் பக்கெட்டில் தண்ணீர் வைத்து குளித்து பழக்க பட்டவலுக்கு மாடன் பாத்துரூமில் எப்படி பயன் படுத்துவது என்று தெரியாமல் எதை எதையோ அழுத்திக் கொண்டு கிடந்தாள்.


ஒரு கட்டத்தில் பானுக்கு  அழுகை தான் வந்தது. அவள் கண்ணில் இருந்து வந்த தண்ணீர் கூட அந்த ஷவரில் வர வில்லை. அழுது கொண்டே அது தான் ஷவர் என்று தெரியாமல் அதில் தலை சாய்க்க கை பிடி மீது தலை அழுத்தி தண்ணீர் வந்தது.

தொடரும்.....

பிரதிலிபி தோழமை எழுத்து சவாலுக்கு எழுதும் கதை. ஒருநாள் விட்டு ஒரு நாள் வரும். இதில் 600 வார்த்தைகள் வரும்.
ராட்சசன் முடிந்ததும் தினம் ஒரு பதிவு வரும் மக்களே. இதில் எந்த லாஜிக்கும் இருக்காது.

முக்கிய அறிவிப்பு:

என்னுடைய அனுமதி இல்லாமல் உங்களின் விருப்பத்திற்காக என் கதைகளை பயன்படுத்த கூடாது. உங்கள் யூடியூப் சேனலிலோ, blog போன்ற எதிலும் பயன்படுத்த அனுமதி கிடையாது. என் உழைப்பு முழுமையும் நீங்கள் வசிப்பதால் சொந்தம் கொண்டாட வேண்டாம். நல்ல உள்ளங்களுக்கு இந்த பதிவு கிடையாது. சில திருடர்களுக்கு தான். என் கதையை திருடி இருப்பதை கண்டு பிடித்தால் சட்டபடி ஆக்ஷன் எடுப்பேன். நன்றிகள். தெரியாமல் செய்து விட்டேன். கதை பிடித்ததால் செய்து விட்டேன் என்று விளக்கம் கொடுக்காதீர். தொடர்ந்து என் கதைகள் திருடபடுவதால் இந்த சிறு துணுக்கை கதையுடன் இணைக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

தேடலுக்கான முடிவு இல்லை
" உயிர் கொல்லி மருந்தடா நீ... " - படைப்பை ரேட் செய்யுங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    03 நவம்பர் 2024
    காசு கொடுக்க வழியில்லாதவங்க எப்படி என்ன பண்றது எந்த வழியில் கதை படிக்கல அப்படிங்கறது தெளிவா பதிவிடுங்கள் மற்றபடிக்கு கதைகள் மிகவும் அருமையாக உள்ளது படிக்க ஆவலாக உள்ளது நான் நான் புத்தகம் படித்து வெகு காலம் ஆகிவிட்டது இப்பொழுது புத்தகம் படிக்க வழி இல்லையே என்று இருந்தபோது இந்த ஆப்பை கண்டேன் ஆனால் கதை மிகவும் அருமையாக உள்ளது கட்டணம் என்பதை என்னால் இயலாத ஒன்று அதனால் தான் இதை மீண்டும் மீண்டும் நான் தெளிவுபடுத்துகிறேன் கட்டணத்தை தடை செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் மற்றவர் சாமானிய மக்களும் பயிலும் வண்ணம் இருக்கும் என்று நான் கருதுகிறேன் இதுகுறித்து தாங்கள் கருத்தினை கட்டாயம் பதிவிடுங்கள் எனக்கு இந்த தொகை மிகவும் அதிகமானது அதனால் தான் போகிறேன் மேலும் நாங்கள் கதை படிக்க ஆரம்பிக்க இந்த கட்டணத்தை முற்றிலும் நீக்கி உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி நண்பர்களே உங்கள் பதிலை அறிய ஆவலாக உள்ளது உங்கள் பதிலை கட்டாயம் இப்பதி விடுங்கள் நண்பரே மிக்க நன்றி
  • author
    vishwanathan c
    23 ஜனவரி 2024
    கதை அருமை உன்னால் ஆசையைக் காட்டி மோசம் செய்வதுபோல் உள்ளது ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும் போது சப்ஸ்கிரைப் செய்ய சொல்கிறீர்கள்
  • author
    Jegan Mini
    16 பிப்ரவரி 2023
    உங்களின் அனைத்து நாவல்களும் மிகவும் அருமையாக உள்ளது நான் விரும்பி படிப்பேன்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    03 நவம்பர் 2024
    காசு கொடுக்க வழியில்லாதவங்க எப்படி என்ன பண்றது எந்த வழியில் கதை படிக்கல அப்படிங்கறது தெளிவா பதிவிடுங்கள் மற்றபடிக்கு கதைகள் மிகவும் அருமையாக உள்ளது படிக்க ஆவலாக உள்ளது நான் நான் புத்தகம் படித்து வெகு காலம் ஆகிவிட்டது இப்பொழுது புத்தகம் படிக்க வழி இல்லையே என்று இருந்தபோது இந்த ஆப்பை கண்டேன் ஆனால் கதை மிகவும் அருமையாக உள்ளது கட்டணம் என்பதை என்னால் இயலாத ஒன்று அதனால் தான் இதை மீண்டும் மீண்டும் நான் தெளிவுபடுத்துகிறேன் கட்டணத்தை தடை செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் மற்றவர் சாமானிய மக்களும் பயிலும் வண்ணம் இருக்கும் என்று நான் கருதுகிறேன் இதுகுறித்து தாங்கள் கருத்தினை கட்டாயம் பதிவிடுங்கள் எனக்கு இந்த தொகை மிகவும் அதிகமானது அதனால் தான் போகிறேன் மேலும் நாங்கள் கதை படிக்க ஆரம்பிக்க இந்த கட்டணத்தை முற்றிலும் நீக்கி உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி நண்பர்களே உங்கள் பதிலை அறிய ஆவலாக உள்ளது உங்கள் பதிலை கட்டாயம் இப்பதி விடுங்கள் நண்பரே மிக்க நன்றி
  • author
    vishwanathan c
    23 ஜனவரி 2024
    கதை அருமை உன்னால் ஆசையைக் காட்டி மோசம் செய்வதுபோல் உள்ளது ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும் போது சப்ஸ்கிரைப் செய்ய சொல்கிறீர்கள்
  • author
    Jegan Mini
    16 பிப்ரவரி 2023
    உங்களின் அனைத்து நாவல்களும் மிகவும் அருமையாக உள்ளது நான் விரும்பி படிப்பேன்