
பிரதிலிபிபோட்டி முடிவுகளை இங்கே பார்க்கவும் - https://tamil.pratilipi.com/blog/swa10tamilresults-claii93jw4n3pq5
இந்தியாவின் மிகப்பெரிய எழுத்துபோட்டியின் கடைசி சீசன் இது! கடந்த 9 சீசன்களில், எழுத்தாளர்கள் தங்களின் சிறந்த கதைகளை எழுதி, வாசகர்களின் அன்பை பெற்று, தங்களது மாதாந்திர வருமானத்தை அதிகப்படுத்தினார்கள். இது உங்களுக்கான வாய்ப்பு!
உங்களது தொடரை எழுதி முடிக்க இந்த முறை 150 நாட்களுக்கு மேலாக உள்ளது! உங்கள் தொடரை எந்த தலைப்பு, தீம், கதைக்களம் ஆகியவற்றில் வேண்டுமானாலும் எழுதலாம்.
அனைவரும் பங்கேற்கலாம் - கோல்டன் பேட்ஜ் பெற்ற அல்லது பெறாத புதிய எழுத்தாளர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டி மூலம் பணப்பரிசுகள், அங்கீகாரம் மற்றும் வாழ்நாள் முழுக்க வருமானம் ஈட்டும் வாய்ப்பு என பலவற்றைப் பெறமுடியும்!
சிறப்பு பரிசுகள் - வெற்றியாளர்கள் தங்களது வீட்டு முகவரியில் சிறப்பு பரிசு ஒன்றை பெறுவார்கள், அதேபோல் பிரதிலிபியிடமிருந்து சிறப்பு கடிதம் ஒன்று மற்றும் பிரத்யேகமான வெற்றியாளர் சான்றிதழ் ஆகியவற்றையும் பெறுவார்கள்! மேலும் போட்டிக்கு வரும் அனைத்து படைப்புகளும் எங்களது சமூக ஊடகத்தில் பகிரப்படும்.
வழிகாட்டி புத்தகம் - முதல் 15 நாட்களில் பங்குபெற்று, நீண்ட தொடர் எழுதுவதற்கு படிப்படியான யோசனைகள் தரும் ஆன்லைன் வழிகாட்டி புத்தகம் பெறுங்கள்.
→ டிரெண்டிங் தீம் மற்றும் எழுதுவதற்கான குறிப்புகளை வாசித்து பயன்பெறுங்கள்! [இங்கே சொடுக்கவும்]
__________________________________
1. பணப்பரிசுகள் மற்றும் வாழ்நாள் முழுதும் வருமானம் ஈட்டும் வாய்ப்பு - போட்டியில் பங்கேற்று பணப்பரிசு வெல்லுங்கள். அதேபோல் பங்கேற்கும் 90 சதவீத எழுத்தாளர்களின் மாதாந்திர வருமானம் பெருமளவில் அதிகமாகியிருக்கிறது!
2. வாசகர் வட்டத்தை பெரிதுபடுத்துங்கள் – உங்கள் படைப்பு பிரதிலிபி தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதன் மூலம் நிறைய வாசகர்களை சென்றடைய முடியும். அதேபோல் புதிய ஃபாலோவர்ஸ் பெற முடியும்.
3. எழுத்தில் ஒழுக்கத்தை மேம்படுத்துங்கள்! - குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எழுதிப்பழகி உங்களது எழுத்து பழக்கத்தை மேம்படுத்துங்கள். தொடச்சியாக பாகம் பதிப்பிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும், அடிக்கடி பதிப்பிப்பது பிரதிலிபியின் பரிந்துரை அமைப்பில் உங்களது தொடரை காண்பிக்க உதவும். அது உங்களுக்கு நிறைய பாலோவர்ஸை பெற்றுத்தரும்!
குறிப்பு : இரண்டு நாளைக்கு ஒரு பாகம் பதிப்பித்தால், எளிதாக 100 பாக தொடரை எழுத முடியும்!
__________________________________
→ முதல் 3 ரேங்க் பெறும் வெற்றியாளர்களுக்கு: ₹5000 ரொக்கப்பரிசு + சிறப்பு விருது + மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் + பிரதிலிபி குழுவிடமிருந்து சிறப்பு கடிதம்
→ 4 முதல் 6ஆவது ரேங்க் பெறும் வெற்றியாளர்களுக்கு: ₹3000 ரொக்கப்பரிசு + சிறப்பு விருது + மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் + பிரதிலிபி குழுவிடமிருந்து சிறப்பு கடிதம்
→ 7 முதல் 10ஆவது ரேங்க் பெறும் வெற்றியாளர்களுக்கு: ₹2000 ரொக்கப்பரிசு + சிறப்பு விருது + மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் + பிரதிலிபி குழுவிடமிருந்து சிறப்பு கடிதம்
→ 11 முதல் 25ஆவது ரேங்க் பெறும் வெற்றியாளர்களுக்கு – ₹1,000 ரொக்கப்பரிசு + ஃபிரேம் செய்யப்பட்ட சிறப்பு விருது + மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் + பிரதிலிபி குழுவிடமிருந்து சிறப்பு கடிதம்
→ குறைந்தபட்சம் 100 பாகங்கள் எழுதி முடிக்கும் எழுத்தாளர்கள், போட்டி முடிவுகள் பக்கத்தில் சிறப்பு குறிப்பு பெறுவார்கள். மற்றும் பிரதிலிபியிடமிருந்து அதிகாரப்பூர்வ 'இலக்கிய பங்களிப்புக்கான மரியாதை சான்றிதழ்' மின்னஞ்சலில் பெறுவார்கள்.
→ முதல்முறையாக 80 பாக தொடர் எழுதும் எழுத்தாளர்கள் போட்டி முடிவுகள் பக்கத்தில் சிறப்புக் குறிப்பாக இடம்பெறுவார்கள். பிரதிலிபியிடமிருந்து ‘பாராட்டுச் சான்றிதழ்’ மின்னஞ்சல் வழியாக பெறுவார்கள்.
1. பங்கேற்கும் அனைவருக்கும் பிரத்யேகமான பங்கேற்பு சான்றிதழ் மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும்.
2. அனைத்து தொடர்களின் சுட்டியும் எங்களது முகநூல் பக்கத்தில் போட்டி முடிந்தவுடன் பகிரப்படும்.
3. அனைத்து தொடர்களின் சுட்டியும் பிரதிலிபி செயலியின் முகப்பு பேனரில் போட்டி முடிந்தவுடன் பகிரப்படும்! .
4. நீங்கள் ஒரு ப்ரீமியம் தொடர் எழுதும்போது, வாழ்நாள் முழுதும் மாதாந்திர வருமானம் பெரும் வாய்ப்பை பெறுவீர்கள்!
5. வழிகாட்டி புத்தகம் – வாழ்நாள் முழுமைக்கும் அணுகக்கூடிய எழுத்து வழிகாட்டி புத்தகம் ?
__________________________________
1. கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்களுக்கு: போட்டிக்கு தகுதிபெற, உங்களது தொடர்கதையானது பிரதிலிபி பிரீமியம் திட்டத்தின் கீழ் எழுதப்பட வேண்டும். (உங்களது தொடரை சப்ஸ்கிரிப்சனின் கீழ் சேர்ப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்)
2. கோல்டன் பேட்ஜ் இல்லாத எழுத்தாளர்களுக்கு: கோல்டன் பேட்ஜ் இல்லையெனினும், தொடரை சாதாரணமாக பதிப்பித்து நீங்கள் போட்டியில் பங்குபெற முடியும். (பிரதிலிபியில் எப்படி தொடர் பதிப்பிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்)
3. தொடரின் பாகங்கள்: குறைந்தபட்சம் 80 பாகங்கள் எழுதவேண்டும். அப்போதே போட்டிக்கு தகுதி பெறுவீர்கள். 100 பாகங்களுக்கு மேல் பதிப்பித்தால் உத்திரவாதமான பரிசு உண்டு. அதிகபட்ச வரம்பு இல்லை.
4. வார்த்தை வரம்பு: ஒவ்வொரு பாகத்திலும் குறைந்தபட்சம் 1000 வார்த்தைகள் இருக்கவேண்டும், அதிகபட்ச வரம்பு இல்லை. ஆனால் குறைந்தது 1000 வார்த்தைகள் இருக்க வேண்டும். (பதிப்பிக்கும்போது எத்தனை வார்த்தைகள் எழுதியிருக்கிறோம் என்பதை இங்கே பார்க்கலாம)
5. கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள்: கதையை பதிப்பிக்கும்போது 'சிறந்த எழுத்தாளர் விருது 10' எனும் பிரிவை சேர்க்கவும்.
பிரிவு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், படைப்பு போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. இந்த பிரிவோடு சேர்த்து படைப்புக்கு ஏற்ற மேலும் 2 பிரிவுகளை சேர்க்க வேண்டும்.(பிரிவை சேர்ப்பது எப்படி? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்)
6. தொடரின் தீம்: எந்தவொரு தீம்/வகைமை அல்லது தலைப்பிலும் உங்கள் தொடரை எழுதலாம். (இங்கே சொடுக்கவும்)
7. தகுதியிழப்பு: போட்டி விதிமுறைகளை பின்பற்றாத அல்லது போட்டி தொடக்க தேதிக்கு முன்பாக எழுதப்பட்ட தொடர்கள் அல்லது முடிவு தேதிக்கு முன்பாக முடிக்கப்படாத தொடர்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
8. பாகம் 1-இல் நேரடியாக கதையை தொடங்கவும். டிரைலர், முன்னுரை, குறிப்புகள் போன்றவற்றை ஒரு பாகமாக பதிப்பித்து கதையை தொடங்குவதை தவிர்க்கவும். வாசகர்களின் வாசிப்பு ஆர்வத்தை அது நீர்த்து போக செய்யும். முதல் பாகத்திலிருந்து கதை துவங்குவதையே வாசகர்கள் விரும்புகிறார்கள். (பார்க்க)
_________________________________________________
→ போட்டி தொடங்கும் தேதி: 11 மார்ச், 2025
→ இறுதி பாகம் பதிப்பிப்பதற்கான கடைசி தேதி: 15 ஆகஸ்ட், 2025 (இந்த தேதிக்குள் உங்கள் தொடரை முடித்திருக்க வேண்டும்)
→ போட்டி முடிவுகள் வெளியாகும் தேதி: மாலை 5 P.M. - 15 அக்டோபர், 2025. போட்டி முடிவுகளின் லிங்கை எங்களது குழு மின்னஞ்சல் மற்றும் பிரதிலிபியில் செய்திகள் பகுதி மூலமாக அனுப்பி வைப்பார்கள். (எங்கள் குழு எவ்வாறு வெற்றியாளரை தேர்ந்தெடுக்கிறது. இங்கே பார்க்கவும்)
→ குறிப்பு: போட்டிக்கு தகுதிபெறும் அனைத்து தொடர்களும் போட்டியின் இறுதி தேதி முடிந்தவுடன் பிரதிலிபி முகநூல் பக்கம் மற்றும் முகப்பு பக்க பேனரில் பகிரப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்து தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும் (FAQ)
போட்டிகளில் ஏன் பங்கேற்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்
வீட்டு முகவரியில் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை பெறுவது எப்படி?
உங்கள் கதையின் லிங்கை எப்படி பகிர்வது?
_______________________________
மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால், [email protected] எனும் மின்னஞ்சலுக்கு எழுதவும். எங்களது குழு 24 மணி நேரத்திற்குள் பதிலளிப்பார்கள்.
ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் பிரதிலிபி தளத்தில் எழுதி, தங்களது திறமையை நிரூபித்து வெற்றிகரமாக வருமானம் ஈட்டி வருகிறார்கள். அவர்களோடு இணைய இது உங்களுக்கான வாய்ப்பு!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
பிரதிலிபி போட்டிக் குழு.