<p>இயற்பெயர் ஸ்ரீநிவாசன் .. புனைபெயர் ரிஷபன் </p>
<div>1000 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அச்சில். துளிர் முதல் சிறுகதைத் தொகுப்பே முதல் பரிசு பெற்றது.. திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு நடத்திய போட்டியில். வருடம் 2003 அதே அமைப்பு நடத்திய போட்டியில் மீண்டும் முதல் பரிசு பனி விலகிய நேரம் சிறுகதைத் தொகுப்பிற்கு - வருடம் 2008. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்திய மாநில அளவிலான போட்டியில் சூர்யா சிறுகதைத் தொகுப்பு 3ம் பரிசு</div>
<div>11 தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன.</div>
<div>3 மின்னூல்கள் பிரசுரம்.</div>
<div>இலக்கிய சிந்தனைப் போட்டியில் இரண்டு முறை மாதப் பரிசு. "ஏன் " சிறுகதை (இலக்கிய சிந்தனைப் பரிசு) பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இந்திய-ப்ரெஞ்ச் கூட்டமைப்பின் காலாண்டு இதழில் பிரசுரம். சாவி, ராஜம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுகள்.. கல்கி வைர விழாப் போட்டியில் மூன்றாம் பரிசு.இன்னும் பல பரிசுகள். கவிதைகளுக்கு தொடர்ந்து 3 முறை திருச்சி இலக்கிய வட்டத்தில் முதல் பரிசு. இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் இருக்கிறது .. போதும் இந்தப் பட்டியல் !</div>
<div>இவ்வளவும் சாத்தியமானது நட்பும் உறவும் அளிக்கும் இடைவிடாத உற்சாகத்தால் மட்டுமே.</div>
<div> </div>
<div>இன்னமும் ஒரு வாசகனாய் நினைப்பதும் மனதின் குழந்தைத் தன்மையைத் தொலைக்காதிருப்பதும் என் பலமாய்க் கருதுகிறேன்.</div>
<div> </div>
<div>அன்பின் </div>
<div>ரிஷபன் </div>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு