வாசிப்பை நேசிப்பவள்....எழுதுவதை சுவாசிப்பவள்.
நான் என்ற வித்து, நிலத்தோடு வேர்விட்டு கிளைகள் உயர , அன்பென்ற கைகள் விரிந்து பரந்து செழித்து உதவ, தொழ , அணைக்க, சமைக்க....எண்ணமென்ற கால்கள் உலகை அளக்க, செந்தமிழ் நாவில் தேன் சிந்திப் பாய, தமிழ் சுவாசம் எங்கும்.....தமிழ் நேசம் எங்கும்....இதயம் எங்கும்....ஏகி விரிய...இயற்கையும், நீரும், நிழலும், கடலும், சூரியரும், சந்திரரும், நெருப்பும், தென்றலும், அருவியும், மலரும், மணமும் மனத்தோடு தவழ்ந்து எகிற, தேன் கூடும், கரும்பும், தூக்கணாங்குருவியும், வயற்காடும், பசுவும் கன்றும் மயிலும்.....இந்த அழகிய உலகுக்கு அழகிட வந்த உயிரோவியங்கள்....அத்தோடு நானும்...ஓரமாய்...."நீங்கள் இருப்பதால் தான் இங்கே நானும்"....
ரிப்போர்ட் தலைப்பு