முல்லை -1

முல்லை -1




"ம்மா இவ என்னை அடிக்கிறா" என்றபடி ஓடி வந்தான் அமரேந்தர், அவனை துரத்தி வந்தாள் அம்ரிதா...

இரண்டும் அருந்த வாலு, இவர்களோடு பதினாறு வருடமாக போராடியே திவ்யா களைத்து போனார்..

இருவரும் இரட்டையர்கள் அமர் முன்னே சென்றாள் ரிதா பின்னே செல்வாள், கீரியும் பாம்பும் போல தான், பார்ப்பவர்களுக்கு தெரியும் ஆனால் அவர்கள் அப்படியில்லை...

பத்தாம் வகுப்பு பரீட்சை முடிந்து வீட்டில் திவ்யா உயிரை இருவரும் வாங்கி கொண்டு இருக்கிறார்கள்...

அவர்களின் சேட்டையை ரசித்தபடி அமர்ந்திருந்தார் சுரேந்தர், இரண்டு வருடம் முன்பு நடந்த ஒரு கோர விபத்தில் அவரது இடது கை முற்றிலும் போய் விட்டது..

அதனால் வீட்டில் தான்  இரண்டு வருடமாக இருக்கிறார், அதிகம் வேலை செய்ய விரும்பாத சுரேந்தருக்கு நடந்தது ஒன்று அவரை அவ்வளவாக பாதிக்கவில்லை....

அந்த குடும்பத்தை இப்போது தாங்கி பிடிப்பவள் துர்கா தான், ஆம் சுரேந்தர் திவ்யாவின் மூத்த மகள் மேகதுர்கா..

அவளது வயதுக்கும் வேலைக்கும் சம்மந்தமே இருக்காது, படிப்பில் படுசுட்டி, படித்து முடித்ததுமே, இன்டெர்வியூ சென்று அதில் முதலிலேயே செலக்ட் ஆகி இன்று அந்த கம்பெனியில் அவள் சொல்வது தான் சரி..

துர்கா வேலையை யாரும் மீண்டும் சரிபார்க்க தேவையில்லை, அத்துணை நேர்த்தி இருக்கும் இந்த வயதிலே...

ஆம் இந்த வயது தான் இருபத்து நான்கு வயதில் கோயம்புத்தூரில், ஒரு பெரிய செல்போன் நெட்ஒர்க் கம்பெனியில் ஆடிட்டர் பணியில் இருக்கிறாள்..

அவர்கள் வீட்டில் கூட எதிர்பார்க்காத பணிதான் துர்காவிற்கு, ஆம் யாருமே எதிர்பார்க்கவில்லை அவள் இத்துணை பெரிய வேலையில் அமர்வாள் என்பதை ..

அவள் வேலைக்கு சென்ற ஒரு வருடத்திலே தனியாளாக வீடு வாங்கிடும் அளவுக்கு வசதி வந்தது....

துர்கா வேலை முடிந்து மாலை வீடு வருகையிலே தம்பி தங்கையின் சத்தம் கேட்டது , தனது ஆக்ட்டிவாவை கொண்டு வந்து நிறுத்தியவள் இருவரையும் முறைத்தாள் ...

ஹையோ துர்காக்கா என்றபடி இருவரும் கப்சிப் ஆனார்கள் , துர்காவிற்கு வீடு அமைதியாக இருக்க வேண்டும் அதற்காக அவள் தனிமை விரும்பி யாருடனும் பேசமாட்டாள் என்றெல்லாம் கிடையாது ..

அவள் அமைதியயை அதிகம் விரும்புவாள் , நம் வீட்டுக்குள் பேசுவது அடுத்த வீட்டில் கேட்க கூடாது அவ்வளவு தான் , அப்படி அடுத்த வீட்டுக்கு நாம் பேசுவது கேட்குமாயின் ஏன் வீட்டிற்குள் நின்று பேசுகிறீர்கள் , தெருவிற்கு சென்று விடுங்கள் என்பது துர்காவின் எண்ணம் அவ்வளவே...

அம்மா பக்கத்தில இருக்க சிலம்பம் கிளாஸ்க்கு இவங்க ரெண்டு பேரையும் அனுப்புங்க , அப்படியே நாளைக்கு காலைல என்கூட யோகா கிளாஸ்க்கு வரணும் சொல்லுங்க என்றாள் ..

அவள் பேசியது வீட்டில் அனைவர்க்கும் கேட்டது , அதற்காக மெல்லமாக தான் பேசினாள் என்று கிடையாது , அனால் சர்வ நிச்சயம் அவள் பேசியது வீட்டு வாசற்படியை தாண்டி சென்றிருக்காது ..

துர்கா இருவரையும் மிரட்டினால் திவ்யா , சுரேந்தர் இருவருமே இடையில் பேசமாட்டார்கள் , யாரேனும் கண்டிப்பாக இருக்க வேண்டும் அது அவர்களின் அக்காவாகவே இருந்துவிட்டு போகட்டும் என்று அமைதியாக தான் இருப்பார்கள் ..

"அக்கா இனி சண்டை போடமாட்டோம்" என்றனர் இருவரும் , தண்ணியில் எழுதும் வார்த்தை கூட நொடி நேரம் தரையில் இருக்குமோ என்னமோ , ஆனால் இவர்கள் சொல்வது அதனினும் வேகமாக அழிந்துபோகும் ..

துர்காக்கா யோகா கிளாஸ் வேண்டாம் என்றனர் இருவரும் ஒன்றுபோல , இதற்கு மட்டும் ரெண்டு பெருகும் சண்டை வராதே , நான் போறேன் நான் போறேன்னு என்றால் இருவரையும் முறைத்து கொண்டு ..

அப்போ சிலம்பம் கிளாஸ் ஓகேவா என்றவளிடம் வேகமாக இருவரும் மண்டையை ஆட்டினர்..

அப்படியே விடுபவளா துர்கா, உடனே மொபைலை எடுத்து, அவள் வீட்டிற்கு வரும் வழியில் இருக்கும் சிலம்பம் பள்ளிக்கு கூகிள் உதவியோடு கால் செய்துவிட்டாள்..

அவ்வளவுதான் இரண்டு மூன்று, ஐந்து பத்து நிமிடங்கள் கடந்து ரெண்டு பேரும் கிளம்புங்க போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டு வரலாம் என்றுவிட்டாள்..

இருவருக்கும் பக்கென்று ஆனது, அக்கா நாளை மறந்துவிடும் என்று நினைக்க அவளோ இப்போதே என்றுவிட்டாள்..

ம்மா கொஞ்சம் ஜீரகம் வாட்டர் ப்ளீஸ் என்றுவிட்டு அறைக்கு சென்றாள், திரும்பி வருகையில் வெளியில் செல்ல தயாராகியே வந்தாள்...

என்ன இன்னும் ரெண்டு பேரும் ரெடி ஆகலையா என்று கேட்டவளிடம் இதோக்கா என்றுவிட்டு ஓடினர் அறையை நோக்கி..

"என்ன துர்கா லீவ் தானே இப்போ பிரீயா இருக்கட்டுமே" என்றார் திவ்யா இளையவர்களின் தலை மறைந்ததும்...

"வீட்ல சும்மா இருந்து என்னமா செய்ய போறாங்க, எதாவது எக்ஸ்ட்ரா கிளாஸ் போகட்டும், ஒரே இடத்துல சும்மா இருந்தா வீடை ரெண்டு பண்ணிடுவாங்க, உறுப்புடியா எதாவது கத்துக்கட்டும், டெய்லி போய்ட்டு வரட்டும்" என்றாள் துர்கா....

திவ்யா என்னவோ மீண்டும் சொல்ல வர "விடு திவி துர்கா சொன்னா சரிதான்" என்றார் சுரேந்தர்...

சுரேந்தர் பேச்சுக்கு ஒன்றும் சொல்லாதவள், திவ்யா கொண்டு வந்து கொடுத்த தண்ணிரை வாங்கி கொண்டாள்..

அக்காவிடம் இதோ என்று சொல்லிவிட்டு சென்றவர்கள் அறை மணி நேரம் கடந்து தான் தயாராகி வந்தனர்..

"துர்கா கார்லயா போறீங்க" என்றார் சுரேந்தர், மூவரும் கிளம்பி தயாராக இருக்கவும்....

அவரை திரும்பி பார்த்தவள் முகத்தில் எந்த பாவனையும் இல்லை " பக்கத்தில தானே நடந்தே போய்ட்டு வரோம், எதுக்கு கார்" என்றுவிட்டு தம்பி தங்கையை அழைத்து சென்றாள் துர்கா.....

வண்டியில் வரும் போது அந்த இடத்தை பார்த்து இருக்கிறாள், உள்ளே சென்ற போது தான் தெரிந்தது, எத்துணை பெரிய திடல் என்று...

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சிலம்பம் பயிற்சியில் இருந்தனர், பார்க்கவே நன்றாக இருந்தது...

நம்மளும் பயிற்சிக்கு வர வேண்டுமென நினைத்து கொண்டாள் துர்கா, நிச்சயமாக அவளுக்கு முடியாது, அதனால் தான் மனதில் நினைத்து கொள்கிறாள்...

பார்க்க எல்லாம் பக்காவாக இருந்தது, இருந்தும் நேரிலும் நிறையவே விசாரித்தாள், எல்லாம் துர்காவின் மனதுக்கு திருப்திகரமாக இருந்தது...

அவள் விசாரித்ததில் பசங்களுக்கு சிலம்பம் சொல்லி தர மட்டுமே அங்கு முப்பது நபர் பணியில் இருந்தனர்.

அது மட்டும் இல்லாமல் தனியாக, கராத்தே வர்மக்கலை போன்று இன்னும் நிறைய பயிற்சி வகுப்புகள் இருந்தது...

அட்மிஷன் போட்டு அதன் பின் அதற்கு கட்டணமும் செலுத்திவிட்டு, நாளை முதல் பயிற்சிக்கு வருவார்கள் என்று சொல்லிவிட்டு வந்தாள்...

"டேய் அமர் இருந்தாலும் அக்கா ஒரு நேரம் மட்டும் நம்மளை சேர்த்துருக்கலாம்டா, மார்னிங் ஈவினிங் ரெண்டு டைம் கிளாஸ்டா" என்று ஒட்டி பிறந்தவன் காதை கடித்தாள் ரிதா...

இது துர்கா காதிலும் விழுந்தது, ஆனால் கண்டு கொள்ளவில்லை, துர்காவிற்கு இருவரும் சும்மா வீட்டில் இருந்து சண்டை தான் வளர்ப்பர்கள் என்பதால் தான் இந்த முடிவு...

இளையவர்களை சந்தோஷப்படுத்த, வரும் வழியில் இருவரையும் ஐஸ்கிரீம் பார்லர் கூட்டி சென்றாள் துர்கா..

"அக்கா செய்ததிலே நல்ல வேலை இன்னைக்கு இது தான்"என்றான் அமர்...

"என்னை சொல்லிட்டு நீ ஏன்டா இப்போ கத்துற இப்படி, சும்மா இருடா அக்கா காதுல விழுந்துட போகுது, அப்பறம் மத்தியானம் எதாவது ஒரு கிளாஸ்க்கு அட்மிஷன் போட்டுடும்" என்றாள் ரிதா..

இதுவும் துர்கா காதில் விழுந்தது தான் ஆனாலும் கவனியாதது போல், இருவர் கேட்ட ஐஸ்கிரீம் பிளேவர் வாங்கி கொடுத்தாள், துர்கா இதெல்லாம் உன்னவே மாட்டாள், ஆனால் தம்பி தங்கை ஆசைக்கு தடை சொல்லமாட்டாள்...

அவர்கள் உண்டதும் அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றாள், மணி எட்டு ஆகியிருந்தது..

திவ்யா அனைவர்க்கும் உணவு எடுத்து வைக்க, சுரேந்தர்க்கு மாத்திரை எடுத்து வந்து கொடுத்தாள் துர்கா..

அவர்க்கு சுகர் இருப்பதால் உணவுக்கு முன்னும் பின்னும் மாத்திரை போட வேண்டும்...

அனைவரும் உண்டுவிட்டு பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர் சிறிது நேரம்...

இரட்டையர்கள் உறங்க சென்றுவிட, திவ்யா தான் பேச்சை எடுத்தார், "துர்காம்மா வரன் வந்திருக்குடா பேசி முடிப்போமா, நல்ல இடமா தான் இருக்கு" என்றார்....

அவர் பேசுவது காதிலே விழாதது போன்று, "எனக்கு தூக்கம்  வருதும்மா மார்னிங் இன்னொரு கம்பெனிக்கு ஆடிட்டர் ஒர்க் இருக்கு" என்றுவிட்டு எழுந்து கொண்டாள் துர்கா... 

அவ்விடம் விட்டு நகர முயன்ற மகளின் கைபிடித்து நிறுத்தினார் திவ்யா...

"ம்மா நிஜமா வேலை இருக்கு" என்றாள் துர்கா...

"வேலையோட வாழ்க்கை முக்கியம், எத்துணை நாள் இப்புடி பிடி கொடுக்காம ஓடிட்டே இருக்க போற" என்றார் திவ்யா...

"இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்ம்மா பார்க்கலாம், இதுக்கு மேல இப்போவே இதை பேசாதீங்க" என்றவள் உடனே அவ்விடம் விட்டு
அவளது அறைக்கு சென்று மறைந்தாள்....

துர்கா என்னதான் பெரிய கம்பெனியில் வேலை பார்த்தாலும், பகுதி நேரமாக சில சின்ன கம்பெனிங்களுக்கும் ஆடிட் செய்வாள்..

அதில் வரும் தொகையே அவளுக்கு கனிசமாக கிடைக்கும், பணம் நிறையவே அவளிடம் புரல்கிறது தான்...

அதை வைத்து வேறேதேனும் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மென்ட் செய்வோமா என்று யோசனை பல உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது அவளுள்..

ஏற்கனவே  துர்கா மாதத்தில் ஆறு இலக்கங்களை சம்பாரிக்கும் அளவிற்கு தொட்டு விட்டாள், கையிலிருக்கும் பணத்தை இன்னும் விரிவு படுத்தவே யோசிக்கிறாள்....

படுக்கையில் விழுந்தவள், சிறிது நேரம் கூட உறங்கிருக்க மாட்டாள் "ஹையோ வேண்டாம்" என்ற சிறு கேவலோடு கண் விழித்துக்கொண்டாள், அவ்வளவு தான் அவளது உறக்கம்...

இதற்கு மேல் என்ன செய்தாலும் அவளால் உறங்கிடவே முடியாது...

அவளை உறங்க விடாது துரத்தி கொண்டு இருக்கிறது சில நிஜங்கள்....

அத்துணை ஆழமான காயம் அவளுக்குள், ஆனால் வெளியில் நின்று பார்ப்பவர்களுக்கு, அவள் கொண்டுள்ள காயத்தின் வடுக்கள் தெரியாது....

"அப்பா வேண்டாம், ப்ளீஸ்" என்ற வார்த்தை அவளை துரத்தி வருகிறது, அதை துடைத்து போட முடியவில்லை....

எங்கோ கேட்ட ஓலம் இல்லையே, அவள் அதை மறந்து கடந்து செல்வதற்கு....

அதற்கு மேல் படுக்கையில் அமர்ந்து அவற்றை நினைக்க முடியாமல், எழுந்து வேகமாக குளியலறை சென்று முகத்தை தண்ணீர் அடித்து அலம்பினாள் துர்கா....

அறைக்குள் குடுக்கும் நெடுக்கும் நடந்தாள், நெஞ்சில் வலி முட்டியது, இந்த வலிக்கு, கால் வலியே பரவாயில்லை என்று நினைத்து கொண்டாள் போல அத்துணை நடந்தவள், அதற்கு மேல் முடியாமல் மாடிக்கு சென்றுவிட்டாள்....

தேடலுக்கான முடிவு இல்லை
" முல்லை -1 " - படைப்பை ரேட் செய்யுங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Jayalakshmi Kumar
    21 জুলাই 2023
    intha alavukku description thevaya.padikkaravanga manasu kallunnu ninachingala.summa kodittu katierukkalam.sorry manasukku romba kazhtama erukku
  • author
    11 মার্চ 2024
    ரொம்ப அழுத்தமான கதை எதனால சகோ முடியல. படிக்கும் போதே நெஞ்சு வலிக்க ஆரம்பிச்சுட்டு செத்துற கூடாது இல்ல இருந்தாலும் தொடர்ந்து படிக்கிறோம் ஏன் தெரியுமா அந்த டேஷ்க்கு ஏதாவது பயங்கரமா தண்டனை கொடுத்து இருப்பீங்கன்னு டேஷ் அப்படிங்கிற இடத்துல உலகத்துல ரொம்ப மோசமான காது கூசுற அளவுக்கு கேட்கவே முடியாத கெட்ட வார்த்தையை போட்டுக் கொள்ளவும்
  • author
    Selva bose B
    05 জুলাই 2023
    பெண்ணே தாயின் கருவறையில் இருப்பது வரை தான் உனக்கு பாதுகாப்பு வெளி வந்துவிட்டால் வீட்டில் கூட உனக்கு பாதுகாப்பு இல்லை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Jayalakshmi Kumar
    21 জুলাই 2023
    intha alavukku description thevaya.padikkaravanga manasu kallunnu ninachingala.summa kodittu katierukkalam.sorry manasukku romba kazhtama erukku
  • author
    11 মার্চ 2024
    ரொம்ப அழுத்தமான கதை எதனால சகோ முடியல. படிக்கும் போதே நெஞ்சு வலிக்க ஆரம்பிச்சுட்டு செத்துற கூடாது இல்ல இருந்தாலும் தொடர்ந்து படிக்கிறோம் ஏன் தெரியுமா அந்த டேஷ்க்கு ஏதாவது பயங்கரமா தண்டனை கொடுத்து இருப்பீங்கன்னு டேஷ் அப்படிங்கிற இடத்துல உலகத்துல ரொம்ப மோசமான காது கூசுற அளவுக்கு கேட்கவே முடியாத கெட்ட வார்த்தையை போட்டுக் கொள்ளவும்
  • author
    Selva bose B
    05 জুলাই 2023
    பெண்ணே தாயின் கருவறையில் இருப்பது வரை தான் உனக்கு பாதுகாப்பு வெளி வந்துவிட்டால் வீட்டில் கூட உனக்கு பாதுகாப்பு இல்லை