pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

வேட்பாளர்கள் நேர்காணல்

4.7
384

கடந்த வாரத்தில் ஊர்ப்பக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்த போது திரும்பிய பக்கமெல்லாம் அம்மாவின் பிறந்த நாள் வாழ்த்து தட்டிகளை நிறுவியிருந்தார்கள். கோபியில் பிரினியோ கணேஷ், அவிநாசியில் மூன்றாவது வார்டு ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
வா.மணிகண்டன்

எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கரட்டடிபாளையம் என்னும் சிற்றூர். 2004 ஆம் சென்னையில் எம்.டெக் ப்ராஜக்ட் செய்வதற்காக சென்னையில் சுற்றிக் கொண்டிருந்த போது கவிஞர். மனுஷ்ய புத்திரனுடனான அறிமுகம் கிடைத்தது. அதுவரை எழுதியிருந்த கவிதைகளில் இருக்கும் சிக்கல்களைப் புரியவைத்து நவீன இலக்கியத்தின் பக்கமாக திருப்பிவிட்டார். அதன் பிறகு தொடர்ந்த வாசிப்பும் பல கவிஞர்களுடனான நெருக்கமும் கவிதைகளின் மீதான விருப்பத்தை அதிகரித்தது. முதல் கவிதைத் தொகுப்பான ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ உயிர்மை பதிப்பகத்தின் வழியாகவே வெளியானது. அதன் பிறகு சைபர் குற்றங்களைப் பற்றிய தொடரான சைபர் சாத்தான்கள் என்ற புத்தகமும் உயிர்மை வெளியீடாக வெளியானது. இந்தச் சமயத்தில் கவிதைகளோடு சேர்த்து சில கட்டுரைகளும் எழுதத் துவங்கியிருந்தேன். தினமணி, அமுதசுரபி போன்ற இதழ்கள் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தன. கல்கியில் ‘ரோபோடிக்ஸ்’ குறித்தான தொடர் எழுதக் கிடைத்த வாய்ப்பினையும் குறிப்பிட்டாக வேண்டும். கவிதைகளை உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, புது எழுத்து, அம்ருதா உள்ளிட்ட இதழ்கள் வெளியிட்டு உற்சாகமளித்தன. இந்தச் சமயத்திலேயே வலைப்பதிவு எழுதத் தொடங்கியிருந்தேன். ஆரம்பத்தில் வெகு குறைவானவர்கள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். குறைவானவர்கள் என்பதைவிடவும் சொற்பமானவர்கள் என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும். 2012 ஆம் ஆண்டில் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ வெளியானது. இந்தச் சமயத்தில் தொடர்ந்து எழுதியதாலோ என்னவோ நிசப்தம் வலைப்பதிவும் பரவலான கவனம் பெறத் தொடங்கியிருந்தது. அதன் பிறகு வெளியான ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மசால் தோசை 38 ரூபாய்’ கட்டுரைத் தொகுப்பும் பிற புத்தகங்களைக் காட்டிலும் அதிகப்படியான கவனத்தை பெற்றன என்று சொல்ல முடியும். 2013 ஆம் ஆண்டுக்கான சுஜாதா இணைய விருது நிசப்தம் தளத்திற்குக் கிடைத்தது. நிசப்தம் அறக்கட்டளை நல்லதொரு வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். பல லட்ச ரூபாய்கள் நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது. பல பயனாளிகளுக்கு உதவ முடிந்திருக்கிறது. எழுத்து வழியாகச் செய்ய முடிந்த முக்கியமான காரியம் இது என்று நினைத்துக் கொள்கிறேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Shenuminu Ajay
    06 மார்ச் 2024
    பணம் கொடுத்து வாக்கை பெறுகிறார்கள்.ஆடசியில் அமர்கிறவர்களின் சொத்து மதிப்பை அதிகரித்து விட்டார்கள். இன்றளவும் மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். இனியும் இவர்களை நம்ப தயாராக இல்லை. மாற்றம் வேண்டும். தமிழர்களை ஏறி மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். காயம் தானே மிச்சம். வெள்ளம் வந்த போதும் வராத மோடி தேர்தலுக்காக வருகிறார்கள். வறுமைக்கே நிலைக்கே செல்கிறது நாடு...... 😓😓😓
  • author
    20 பிப்ரவரி 2020
    நேர்காணல் என்று......வீணான விவாத மேடை👌👍 நமக்கு விழிப்புணர்வுத் தேவை👌👍
  • author
    ANNADURAI apk
    27 நவம்பர் 2018
    மக்களுக்கு மயக்கமுற்ற அரசியல் தெளிவான பார்வை வேண்டும்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Shenuminu Ajay
    06 மார்ச் 2024
    பணம் கொடுத்து வாக்கை பெறுகிறார்கள்.ஆடசியில் அமர்கிறவர்களின் சொத்து மதிப்பை அதிகரித்து விட்டார்கள். இன்றளவும் மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். இனியும் இவர்களை நம்ப தயாராக இல்லை. மாற்றம் வேண்டும். தமிழர்களை ஏறி மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். காயம் தானே மிச்சம். வெள்ளம் வந்த போதும் வராத மோடி தேர்தலுக்காக வருகிறார்கள். வறுமைக்கே நிலைக்கே செல்கிறது நாடு...... 😓😓😓
  • author
    20 பிப்ரவரி 2020
    நேர்காணல் என்று......வீணான விவாத மேடை👌👍 நமக்கு விழிப்புணர்வுத் தேவை👌👍
  • author
    ANNADURAI apk
    27 நவம்பர் 2018
    மக்களுக்கு மயக்கமுற்ற அரசியல் தெளிவான பார்வை வேண்டும்