<p>பெயர் ஹரீஷ். இயற்பெயர் புனைப்பெயர் எல்லாம் ஒன்றே தான். CMA முடித்து சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை கணக்காளராகப் பணி.</p>
<p>ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது யதேச்சையாய் சுஜாதாவின் கொலையுதிர் காலம் கைகளில் கிடைக்க அன்று ஒட்டிக் கொண்ட சுஜாதா இன்னும் விட்டு விலக மறுக்கிறார்.</p>
<p>எழுதுவதற்கான தைரியத்தை கொடுத்தது சுஜாதாவின் எளிய மொழி என்று கூட சொல்லலாம். ராஜேஷ் குமார் பிடிக்கும்.</p>
<p>ரொம்பக் காலம் சுஜாதாவைத் தவிர வேறெதையும் வாசிக்காமல் இருந்து, அதன் பிறகு பற்றுதல் உண்டானது எஸ்.ரா வின் எழுத்துக்களின் மேல்.</p>
<p>இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்தும் பொருட்டு பாலகுமாரன், ஜெயகாந்தன், ஜெயமோகன் க நா சு என்று பழகிக் கொண்டிருக்கிறார்.</p>
<p>இப்போதைக்கு எழுதுவது சிறுகதைகள் மட்டுமே. அயல் சினிமாக்கள் பார்க்க விருப்பம் அதிகம்.</p>
<p>பி ஏ கிருஷ்ணனின் புலி நகக் கொன்றை போல் ஒரு நாவல் எழுத வேண்டுமென்பது வாழ்க்கை ஆசை.</p>
<p> </p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு