பிரதிலிபி
ரம்யாவின் தந்தையும் தமிழகத்தில் பெரிய தொழில் அதிபர்களில் ஒருவர்தான். ஆனாலும் இந்த சந்திப்பு அவ்வளவு எளிதில் அமைந்துவிடவில்லை. அவருக்கு மந்திரிகள் உதவி இருந்தும் இத்தனை நாட்கள் ஆகிவிட்டது அவரை சந்திக்கும் வாய்ப்பு அமைவதற்கு. இருவரும் வாசலைப் நோக்கி அவரை எதிர்பார்த்து காத்திருந்தனர். காலை 10.00 மணிக்கு வரும் அவருக்காக 9.15 மணியிலிருந்து காத்திருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் செய்திருந்த ஏற்பாடுகள் பலமாக இருந்தது. திடீரென ஐந்து விலை உயர்ந்த ஐந்து கார்கள் வரிசையாக வந்தது.