pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

இன்னாருக்கு இன்னாரென்று...

4.6
9512

கனி... என் வாழ்வில் மறக்க முடியாத பெயர். ஏறத்தாழ இருபத்து மூன்று வருடங்களுக்கு முன் எனது மூன்றாண்டு கல்லூரிக் காலத்தை அன்பால் நிறைத்தவள். வசந்தம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க வைத்தவள்... தினம் தினம் சந்தோஷம் பூக்க வைத்தவள். அவளைக் கடைசியாகப் பார்த்து பதினெட்டு வருசமாச்சு... அதாவது ஒன்னறை மாமாங்கம்... இனி அவளை சந்திக்கவே போவதில்லை என்று நினைத்தவன் அவளை மறக்காது மனசுக்குள் பூட்டி வைத்திருந்தேன். வேதனையான தருணங்களில் அவளின் நினைவுகளை மெல்ல மீட்டெடுப்பேன்... என் வேதனைகள் கரைந்து போகும். காரைக்குடி ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
'பரிவை' சே.குமார்

தேவகோட்டைக்கு அருகிலுள்ள பரியன்வயல் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். என் எழுத்து கிராமத்து வாசனையும் செட்டிநாட்டுப் பேச்சு வழக்குமே கொண்டது. எனக்கு இப்படித்தான் எழுத வரும். இதெல்லாம் என்னய்யா எழுத்து என்ற வார்த்தைகளை அதிகம் கேட்க நேரிட்டாலும் எனது எழுத்தின் பாணியில் இருந்து யாருக்காகவும் மாற விரும்பாதவன். என சுக, துக்கங்களைத் தூக்கிச் சுமக்கும் ஒரு நண்பனாய் என் எழுத்து எனக்கு வாய்த்திருக்கிறது. கல்லூரியில் படிக்கும் போது என்னை எழுத்துக்குள் இழுத்து வந்தவர் நான் தந்தையாக மதிக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன். அவர் போட்ட பிள்ளையார் சுழியின் பின்னே கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடை நின்றாலும் முழுவதுமாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்துப் பிரதி 'மனசு'. மிகச் சிறப்பாக நடத்தினோம். நண்பர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாது ஆனால் மனசு இன்னும் மனசுக்குள்... முதல் கவிதை தாமரையில் மலர்ந்தது. முதல் கதை தினபூமி-கதைபூமியில் துளிர்த்தது.அதன் பின் பாக்யா, உதயம், தினத்தந்தி குடும்ப மலர், தினமணிக் கதிர், மங்கையர் சிகரம் மற்றும் சில பத்திரிக்கைகளிலும் அதீதம், சிங்கப்பூர் கிளிஷே, அகல், கொலுசு, காற்றுவெளி போன்ற மின்னிதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. வெட்டி பிளாக்கர்ஸ், சேனைத் தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் ரூபனின் எழுத்துப் படைப்புகள் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசும், தமிழ்க்குடில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும் அகலின் சிறுகதைப் போட்டிகளில் புத்தகப் பரிசுகளும் பெற்றிருக்கின்றன. எனது கருத்து பாக்யா மக்கள் மனசு பகுதியில் சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. என்னில் பாதி என் அன்பு மனைவி நித்யா, என் உயிராய் இரண்டு செல்வ(ல)ங்கள்... மகள் ஸ்ருதி, மகன் விஷால். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வரும் எனக்கு பொழுதுபோக்கு மற்றும் தனிமை கொல்லி என் எழுத்து மட்டுமே. நிறைய எழுதுவேன்... இங்கிருப்பதால் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது குறைந்து விட்டது. எனது முதல் புத்தகமான் 'எதிர்சேவை' சிறுகதை தொகுப்பு (2020), தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது பெற்றிருக்கிறது. வேரும் விழுதுகளும் (2021), திருவிழா (2022) என்னும் நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. எனது புத்தகங்களை எனது நண்பர் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் வெளியிட்டுள்ளார். நன்றி.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    03 மார்ச் 2018
    எளிமையாக வாழ்க்கையின் திருப்பங்களை உணர்வுகளில் ஆணி அடித்தாற் போல் வெளிப்படுத்தும் கதையோட்டம் மனம் தொட்டது. உள்ளங்கள் சுமந்த அன்பு பலருக்கு ஒரு சிலுவைக்குள் முடிந்து போகிறது; சிலருக்கு ஒரு பொம்மை போல் சுட்டித்தனமாய் ஆயுளை கடத்துகின்றது. நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறு இது தான் வாழ்க்கை. அன்பை சுமக்கும் உள்ளங்கள் எல்லாம் தூய்மையானவை அது மரணத்தின் பின் கூட காலாவதியாவதில்லை. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  • author
    16 மார்ச் 2019
    கரையை தொடும் போது அலைகள் பின் வாங்கிக் கொள்வது போல் திருமணம் என்ற கரையை தொடுகையில் காதலென்னும் அலைகள் பின்வாங்கிக் கொண்டு போய் விடுகிறது. கதை எதார்த்தம்.
  • author
    ஜோதிஜி திருப்பூர்
    11 மார்ச் 2018
    எதார்த்தமும் நெஞ்சைத் தொடும் இனிய கதையோட்டமும். நன்றி குமார்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    03 மார்ச் 2018
    எளிமையாக வாழ்க்கையின் திருப்பங்களை உணர்வுகளில் ஆணி அடித்தாற் போல் வெளிப்படுத்தும் கதையோட்டம் மனம் தொட்டது. உள்ளங்கள் சுமந்த அன்பு பலருக்கு ஒரு சிலுவைக்குள் முடிந்து போகிறது; சிலருக்கு ஒரு பொம்மை போல் சுட்டித்தனமாய் ஆயுளை கடத்துகின்றது. நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறு இது தான் வாழ்க்கை. அன்பை சுமக்கும் உள்ளங்கள் எல்லாம் தூய்மையானவை அது மரணத்தின் பின் கூட காலாவதியாவதில்லை. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  • author
    16 மார்ச் 2019
    கரையை தொடும் போது அலைகள் பின் வாங்கிக் கொள்வது போல் திருமணம் என்ற கரையை தொடுகையில் காதலென்னும் அலைகள் பின்வாங்கிக் கொண்டு போய் விடுகிறது. கதை எதார்த்தம்.
  • author
    ஜோதிஜி திருப்பூர்
    11 மார்ச் 2018
    எதார்த்தமும் நெஞ்சைத் தொடும் இனிய கதையோட்டமும். நன்றி குமார்.