தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்தவன்;
தமிழை காதல் கொண்டவன் ;
அறப்பணியாம் ஆசிரியப் பணியை
அன்போடு ஏற்று அதிலே திளைப்பவன் .
அன்னை தந்தைக்கு தலைமகன் ;
அன்னை தமிழுக்கு கடைமகன் ;
காதல் செய்தே கரம் பிடித்தவன்;
கவியை மனையாய் பெற்றவன்.
தவ பலனாய் பிறந்ததால்
மணிகண்டன் என நாமம் பெற்றவன் ;
தந்தை பெயரை தலைப்பெயராய்
தங்கமணிகண்டன் என்றானவன் .
தாயை நேசிக்கும் தங்கமகன் ;
தந்தையை மதிக்கும் பண்பினன் ;
தங்கமகளுக்கு அவர்தம் பெயரிட்டு
தரணியில் தவழச் செய்தவன் .
அவனே உங்கள் தங்கமணிகண்டன்...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு