pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சிறந்த எழுத்தாளர் விருதுகள் -5 போட்டி முடிவுகள்

30 సెప్టెంబరు 2023

அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,

 

இதோ வந்துவிட்டது நீங்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்த முடிவுகள்!

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5” போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.  பல புதிய எழுத்தாளர்கள் கோல்டன் பேட்ஜ் பெற்று இந்தப் போட்டியில் கலந்து கொண்டு எண்ணற்ற அருமையான 60 பாக கதைகளை பதிவிட்டிருந்தனர். 

 

'பிரதிலிபி சிறந்த எழுத்தளார் விருதுகள்' எப்படி நாட்டின் மிகவும் பிரபலமான ஆன்லைன் இலக்கிய விருதுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்பதைப் பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவில் உள்ள 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பிரபலமான மற்றும் புதிய எழுத்தாளர்கள் பங்கேற்று அதிக எண்ணிக்கையிலான மிகச்சிறந்த கதைகளை இப்போட்டிக்காக எழுதுகின்றனர் - இந்த தேசிய அளவிலான எழுத்துப் போட்டி நம் நாட்டில் உள்ள எழுத்தாளர்களின் அளப்பரிய எழுத்துத் திறமைகளை வெளிப்படுத்த அனைவருக்கும் ஒரு மகத்தான வாய்ப்பை வழங்கியுள்ளது! 

 

ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிய பிரதிலிபியின் அனைத்து ‘சிறந்த எழுத்தாளர்களையும்’ மனதார வாழ்த்துகிறோம். எங்களுக்கு வந்த ஏராளமான கதைகளில் உங்கள் படைப்புகள் தனித்து நிற்கின்றன, மேலும் உங்கள் சாதனைகளை அங்கீகரிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

 

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் எழுத்தார்வம் எங்களை மேலும் ஊக்குவிக்கிறது. பிரதிலிபியில் இத்தனை திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

 

நகம்கடிக்க வைக்கும் க்ரைம் த்ரில்லர் கதைகள், முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்யும் திகில் கதைகள், பிரமிக்க வைக்கும் காதல் கதைகள், வலுவான கருத்துக்களைக் கொண்ட சமூகக் கதைகள், அறிவியல் புனைகதைகள், வரலாற்றுக் கதைகள் - அனைத்து வகை கதைகளையும் கண்டோம்! இந்தப் போட்டியில் எங்கள் எழுத்தாளர்களாகிய நீங்கள் பதிப்பித்த கதைகளின் தரம்  மிகவும் குறிப்பிடத்தக்கது!  உண்மையில், இம்முறை போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில், ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் மிக அருமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. நூற்றுக்கணக்கான கதைகளில் இருந்து முதல் 20 கதைகளை தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக சவாலான விஷயமாகவே இருந்தது. 

 

இலக்கியத்தில் ஒப்பீட்டளவில் தீர்ப்பைக் கொண்டு வருவது என்பது  சாத்தியமில்லை. எனினும், போட்டி விதிகளின்படி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! எனவே, அயராத முயற்சிகளுக்குப் பிறகு, எங்கள் நடுவர்கள் குழு சிறந்ததிலும் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்போட்டியின் சிறந்த எழுத்தாளர்கள் பெயர்களை கீழே காணவும்.

சிறந்த எழுத்தாளர்களின் வெற்றிப் பட்டியல் -

 

1. முதல் பரிசு: சிறைப்பாவை வெளிவருமா? -RADHA KUMAR

(ரூ .11000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

2. இரண்டாம் பரிசு: சர்க்கார் - Vanmathy hari

(ரூ .7000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)  

 

3. மூன்றாம் பரிசு:  உள்ளே ஒரு வேட்கை - ஆபுத்திரன்

(ரூ .5000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

 

சிறப்பு பரிசு பெரும் 17 படைப்புகள்-

 

4. உறவென்று சொன்னால் நீதானே - காஞ்சனா அன்புச்செல்வம்

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

5. தூமகேது - புவனா சந்திரசேகரன்

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

6. நிலைக்கு வருமா அலங்காரத் தேர் - ஜெ.சுமதி ராஜேந்திரன்

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

7. உன் பார்வை தூண்டிலா.? -நந்தினி சுகுமாரன்.

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

8. முள்ளோடு தேனீ - கா ல தா ச பா ர தி

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

9. விக்கியும் ராவணனும் - பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

10. இராவண அதிகாரம்:- இராவணேச்சுரம்..! - தமிழ் பிரியன்

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

11. வதம் செய்யும் மெல்லிசையே - Moon girl

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

12. சாரல் காற்றே - Gayathri Senthil

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

13. வித்தகனின் விந்தையான விகசனமே - பிரியங்கா முத்துகுமார்

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

14. கல்யாணத் தேன் நிலா! - சித்ரவதனா

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

15. என்னில் உன் வாசம் - அனு சத்யா

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

16. உழந்தும் உழவே தலை - நாக நந்தினி

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

17. காதோரம் குளிர் மூட்டவா...! - ஈஸ் வரி

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

18. ராம் லீலா - Para Sakthi

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

19. மூடப்பட்ட ரகசியங்களும், மூழ்கிய பொக்கிஷங்களும் - Sparrow Rapunzel

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

20. நிழலென வந்தாய் நிஜமென ஆனாய் - kalpana-r

(ரூ .3000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

பிற குறிப்பிடத்தக்க படைப்புகள்:

 

கீழே உள்ள கதைகளை குறிப்பிடாமல் விட்டால் அது நியாயமற்றது. மேலே இடம்பிடித்திருக்கும் கதைகளுக்கு சவாலான போட்டியாக இறுதி வரை இருந்த குறிப்பிடத்தக்க படைப்புகள் இவை. நிச்சயமாக அடுத்த போட்டியில் பரிசுபட்டியலில் இவர்கள் இடம்பெறுவார்கள் என நம்புகிறோம்.



 

கதை

எழுத்தாளர்

1

நான் என்பதே நீயல்லவா!

G. Shyamala Gopu

2

பெண்ணவன்

Sudha Suresh

3

ரணமும் காதலானதே

தனிமை காதலி

4

சொ (கொ)ல்லத் ‌துடிக்குது மனசு..!!!

M ரிகல்ட்டா முத்துலிங்கம்

5

வேட்டையின் தாக(ப)ம் தீர்ந்திடுமா?

Fajeeha mumthaj

6

மித்ரயாழினி

Kadha Rasigai

7

சிவதாசன் எனும் நான்...

Meera Jo

8

அனல் மேலே பனித்துளி

Lakshmi Rajendran

9

தீய்க்கும் வெறுப்பில் தித்திக்கும் நின்காதல்!

செவ்வந்தி துரை

10

ப்ரிய சகி

உஷா ரமேஷ்

11

மெய் நிகரா பூங்கொடியே

Nithya Mariappan

12

தாய்மை ( கண்ணீர் வழிய தேடுகிறது உன்னை என் இதயம்)

nivi ammu

13

உறவாக நான் வரவா என் உயிரே

Love Amore

14

நின் மோகம் என் செய்யுமோ ..

கிருஷ்ண துளசி

15

எங்கே எந்தன் இதயம் அன்பே....

சக்தி பிரியா மிரா

16

ஆதியும் நீ.. என்னில் பாதியும் நீ..

மகா மணி

17

ஜீவனின் உயிர் ஜோதியவள்

Vaishnavi Murugan

18

நிழலை வருடும் நிஜமானவள்

Rama (ரமா)

19

பாவை தேடிய ஜீவன்

ஆர்த்தி வசந்தன்

20

என்னுயிர் மீனம்மா

Rekha Sathish

 

இப்போட்டியில் 100 பாகங்களைக் கடந்து கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அவர்கள் அனைவருக்கும் பிரதிலிபியின் உத்தரவாதமான பரிசும் வழங்கப்படும்.

 

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மின்-சான்றிதழ் அனுப்பப்படும். 

 

வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களும்  கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

பெயர் (சான்றிதழில் இடம்பெற):  

உங்கள்  பிரதிலிபி ப்ரொபைல் லிங்க்: 

மின்னஞ்சல் முகவரி: 

தொலைபேசி எண்:  

வெற்றிபெற்ற படைப்பின் பெயர் மற்றும் போட்டி: 

பரிசுத்தொகை: 

பெயர் (வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ளபடி ஆங்கிலத்தில்): 

வங்கிக்கணக்கு எண் : 

IFSC எண் : 

வங்கியின் பெயர்: 

வங்கிக்கிளை: 

PAN எண்: 

வீட்டு முகவரி (அஞ்சல் குறியீட்டுடன்):

 

மேலே உள்ள விவரங்களை தெளிவாக [email protected]  எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 10 நாட்களில் அனுப்பிவைக்கவும் (நீங்கள் ஏற்கனவே எங்களிடம் உங்கள் விவரங்களை அனுப்பி இருந்தாலும் இப்போட்டியின் பரிசுத்தொகை பெற மீண்டும் மேல் உள்ள விவரங்களை அனுப்பவும்). நீங்கள் விரைவாக விவரங்களை வழங்கும்போது நாங்கள் பரிசுகளை  விரைவாக உங்களுக்கு அனுப்ப தோதாக இருக்கும். 

 

தற்போது நடைபெற்று வரும் ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6’ போட்டியில் வாசகர் தேர்வு, திறமையான வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது என பல வடிவங்களில் முடிவுகள் வெளிவிடப்படும். நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை டிசம்பர் 25, 2023க்குள் வெளியிட வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/lqj5bkgz7w



மனமார்ந்த வாழ்த்துக்களுடன் 

பிரதிலிபி போட்டிக்குழு