
பிரதிலிபிஅன்புள்ள எழுத்தாளருக்கு,
மார்ச் மாதத்தில், பிரதிலிபி ஒரு கடிதத்தை உங்களுக்கு எழுதியிருந்தது ( அதை இங்கு வாசிக்கலாம் ). அதற்கு எழுத்தாளர்களாகிய நீங்கள் காட்டிய அன்பை உணர்ந்து உங்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று விரும்பினோம். இந்த கடிதம் 3 பகுதிகளைக் கொண்டது: 1) பிரதிலிபியின் கடந்த காலத்தைப் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள் 2) பிரதிலிபியில் நீங்கள் வெற்றியாளராக உருவெடுக்க எங்களது குழு வழங்கும் 12 மிக முக்கியமான குறிப்புகள் மற்றும் 3) ஒரு நற்செய்தி
கடந்த 2014-ஆம் ஆண்டில், ஒரு வாடகை வீட்டில்தான் பிரதிலிபி பிறந்தது (அதன் புகைப்படம் கீழே உள்ளது). அதுவே எங்களுக்கு வீடாகவும், அலுவலகமாகவும் ஒரே நேரத்தில் செயல்பட்டது. அப்போது நாங்கள் வெறும் 5 பேர் மட்டுமே, ஆனால் இன்று 300-க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு பெரிய குழுவாக வளர்ந்துள்ளோம். இதற்கெல்லாம் எழுத்தாளர்கள் எங்களின் மீது வைத்த நம்பிக்கையே முக்கியக் காரணம். தொடக்க காலத்தில், சுமார் 8 முதல் 9 ஆண்டுகள் வரை எழுத்தாளர்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை; அப்படியிருந்தும் அவர்கள் பிரதிலிபியைத் தொடர்ந்து நம்பினார்கள். அதன் பலனாக, கடந்த ஒரே மாதத்தில் மட்டும், 10,381 எழுத்தாளர்கள் இணைந்து ஒட்டுமொத்தமாக ₹3.12 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளனர்.
ஒருவேளை நீங்கள் இன்னும் பிரதிலிபியில் வருமானம் ஈட்டத் தொடங்கவில்லை என்றால், அதற்கான வழி இதோ: நீங்கள் 200 ஃபாலோயர்களை பெற்று, ஒரு மாதத்தில் 5 கதைகள் அல்லது 5 அத்தியாயங்களை வெளியிட்டால், உங்களுக்கான 'கோல்டன் பேட்ஜ்' கிடைக்கும். அதன் பிறகு உங்களது தொடர்களைச் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் இணைத்து நீங்கள் வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
பிரதிலிபியின் வாசகர்களுக்கு நீண்ட தொடர்கள் என்றால் மிகவும் பிடிக்கும்! ஒவ்வொரு அத்தியாயத்தையும் 600-800 வார்த்தைகளுக்கும் அதிகமாக இருக்குமாறு எழுதுங்கள். கதையின் தொடக்கத்திலேயே அர்த்தமுள்ள திருப்பங்களையும் மோதல்களையும் உருவாக்குங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசகர்களுக்கு அடுத்த என்ன நடக்கும் என்ற ஆர்வத்தையோ, தவிப்பையோ அல்லது ஒரு விறுவிறுப்பான திருப்புமுனையையோ வைப்பதற்கு முயலுங்கள். அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்ற ஆர்வம் இருக்கும்போதுதான் வாசகர்கள் அடுத்தடுத்த அத்தியாயங்களைத் தொடர்ந்து அன்லாக் செய்து படிப்பார்கள்.
கதையை எப்போதும் நேரடியாகத் தொடங்குங்கள். தேவையில்லாத குறிப்புகள், முன்னுரை/அறிமுகம் அல்லது வாசகர்களிடம் நேரடியாகப் பேசுவது போன்றவற்றை அத்தியாயங்களுக்குள் எழுதுவதைத் தவிர்த்திடுங்கள்.
கதையின் முதல் அத்தியாயம் வாசகர்களுக்குள் ஒரு வலுவான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும், அப்போதுதான் அவர்கள் இயல்பாகவே அடுத்தடுத்த அத்தியாயங்களுக்குச் செல்வார்கள். அதேபோல், உங்களது மூன்றாவது அத்தியாயத்தை மிக விறுவிறுப்பான ஒரு திருப்புமுனையோடு முடியுங்கள். ஒரு வாசகர் உங்களது மூன்றாவது அத்தியாயம் வரை ஈர்க்கப்பட்டுவிட்டால், அவர் கதையின் மீதமுள்ள அத்தியாயங்களை நிச்சயமாக அன்லாக் செய்து படிப்பார்.
வாசகர் வட்டத்தை உருவாக்குவதில் மிக முக்கியமான காரணி தொடர்ச்சித்தன்மை ஆகும். புதிய அத்தியாயங்கள் எப்போது வெளியாகும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள வாசகர்கள் விரும்புவார்கள்; மேலும் தொடர்ந்து பதிப்பித்தல் உங்களது கதைகளைத் தளத்தில் எப்போதும் முன்னிலையில் வைத்திருக்க உதவும். நீங்கள் தினமும் பதிவிட்டாலும் சரி, அல்லது வாரத்தில் சில நாட்கள் பதிவிட்டாலும் சரி, ஒரு முறையான கால அட்டவணை வாசகர்களை உங்களது கதைகளுக்கு மீண்டும் மீண்டும் வர வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும்.
உங்களது தொடர்களை எப்போதுமே பாதியில் நிறுத்தாமல் முழுமையாக நிறைவுசெய்யுங்கள் . நீங்கள் கதைகளை முழுமையாக முடிப்பவர் என்று தெரிந்தால் வாசகர்கள் உங்களை நம்பி, உங்களது ஒவ்வொரு புதிய தொடரையும் படிக்கத் தொடங்குவார்கள். இதன் மூலம் உங்களது தொடர்கள் அதிக வாசகர்களைச் சென்றடைவதோடு உங்களது வருமானமும் உயரும்.
வாசகர்களைக் கவரும் வகையிலான அட்டைப்படங்களை உருவாக்க ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள். பிரபலங்களின் புகைப்படங்களையோ அல்லது கூகுளிலிருந்து (Google) நேரடியாக எடுக்கப்பட்ட படங்களையோ அட்டைப்படமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
ஏஐ (AI) கதைகளைத் தவிர்ப்பது: கதைகளை எழுதுவதற்கு ஏஐ-ஐப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வாசகர்கள் உங்களது தனித்துவமான, உண்மையான எழுத்து நடையை ரசிப்பதற்காகவே உங்களைத் தேடி வருகிறார்கள். முழுமையாக ஏஐ மூலம் எழுதப்படும் கதைகள் வாசகர்களோடு உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைவதில்லை. கதையின் போக்கில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது புதிய சிந்தனைகளை உருவாக்க மட்டும் ஏஐ-ஐப் பயன்படுத்தலாம். புத்திசாலித்தனமான எழுத்தாளர்கள் ஏஐ-ஐ ஒரு உதவியாளராக மட்டுமே பார்க்கிறார்கள், தங்களுக்குப் பதிலாகக் கதை எழுதும் எழுத்தாளராக அல்ல.
காதல் கதைகளைத் தவிர மற்ற கதைக் களங்களையும் முயன்று பாருங்கள். வாசகர்கள் திகில் , அமானுஷ்யம் , த்ரில்லர் , சஸ்பென்ஸ் , அறிவியல் புனைகதை, புராணக் கதைகள் மற்றும் குடும்ப கதைகளை விரும்பிப் படிக்கிறார்கள்.
சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்துங்கள்: உங்களது பிரதிலிபி ப்ரொபைல் குறித்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உருவாக்குங்கள்; மேலும் எங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்துடன் [ இங்கே காண்க ] இணைந்து கொலாபரேட் (Collaborate) செய்யுங்கள். உங்களது ஃபாலோயர்கள், வருமானம் மற்றும் வாசிப்பு எண்ணிக்கை ஆகியவற்றின் வளர்ச்சியை உங்களது ரீல்ஸ்கள் மூலம் தாராளமாகக் காண்பிக்கலாம். சில சமயங்களில், தங்களுக்குப் பிடித்த கதையை மற்றவர்களிடம் பகிர்ந்து விளம்பரப்படுத்துமாறு உங்களது வாசகர்களிடமே நீங்கள் கேட்கலாம். அதுமட்டுமின்றி, நீங்கள் இந்தச் சிறப்புத் திட்டத்திலும் பங்கேற்கலாம்: இங்கே காண்க
கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்: வாசகர்களின் விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்; ஆனால், விமர்சிப்பவர்களுடன் எக்காரணம் கொண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சிறந்த எழுத்தாளர்கள் தங்களது கவனத்தை எப்போதும் புதிய படைப்புகளை உருவாக்குவதிலேயே செலுத்துவார்களே தவிர, விமர்சனங்களில் அல்ல. மேலும், பிரதிலிபியின் பரிந்துரை அமைப்பு என்பது கதைகளின் ரேட்டிங்கைப் பொறுத்தது அல்ல; அது வாசகர்களின் உண்மையான வாசிப்புத் தன்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
எழுத்துப் போட்டிகளில் பங்கேற்கவும்: எழுதுவதில் ஒரு முறையான பழக்கத்தை வளர்த்துக்கொள்ள விரும்பினால், தொடர்ந்து எழுத்துப் போட்டிகளில் கலந்துகொள்ள முயலுங்கள். இதோ, நாங்கள் தற்போது ஒரு புதிய போட்டியைத் தொடங்கியுள்ளோம், பிரதிலிபி போட்டிகளில் பங்கேற்க இந்த லிங்க்கைக் கிளிக் செய்யவும்: இங்கே க்ளிக் செய்யவும்
நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்காக ஒரு சூப்பரான செய்தி! வரவிருக்கும் வாரங்களில் ஐபோன்களுக்கான பிரதிலிபி செயலியில், பிரத்யேகமாக எழுதும் வசதி புதிய அப்டேட் மூலம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. :)
பிரதிலிபியில் உங்கள் அனுபவம் குறித்து, அதாவது எது நன்றாக உள்ளது , எது நன்றாக இல்லை, எதை நாங்கள் இன்னும் மேம்படுத்தலாம் , அல்லது அடுத்ததாக நாங்கள் எதை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என எது குறித்தும் எங்களுடன் இந்தப் படிவ இணைப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள்- படிவ இணைப்பு
எங்கள் குழு அனைத்து பதில்களையும் வாசிக்கும்.
அன்புடன்,
பிரதிலிபி குழு.