pratilipi-logo பிரதிலிபி
தமிழ்
பிரதிலிபி படைப்பாளிகள் எழுத்து சவால் - 6

இன்று முன்னணி எழுத்தாளர்களாக சாதித்த பலரும், தங்களின் ஆரம்ப நாட்களில், எழுத்து போட்டிகளில் கலந்து கொண்டவர்களே. இது, நீங்கள் டாப் எழுத்தாளராக மாறுவதற்கான தருணம்.

நீங்கள் எழுத்தாளராக முதல் அடியை எடுத்து வைத்தாலும் அல்லது பிரதிலிபியில் உங்களது வளர்ச்சியை நீங்கள் அதிகரிக்க நினைத்தாலும், இந்த போட்டி உங்களுக்கு உதவுவதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. 50 அல்லது 100 அத்தியாயங்களை கொண்ட தொடர்களை நீங்கள் எழுத ஆரம்பிப்பதன் மூலம், உங்களது எழுத்து பயணத்தில், ஆச்சரியமான பரிசுகள், உங்களுக்கான சரியான அங்கீகாரம் மற்றும் உங்கள் எழுத்து பயணத்தில் ஒரு படி முன்னேறும் வாய்ப்பும் கிடைக்கும்.


பிரதிலிபியின் படைப்பாளிகள் எழுத்து சவால் 6-க்கு உங்களை வரவேற்கிறோம்.

➡️ நேரலை வகுப்புகளை தவற விட்டுவிட்டீர்களா? கவலை வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்களில், வகுப்புகளில் நாங்கள் என்ன நடத்தினோம் என்பதை கண்டு, அதற்கேற்ப உங்கள் தொடர் கதையை, இந்த போட்டிக்கு நீங்கள் எழுத  ஆரம்பிக்கலாம்.

பிரதிலிபியில் எப்படி வளருவது எனும் கலையை, வெறும் மூன்று அமர்வுகளில் கற்று கொள்ளுங்கள்: இங்கே சொடுக்கவும் (லிங்க்)

எப்படி பங்கேற்பது?

இந்த போட்டியில் வெற்றிகரமாக படைப்பை எழுதி முடிக்க, கீழே உள்ள ஆப்ஷன்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்:

புதிய தொடர்:  புதிதாக ஒரு தொடர் அல்லது ஒரு சீசனை போட்டியின் கீழ் எழுத தொடங்கலாம்.

ஏற்கனவே எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் தொடர்: நீங்கள் ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கும் தொடரில் புதிய பாகங்களை பதிப்பிக்க தொடங்கலாம். அந்த தொடரில் புதிதாக 50 பாகங்கள் பதிப்பிக்க வேண்டும்.

குறிப்பு : 50-ஆம் பாகத்தோடு அல்லது கடைசி தேதிக்குள் கதையை முடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தொடரை அதன்பிறகும் தொடர்ந்து எழுதலாம்! 

வெகுமதிகள்

100 பாகங்கள் எழுதும் சாம்பியன்களுக்கு:

→ போட்டி நடக்கும் ஆறுமாத கால அவகாசத்திற்குள் 100 பாகங்களை பதிப்பித்தால், “பிரதிலிபி படைப்பாளர் சான்று” உங்கள் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைப்போம்.

→ பிரிதிலிபியின் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் உங்களின் வெற்றியை பகிர்வோம். அதற்கு இதுவே ஒரு நல்வாய்ப்பு.

பரிந்துரை: இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என பதிப்பித்து வந்தாலே, எளிதில் 100+ பாகங்களை எழுதிவிட முடியும்.

50 பாகம் எழுதும் படைப்பாளிகளுக்கு:

→ போட்டி முடியும் இறுதி நாளுக்குள் 50 பாகங்களை பதிப்பித்திருந்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு, “பிரதிலிபி படைப்பாளிகள் சான்றிதழ்” அனுப்பி வைக்கப்படும்.

பரிந்துரை: மூன்று நாட்களுக்கு ஒரு பாகம் என பதிப்பித்து வந்தாலே, எளிதில் 50+ பாகங்களை எழுத முடியும்.

மாரத்தான் எழுத்தாளர்களுக்கு: 

போட்டி முடியும் காலகட்டத்திற்குள், அதிக அத்தியாயங்களை எழுதி வெளியிடும் முதல் 10 எழுத்தாளர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு சிறப்பு பரிசு ஒன்று அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பு: இந்த சவாலின் காலவரம்பிற்குள் வெளியிடப்படும் அனைத்து அத்தியாயங்களும், சொற்களின் எண்ணிக்கை உட்பட, அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும்.

அனைத்து பங்கேற்பாளர்களுக்கும்: 

→ உங்களது தொடர் பிரதிலிபியின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்படும்.

→ உங்களது தொடர் பிரதிலிபியின் முகப்பு பக்க பேனரில் பகிரப்படும்.

→ முழு பயிற்சி வீடியோக்கள் மற்றும் பாட கோப்புகளுக்கான வாழ்நாள் அணுகல் (Access) வழங்கப்படும்.

→ நீங்கள் ப்ரீமியம் தொடரை எழுதுகிறீர்கள் என்றால், நீங்கள் வாழ்நாள் முழுவதும் மாதாமாதம் அதன் மூலம் சம்பாதிக்க முடியும்.

விதிகள் & வழிகாட்டுதல்கள்

1.கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்களுக்கு: நீங்கள் கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர் எனில், எழுத்து சவாலில் தகுதிபெற உங்கள் தொடரை சப்ஸ்க்ரிப்ஷனின் கீழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். (உங்களது தொடரை சப்ஸ்கிரிப்சனின் கீழ் சேர்ப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்)  

2.கோல்டன் பேட்ஜ் இல்லாத எழுத்தாளர்களுக்கு: உங்களிடம் கோல்டன் பேட்ஜ் இல்லையென்றால், வழக்கமான முறையில் தொடரின் அனைத்து பாகங்களையும் பதிப்பிக்கலாம். (பிரதிலிபியில் எப்படி தொடர் பதிப்பிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்)

3. புதிய அல்லது ஏற்கனவே தொடங்கிய தொடர்: உங்களது புதிய அல்லது ஏற்கனவே தொடங்கிய தொடரில் குறைந்தபட்சம் 50 புதிய அத்தியாயங்கள் போட்டி முடிவு தேதிக்குள் எழுதவேண்டும். கடைசித் தேதிக்குள் தொடரைக் கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. போட்டி கடைசிதேதிக்கு பின்னும் தொடரை தொடர்ந்து எழுதலாம்

4. சொற்கள் எண்ணிக்கை: குறைந்தபட்சம் ஓர் அத்தியாயத்திற்கு 1000 சொற்கள் இருக்கவேண்டும். அதிகபட்ச வரம்பு இல்லை. ஆனால், அதைவிட குறைவாக எழுதினால் தொடர் நிராகரிக்கப்படலாம். (பதிப்பிக்கும்போது எத்தனை வார்த்தைகள் எழுதியிருக்கிறோம் என்பதை இங்கே பார்க்கலாம

5. தொடரின் பிரிவு: சவாலில் பங்கு பெற ‘ படைப்பாளிகள் எழுத்து சவால் 6 ’ எனும் பிரிவை தேர்வு செய்யவும்.அதனை தேர்ந்தெடுத்தாலே படைப்பு போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தொடரில் நீங்கள்  போட்டி வகையைச் சேர்க்கவில்லை, என்றால் கதை, போட்டியில் இருந்து முற்றிலும் தகுதி நீக்கம் செய்யப்படும்.  நீங்கள் விரும்பும் மேலும் இரண்டு வகைகளையும் தொடரில் சேர்க்கலாம். (பிரிவை சேர்ப்பது எப்படி? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்)  

6. தீம் & கதை வகை: இது முற்றிலும் உங்கள் தேர்வு. நீங்கள் எந்தக் கதை வகையிலும் எழுதலாம்.

7. தகுதி நீக்கம்: போட்டி விதிகளை கடைபிடிக்காத படைப்புகள், கடைசி தேதிக்குள் குறிப்பிட்ட பாகங்கள் எழுதப்படாத படைப்புகள், வேறு போட்டிக்கு சேர்க்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்படும்.

=> ஓர் அறிவுரை: உங்கள் கதையை முதல் அத்தியாயத்திலிருந்தே தொடங்கவும். டீசர், பிற குறிப்புகள், முன்னுரை போன்றவைற்றை தவிர்க்கவும்.

=> ஒரு தொடரின் முதல் அத்தியாயத்தை எவ்வாறு எழுதுவது என்று புரியவில்லையா? (பார்க்க

காலக்கெடு

சவால் துவங்கும் நாள்: 8-ஆம் தேதி ஜூன் 2026

சவால் முடியும் நாள்: 9-ஆம் தேதி டிசம்பர் 2026 (செவ்வாய் கிழமை)

→ குறிப்பு: போட்டிக்கு தகுதி பெறும் அனைத்து தொடர்களும் பேஸ்புக் மற்றும் முகப்பு பக்க பேனரில் சவால் முடிந்து 4 வாரத்தில் பகிரப்படும்.

பிரதிலிபி போட்டிகளில் பங்கேற்பது என்பது, தொடர்ந்து எழுதும் பழக்கத்தை உருவாக்கவும், உங்கள் எழுத்துத் திறனை மேம்படுத்தவும், மேலும் பல வாசகர்களைச் சென்றடையவும் உதவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். பிரதிலிபி படைப்பாளிகள் எழுத்து சவால், தளத்தில் தங்களது இருப்பை வலுப்படுத்தவும், வாசகர் வட்டத்தை விரிவுபடுத்தவும், புதிய வாய்ப்புகளை பெறவும் பல எழுத்தாளர்களுக்கு உதவியுள்ளது.

போட்டி குறித்து மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், [email protected] என்ற மெயில் ஐடியை தொடர்பு கொள்ளவும். எங்கள் குழு 24 மணி நேரத்தில் உங்களுக்கு பதில் அளிப்பார்கள்.

நல்வாழ்த்துகளுடன்!

பிரதிலிபி குழு