
பிரதிலிபிபோட்டிக்கு படைப்புகள் சமர்ப்பிக்கும் தேதி முடிந்தது. எங்களது குழு பரிசுகள் அனுப்புவது குறித்த பணிகளில் இருக்கிறார்கள். புதிய போட்டிகளில் பங்கேற்க விரும்பினால், சில நாட்கள் காத்திருக்கவும். கூடிய விரைவில் புதிய போட்டி அறிவிக்கப்படும்.
கதைகள் எழுதும் ஆர்வத்திலிருந்து நிறைவான வாழ்க்கை முறையை உருவாக்கவேண்டும் என்று நீங்கள் எப்போதாவது கனவு கண்டிருக்கிறீர்களா?
உங்கள் காத்திருப்பு இப்போது முடிந்தது! எங்கள் பிரதிலிபி படைப்பாளிகள் எழுத்து சவாலில் பங்கேற்கவும். இந்தத் திட்டம் திறன் மற்றும் ஊக்கம் கொண்ட எழுத்தாளர்களை இணையதள கதைசொல்லல் உலகில் வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
----------
நீங்கள் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ளவில்லையெனில், கீழே உள்ள சுட்டிகளின் மூலம் அவற்றை காணமுடியும் :
(1) அதிக-வருமானம் ஈட்டும் தொடர்களை எழுதுவது எப்படி!
(2) சுவாரசியமான கதைக்களங்கள், சுவாரசியமான கொக்கிகள் (hooks) மற்றும் சஸ்பென்ஸ் மூலம் வாசகர்களை ஈர்ப்பது!
(3) அதிக பாகங்களை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை எப்படி களைவது!
(4) வாசக ஈடுபாட்டின் மூலம் வருமானத்தை பெருக்குவது எப்படி!
=> அனைத்து வகுப்புகளையும் pdf-களையும் இங்கே பார்க்கலாம்.
----------
இந்த போட்டியில் வெற்றிகரமாக படைப்பை எழுதி முடிக்க, கீழே உள்ள ஆப்ஷன்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்:
1. புதிய தொடர்: புதிதாக ஒரு தொடர் அல்லது புதிய சீசனை போட்டியின் கீழ் எழுத தொடங்கலாம்.
2. ஏற்கனவே எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் தொடர்: நீங்கள் ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கும் தொடரில் புதிய பாகங்கள் பதிப்பிக்க தொடங்கலாம்.
3. போட்டி கடைசி தேதி: கடைசி தேதியோடு தொடரை முடிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. நீங்கள் தொடரை அதன் பிறகும் தொடர்ந்து எழுதலாம்!
----------
1. ப்ரேம் செய்யப்பட்ட சான்றிதழ்: குறிப்பிட்ட தேதிக்குள் 80 பாகங்கள் பதிப்பித்தால், பிரதிலிபியின் 'பிரதிலிபி படைப்பாளிகள் திட்டத்தின்' சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும். உங்கள் வீட்டு முகவரிக்கே சான்றிதழை அனுப்பிவைப்போம்.
2. வாசகர்களுடன் உங்களது பிரத்யேக நேர்காணலை பகிர்வதற்கான வாய்ப்பு: உங்களது நேர்காணல் பிரதிலிபி குடும்ப வாசக - எழுத்தாளர்களுடன் பகிரப்படும். இது வெறும் நேர்காணல் மட்டுமல்ல. உங்களைப்பற்றி, உங்களது கதை உலகம் பற்றி, உங்களது எழுத்துப்பயணம் பற்றி அனைவரோடும் பகிர்ந்துகொள்ளும் ஒரு நல்வாய்ப்பு. உங்களது புகைப்படம் (உங்களுக்கு விருப்பமிருப்பின்), தொடர்கதைகள் குறித்து, உங்களது ப்ரொபைல் பக்கம் ஆகியவையும் அதில் பகிரப்படும்.
3.மின்சான்றிதழ்: குறிப்பிட்ட தேதிக்குள் 50 பாகங்கள் பதிப்பித்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பிரதிலிபியின் 'பிரதிலிபி படைப்பாளிகள் திட்டத்தின்' சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்.
4. ப்ரமோஷன்: உங்களது தொடர் பிரதிலிபியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் மற்றும் முகப்பு பக்க பேனரில் ப்ரமோட் செய்யப்படும்.
5. வாழ்நாள் அணுகல்: முழு பயிற்சி வீடியோக்கள் மற்றும் பாடக் கோப்புகளுக்கான வாழ்நாள் அணுகல் (access) வழங்கப்படும்.
6. மாதாந்திர வருமானம்: இதில் தொடர் எழுதுவதன்மூலம், உங்களது வருமானம் அதிகமாவதற்கான வாய்ப்பு உருவாகும்.
----------
1. புதிய அல்லது ஏற்கனவே தொடங்கிய தொடர்: குறைந்தபட்சம் 50 அல்லது 80 புதிய அத்தியாயங்கள் எழுதவும்
2. தீம் & கதை வகை: இது முற்றிலும் உங்கள் தேர்வு. நீங்கள் எந்தக் கதை வகையிலும் எழுதலாம்!
3. பதிப்பிக்கவேண்டிய காலம்: 50 அல்லது 80 அத்தியாயங்களும் ஜூலை 8,2024 க்கு பிறகு தொடங்கப்பட்டு நவம்பர் 15,2024ஆம் தேதிக்குள் பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
4. தொடரின் பிரிவு: சவாலில் பங்கு பெற ‘ பிரதிலிபி படைப்பாளிகள் எழுத்து சவால் 2’ எனும் பிரிவை தேர்வுசெய்யவும். அதனை தேர்ந்தெடுத்தாலே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
5. சொற்கள் எண்ணிக்கை:குறைந்தபட்சம் ஓர் அத்தியாயத்திற்கு 800 சொற்கள் இருக்கவேண்டும். அதிகபட்ச வரம்பு இல்லை.
6. கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்களுக்கு: நீங்கள் கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர் எனில், எழுத்து சவாலில் தகுதிபெற உங்கள் தொடரை சப்ஸ்க்ரிப்ஷனின் கீழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
7. கோல்டன் பேட்ஜ் இல்லாத எழுத்தாளர்களுக்கு: உங்களிடம் கோல்டன் பேட்ஜ் இல்லையென்றால், வழக்கமான முறையில் தொடரின் அனைத்து பாகங்களையும் பதிப்பிக்கலாம்.
8. முக்கிய குறிப்பு: குறிப்பிட்ட தொடரில் பிற போட்டி பிரிவுகளை சேர்க்க கூடாது.
=> ஓர் அறிவுரை: உங்கள் கதையை முதல் அத்தியாயத்திலிருந்தே தொடங்கவும். டீசர், பிற குறிப்புகள், முன்னுரை போன்றவைற்றை தவிர்க்கவும்.
----------
→ தொடக்க தேதி: ஜூலை 8, 2024
→ முடிவு தேதி: நவம்பர் 15, 2024
→ போட்டி முடிவு குறித்து: இந்த சவாலை முடிக்கும் அனைத்து எழுத்தாளர்களும் அங்கீகரிக்கப்படுவார்கள் மற்றும் மேலே குறிப்பிட்ட பரிசு பெறுவார்கள். இதில் ரேங்க் பட்டியல், அல்லது போட்டி முடிவுகள் போன்றவை இல்லை.
→ குறிப்பு: போட்டிக்கு தகுதிபெறும் அனைத்து தொடர்களும் பேஸ்புக் பக்கம் மற்றும் முகப்பு பக்க பேனரில் சவால் முடிந்து 4 வாரத்திற்குள் பகிரப்படும்.
----------
=> பழைய வகுப்புகளில் இருந்து கற்றுக் கொள்ள இங்கே சொடுக்கவும்
----------
நீங்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரா? இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் இலக்கிய தளமான பிரதிலிபியின் பிரத்யேக பயிற்சி சான்றிதழைப் பெற்று உங்கள் எழுத்துலக வாழ்க்கையை நிலைநாட்ட இது உங்களுக்கு ஒரு வாழ்நாள் வாய்ப்பு. வாழ்த்துக்கள்!
அனைவரும் உங்கள் பிரத்தியேகமான பிரதிலிபி படைப்பாளிகள் திட்டத்தின் சான்றிதழை பெற்று உங்கள் வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.
வாழ்த்துகளுடன்,
பிரதிலிபி குழு.