நான் சக்தி கிரி... பொழுதுபோக்கென முகநூலில் எழுத ஆரம்பித்து பின் அகல் தொட்டு இன்று ப்ரதிலிபி தளம் வரை தொட்டிருக்கிறது இவ்வெழுத்துப் பிரயாணம்.
காணக்கிடைக்கும் உணர்வுகளையும், எனக்குள்ளான உணர்வுகளையும் மட்டுமே எழுதிட முடியும் என்னால். காதலின் மீதான காதலை மிக மெல்லியதாய் மட்டுமே உணர்த்திட முடியும்.
வாசிப்பு அனுபவமோ அல்லது மொழி அனுபவமோ கொஞ்சமே கைவசமாகியிருக்கிறது. இப்படி எழுதிக் கிறுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆதியிலிருந்தே வந்திருக்கிறது.
பால்ய காலம் தொட்டு இவ்வாறு கிறுக்க எண்ணி பின்னாட்களில் அந்த எண்ணங்களையே தொலைத்துத் திரிந்த நாட்களில் என் எழுத்துக்களை ஊக்குவித்த நண்பர்களுக்கும் என் குடும்பத்திற்கும் அகல் மற்றும் பிரதிலிபிக்கும் என் நன்றிகளும் பிரியங்களும்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு