pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நகைச்சுவை கதைகள் | Comedy Stories in Tamil

நகைச்சுவையை விரும்பாத ஆட்கள் யாரேனும் இருப்பார்களா..! அதனால் தான், தமிழில் வெளிவரும் நகைச்சுவை கதைகள் (Comedy stories in tamil) எப்போதும், வாசகர் மத்தியில் தனி வரவேற்பை பெற்று வெற்றி பெறுகிறது. அதை கருத்தில் கொண்டு நம்முடைய வாசகர்களை மகிழ்விக்கும் விதமாக, உருவாக்கப்பட்டதே இந்த நகைச்சுவை கதைகள்(comedy stories in tamil) பகுதியாகும்.

ஒருவரை சிந்திக்க வைப்பதைக் கூட எளிதாகச் செய்து விடலாம். ஆனால், சிரிக்க வைப்பது தான் கடினம். அதனால்தான், சார்லி சாப்ளின் தொடங்கி நம்முடைய வைகைப் புயல் வடிவேலு வரைநகைச்சுவைக்காகவே கொண்டாடப்படும் நடிகர்கள் உண்டு. அந்த அளவிற்கு நகைச்சுவை நம்முடைய வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.

இன்றைக்கு மீம்ஸ் (memes), பிளாக் ஹுயுமர் (black humour) என்று காலமாற்றத்திற்கு ஏற்ப நகைச்சுவை வெவ்வேறு வடிவங்களைப் பெற்றிருந்தாலும், எழுத்தாளர் சாவி கதைகள் தொட்டு, தமிழ் வாசிப்பு உலகில் நகைச்சுவைக்கென்று ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அதன் நீட்சியாக உங்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைப்பதற்காகவே இந்தப் பகுதியில் ஏராளமான நகைச்சுவைக் கதைகள் (comedy stories in tamil) இடம் பெற்றுள்ளன.

மொழி பேதமின்றி, பால் பேதமின்றி, வயது பேதமின்றி உலகிலுள்ள எல்லா தரப்பினரும்காதலுக்கு அடுத்தபடியாக கொண்டாடும் ஓர் உணர்வு நகைச்சுவை. இந்த உலகிலேயே சந்தோஷமான நபர் யார் என்று கேட்டால், அது நிச்சயமாக நகைச்சுவை உணர்வு உள்ள ஒருவர் தான். அவர்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் சிரிக்க வைப்பார்கள். சிரிக்கத் தெரியாதவன் தன் ஆயுளில் ஒருநாளை இழக்கிறான் என்பார்கள்.

மற்ற உயிரினங்களில் இருந்து, மனிதர்களைத் வேறுபடுத்திக் காட்டுவது பகுத்தறிவு மட்டுமல்ல நகைச்சுவை உணர்வும் தான்.மேலும், எதிரில் இருக்கும் இன்னொருவரின் உணர்வை காயப்படுத்தாமல், மற்றவர்களை சிரிக்க வைப்பதுதான் உண்மையான நகைச்சுவை. சகமனிதர்களை தங்கள் கவலைகளிலிருந்து விடுபடச் செய்யும் அத்தகைய நகைச்சுவைப் படைப்புகளை (Comedy stories in tamil) வாசிக்க நீங்கள் இந்தப் பக்கத்தைப் புரட்டலாம்.

வரிக்கு வரிக்கு சிரிக்க வைக்கும் குட்டிக் குட்டித் துணுக்குகள், நகைச்சுவை தோரணங்கள், சிறுகதைகள், குறுங்கதைகள், நெடுங்கதைகள் என்று உங்கள் மனதிற்கு இதமளிக்கும் வகையில் பல்வேறு வடிவங்களில் தமிழ் நகைச்சுவை கதைகள் (comedy stories in tamil) இங்கு காணக் கிடைக்கின்றன.

நம்முடைய எழுத்தாளர்கள், தங்களுடைய நுட்பமான நகைச்சுவை திறனைப் பயன்படுத்தி, உங்களை வயிறு வலிக்க சிரிக்க செய்யும் படைப்புகளை புனைந்துள்ளனர். அவை, உங்களின் நாளை புன்னகையுடன் தொடங்க வைக்கும். உறங்கப் போகும் முன், மனதை இலகுவாக வைத்துக் கொள்ள வழிவகைச் செய்யும்.

'இடுக்கண் வகுகால் நகுக' என்றொரு திருக்குறளை நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். அதன் பொருள், துன்பம் வரும் போதும் சிரித்து, நம்முடைய மனதைமகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால், அந்த துன்பத்தை கடந்து வருவதற்கு அதைவிடச் சிறந்தவழி வேறு எதுவும் இல்லை என்பதாகும். ஆகவே, வாசகர்களே உங்களுடைய கடினமான நேரங்களையும் கடக்க உதவும் சாவியாக இந்த தமிழ் நகைச்சுவைக் கதைகள் (comedy stories in tamil) இருக்கும்.

மேலும்