கவிஞர் சாரா
பிறப்பிடம் : தமிழகத்தில் தென்பெண்ணை நதிக்கரையில்
அமைந்துள்ள மணலூர்பேட்டை..
எழுத்துப்பணி : கடந்த 15 ஆண்டுகளாக எழுத்துத் துறையில் பயணிக்கிறார்.
இயற்கையோடு இணைந்தே இவரின் படைப்புகள் இருக்கும்.
தமிழின் மீதும்,தமிழர்கள் மீதும் தீராத பற்று கொண்டவர்.
படைப்புகள் : 2010 ஆம் ஆண்டில் "ஜெயா" தொலைக்காட்சியில் கவிதை நிகழ்ச்சி புரிந்துள்ளார்.
சர்வதேச தமிழ் வானொலிகளில் இவரது கவிதைகளும்,சிறுகதையும் ஒலிபரப்பாகி உள்ளது.
தமிழ் முன்னனி நாளேடுகளிலும்,பத்திரிக்கைகளிலும் இவரின் படைப்புகள்
வெளிவந்துள்ளன.
சிறுகதைகள் : வெளிச்சம்
விதியின் விளையாட்டு
யார் குற்றம்
உள்ளிட்ட சிறுகதைகளும்,"சொல்லோவியம்" "கூலி வாங்கிய எழுத்தாளர்"
உள்ளிட்ட கட்டுரைகளும் படைத்துள்ளார்.
நூல் வெளியீடு : இந்த ஆண்டின் தொடக்கத்தில் "தென்பெண்ணை நதியோரக் கவிதைகள்"
என்னும் கவிதை நூலினை திரைப்பட இயக்குனர் திரு அகத்தியன் அவர்கள்
தலைமையில் வெளியிட்டுள்ளார்.இந்திய கலாச்சார பண்பாட்டு மையம் சார்பில்
நடத்தப்பட்ட நாடகத் திருவிழாவில் பங்கேற்று நடித்து சிறந்த நடிகருக்கான
பரிசையும்,சான்றிதழையும் புதுவை அரசிடம் இருந்து பெற்றுள்ளார் கவிஞர் சாரா.
"விழியோரம் ஒருதுளி" தமிழ் ஆல்பம் பாடலை எழுதியுள்ளார்.
அந்த பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.திரைப்பட பாடலாசிரியர் திரு அருண்பாரதி பாடலை வெளியிட,திரைப்பட மற்றும் நாடக நடிகர் திரு வெங்கடேஷ் பெற்றுக்கொடார்.
திரைத்துறை பிரவேசம் : தற்போது திரைத்துறையில் கால்பதித்துள்ள கவிஞர் சாரா
விரைவில் பாடலாசிரியராக முத்திரை பதிக்க உள்ளார்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு