
பிரதிலிபிபிரதிலிபி படைப்பாளிகள் சவால் 5 தொடங்கிவிட்டது!
பிரதிலிபியில் படைப்பாளிகள் சவாலில் 5 பங்கேற்று உங்களது வருமானம், படைப்பை வாசிப்பவர்கள் மற்றும் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள்!
கதைசொல்லுதலில் உங்களது திறமையை அதிகப்படுத்தவே இந்த படைப்பாளிகள் திட்டத்தையும், எழுத்து சவாலையும் நடத்துகிறோம். அதேசமயம் பிரதிலிபியிடமிருந்து வெகுமதிகள் பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள்!
இந்த சவாலை முடித்த பிறகு, நீங்கள் சான்றளிக்கப்பட்ட பிரதிலிபி படைப்பாளராகிவிடுவீர்கள்.
➡️ வகுப்புகளில் கலந்துகொள்வதை தவறவிட்டுவிட்டீர்களா? கவலைவேண்டாம்! அந்த வகுப்புகளை கீழே கொடுத்திருக்கிறோம். பார்த்து பயன்பெறுங்கள்:
- வாசகர்களை ஈர்க்கும் படைப்புகளை எப்படி உருவாக்குவது?
அனைத்து வகுப்புகளின் pdf-களையும் இங்கே பார்க்கலாம்.
இந்த போட்டியில் வெற்றிகரமாக படைப்பை எழுதி முடிக்க, கீழே உள்ள ஆப்ஷன்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்:
புதிய தொடர்: புதிதாக ஒரு தொடர் அல்லது புதிய சீசனை போட்டியின் கீழ் எழுத தொடங்கலாம்.
ஏற்கனவே எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் தொடர்: நீங்கள் ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கும் தொடரில் புதிய பாகங்கள் பதிப்பிக்க தொடங்கலாம். அந்த தொடரில் புதிதாக 50 பாகங்கள் பதிப்பிக்க வேண்டும்.
படைப்பை முடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை: 50 பாகத்தோடு அல்லது கடைசி தேதியோடு தொடரை முடிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. நீங்கள் தொடரை அதன் பிறகும் தொடர்ந்து எழுதலாம்!
100-பாகம் எழுதும் சாம்பியன்களுக்கு:
→ போட்டி நடக்கும் ஆறுமாத கால கட்டத்திற்குள் 100 பாகங்கள் பதிப்பித்தால், 'பிரதிலிபி படைப்பாளிகளுக்கான பிரத்யேக சான்றிதழ்’ உங்கள் வீட்டு முகவரிக்கே அனுப்பிவைப்போம்.
→ பிரதிலிபியின் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் உங்கள் வெற்றியை பகிர்வோம். அதற்கான ஒரு வாய்ப்பு.
→ பரிந்துரை: இரண்டு நாட்களுக்கு ஒரு பாகம் பதிப்பித்தால் எளிதாக 100+ பாகங்கள் எழுதமுடியும்.
50-பாகம் எழுதும் படைப்பாளிகளுக்கு:
→ போட்டி கடைசி தேதிக்குள் 50 பாகங்கள் பதிப்பித்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பிரதிலிபியின் 'பிரதிலிபி படைப்பாளிகள் சான்றிதழ்’ அனுப்பிவைக்கப்படும்.
→ பரிந்துரை: மூன்று நாட்களுக்கு ஒரு பாகம் பதிப்பித்தால் எளிதாக 50+ பாகங்கள் எழுதமுடியும்.
போட்டி நடக்கும் காலகட்டத்திற்குள் அதிக அத்தியாயங்களை எழுதி வெளியிடும் முதல் 10 எழுத்தாளர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு ஒரு சிறப்பு பரிசு அனுப்பப்படும். மேலும், அவர்களின் பெயர்கள் எங்களின் சமூக ஊடகங்களில் “எழுத்தாளர் சிறப்பு அறிமுக பதிவு” என்ற சிறப்பு பதிவின் மூலம் பகிரப்படும்.
குறிப்பு: இந்த சவாலின் காலவரம்பிற்குள் வெளியிடப்படும் அனைத்து அத்தியாயங்களும் சொற்களின் எண்ணிக்கை உட்பட அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும்.
அனைத்து பங்கேற்பாளர்களுக்கும்:
→ உங்களது தொடர் பிரதிலிபியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்படும்.
→ உங்களது தொடர் பிரதிலிபியின் முகப்பு பக்க பேனரில் பகிரப்படும்.
→ முழு பயிற்சி வீடியோக்கள் மற்றும் பாடக் கோப்புகளுக்கான வாழ்நாள் அணுகல் (access) வழங்கப்படும்.
→இதில் தொடர் எழுதுவதன் மூலம், உங்களது வருமானம் அதிகமாவதற்கான வாய்ப்பு உருவாகும்.
1.கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்களுக்கு: நீங்கள் கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர் எனில், எழுத்து சவாலில் தகுதிபெற உங்கள் தொடரை சப்ஸ்க்ரிப்ஷனின் கீழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். (உங்களது தொடரை சப்ஸ்கிரிப்சனின் கீழ் சேர்ப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்)
2.கோல்டன் பேட்ஜ் இல்லாத எழுத்தாளர்களுக்கு: உங்களிடம் கோல்டன் பேட்ஜ் இல்லையென்றால், வழக்கமான முறையில் தொடரின் அனைத்து பாகங்களையும் பதிப்பிக்கலாம். (பிரதிலிபியில் எப்படி தொடர் பதிப்பிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்)
3. புதிய அல்லது ஏற்கனவே தொடங்கிய தொடர்: உங்களது புதிய அல்லது ஏற்கனவே தொடங்கிய தொடரில் குறைந்தபட்சம் 50 புதிய அத்தியாயங்கள் போட்டி முடிவு தேதிக்குள் எழுதவேண்டும். கடைசித் தேதிக்குள் தொடரைக் கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. போட்டி கடைசிதேதிக்கு பின்னும் தொடரை தொடர்ந்து எழுதலாம்
4. சொற்கள் எண்ணிக்கை: குறைந்தபட்சம் ஓர் அத்தியாயத்திற்கு 1000 சொற்கள் இருக்கவேண்டும். அதிகபட்ச வரம்பு இல்லை. ஆனால், அதைவிட குறைவாக எழுதினால் தொடர் நிராகரிக்கப்படலாம். (பதிப்பிக்கும்போது எத்தனை வார்த்தைகள் எழுதியிருக்கிறோம் என்பதை இங்கே பார்க்கலாம)
5. தொடரின் பிரிவு: சவாலில் பங்கு பெற ‘ படைப்பாளிகள் எழுத்து சவால் 5 ’ எனும் பிரிவை தேர்வு செய்யவும்.அதனை தேர்ந்தெடுத்தாலே படைப்பு போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
தொடரில் நீங்கள் போட்டி வகையைச் சேர்க்கவில்லை, என்றால் கதை, போட்டியில் இருந்து முற்றிலும் தகுதி நீக்கம் செய்யப்படும். நீங்கள் விரும்பும் மேலும் இரண்டு வகைகளையும் தொடரில் சேர்க்கலாம். (பிரிவை சேர்ப்பது எப்படி? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்)
6. தீம் & கதை வகை: இது முற்றிலும் உங்கள் தேர்வு. நீங்கள் எந்தக் கதை வகையிலும் எழுதலாம்.
7. தகுதி நீக்கம்: போட்டி விதிகளை கடைபிடிக்காத படைப்புகள், கடைசி தேதிக்குள் குறிப்பிட்ட பாகங்கள் எழுதப்படாத படைப்புகள், வேறு போட்டிக்கு சேர்க்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்படும்.
=> ஓர் அறிவுரை: உங்கள் கதையை முதல் அத்தியாயத்திலிருந்தே தொடங்கவும். டீசர், பிற குறிப்புகள், முன்னுரை போன்றவைற்றை தவிர்க்கவும்.
=> ஒரு தொடரின் முதல் அத்தியாயத்தை எவ்வாறு எழுதுவது என்று புரியவில்லையா? (பார்க்க)
→ சவால் தொடங்கும் தேதி: 08 டிசம்பர் 2025
→ சவால் முடியும் தேதி: 02 ஜுன் 2026 (செவ்வாய் கிழமை)
→ குறிப்பு: போட்டிக்கு தகுதிபெறும் அனைத்து தொடர்களும் பேஸ்புக் பக்கம் மற்றும் முகப்பு பக்க பேனரில் சவால் முடிந்து 4 வாரத்திற்குள் பகிரப்படும்.
=> பிரதிலிபியில் எப்படி தொடர் பதிப்பிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்
=> எங்களது முந்தைய வகுப்புகளில் இருந்து கற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்.
----------
பிரதிலிபி படைப்பாளிகள் திட்டத்தில் பங்கேற்று ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் வெற்றிகரமாக வருமானம் ஈட்ட தொடங்கியுள்ளார்கள். இது உங்களுக்கான வாய்ப்பு. பங்குபெற்று பயனடையுங்கள்! உங்கள் எழுத்தாளர் நண்பர்களுக்கு இந்த விவரத்தை அனுப்ப மறக்காதீர்கள். இது அவர்களுக்கும் உதவலாம்.
இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் [email protected] எனும் மின்னஞ்சலிற்கு எழுதவும். எங்களது குழு 24 மணி நேரத்தில் பதிலளிப்பார்கள்.
நல்வாழ்த்துகளுடன்!
பிரதிலிபி குழு.