சிறுவயது முதல் அம்மாவுடன் சேர்ந்து ஆனந்த விகடன், குமுதம், குமுதம் சிநேகிதி, மங்கையர் மலர், தினமலரின் வாரமலர் மற்ற இதர புத்தகங்களை தொடர்ந்து படித்ததாலும், அம்மாவுடன் சேர்ந்து இந்தப் புத்தகங்களுக்கு கடிதங்கள் எழுதியதனாலும், இயற்கையாகவே பொது விஷயங்களை படிக்கவும், எழுதவும் பிடித்து விட்டது.
ஓசூரில் பள்ளிப் படிப்பு முடித்து, சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்த சமயத்தில், மைலாப்பூரில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் நான்கு நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசியுள்ளேன். எனது வலைத்தளமான karutthukkalam.com-க்கு 2017 இன் சிறந்த எழுத்தாளருக்கான விருதினை IndiBlogger வழியே பெற்றதில் மகிழ்ச்சிக்கொண்டேன்.
தற்சமயம் அமெரிக்காவில் பணிபுரிய வந்துள்ளேன், இங்கு நடக்கும் விஷயங்களை எழுத்து வழியே தமிழகம் உட்பட வேறு நாடுகளில் உள்ள நம் தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் பொருட்டு, "இதுதாங்க அமெரிக்கா..." என்ற கட்டுரைத் தொடரை எனது வலைதளத்தில் எழுதி வருகிறேன்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு