என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ வேலையை விட்டுடலாம். வீட்ல என்னை நல்லா பார்த்துக்கிட்டா போதும். அப்புறம், ஒரு வருஷத்துக்குள்ள எனக்கு கொழு கொழுன்னு ஒரு ஆண் குழந்தையை பெத்துக் கொடுக்கணும்! பொம்பளப் பிள்ளை வேண்டாம். அவளுகளை வளர்க்குறதுக்கு ரொம்ப செலவாகும்!”
கேட்கவே எவ்வளவு எரிச்சலாக இருந்தது. இப்படிப் பேசிய அந்த ஆள், சாருலதா கண்ணனுக்கு முன்னால் அமர்ந்திருந்தான். ஒரு பெண் பார்க்கும் சந்திப்பில் அவளுக்குப் பார்க்க வந்த மாப்பிள்ளை அவன். கிட்டத்தட்ட 40 வயதான அவனுக்கு தலையில் வழுக்கை விழ ஆரம்பித்திருந்தது, கூடவே தொப்பையும் இருந்தது. சாருலதாவின் சித்தி, லலிதா சுப்ரமணியம், அவள் தன்னைவிட ஒரு நல்ல மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டு விடுவாளோ என்ற கவலையில், இந்த மட்டமான, நடுவயது ஆளைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தியிருந்தார்.
அந்த நடுவயது ஆளுக்கு முதலில் சாருலதாவின் அடர் நிற மேக்கப் பிடிக்கவில்லை, குறிப்பாக அவள் கண்களில் அதிகமாகப் பூசப்பட்டிருந்த ஐ-ஷேடோ. ஆனால் அவளுடைய ஒல்லியான தேகத்தையும், அடக்கமான சுபாவத்தையும் பார்த்ததும், அவள் ஆடையின்றி தன் முன் நின்றால் எவ்வளவு கவர்ச்சியாக இருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தான்.
“உங்க உயரம் என்ன சொன்னீங்க?” என்று கேட்டான்.
சாருலதா கவனம் இல்லாமல் தன் காபிக் கோப்பையைக் கலக்கிக்கொண்டே, “நூற்றி அறுபத்தெட்டு சென்டிமீட்டர்,” என்று சுருக்கமாகப் பதிலளித்தாள்.
அதைக் கேட்டதும் அந்த நடுவயது ஆளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. “ம்ம்... எனக்கு ஏத்த பொண்ணுக்கு இதுதான் சரியான உயரம். நான் கிட்டத்தட்ட 1.8 மீட்டர் உயரம், அதனால இதுதான் ஒரு ஜோடிக்கு சரியான உயர வித்தியாசம்னு சொல்லுவாங்க! நீ என்னை கிஸ் பண்ணனும்னா இனிமே எக்கித்தான் நிக்கணும், ஆனா அது ஒரு பிரச்சினையே இல்லை. நான் உன்னை குனிய வெச்சு பின்னால இருந்தும்...!”
உண்மையில், தங்களைப் பற்றி பெருமையாகப் பேசும் ஆண்கள் தங்கள் உயரம் கிட்டத்தட்ட 1.8 மீட்டர் என்று சொன்னால், அவர்களின் உண்மையான உயரம் அதிகபட்சம் 172 சென்டிமீட்டராகத்தான் இருக்கும்!
தன் ஐ-ஷேடோ பூசிய இமைகளைச் சுழற்றிய சாருலதா, “ஒரு பொண்ணு எக்கி நின்னு கிஸ் பண்ற அளவுக்கு ஒரு பையனோட உயரம் இருக்கணும்னா, அவன் எவ்வளவு உயரமா இருக்கணும்னு உங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன்,” என்றாள்.
அந்த நடுவயது ஆள் முகம் சுளித்தான். “என்ன சொல்ல வர்ற?”
சரியாக அந்த நேரத்தில், உயரமான, இறுக்கமான முகத்துடன் ஒருவன் அந்த கஃபேக்குள் நுழைந்தான். அவன் கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் உயரம் இருந்தான். அவனைப் பார்த்ததும் சாருலதாவின் கண்களில் ஒரு குறும்பு மின்னல் வெட்டியது. அவள் தன் நாற்காலியிலிருந்து எழுந்து அவனிடம் சென்றாள்.
“ஹேய் ஹேண்ட்சம், உண்மையான உயர வித்தியாசம்னா என்னன்னு காட்ட உங்களை ஒரு நிமிஷம் யூஸ் பண்ணிக்கலாமா?”
அந்த ஆள் முகம் சுளித்தான். அவன் மறுப்பதற்குள், சாருலதா அவன் டை-யைப் பிடித்துக் கீழே இழுத்து, கால் விரல்களில் எக்கி நின்று, அவன் மெல்லிய உதடுகளில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தாள்.
“பார்த்தீங்களா? ஒரு பொண்ணு எக்கி நின்னு கிஸ் பண்ணனும்னா, குறைஞ்சது இவர் உயரமாவது இருக்கணும்!”
“உனக்கு எவ்வளவு தைரியம்...” அந்தத் தொப்பை போட்ட நடுவயது ஆள் அவமானத்தால் கோபமடைந்தான். ஆத்திரத்துடன் எழுந்து சாருலதாவை நோக்கிக் கை நீட்டி, “நடத்தை கெட்டவளே! கண்டவன் பின்னாடி போயி கிஸ் பண்றியா? உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினவங்ககிட்ட உன் நடத்தையைப் பத்தி நான் சொல்லப்போறேன். இந்த மேட்ச்மேக்கிங் வட்டாரத்துல உன் பேரு சீக்கிரமே கெட்டுப்போயிடும், உனக்கு இங்க ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்கவே கிடைக்காது,” என்றான்.
‘அப்படி நடந்தா ரொம்ப நல்லது!’ என்று சாருலதா மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். இந்த விஷயம் வெளியே தெரிந்தால், அவளுடைய சித்தி லலிதாவால் இனிமேல் அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது எவ்வளவு கடினமாகிவிடும்!
சாருலதா அந்த மொட்டத்தலையனை கேவலமாக பார்த்தவள் அதன் பிறகு தனக்கு அருகே இருந்தவனை பார்த்து.
“ரொம்ப நன்றி சார்! உங்க உதவி ரொம்ப வேணும்னு இருந்தது. சரி, பை!”என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனாள்.
ஆனால் அப்போது ஒரு கை அவள் மணிக்கட்டை இறுக்கமாக பிடித்தது.
“என்ன? என்னை கிஸ் பண்ணிட்டு நீ பாட்டுக்கு போற”.என்று ஒரு கரகரப்பான, கடுமையான குரல் அவள் காதில் விழுந்ததும், சாருலதா உடம்பெல்லாம் உறைந்தது. மேலே பார்த்தா — சுவாசம் நிறுத்தும் அளவுக்கு அழகான முகம்!
முடி neat-ஆ செட் பண்ணியிருந்தது. முகம் வெண்மையா பிரகாசிச்சது. கண்களில் சிங்கத்த மாதிரி ஆபத்தும் தைரியமும் கலந்திருந்தது.
‘அய்யோ!’ — சாருலதா அதிர்ச்சியடைந்தாள். ஒரு தொல்லையில் இருந்து தப்பித்து இன்னொரு தொல்லையில் சிக்கிக்கொண்டோமோ என்று இருந்தது அவளுக்கு “அப்போ இன்னும் என்ன பண்ணணும்? என்னை விட்டுடுங்க?”என்று சொன்னாள்..
ஆனால் அவன் அவளை விடவில்லை..அவன் அவளை தீர்க்கமாக பார்த்தான்.
“இந்த பொண்ணே தானா நம்ம கிட்ட வந்து விழுந்திருக்கா? அப்போ சோபியாவுக்கு பதிலா இவளையே வைக்கலாம்.”என்று சொன்னான்.
அவனோட அசிஸ்டெண்ட் அதிர்ச்சியடைந்தான்.
“சார், இந்த பொண்ணு… கொஞ்சம்…”
“நான் முடிவு பண்ணிட்டேன். இவளே போதும்.”
அசிஸ்டன்ட் வாயை மூடிக்கொண்டான்.
“சரி சார்.”
சாருலதாவுக்கு ஏதோ தவறா இருப்பதாக தோன்றியது/
“ என்ன செய்யப் போறீங்க என்னை?”ன்னு கேட்டாள்.
அவன் கோபமான குரலில்,
“என்னை கிஸ் பண்ணதுக்கு பொறுப்பு ஏற்கணும்.”என்று சொன்னான்.
“பொறுப்பு?” — சாருலதா முகம் வெளியிறது.
“நீங்க சீரியஸா சொல்றீங்களா? நான் என்னோட பிரச்னையில இருந்து தப்பிக்கத்தான் அப்படி பண்ணேன் நான் பண்ணது தப்புதான்.. ஆனா ப்ளீஸ் என்ன கட்டாய படுத்தாதிங்க..நான் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்லை..உங்களுக்கு கொடுத்ததுதான் என்னோட முதல் முத்தம் !”
அவன் புருவம் தூக்கினான். “உன் முதல் முத்தமா?”
சாருலதா பாவமாக ,
“ஆமாம்! இருபது வருஷமா என் முதல் முத்தத்தை காப்பாத்தி வச்சிருந்தேன்.. ஆனா அதை இன்னைக்கு நான் உங்ககிட்ட கொடுத்துட்டேன்!”என்று சொன்னாள்.
இவளை கார்ல ஏத்துங்க என்றான் ஆதவ் ..அவ்வாறே அவர்கள் செய்தார்கள்..கொஞ்சம் நேரத்தில் பெரிய பங்களா ஒன்றில் கார் நின்றது.. அவள் காரை விட்டு இறங்கியதும் ஆதவ் திருமணம் செய்ய போகும் பெண் அவள்தான் என்று எல்லாரும் பேசினார்கள்.. இதை எல்லாம் கேட்ட சாரு அதிர்ச்சியானாள். அவள் ஒரு மேடைக்கு அழைத்து செல்ல பட்டாள்.. இன்று அவளுக்கு என்கேஜ்மென்ட் என்று அறிவிக்கப்பட்டது.. சிறிய பிரச்னையில் இருந்து தப்பிக்க பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டோமோ என்று அவள் பயந்து நடுங்கினாள்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு