<p>சாதாரண இல்லத்தரசி……….2000 மாவது ஆண்டு வரை! 1997 ல் மகளுக்கு திருமணம். மாப்பிள்ளை கன்னடக்காரர். பெண்ணைக் கொடுக்கிறோம் என்று அவர்களது சம்பிரதாயம் ஒன்று கூட விடாமல் ஒரு கன்னடத் தோழியைக் கேட்டுக் கேட்டு எல்லாம் செய்தேன்.</p>
<p>வாழைக் காய் கூடாது என்றார்கள்; உளுந்து வடைக்கும் ஒரு பெரிய NO! (நம்ம வீட்டில் நீதான் வாழைக்காய் கறியமுது இல்லாமல், வடை இல்லாமல் இப்படி ஓரு கல்யாணம் செய்திருக்கிறாய் என்று சென்னையில் இருக்கும் என் உறவினர்கள் இன்றும் சொல்லிக் காட்டுகிறார்கள்!) பெண்ணுக்கு இரண்டு தாலிகள் – ஒன்று அம்மாவே கட்ட வேண்டும் என்றார்கள்! இப்படியாக பல பல சம்பிரதாய வித்தியாசங்களை சமாளித்து திருமணத்தை நடத்தி முடித்தோம்.</p>
<p>இதை கருவாக வைத்து ஒரு கதை எழுதினேன். <a href="https://ranjaninarayanan.wordpress.com/2012/10/10/அத்தையும்-ராகி-முத்தையும/" style="font-family: inherit; font-weight: inherit; font-style: inherit; margin: 0px; padding: 0px; vertical-align: baseline; border: 0px; outline: 0px; color: rgb(225, 18, 42); text-decoration: none;" target="_blank" title="அத்தையும் ராகி முத்தையும்!">“அத்தையும் ராகி முத்தையும்” </a>என்ற பெயரில். என் முதல் கதை – மங்கையர் மலரில் 2000 மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. என் எழுதும் திறமையில் அப்போதுதான் எனக்கே நம்பிக்கை வந்தது.</p>
<p>‘அவள் விகட’னிலும் ‘மங்கையர் மலரிலும் நிறைய எழுதினேன். என் படைப்புக்கள் அத்தனையும் ஒரு தொகுப்பாக இருக்கட்டும் என்று WordPress இல் எல்லாவற்றையும் பதிப்பித்துக் கொண்டிருக்கிறேன்.</p>
<p>படிக்கும் அனைவருக்கும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.</p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு