என்னைப் பற்றி சில வரிகள் .....
எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் , வெம்பக்கோட்டை வட்டம்
கீழராஜகுலராமன் கிராமம் ஆகும். தற்போது சென்னையிலுள்ள பள்ளிக்கரணையில் வசித்து வருகிறேன். நான் வருவாய்த்துறையில் சுமார் 32 ஆண்டுகள் பணிபுரிந்து வட்டாட்சியர் நிலையில் பணி நிறைவு பெற்றேன். வயது 63. எனது பெற்றோர் தெய்வதிரு பூவலிங்கம் – பார்வதியம்மாள். எனது குடும்ப என்னும் வானில் மின்னும் விண்மீன்கள் துணைவியார் சு.முத்துலட்சுமி, மகன் கணேஷ் @ பூவலிங்கம், மருமகள் மகேஸ்வரி ,பேத்தி ஹரிபிரியா, மகள் மீனாபார்வதி. மருமகன் கண்ணன், பேத்தி சஞ்சனா(குட்டிமீனா) எனது எழுத்துக்கு மானசீக குரு எழுத்தாளர் தீபம் நா.பார்த்தசாரதி என்பவர் ஆவார். அவர் எழுதிய பொன் விலங்கு என்ற நாவலை நான் படித்தபோதுதான், எனக்கு சிறுகதைகள், கவிதைகள் போன்ற படைப்புகளை படைக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. எனது சிறுகதைகள் பாக்யா , ராணி, பேசும் புதிய சக்தி, தினமணிக்கதிர் , கதைசொல்லி இதழ்களிலும், கவிதைகள் வார முரசு, குடும்ப மலர், ஏழைதாசன், குருகுலத்தென்றல், தினமலர்-வாரமலர் ,ராணிமுத்து, பொம்மி போன்ற இதழ்களில் இடம் பெற்றுள்ளன. மணிமேகலை பிரசுரம் மூலம் “ வித்யா மீண்டும் வேலைக்குப் போகிறாள் !” என்ற சிறுகதைகள் தொகுப்பு நூல் எனது முதல் வெளியீடு என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூல் வாஷிங்டன் மெரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக் கழகத்தால் சிறந்த நூலுக்கான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. (மின்னஞ்சல்: [email protected] அலைபேசி எண்: 9894043308)
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு