
பிரதிலிபி80 பாகங்கள் எழுதும் மைல்கல்லை எட்டிய எழுத்தாளர்கள் : https://tamil.pratilipi.com/blog/80-parts-swa6-b5sqbynfevnn6a0
***வணக்கம், இந்த போட்டியில் பங்கேற்க கடைசி தேதி முடிந்துவிட்டது. போட்டி முடிவுகள் குறித்த வேலை நடந்துகொண்டிருக்கிறது.
போட்டிகளில் பங்கேற்க விரும்பினால், இப்போது நடந்துகொண்டிருக்கும் போட்டிகளில் பங்கேற்கவும். நன்றி.***
----------------
அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,
பிரதிலிபி சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6 போட்டிக்கு உங்களை வரவேற்கிறோம்!
நாட்டின் திறமையான எழுத்தாளர்களை கண்டறிந்து அவர்களை கொண்டாடவும், அங்கீகாரம் அளிக்கவும் வெற்றிகரமான 'சிறந்த எழுத்தாளர் விருதுகள்' போட்டியின் 6வது சீசனை பிரதிலிபி அறிவிக்கிறது, இது இந்தியாவின் மிக பிரபலமான ஆன்லைன் இலக்கிய விருதாகும், மொத்தம் 12 பிராந்திய மொழிகளில், பல்வேறு மாநிலங்களில் உள்ள எழுத்தாளர்களால் கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து இப்போட்டி வளரும் திறமையான எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவதோடு, அவர்களின் தொடர்கதைகளை பிரதிலிபி பிரீமியம் பெஸ்ட்செல்லர் கதைகள், ஆடியோ ஷோக்கள், காமிக்ஸ் அல்லது நேரடி புத்தகங்கள் என மாற்றி மேலும் பிரபலமாக்குகிறது. இதுவரை இப்போட்டிகளில் பதிவிடப்பட்ட கதைகளை கோடிக்கணக்கான வாசகர்கள் வாசித்துள்ளனர். புதிய கதைக்களங்கள் உருவாக்குதல், தனித்துவமான கதாபாத்திரங்களை வடிவமைத்தல் மற்றும் சுவாரசியமான கதைகளை சுலபமாக எழுதும் சிறப்பான திறமை உங்களிடம் இருக்கிறதா? ஒரு தொழில்முறை எழுத்தாளராக உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புகிறீர்களா மற்றும் உங்கள் கதை மூலமாக மாதாந்திர ராயல்டிகளைப் பெற விரும்புகிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் தான் பிரதிலிபி தேடும் அந்த சிறந்த எழுத்தாளர்!
பிரதிலிபி எழுத்தாளர்கள் சிலர் சிறந்த எழுத்தாளர் விருதுகள் போட்டிகளில் பங்கேற்ற/வெற்றிபெற்ற தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் காணொளிகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
***********************************************************
முதல் 10 கதைகள்: தலா ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்.
எங்கள் திறமையான நடுவர்கள் குழு போட்டிக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து கதைகளையும் வாசித்து கீழ்கண்ட தகுதிகளின் படி முதல் 10 கதைகளை தேர்வு செய்வார்கள்.
- கதைக்களத்தின் தனித்தன்மை
- ஆரம்பம் முதல் இறுதி வரையிலான கதையின் விறுவிறுப்பு
- கதாப்பாத்திர வடிவமைப்பு
- எழுத்து நடையழகு மற்றும் வசனங்கள்
- எதிர்பார்ப்பை தூண்டும் கதைத் திருப்பங்கள்
- இலக்கண மற்றும் எழுத்துப்பிழைகள் இல்லாமை
- ஒட்டுமொத்த படைப்பின் தரம்
முதல் 10 கதைகள்: தலா ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்
போட்டியின் எல்லா விதிகளையும் பின்பற்றி சமர்ப்பிக்கப்படும் அனைத்து படைப்புகளில் இருந்தும் கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் முதல் 10 கதைகள் தேர்வு செய்யப்படும்:
- எழுத்தாளரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் போட்டிக் கதையின் மொத்த வாசிப்பு எண்ணிக்கை.
- அதிக வாசிப்பு மதிப்பெண் (Highest Engagement Score), அதாவது எத்தனை சதவீத வாசகர்கள் கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுதாக வாசித்து முடித்துள்ளனர் என்ற அடிப்படையில் கணினித்தரவுகள் வழங்கும் மதிப்பீடு.
பிரதிலிபியின் மதிப்புமிக்க ராஜபத்திர பட்டய சான்றிதழ் பெறும் வாய்ப்பு.
இப்போட்டியில் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு பங்கேற்று, 80 பாகங்கள் கொண்ட கதையை எழுதி நிறைவு செய்யும் எல்லா எழுத்தாளர்களுக்கும் பிரதிலிபியின் மதிப்புமிக்க ராஜபத்திர பட்டய சான்றிதழ் வழங்கப்படும். இந்த பிரத்தியேக கௌரவ விருதை பிரதிலிபியிடமிருந்து உங்களுக்கு அனுப்புவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். மேலும், உங்கள் நீண்ட தொடரை முழு பிரதிலிபி குடும்பத்துடனும் பகிர்ந்து, உங்கள் சிறப்பான வெற்றியை நாங்களும் கொண்டாடுவோம் என்று உறுதியளிக்கிறோம்!
இந்த சிறப்பு கெளரவம் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் பிரதிலிபி ப்ரொபைலில் முதல் முறையாக 60 பாகங்கள் கதையை பதிவிடும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படும்.
இந்த திறமையான வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பிரதிலிபியின் சிறப்பு தலையங்கப் பிரதியில் (சிறப்பு பிளாகில்) இடம்பெறுவார்கள், அங்கு அவர்களின் நேர்காணல்கள் வெளியிடப்பட்டு முழு பிரதிலிபி குடும்பத்துடனும் பகிர்ந்து கொள்ளப்படும். இது வெறும் நேர்காணல் மட்டுமல்ல; எழுத்துலகில் வளர்ந்து வரும் உங்களைப் பற்றியது, உங்கள் படைப்புலகம் மற்றும் தனிப்பட்ட கதை சொல்லும் பயணம் பற்றியது. இதில் மேலும் சிறப்பம்சமாக உங்கள் புகைப்படம், போட்டித்தொடரின் சுருக்கம் மற்றும் பிரதிலிபி ப்ரொபைல் ஆகியவை இடம்பெற்று பிரதிலிபி குடும்பத்தின் கவனத்தையும் பார்வையையும் ஈர்க்கும்.
***********************************************************
1. இந்தப் போட்டியில் பதிவிடப்படும் அனைத்து படைப்புகளும் நேரடியாக வாசகர்களின் விருப்பமான ‘பிரதிலிபி பிரீமியம்’ பிரிவுக்கு சென்றுவிடும், இதனால் அக்கதைகளின் எழுத்தாளர்கள் மாதாந்திர ராயல்டி மூலம் சம்பாதிக்க முடியும்.
2. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பிரதிலிபியிலிருந்து பிரத்தியேக டிஜிட்டல் பாராட்டு சான்றிதழ்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
3. பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும், எதிர்காலத்தில், பிரதிலிபி குழுவின் இலவச சிறப்பு ஆன்லைன் எழுத்துப் பயிற்சி வழங்கப்படும்.
4. லட்சக்கணக்கான வாசகர்களின் அன்பு மழையைப் பெறுவதற்கான வாய்ப்பு!
***********************************************************
1. தங்கள் ப்ரொபைல் படத்தைச் சுற்றி கோல்டன் பேட்ஜ் வைத்திருக்கும் பிரதிலிபி எழுத்தாளர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.
2. உங்கள் பிரதிலிபி பக்கத்தில் உங்களால் சுயமாக எழுதப்பட்ட ஒரு தொடர்கதையை நீங்கள் பதிப்பிக்க வேண்டும். கதைக்களத்தை உங்களுக்கு விருப்பமான எந்தத் தலைப்பிலும் அல்லது கதை வகையிலும் நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.
3. தொடரில் குறைந்தது 60 பாகங்கள் இருக்க வேண்டும், அதிகபட்ச பாகங்கள் அளவு இல்லை. கட்டாயமாக போட்டி இறுதி தேதிக்குள் தொடரை நிறைவு செய்திருக்க வேண்டும்.
4. போட்டிக்கு தகுதிபெறுவதற்கு, முதல் பாகம் பதிப்பிக்கும்போது கதைப்பிரிவு வகையில் 'சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6' எனும் பிரிவை கண்டிப்பாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. உங்கள் தொடர்கதையை கட்டாயமாக பிரீமியம் சப்ஸ்கிரிப்சனின் கீழ் வைத்திருக்க வேண்டும்.
6. ஒவ்வொரு பாகமும் குறைந்தபட்சம் 1000 வார்த்தைகள் கொண்டிருக்கவேண்டும். அதிகபட்ச அளவு இல்லை.
7. ஒருநாளில் உங்கள் விருப்பம் போல் எத்தனை பாகங்கள் வேண்டுமானாலும் பதிப்பித்துக் கொள்ளலாம்.
முக்கியக் குறிப்பு: நீங்கள் புதிதாக ஒரு தொடரை எழுதும்பொழுது முதல் 15 பாகங்கள் இலவசமாக (லாக் செய்யப்படாமல்) இருக்கும். ஆனால், 16 வது பாகத்தை பதிவிடும்பொழுது, தானாகவே உங்கள் தொடர் பிரீமியம் சப்ஸ்கிரிப்சன் திட்டத்தின் கீழ் வந்துவிடும். முதல் 15 பாகங்கள் பதிவிடும்பொழுது சப்ஸ்கிரிப்சனுக்கு தேர்வு செய்யும் வசதியை உங்களால் பார்க்க முடியாது. அதேநேரம், 16வது பாகத்திலிருந்து கதையின் அனைத்து பாகங்களும் லாக் செய்யப்பட்டு உங்கள் தொடர் பிரதிலிபி பிரீமியம் தொடராக மாறிவிடும். வாசகர்கள் பிரீமியம் சந்தா வாங்குவதன் மூலமோ, நாணயங்களை செலுத்துவதன் மூலமோ அல்லது ஒவ்வொரு பாகமும் திறக்க அடுத்த நாள் வரை காத்திருப்பதன் மூலமோ கதைப் பாகங்களை வாசிக்க முடியும்.
***********************************************************
1. போட்டி தொடங்கும் தேதி : 10 ஆகஸ்ட் 2023.
2. போட்டி முடிவடையும் தேதி : 25 டிசம்பர் 2023.
3. போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி : 25 பிப்ரவரி 2024.
***********************************************************
இன்னும் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் உங்களுக்கு இருக்கிறதா?
[email protected] இந்த மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். எங்கள் போட்டிக்குழுவினர் கூடியவரை விரைவாக உங்களுக்கு உதவி செய்வார்கள்.
பிரதிலிபி ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களுடன் தினமும் பணியாற்றி அவர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது. நாங்கள் உங்களுக்காக ஒரு திறந்த தளத்தை உருவாக்க விரும்புகிறோம், உங்களிடம் எழுத்து திறமை இருந்தால், எந்த தடையும் இல்லாமல் உங்கள் எழுத்து வாழ்க்கையை அமைத்து உங்கள் படைப்புகளின் மூலம் ஒவ்வொரு மாதமும் நீங்கள் சம்பாதிக்கலாம். இப்போட்டியில் கலந்துகொண்டு சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்ற உங்கள் கனவுகளுக்கு சிறகு கொடுங்கள்!
வாழ்த்துகள்!