<p>சென்னையில் வசிக்கும் 83 வயது பெரியவர் கல்பட்டு நடராஜன் நரசிம்மன். அரசுப் பணிகளில் பல பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர். பிறந்த ஊரை தன் பெயரோடு இணைத்துக்கொண்டவர். 45 வருடங்களுக்கு முன்னர் இருந்த “கொடேக் பேபி ப்ரௌனி’ கேமராவை உபயோகித்த அனுபவங்கள் கொண்டவர்.</p>
<p>புகைப் படக் கண்காட்சிகளில் 13 முதல் பரிசுகளும், ஏ.எஃப்.ஐ.ஏ.பி. (Associate de la Art Photographique) என்ற பட்டமும் பெற்றவர். Nature Photography யில். F.I.A.P. (Federation Internationale de La Art Photographique) என்பது இங்கிலாந்தின் ராயல் போடோக்ராஃபிக் சொஸைடி போன்ற ஒரு ஐரோப்பிய அமைப்பு. இதன் அத்தாட்சிப் பத்திரத்தினை குடியரசுத் தலைவர் கைகளில் இருந்து 1971ல் பெற்றவர்.</p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு