எழுத்தில் எழுதிக் கொண்டு இருக்கிறேன், இதுவரை ஐம்பது கவிதைகள் எழுத்து தளத்தில் எழுதி இருக்கிறேன்... புதிதாய் இரு நாவல் எழுதும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.. பள்ளி பருவத்தில் இருந்தே கதை கவிதை ஏன் என் தமிழ் மீது அலாதி பிரியம் எனக்கு, அதனாலேயே தமிழ் ப்ரியா எனும் புனைபெயரில் எழுதி வருகிறேன்.. இன்னும் இன்னும் நிறைய எழுத வேண்டும்.. திருக்குறள், நட்பு, இயற்கை, காதல், சமூக எழுச்சி என பல தரப்பிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.. தமிழோடு பயணிக்கையில் வாழ்க்கை எவ்வளவு இன்பமயமாக இருக்கிறது.. என் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் தெய்வத்திரு பச்சமுத்து ஐயா அவர்களின் நல்லாசியுடன் தமிழோடு என் இறுதி மூச்சுள்ளவரை பயணிப்பேன்... நன்றி, தமிழ் ப்ரியா...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு