துரைசாமி தனபாலன் (Duraisamy Dhanabalan)
எனது சொந்த ஊர் மதுரை. அறிவியல் பட்டதாரியாகிய நான், பணிபுரிந்தது Spoken English ஆசிரியராக மலேசியா, சென்னை, புதுவை போன்ற இடங்களில் 20 ஆண்டுகட்கும் மேல். தற்போது தாய்மொழி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, தமிழில் நூல்கள் (இதுவரை 10 நூல்கள்), கதை, கவிதை, கட்டுரை எழுதுவது(பல விருதுகள் பெற்றுள்ளேன்), பள்ளிகளில் மாணவர்களுக்கு (கட்டணம் வாங்காமல்) தமிழ் உச்சரிப்புப் பயிற்சி மற்றும் திருக்குறள் வகுப்புகள் நடத்துவது, நான் தொடங்கிய ‘தேவி அறக்கட்டளை’ மூலம் பொதுத்தொண்டு புரிவது என்று இயங்கி வருகிறேன். அகவை 60 ஐக் கடந்தாலும், உடற்பயிற்சி, யோகா, (நான் ஒரு யோகா ஆசிரியனும் கூட), இயற்கை உணவு, குருதிக்கொடை போன்றவற்றில் ஆர்வமுடன் செயலாற்றி வருகிறேன்.