தூரத்திலிருந்து பஞ்சுப்பொதி போன்று பறந்து வரும் மேகங்கள், தன்னைக் கடக்கும் போது புகையாக மாறிவிடுவதை பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள் மாயா...
பிறந்து வளர்ந்தது அனைத்தும் பக்கத்தில் உள்ள சேலத்தில் தான் என்றாலும், ஏற்காட்டுக்கு வரும் வாய்ப்பு அவளுக்கு மிக மிக அரிதாகவே அமைந்திருந்தது.... அவள் வீட்டில் இருந்து பார்த்தாலும் ஏற்காடு மலை தெரியும், மலையில் தொங்கிக் கொண்டிருப்பது போன்ற அந்த வெண்ணிற மாளிகையும் தெரியும்....
அவள் தினந்தினம் ரசித்த அதே மலையில் வேலை கிடைக்கவும், படிப்புக்கு சம்பந்தமே இல்லை என்றாலும் உடனே தலையாட்டிக் கொண்டு வந்து விட்டாள்....இந்த வேலையை வாங்கித் தந்ததற்காக மேகாவுக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும் என்று மனதினுள் ஆயிரத்தோராவது முறையாக நினைத்தவாறே பிளாஸ்க்கிலிருந்து டீயை கப்பில் ஊற்றினாள் மாயா....
"என்னடி அதிகாலைல இந்த நடுங்குற குளிர்ல டீ கப்போட வேடிக்கை பார்க்க வந்துட்டியா... அப்படி என்னதான் இந்த குளிர்ல ரசிப்ப..." என்று கதவைத் திறந்தவாறு கேட்டுக் கொண்டே மாயா அமர்ந்திருந்த பெரிய பால்கனிக்குள் வந்தாள் தீப்தி - மாயாவின் கல்லூரித் தோழி..
"அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது டி..! எத்தனை வருஷம் ஆசை தெரியுமா....? இந்த மேகங்களுக்குள் உட்கார்ந்து சாப்பிடணும்னு... கீழ இருந்து பாக்குறவங்களுக்கு இப்போ மலையே தெரியாது இல்ல... நாம இப்படி டீ குடிப்போம்னு எல்லாம் அவங்களுக்கு தெரியாதுல்ல" என்று கூறி கலகலவென்று சிரித்தாள் மாயா....
"ஆமா கீழ இருக்கவங்களுக்கு மேல மனுஷங்க இருக்காங்கன்னு தெரியாது பாரு... உன் அறிவுல கொள்ளிய வைக்க..." - என்று கூறிக் கொண்டே தனக்கான டீயை ஊற்றினாள் தீப்தி.
"அதெல்லாம் தெரியாதுடி... நான் எத்தனை நாள் அதெல்லாம் புரியாம கீழே இருந்து இந்த மலையைப் பார்த்து ரசிச்சிருக்கேன் தெரியுமா..! அதனாலதான் இங்கே வேலை கிடைச்சதும் ஓடி வந்துட்டேன்... வாழ்க்கையில என் அக்கா எனக்காக பண்ணின ஒரே நல்ல காரியம் இதுதான்.." என்று சிரித்தவாறு கூறினாள்...
"அது தான்டி எனக்கு சந்தேகமா இருக்கு.. உன் அக்கா மேகா -வாவது உனக்கு நல்லது பண்றதாவது...? "
"எப்பவுமே ஒருத்தி கெட்டவளா இருப்பாளா..? சும்மா அவள குறை சொல்லாதடி.. ஆயிரம் இருந்தாலும் அவ என்னோட அக்கா.... என் மேல பாசம் இல்லாமலா எனக்கு பிடிச்ச மலையில வேலை வாங்கி தருவா...?"
"சரி விடு... உன் அக்கா இந்த முறையாவது உனக்கு நல்லது பண்ணினா சரிதான்.. வேலை எப்படி போகுது அத சொல்லு..."
"படிப்புக்கே சம்பந்தம் இல்லாத வேலைடி... எம் எஸ் சி ஹார்ட்டிகல்ச்சர் படிச்சிட்டு சூப்பர் மார்க்கெட்ல சூப்பர்வைசர் வேலைன்னா கடுப்பாதானே இருக்கும்.. ஆனாலும் அங்க டீ குடிக்கக்கூடிய இடம் இருக்கே அடடா.. அதுக்காகவே அங்க வேலை பார்க்கலாம்..." என்று கிளிக்கி சிரித்தாள் மாயா..
"அப்படி என்னடி .அதிசயம்...?"
'நான் எப்பவும் சொல்லுவேன் இல்லடி..! என் வீட்டு பின்னாடி உட்கார்ந்து பார்த்தா, ஏற்காடு மலையில தொங்குறது மாதிரி ஒரு வெள்ளை மாளிகை தெரியும்னு ..."
"ஒ அங்கதான் நீ வேலை பாக்குறியா..?"
"அவசர குடுக்க... நான் வேலை பார்க்கிறது சூப்பர் மார்க்கெட்.. அது என்ன சூப்பர் மார்க்கெட்டா ..? மாளிகைடி மாளிகை...! அந்த மாளிகை இருக்கிற மலையுச்சி, எங்க சூப்பர் மார்க்கெட்டுக்கு ரொம்ப பக்கத்துல இருக்குது.. அங்கே இருந்து பார்த்தா அந்த மாளிகை, அதோட சுவர் எல்லாம் அழகா தெரியுது.... ஒரு நாள் போய் பார்க்கணும் டி.. எப்படி தான் தொங்குறது போல கட்டி வச்சிருக்காங்கன்னு..."
"அய்யோடி நான் கிளம்புறேன்... காலேஜ்ல படிக்கிறதுல இருந்து உன் மாளிகை கதையை, கேட்டு கேட்டு காது வலிக்குது... நீ தனியா இருந்து ரசிச்சுக்க. எங்க எஸ்டேட்டுக்கு புதுசா மேனேஜர் வேற வராதா சொன்னாங்க.. சிடுமூஞ்சி வேறயாம்... உன் கதையை ராத்திரி வந்து கேட்கிறேன்..." என்று கூறிக்கொண்டு எழுந்தாள் மாலினி..
"ஓகே ஓகே ஈவினிங் சீக்கிரமா வந்துடு... டீ குடிக்க போகலாம்... நானே வாங்கி தரேன்... " என்று சிரித்தவாறு கூறிக்கொண்டே மேகங்களை ரசித்தவாறு நேற்று நடந்ததை அசைபோட தொடங்கினாள் மாயா...
சூப்பர் மார்க்கெட் என்றதும் அவனும் நினைவுக்கு வந்து விட்டான்... அவன் ஜீவா... அவள் வேலை பார்க்கும் 'சேர்வராய்' சூப்பர் மார்க்கெட் GM... மாயா அங்கு வேலைக்கு சேர்ந்த புதிதில் அவன் அங்கு கிடையாது... இப்பொழுது தான் ஒரு மாதமாய் வரத் துவங்கியுள்ளான்.. இவளைப் பார்த்ததும் அவன் பார்வை மாறுவதை, குறுகுறுப்புடன் பார்த்துக் கொண்டே சென்றிருக்கிறாள் மாயா..
இப்பொழுது ஒரு வாரமாய் கொஞ்சம் அதிகமாகத்தான் உரிமை எடுத்துக் கொள்கிறான்.... நேற்று கூட அப்படித்தான் மேனேஜர் அறைக்கு ஸ்டாக் கணக்குகளை கொடுக்க சென்றால், அங்கு மேனேஜருக்கு பதில் இருந்தவன் இவன்...எப்பவும் போல தன்னுடைய சுட்டித் தனத்துடன் "குட் மார்னிங் ஜீவா சார்..." என்று கூற,
"வாங்க மிஸ் மாயா.. உட்காருங்க... டீ சாப்பிடலாம்.." என்று சகஜமாக கூறினான்...
டீ என்றதும் நாக்கு அலைபாய கட்டுப்படுத்திக்கொண்டு சிரித்தவள், "ஐயோ இல்ல சார் நான் மேனேஜர் இருப்பாருன்னு வந்தேன்... ஸ்டாக் கொடுக்கணும் நான் கிளம்புறேன்... என்று திரும்ப -
"ஏன் அந்த ஸ்டாக்க நான் பார்க்க கூடாதா..." என்று ஆழ்ந்த குரலில் தலையை சரித்து பார்த்தவனிடம்..
"ஐயோ சார்... இது உங்களோட சூப்பர் மார்க்கெட்... நீங்க பாக்க கூடாதுன்னு நான் சொல்லுவேனா..." என்று அமர்ந்து ஃபைலை பார்த்துக் கொண்டே ஸ்டாக் கணக்கை கூற தொடங்கினாள்...
அவனோ கையிலிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்...
குறுகுறுவென்று பார்ப்பதை அவள் உணரும் முன்பே எழுந்து வந்தவன் டேபிளில் சாய்ந்து, அவளை நெருங்கி நின்று பார்க்க, சிறிது நேரத்தில் மாயாவுக்கு பேச்சு நின்று போனது ...
"கியூட்டா தான் இருக்க... என்கூட டேட் பண்றியா..."
அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தவளின் நாடியை பிடித்து "இப்படி ஷாக் ஆகி திரு திருன்னு முழிக்காத ... எப்பவும் போல க்யூட்டா துரு துருனு முழி பாப்போம்... என்று கூற அதிர்ச்சியில் எழுந்து நின்றாள் மாயா...
அவனோடு முட்டுவது போல் நிற்க முடியாமல் வேகமாக பின்னே நகர்ந்தாள்.. நாற்காலி தட்டி தடுமாறியவளின் இடையில் கைவிட்டு அணைத்தவன், அதே வேகத்தில் அவள் முகத்தை நோக்கி குனிய, வேகமாக தள்ளி விட்டாள்... அவள் நேரம் புடவையில் வேறு சென்றிருந்தாள்.. முதல் முதலாய் ஒரு ஆணின் கரம் வெற்றிடையில், பட்டதால் உடம்பெல்லாம் சிலிர்த்து போனது மாயாவுக்கு... நெஞ்சுக்குள் பனிக்கட்டி மலையே வந்து அமர்ந்து கொண்டது ...
இன்னும் வேகமாக இழுத்து அணைத்தவன், அவள் திமிருவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவளை விட்டான்... "என்ன இவ்வளவு ஜெர்க் ஆகுற... உன்ன ரொம்ப புடிச்சிருக்கு... என்கூட டேட் பண்றியான்னு கேட்டேன் அவ்வளவுதானே..."
மாயாவுக்கு அதிர்ச்சியில் குரல் வெளியிலேயே வரவில்லை... எல்லா ஆண்களையும் இரண்டு எட்டு தள்ளி நின்று பேச அனுமதிப்பவள், இவனின் எதிர்பாராத தொடுகையிலும், பேச்சிலும் அரண்டு போனாள்...
ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "நீங்க கிண்டல் தானே பண்றீங்க... எனக்கு தெரியும் சார்.. நான்.. நான் மேனேஜர்கிட்டயே ரிப்போர்ட் கொடுத்துக்கிறேன்.." என்று கூறிக்கொண்டு வேகமாக வெளியே வந்து விட்டாள்...
இப்பொழுதும் உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது... "அவன் என்ன பைத்தியமா... இத்தனை பேர் இருக்குற இடத்துல அவ்வளவு கூலா வந்து கேட்குறான்.." என்று யோசித்தாள்...
"மாயா இந்த அளவு யோசிக்கிறது உனக்கு செட் ஆகாது... போய் கிளம்புற வழிய பாரு..." என்று மனசாட்சி கூற தலையை உலுக்கி கொண்டே எழுந்து உள்ளே சென்றாள்...
மாயா, தீப்தி இருவரும் கல்லூரி தோழிகள்.. அவர்கள் தங்கியிருப்பது மலையோரத்தில் இருக்கும் வீட்டில்.. கீழே வீட்டின் உரிமையாளர்கள் ஜெயக்குமார், பாரதி தங்கியுள்ளனர்..... மாடியில் பெரிய பால்கனியுடன் கூடிய ஒற்றைப் படுக்கையறை பகுதியை தோழிகள் இருவரும் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.. வீட்டின் உரிமையாளர் தீப்தியின் சித்தப்பா என்பதால் பயமின்றி இருவரின் பெற்றோரும் அனுப்பிவிட்டனர்..
வீட்டிற்குள் -
"Golden Sparrow என் நெஞ்சில் Arrow..
நீ இல்லாத Life ரொம்ப Sorrow...
Mask of Sorrow...
நம்ம பையன் தான் ஹீரோ...
Singing Duet வேற யாரோ..."
பாடலை டிவியில் ஓடவிட்டுக்கொண்டே கிளம்பி கொண்டிருந்தாள் தீப்தி.....
"காலையிலேயே ஒரு Melody Song போடக்கூடாதாடி...! " என்று கேட்டவாறே உள் நுழைந்தாள் மாயா...
"தொடங்கிட்டியா? ஒரு Beat Song கேட்க விட்டுராத ... சரி கிளம்பு உன்னை Drop பண்ணிட்டு நான் போறேன்... நீதான் இந்த குளிர்லையும் காலையிலேயே குளிச்சிட்டு தானே கையில டீ கப்பை எடுப்ப..."
"பழகிடுச்சுடி தீபு... நீ பல்லே தேய்க்காம டீ குடிக்கிற... நான் ஏதாவது சொல்றேன்னா..."
"உடனே என் கால வாரிடுவியே.. சரி வேலை எப்படி போகுது.. உன் பாஸ் இன்னும் ஜொள்ளு விட்றானா... அழகழகா டிரஸ் பண்ணிட்டு போற..."
"அது ஜொள்ளு எல்லாம் இல்லடி... அப்படியே ஒரு லுக்கு ..." என்று யோசித்தவாறே மாயா கூற...
"நீ தான் காலேஜ் படிக்கிறப்ப எவன் பேசினாலும் அடிக்கப்போவியே... இவனை எப்படி விட்டு வைக்கிற...?"
"அது காலேஜ் தீபு... இது வேலை... அதுவும் பாஸ் வேற... கொஞ்சம் Handsome ஆ வேற இருக்காரு..." - என்று கூறியவாறே கண்ணை சிமிட்டி சிரித்தாள்..
❤️கள்ளம் கபடு தெரியாத மாயா அவளை சுற்றி பின்னப்பட்டு கொண்டிருக்கும் மாய வலையைப் பற்றி எப்போது அறிவாள்....?💔💔💔
💖💖💖💖
Hi Dears😍😍😍
என்னோட இரண்டாவது நாவல் இது ... லிவிங் டு கெதர் ரிலேசன்ஷிப்பை இப்போ நிறைய 2K Kids ஏத்துக்க தொடங்கிட்டாங்க... அதை வெறுக்கிற ஒரு ஹீரோயின் படுற அவஸ்தைகள் தான் கதை..
என்னோட முதல் நாவல் "இந்த காதல் பொல்லாதது" -க்கு நீங்க தந்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுங்க🥰🥰🥰...
⚠️ Disclaimer
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ கதை.
ஹீரோவின் செயல்கள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்; சில இடங்களில் கோபத்தையும் ஏற்படுத்தலாம்...
⚠️ ஆன்டி-ஹீரோ கதைகளில் உடன்பாடில்லாத வாசகர்கள் முதலிலேயே வாசிப்பதைத் தவிர்த்துவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மன அமைதியும் நேரமும் மிக முக்கியம்!
ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாசகர்கள் இந்தக் கதையை ரசித்து படித்திருக்கிறார்கள்... கதையை கதையாகப் படித்து ரசிப்போம்! ❤️
அப்புறம் எப்பவும் போல தொடர்ந்து படித்து Support பண்ணுங்க💞💞💞
அன்புத்தோழி
Vanathi Faizal🥰🥰
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு