பெரிதாக வாசிப்பு பழக்கம் இல்லாத நான். வீட்டில் கொட்டிக்கிடக்கும் எக்கச்சக்க புத்தகத்தில் என்றோ ஒரு நாள் படித்த சுஜாதாவின் புத்தகம் என்னை modern literature நோக்கி இழுத்தது. அதன்பிறகு எத்தனையோ புத்தகங்கள் படித்தாலும், என்னை ஈர்த்தது சுஜாதாவின் சிந்தனைகளும், சுருங்கச்சொல்லும் அவரின் மொழிப்புலமையும். அந்த தாக்கம் என் எழுத்துக்களில் இருப்பதாய் படித்தவர் எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள். நான் அதை compliment ஆகவே எடுத்துக்கொள்கிறேன். மனித உணர்வுகள், சயின்ஸ் பிக்ஷன், adventure, திகில், மர்மம் போன்றவை எனக்கு பிடித்த categories.
ரிப்போர்ட் தலைப்பு