pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உங்கள் பிரதிலிபி :)

29 ஜூன் 2026

மார்ச் 2026, எழுத்தாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்- 

அன்புள்ள எழுத்தாளருக்கு,

நீண்ட காலமாக, ஒரு நிறுவன பிரதிநிதியாக அல்லாமல், பிரதிலிபியில் பணிபுரியும் உங்கள் தோழர்களாக உங்களுக்கு எழுத வேண்டும் என எண்ணினோம்.  மேலும், எங்கள் குழுவில் இருப்பவர்களில் பலர் எழுத்தாளர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஒரு வாசகர் ஒரு கதையை வாசிக்கும் போது, அதன் இறுதி வடிவத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அந்த இறுதி நிலையை அடைய எவ்வளவு முயற்சி தேவைப்பட்டது என்பதை எழுத்தாளரே அறிவார். சோர்வூட்டும் அலுவலக வேலைக்குப் பிறகோ அல்லது வீட்டு வேலைக்குப் பிறகோ எழுதுவது, வாழ்க்கையையும்,  எழுத்தையும் சமநிலைப்படுத்த முயற்சிப்பது, சொல்லப்படாத கதையை பல நாட்களுக்கு மனதில் சுமந்து நடப்பது, நம்பிக்கையின்றி வாழ்வது, எழுத்துத் திட்டங்களை அடைய முடியாமல் தவிப்பது , பதிப்பிக்கும் போது ஏற்படும் பதட்டம்—ஆனால் இவற்றையெல்லாம் மீறி,  நம் கதை அதற்குரிய வாசகரை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பது என உங்கள் உணர்வுகளை நாங்கள் நெருக்கபமாக அறிவோம். 

எழுதுவது மிகவும் தனிமைநிறைந்ததாக  இருக்கலாம். அதே சமயம், அது ஓர் ஆழமான ஆறுதலையும் அளிக்கவல்லது. பல ஆண்டுகளாக, பல எழுத்தாளர்களை நாங்கள் சந்திக்கின்றோம்—எழுதுதல் அவர்களுக்கு வாழ்க்கையின் கடினமான கட்டங்களில், தனிப்பட்ட இழப்புகளில், உள்ளார்ந்த மனப் போராட்டங்களில் உதவியதாக குறிப்பிடுகிறார்கள். அதனால் தான் எழுத்துச் செயல்பாடை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். எழுதுதல் என்பது மிக அழகான கலை வடிவமாகும்.

கடந்த சில மாதங்களில், எங்கள் வாராந்திர சமூக அமர்வுகள் மூலம் உங்களில் பலருடன் நாங்கள் பேசினோம்.

சமீப காலமாய் , நாங்கள் ஒரு முக்கியமான விஷயம் பற்றியும் சிந்தித்து வருகிறோம்: காதல் கதைகள் தவிர்த்த பிற கதைகள் வாசகர்களை எவ்வாறு அடையும்? காதல் கதைகள் எப்போதும் பிரதிலிபியில் ஒரு வலுவான இடத்தைப் பெற்றிருக்கின்றன். ஆனால், திகில் (horror), சஸ்பென்ஸ் (suspense), த்ரில்லர் (thriller) போன்ற பிற வகைகளில் சிறந்த தெரிவுநிலை (discovery) கிடைத்தால், வாசிப்பு எண்ணிக்கை அல்லது வருமானம் குறித்து கவலைப்படாமல் எழுத்தாளர்கள் புதிய கதைகளை முயற்சி செய்வதற்கான   நம்பிக்கை பெறுவார்கள் . இதற்கான செயல்பாடுகளில் நாங்கள் இறங்கியுள்ளோம்.  

அதன் ஒரு அம்சமாக , நீங்கள் திகில், குற்றம்- த்ரில்லர் அல்லது கற்பனை (fantasy) கதைகளை எழுதக்கூடிய ஒரு புதிய போட்டியையும் தற்போது நடத்துகிறோம். அதில் கலந்து கொண்டு, உங்கள் வாசகர்களை அதிகரிக்க இந்த இணைப்பை ( https://tamil.pratilipi.com/event/fmg585jwel ) அழுத்தவும்.

மேலும், இதை நீங்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்: நாங்கள்  எப்போதும் உங்கள் கருத்துகளை அறிந்துகொண்டு அவற்றிலிருந்து மேம்படுத்த முயற்சிக்கிறோம். 

பிரதிலிபியில் உங்கள் அனுபவம் குறித்து, அதாவது எது நன்றாக உள்ளது , எது நன்றாக  இல்லை, எதை நாங்கள் இன்னும் மேம்படுத்தலாம் , அல்லது அடுத்ததாக நாங்கள் எதை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என எது குறித்தும் எங்களுடன் இந்த இணைப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdpKo3TwoLVhymoXUeYYYrqMMx7MKjLnvNBpVn5dhixQE5P0w/viewform?usp=publish-editor

எங்கள் குழு அனைத்து பதில்களையும் வாசிக்கும். 

எழுதத் தொடங்கியமைக்கு நன்றி.

பயணம் நிச்சயமற்றதாக இருந்த தருணங்களிலும் தொடர்ந்து எழுதியதற்கு நன்றி.

பிரதிலிபி மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி.

அன்புடன்,

உங்கள் பிரதிலிபி.