நம் சரித்திரம் நாமே சொல்வோம்…
முடிவடைந்த என் நாவல்கள் பற்றி என் தோழியிடம் கேட்ட போது.
1. ரட்சகனின் ராட்சசி
நிரஞ்சன் … உன் ஹீரோக்கள்லையே ரொம்ப ரொம்ப நல்லவன். எந்த அளவுக்குனா ஹீரோயின் ஷூட் பண்ணப்ப கூட, அது அவளோட சிச்சுவேஷன் சொல்லி அவளை பாதுகாத்த ஆளு…
2. உன் காதலின் விலை என்ன?
ஹீரோ ஹீரோயின் தாண்டி இப்போ வரை அவ பொங்குற ஒரு ஆள் சோபியா தான். (ஹீரோ அம்மா)
ப்ரெண்ட்க்கு புருஷனை கட்டி வச்சி பொங்கல் லிஸ்ட்ல முதலிடத்தில் இருக்கும் புண்ணியவதி. கெட்டவங்க இல்ல… இருந்தாலும் அமலாவ வாழ விடாம ஆக்கிட்டானு திட்டுவா…
3. ஆஹா கல்யாணம்…
“அந்த சரண்ன நினைச்சா இப்ப கூட பத்திட்டு வருது. மனுஷனா அவன்? இதுல அவன் ரைட்டர் வேற. என்னபாடு படுத்தினான் அந்த பொண்ண. கற்பனை கதாபாத்திரமா போய்ட்டான். இல்ல தேடி போய் நாலு அரை விட்டு இருப்பேன்..”
4. எதிலும் உன்னை தேடுகிறேன்…
அஸ்வந்த் அழகு… ஆனா இந்த பவன் வேண்டவே வேண்டாம். அவனை இன்னும் நல்லா சுத்த விட்டு இருக்கணும். அவனைலாம் ஜோடி சேர்க்கலைனா கூட ஏன்னு கேட்க மாட்டேன். அந்த அளவுக்கு கோபம் வருது அவன் மேல..
5. என் ஆசை எதிராளி…
துருவ்… அவன் பண்றதெல்லாம் தப்பு தான். இருந்தாலும் அவனை ரசிக்க வச்சான். கிருஷ்ணர் சின்ன பிள்ளைல அவ்வளவு சேட்டை செய்வார். யசோதா மா அடிக்க தான் வருவாங்க, ஆனா கிருஷ்ணர் முகத்தை பார்த்ததும் அடிக்க தோணாது. அவர் குறும்புகளை ரசிக்க தோணும். அந்த மாதிரி என்னை மயக்கி வச்சிருக்கான் இந்த துருவ்.
6. தளிர் மலரே மயங்காதே!
ப்பா… என்ன மாதிரி கதை. ஒவ்வொரு லைன்னும் ரசிச்சு படிச்சேன். அருணன் கூப்பிடுற அந்த ராதிகாஆஆஆவுக்கு நாங்க எல்லாம் அடிமை.. அதுலயும் அந்த ஆபீஸ் ரொமான்ஸ், போன்னு சொல்லிட்டு கண்ட்ரோல் பண்ண முடியாம அவன் இழுக்கிறது. அய்யோ வெட்கம் கம்மிங்… இதுல நம்ம கதைனு தெரியாம நம்மகிட்டயே வந்து ஆஹா ஓஹோனு விளம்பரம் ஓட்டுவாங்க பாரு.. அட அட அட… செமை ஃபீல் அது.
7. சித்திரவதையின் செல்லப் பெயர் காதல்…
ஹரிஸ் மேலயும் கோபமே வரல, அவன் கொடுக்கிற ரியாக்ஷன் எல்லாம் கியூட் ஆ இருந்துச்சு. அதுலயும், மூனு பேரையும் நான் கெடுத்துட்டேனா கேட்கிறது அல்டி மேட். ஜனனி சான்சே இல்ல. சிங்க பெண் தான்…
8. அதிரல் தாங்கும் பாதிரி…
ஆசை ஆசையா உங்கிட்ட புரபஸர் கதை கேட்டேன். ஆனா புரபஸர் தாண்டி நான் ரசிச்சது ரவுடியை தான். அந்த ராஜகுரு அப்படியே என் மனச கொள்ளையடிச்சிட்டு போய்ட்டான்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு