ஹாய் பிரண்ட்ஸ் இதுதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டோரி..... ஜஸ்ட் ட்ரை பண்ணனும் நினைச்சேன் அதான் ஸ்டோரியா எழுத போறேன் இது ஒரு மாதிரி நல்ல கதை தான் படிச்சு பாருங்களேன்......18+ ஸ்டோரி தான் ரொமேன்ஸ் கொஞ்சம் தூக்கலாக இருக்கலாம். சோ விருப்பம் இருந்தால் மட்டும் படிக்கவும்.☺️☺️☺️
ஹீரோ - வருண் பிரசாத்
ஹீரோயின்- தேஜஸ்வினி
✨
அந்த கல்யாண மண்டபமே பரபரப்பாக இருந்தது. இன்று தான் நம் கதையின் நாயகன் வருணுக்கும் அவன் அத்தை மகள் நித்யாவுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்க இருக்கிறது.
குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் பல ஆண்டு கனவு இன்று நிஜமாக போகிறது.. அந்த மகிழ்ச்சி அனைவர் முகத்திலும் தாண்டவமாடியது. ஆனால் இன்னும் சற்று நேரத்தில் அனைத்தும் மாறப்போவது யாருக்கும் தெரியவில்லை.
வருணும் நித்யாவும் மண மேடையில் அமர்ந்து ஐய்யர் சொல்லும் மந்திரங்களை ஓதி கொண்டிருந்தனர்.
அந்த சமயம் வருணின் எதிரில் எதும் அறிய களம் கபடம் அற்ற சிரிப்பில்
தன் அருகில் அழும் குழந்தையை சிரிக்க வைத்து கொண்டிருந்தாள் தேஜு. அவளின் அருகில் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான் சந்தோஷ்.
அவளை பார்க்க பார்க்க வருணுக்கு அவன் கோவத்தை கட்டு படுத்த முடியவில்லை. தன் கரத்தை பற்றி இருக்கும் நித்யாவின் கரத்தை தட்டி விட்டு மணமேடை விட்டு கீழே இறங்கி சென்றான்.
அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருந்த அவனது பெற்றோர்களும் உறவினர்களும் மிகவும் அதிர்ந்தனர்.
அப்பொழுது அவனது தாய் ஜெயசித்ரா, "வருண் நீ என்ன செஞ்சுட்டு இருக்க, "எனக் கோபமாக கேட்டார்.
அதற்கு வருண் ''அம்மா நான் என்ன செய்யறேன்னு தெரிஞ்சு தான் செய்யறேன். நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க'', என மிகத் தெளிவாகவும் கோபமாகவும் கூறினான்.
வருண் இப்பொழுது தேஜுவின் முன்னால் சென்று நின்றான். அவளது கரங்களைப் பற்றி வலுக்கட்டாயமாக மண மேடையை நோக்கி இழுத்துச் சென்றான்.
அவன் செய்வது என்ன என்றே புரியாமல் அவன் இழுத்த இழுப்பிற்கு கண்களில் நீர் வழிய அவன் பின்னாலே சென்று கொண்டிருந்தாள் தேஜூ.
மணமேடையில் அமர்ந்திருந்த நித்யா வருண் எழுந்து சென்ற மறுகனமே எழுந்து நின்று அவன் செய்வதை கண்களில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வருனோ மணமேடைக்கு அழைத்து வந்த தேஜுவை மேடையில் அமர வைத்தான். ஐயர் கையில் இருந்த மாங்கல்யத்தை ஆவேசமாக அவர் பறித்து தேஜுவின் கழுத்தில் கட்டி விட்டான்.
அவன் செய்து கொண்டிருந்த காரியத்தை பார்த்த குடும்பமும் உறவினர்களும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டனர். வருணின் தாய் ஜெயசித்ரா மயங்கி கீழே சரிந்தார்.
அங்கு நடந்த எதைப் பற்றியும் கவலை கொள்ளாத வருண் தேஜுவின் நெற்றியில் குங்குமம் இட்டு அவளது கையை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே சென்றான்.
✨✨✨
சிறிது நேரத்துக்கு பிறகு, அதே மணமேடையில் சந்தோஷ் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் நித்யாவும் அமர்ந்திருந்தாள் அவளது முகத்தை வைத்து அவள் என்ன மனநிலையில் உள்ளால் என அங்கிருந்த எவராலும் அறிய முடியவில்லை.
ஐய்யர் கொடுத்த மாங்கல்யத்தை வாங்கி நித்யாவின் கழுத்தில் கட்டி விட்டான் சந்தோஷ். நித்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
✨✨✨✨
நித்யா கழுத்தில் தாலி ஏறியதும் அனைவரும் மண்டபத்தை விட்டு வீட்டிற்கு வந்தனர். ஆனால் வருண் இன்னும் வீடு வந்து சேரவில்லை.. அவனின் காரும் வெளியில் இல்லை.
சந்தோஷின் தங்கை சுஜித்ரா வந்து சந்தோஷுக்கும் நித்யாவிற்கும் ஆரத்தி எடுத்தாள்.
அவள் ஆரத்தி எடுத்தவுடன் சந்தோஷ் வேக வேகமாக அவனது அறையை நோக்கி சென்றான்.. நித்யாவை பற்றி அவன் சிறிதும் கவலை கொள்ளவில்லை.. அவளை திரும்பியும் பார்க்கவில்லை.
அவன் செய்வதை பார்த்து நித்யா மிகவும் கவலையுடன் அவளது அறையை நோக்கி சென்றாள்.
இங்கு நடப்பவைகளை கண்ட வீட்டில் உள்ள பெரியோர்கள் வருத்தத்துடன் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் அவரவர் அறையை நோக்கி சென்றனர்.
வருணின் தாய் ஜெயா மட்டும் ஹால் சோபாவில் அமர்ந்திருந்தார். இது நாள் வரை அன்னையின் பேச்சை மறுத்து கோபமாக கூட பேசாத வருண் இன்று அனைவரும் முன்னிலையும் அவரை கோபமாக பேசியதையும் தனக்கு பிடிக்காத திருமணத்தை அவன் செய்ததையும் நினைத்து மிகவும் வருந்தி கொண்டிருந்தார்..
அப்பொழுது வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. காரில் இருந்து வருனும் அவன் பின்னாலே தேஜூவும் இறங்கி வந்தனர். ஜெயா இருவரையும் வாசலிலேயே நிறுத்தினார்.
சுஜியை அழைத்து இருவருக்கும் ஆரத்தி எடுக்க சொன்னார் முகத்தில் இறுக்கத்தை கூட்டிய ஜெயா இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். வருணின் முகம் மிகவும் கோபமாகவும் கடுமையையும் தத்தெடுத்து இருந்தது. தேஜுவோ அழுது வீங்கி வாடிய முகத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
அவளைப் பார்க்க பார்க்க ஜெயாவுக்கும் கோபமாகவும் வெறுப்பாகவும் இருந்தது. அவர் ஆசையாக வளர்த்த மகனை மயக்கி விட்டால் வீட்டு வேலைக்காரி என நினைத்துக் கொண்டிருந்தார்.
ஆரத்தி எடுத்து முடிந்ததும் தேஜுவின் கைகளை இறுக்கி பற்றிய வருண் அவர்களின் அறையை நோக்கிச் செல்ல பார்த்தான், அப்பொழுது அவனை தடுத்தது அவனது அன்னையின் குரல்.
" வருண் நான் உன்கிட்ட பேசணும்.. ", என ஜெயா கூறிட..
அப்பொழுது வருண் தேஜுவை பார்த்து , ''நீ என் ரூமுக்கு போ''என சொன்னான்..
தேஜுவோ எதுவும் பேசாமல் அவனை நிமிர்ந்து கூட பாராமல் அவன் அறையை நோக்கி சென்றாள்.
" ஏன் வருண் இப்படி செஞ்ச?.. ", என தாயவர் கண்களில் தேங்கிய கண்ணீருடன் கேட்டார்.
வருணோ ," எனக்கு அவளை பிடிச்சிருந்தது மா.. ", என்று மட்டும் கூறிட..
" இதை நீ முதல்லயே சொல்லி இருக்கலாம் இல்ல வருண்.. என ஜெயா கேட்க.
" நான் உங்களுக்காக நித்யாவை கல்யாணம் செய்ய நினைச்சேன்.. ஆனா என்னால அது முடியல.. " , என வருண் உணர்ச்சி துடைத்த முகத்துடன் கூறிட..
" சரி வருண். இது உன் வாழ்க்கை உன் இஷ்டப்படி அமைச்சுக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு . ஆனா ஒரு அம்மாவா இன்னைக்கு என் நம்பிக்கை உடஞ்சி போயிடுச்சு.. இனிமே நீ என்கிட்ட பேச வேண்டாம் வருண்.. " , என ஜெயா குரல் கமறிட கூற..
தாயவரின் வார்த்தையில் மனம் கனத்த வருண் ஏதோ சொல்ல வரும் முன் அவன் அம்மா அவரின் அறை நோக்கி சென்று விட்டார்.
✨✨✨
இரவு - சந்தோஷின் அறை
" எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா இஷ்டம் இல்ல மத்தவங்க சொன்னதுக்காக மட்டும் தான் அதுவும் என் அம்மா அப்பா சொன்ன ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும் தான் நான் உன்னை கல்யாணம் பண்ணினேன்.. வேற எதுவும் எங்கிட்ட இருந்து எதிர்பார்க்காதே.. ", எனக் கோபமாக பேசிய சந்தோஷ் நித்யாவின் மன நிலையை சற்றும் யோசிக்கவில்லை.
அவன் சொன்னதை கேட்ட நித்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக பொழிய ஆரம்பித்தது.
✨✨✨✨
வருண் அறை
" உன் கழுத்துல என் கையால தாலி ஏறிடுச்சுன்னு நினைத்து ரொம்ப சந்தோஷத்துல இருக்கியா..
அப்படி நீ சந்தோஷமா இருந்தா உன்ன விட பெரிய முட்டாள் யாரும் இல்லடி.
நான் உன்னை விரும்பி உன் அழகுல மயங்கி உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்னு நினைச்சியா.
என் குடும்பத்தை எதிர்த்து நான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கேன்.
அவங்க நினைப்பாங்க நான் உன்னை காதலிச்சு உன்ன விரும்பி தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்னு.ஆனா நான் உன்னை கல்யாணம் பண்ணது உன் கூட சந்தோஷமா குடும்பம் நடத்த இல்லடி.
உன்னை அணு அணுவை கொடுமைப்படுத்த. நீ இந்த குடும்பத்துக்கு செய்ய நினைச்ச துரோகத்துக்கு இனி
நீ என்கிட்ட என்னென்ன சித்திரவதை அனுபவிக்க போறேன்றதை மட்டும் பாருடி.. ", எனக் கர்ஜனையாக கூறியவன் அவளை பளார்.. என கன்னத்தில் அறைந்து மெத்தையில் தள்ளினான்.
தொடரும்.....
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு