pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மனசு : உண்மை தெரிஞ்சா..?

4.1
1601

நிரந்தர முதல்வரே... என்றவனெல்லாம் நிம்மதி என்று நினைத்து 'அவரால் ஒன்றும் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை' என்று அறிக்கை விடுகிறான். சரி அவரால் வரவில்லை... இப்ப இருக்கும் அடிமை அல்லக்கைகளால்தான் ஓட்டு ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
'பரிவை' சே.குமார்

தேவகோட்டைக்கு அருகிலுள்ள பரியன்வயல் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். என் எழுத்து கிராமத்து வாசனையும் செட்டிநாட்டுப் பேச்சு வழக்குமே கொண்டது. எனக்கு இப்படித்தான் எழுத வரும். இதெல்லாம் என்னய்யா எழுத்து என்ற வார்த்தைகளை அதிகம் கேட்க நேரிட்டாலும் எனது எழுத்தின் பாணியில் இருந்து யாருக்காகவும் மாற விரும்பாதவன். என சுக, துக்கங்களைத் தூக்கிச் சுமக்கும் ஒரு நண்பனாய் என் எழுத்து எனக்கு வாய்த்திருக்கிறது. கல்லூரியில் படிக்கும் போது என்னை எழுத்துக்குள் இழுத்து வந்தவர் நான் தந்தையாக மதிக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன். அவர் போட்ட பிள்ளையார் சுழியின் பின்னே கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடை நின்றாலும் முழுவதுமாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்துப் பிரதி 'மனசு'. மிகச் சிறப்பாக நடத்தினோம். நண்பர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாது ஆனால் மனசு இன்னும் மனசுக்குள்... முதல் கவிதை தாமரையில் மலர்ந்தது. முதல் கதை தினபூமி-கதைபூமியில் துளிர்த்தது.அதன் பின் பாக்யா, உதயம், தினத்தந்தி குடும்ப மலர், தினமணிக் கதிர், மங்கையர் சிகரம் மற்றும் சில பத்திரிக்கைகளிலும் அதீதம், சிங்கப்பூர் கிளிஷே, அகல், கொலுசு, காற்றுவெளி போன்ற மின்னிதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. வெட்டி பிளாக்கர்ஸ், சேனைத் தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் ரூபனின் எழுத்துப் படைப்புகள் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசும், தமிழ்க்குடில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும் அகலின் சிறுகதைப் போட்டிகளில் புத்தகப் பரிசுகளும் பெற்றிருக்கின்றன. எனது கருத்து பாக்யா மக்கள் மனசு பகுதியில் சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. என்னில் பாதி என் அன்பு மனைவி நித்யா, என் உயிராய் இரண்டு செல்வ(ல)ங்கள்... மகள் ஸ்ருதி, மகன் விஷால். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வரும் எனக்கு பொழுதுபோக்கு மற்றும் தனிமை கொல்லி என் எழுத்து மட்டுமே. நிறைய எழுதுவேன்... இங்கிருப்பதால் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது குறைந்து விட்டது. எனது முதல் புத்தகமான் 'எதிர்சேவை' சிறுகதை தொகுப்பு (2020), தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது பெற்றிருக்கிறது. வேரும் விழுதுகளும் (2021), திருவிழா (2022) என்னும் நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. எனது புத்தகங்களை எனது நண்பர் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் வெளியிட்டுள்ளார். நன்றி.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    rajendran shanmugam
    11 ஏப்ரல் 2020
    உண்மை புதைக்கப்பட்டு விட்டது. மிகச்சிறந்த பதிவு.! உண்மை தெரிந்தவர்களும் உண்மையைக் கூறினால் உறங்கவைக்கப்படுவர் என்பதும் உண்மையே....!
  • author
    RAJENDRAN UDAIYAR Vaiyapuri
    18 டிசம்பர் 2020
    நறுக்கு தெரித்தார்போல வார்த்தைகள் பதிவிடப் பட்டு உள்ளது. அம்மையார் ஜெயலலிதா இருக்கும் வரை சிம்ம சோர்ப்பணமாக இருந்து மறைந்தார்.
  • author
    மலர்விழி "மலர்"
    24 மே 2022
    உண்மை. அத்தனையும் உண்மை. சாமான்யன் என்ன செய்ய முடியும்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    rajendran shanmugam
    11 ஏப்ரல் 2020
    உண்மை புதைக்கப்பட்டு விட்டது. மிகச்சிறந்த பதிவு.! உண்மை தெரிந்தவர்களும் உண்மையைக் கூறினால் உறங்கவைக்கப்படுவர் என்பதும் உண்மையே....!
  • author
    RAJENDRAN UDAIYAR Vaiyapuri
    18 டிசம்பர் 2020
    நறுக்கு தெரித்தார்போல வார்த்தைகள் பதிவிடப் பட்டு உள்ளது. அம்மையார் ஜெயலலிதா இருக்கும் வரை சிம்ம சோர்ப்பணமாக இருந்து மறைந்தார்.
  • author
    மலர்விழி "மலர்"
    24 மே 2022
    உண்மை. அத்தனையும் உண்மை. சாமான்யன் என்ன செய்ய முடியும்