எழுதவேண்டும் என்றொரு வெறி எல்லா வாசகர்களுக்கும் ஏற்படும் நிகழ்வு; நானும் விதிவிலக்கல்ல.. சடாரென்று கொட்டித்தீர்க்கும் மழையாய் 2015 முதல் 2016 வரை எழுதி தள்ளினேன். திடீரென ஒரு எண்ணம். மோசமான எழுத்தாளனைவிட நல்ல வாசகனாய் இருப்பது உத்தமம். மீண்டும் எழுத்தைத் தொடவில்லை. ஒரே ஒரு நல்ல கதையை உங்களிடம் கூறிவிடவேண்டுமென மனம் அலைந்து தவிக்கிறது. அதற்கான பயிற்சியாய் இக்கதைகள் பிராவாகமெடுத்துள்ளன. இக்கதைகள் அனைத்தும் முடிந்தவரை ஒவ்வொரு ஜானரில் நான் எடுத்த பயிற்சி என்றே சொல்லலாம். படைப்புகள் போன்றதொரு பெரிய வார்த்தையை என் கதைகளுக்கு சூட்ட முடியாது.
இக்கதைகளனைத்தும் நான் தேடிப்படித்தால் எனக்கு என்ன கிடைக்கவேண்டுமென எதிர்பார்ப்பேனோ அதையே என் சிந்தை உதவியுடன் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். ஒருவரின் பணத்தை, பொருளை விரயம் செய்வதைவிட பொன்னான இல்லையில்லை பொன்னைவிட மேன்மையான காலத்தை விரயம் செய்வதுதான் மிகக்கொடுமையானது.உங்களின் நேரம் என் கதைகளால் விரயமாகும் வண்ணம் இருக்காது என எதிர்பார்க்கிறேன்.நேர விரயம் எனக்கருதினால் பணிவான மன்னிப்பு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
உங்கள் ஆதரவு வேண்டி
மெக்னேஷ் திருமுருகன்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு