நாகரத்தினம் கிருஷ்ணா – பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வங்கொண்டவர்.
படைப்புகள்: 5 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், ஒன்பது கட்டுரை தொகுப்புகள். மொழிபெயர்ப்புகள் 10: பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மூன்று நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள்; தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைத் தொகுப்பு. காலச் சுவடு, சந்தியா பதிப்பகங்கள் வெளியீடு.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது, புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின்கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது. 2018. ஆயர் விருதையும் பெற்றுள்ளார். சிற்றிதழ்கள் இணைய இதழ்கள் ஆகியவற்றில் தொடர்ந்து எழுதிவருபவர். மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில் வந்துள்ளது.
ரிப்போர்ட் தலைப்பு