- பிரதிலிபியில் வளர 12 குறிப்புகள் || பிரதிலிபியிடமிருந்து ஒரு கடிதம்02 ஜூலை 2026அன்புள்ள எழுத்தாளருக்கு, மார்ச் மாதத்தில், பிரதிலிபி ஒரு கடிதத்தை உங்களுக்கு எழுதியிருந்தது ( அதை இங்கு வாசிக்கலாம் ). அதற்கு எழுத்தாளர்களாகிய நீங்கள் காட்டிய அன்பை உணர்ந்து உங்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று விரும்பினோம். இந்த கடிதம் 3 பகுதிகளைக் கொண்டது: 1) பிரதிலிபியின் கடந்த காலத்தைப் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள் 2) பிரதிலிபியில் நீங்கள் வெற்றியாளராக உருவெடுக்க எங்களது குழு வழங்கும் 12 மிக முக்கியமான குறிப்புகள் மற்றும் 3) ஒரு நற்செய்தி முதலில் பிரதிலிபியைப் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்: கடந்த 2014-ஆம் ஆண்டில், ஒரு வாடகை வீட்டில்தான் பிரதிலிபி பிறந்தது (அதன் புகைப்படம் கீழே உள்ளது). அதுவே எங்களுக்கு வீடாகவும், அலுவலகமாகவும் ஒரே நேரத்தில் செயல்பட்டது. அப்போது நாங்கள் வெறும் 5 பேர் மட்டுமே, ஆனால் இன்று 300-க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு பெரிய குழுவாக வளர்ந்துள்ளோம். இதற்கெல்லாம் எழுத்தாளர்கள் எங்களின் மீது வைத்த நம்பிக்கையே முக்கியக் காரணம். தொடக்க காலத்தில், சுமார் 8 முதல் 9 ஆண்டுகள் வரை எழுத்தாளர்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை; அப்படியிருந்தும் அவர்கள் பிரதிலிபியைத் தொடர்ந்து நம்பினார்கள். அதன் பலனாக, கடந்த ஒரே மாதத்தில் மட்டும், 10,381 எழுத்தாளர்கள் இணைந்து ஒட்டுமொத்தமாக ₹3.12 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளனர். பிரதிலிபியில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு உதவும் பயனுள்ள குறிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு எங்களது குழுவைச் சேர்ந்த 12 உறுப்பினர்களிடம் கேட்டிருந்தோம். அவர்கள் வழங்கிய 12 குறிப்புகள் இதோ. ஒருவேளை நீங்கள் இன்னும் பிரதிலிபியில் வருமானம் ஈட்டத் தொடங்கவில்லை என்றால், அதற்கான வழி இதோ: நீங்கள் 200 ஃபாலோயர்களை பெற்று, ஒரு மாதத்தில் 5 கதைகள் அல்லது 5 அத்தியாயங்களை வெளியிட்டால், உங்களுக்கான 'கோல்டன் பேட்ஜ்' கிடைக்கும். அதன் பிறகு உங்களது தொடர்களைச் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் இணைத்து நீங்கள் வருமானம் ஈட்டத் தொடங்கலாம். பிரதிலிபியின் வாசகர்களுக்கு நீண்ட தொடர்கள் என்றால் மிகவும் பிடிக்கும்! ஒவ்வொரு அத்தியாயத்தையும் 600-800 வார்த்தைகளுக்கும் அதிகமாக இருக்குமாறு எழுதுங்கள். கதையின் தொடக்கத்திலேயே அர்த்தமுள்ள திருப்பங்களையும் மோதல்களையும் உருவாக்குங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசகர்களுக்கு அடுத்த என்ன நடக்கும் என்ற ஆர்வத்தையோ, தவிப்பையோ அல்லது ஒரு விறுவிறுப்பான திருப்புமுனையையோ வைப்பதற்கு முயலுங்கள். அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்ற ஆர்வம் இருக்கும்போதுதான் வாசகர்கள் அடுத்தடுத்த அத்தியாயங்களைத் தொடர்ந்து அன்லாக் செய்து படிப்பார்கள். கதையை எப்போதும் நேரடியாகத் தொடங்குங்கள். தேவையில்லாத குறிப்புகள், முன்னுரை/அறிமுகம் அல்லது வாசகர்களிடம் நேரடியாகப் பேசுவது போன்றவற்றை அத்தியாயங்களுக்குள் எழுதுவதைத் தவிர்த்திடுங்கள். கதையின் முதல் அத்தியாயம் வாசகர்களுக்குள் ஒரு வலுவான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும், அப்போதுதான் அவர்கள் இயல்பாகவே அடுத்தடுத்த அத்தியாயங்களுக்குச் செல்வார்கள். அதேபோல், உங்களது மூன்றாவது அத்தியாயத்தை மிக விறுவிறுப்பான ஒரு திருப்புமுனையோடு முடியுங்கள். ஒரு வாசகர் உங்களது மூன்றாவது அத்தியாயம் வரை ஈர்க்கப்பட்டுவிட்டால், அவர் கதையின் மீதமுள்ள அத்தியாயங்களை நிச்சயமாக அன்லாக் செய்து படிப்பார். வாசகர் வட்டத்தை உருவாக்குவதில் மிக முக்கியமான காரணி தொடர்ச்சித்தன்மை ஆகும். புதிய அத்தியாயங்கள் எப்போது வெளியாகும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள வாசகர்கள் விரும்புவார்கள்; மேலும் தொடர்ந்து பதிப்பித்தல் உங்களது கதைகளைத் தளத்தில் எப்போதும் முன்னிலையில் வைத்திருக்க உதவும். நீங்கள் தினமும் பதிவிட்டாலும் சரி, அல்லது வாரத்தில் சில நாட்கள் பதிவிட்டாலும் சரி, ஒரு முறையான கால அட்டவணை வாசகர்களை உங்களது கதைகளுக்கு மீண்டும் மீண்டும் வர வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும். உங்களது தொடர்களை எப்போதுமே பாதியில் நிறுத்தாமல் முழுமையாக நிறைவுசெய்யுங்கள் . நீங்கள் கதைகளை முழுமையாக முடிப்பவர் என்று தெரிந்தால் வாசகர்கள் உங்களை நம்பி, உங்களது ஒவ்வொரு புதிய தொடரையும் படிக்கத் தொடங்குவார்கள். இதன் மூலம் உங்களது தொடர்கள் அதிக வாசகர்களைச் சென்றடைவதோடு உங்களது வருமானமும் உயரும். வாசகர்களைக் கவரும் வகையிலான அட்டைப்படங்களை உருவாக்க ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள். பிரபலங்களின் புகைப்படங்களையோ அல்லது கூகுளிலிருந்து (Google) நேரடியாக எடுக்கப்பட்ட படங்களையோ அட்டைப்படமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏஐ (AI) கதைகளைத் தவிர்ப்பது: கதைகளை எழுதுவதற்கு ஏஐ-ஐப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வாசகர்கள் உங்களது தனித்துவமான, உண்மையான எழுத்து நடையை ரசிப்பதற்காகவே உங்களைத் தேடி வருகிறார்கள். முழுமையாக ஏஐ மூலம் எழுதப்படும் கதைகள் வாசகர்களோடு உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைவதில்லை. கதையின் போக்கில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது புதிய சிந்தனைகளை உருவாக்க மட்டும் ஏஐ-ஐப் பயன்படுத்தலாம். புத்திசாலித்தனமான எழுத்தாளர்கள் ஏஐ-ஐ ஒரு உதவியாளராக மட்டுமே பார்க்கிறார்கள், தங்களுக்குப் பதிலாகக் கதை எழுதும் எழுத்தாளராக அல்ல. காதல் கதைகளைத் தவிர மற்ற கதைக் களங்களையும் முயன்று பாருங்கள். வாசகர்கள் திகில் , அமானுஷ்யம் , த்ரில்லர் , சஸ்பென்ஸ் , அறிவியல் புனைகதை, புராணக் கதைகள் மற்றும் குடும்ப கதைகளை விரும்பிப் படிக்கிறார்கள். சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்துங்கள்: உங்களது பிரதிலிபி ப்ரொபைல் குறித்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உருவாக்குங்கள்; மேலும் எங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்துடன் [ இங்கே காண்க ] இணைந்து கொலாபரேட் (Collaborate) செய்யுங்கள். உங்களது ஃபாலோயர்கள், வருமானம் மற்றும் வாசிப்பு எண்ணிக்கை ஆகியவற்றின் வளர்ச்சியை உங்களது ரீல்ஸ்கள் மூலம் தாராளமாகக் காண்பிக்கலாம். சில சமயங்களில், தங்களுக்குப் பிடித்த கதையை மற்றவர்களிடம் பகிர்ந்து விளம்பரப்படுத்துமாறு உங்களது வாசகர்களிடமே நீங்கள் கேட்கலாம். அதுமட்டுமின்றி, நீங்கள் இந்தச் சிறப்புத் திட்டத்திலும் பங்கேற்கலாம்: இங்கே காண்க கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்: வாசகர்களின் விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்; ஆனால், விமர்சிப்பவர்களுடன் எக்காரணம் கொண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சிறந்த எழுத்தாளர்கள் தங்களது கவனத்தை எப்போதும் புதிய படைப்புகளை உருவாக்குவதிலேயே செலுத்துவார்களே தவிர, விமர்சனங்களில் அல்ல. மேலும், பிரதிலிபியின் பரிந்துரை அமைப்பு என்பது கதைகளின் ரேட்டிங்கைப் பொறுத்தது அல்ல; அது வாசகர்களின் உண்மையான வாசிப்புத் தன்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. எழுத்துப் போட்டிகளில் பங்கேற்கவும்: எழுதுவதில் ஒரு முறையான பழக்கத்தை வளர்த்துக்கொள்ள விரும்பினால், தொடர்ந்து எழுத்துப் போட்டிகளில் கலந்துகொள்ள முயலுங்கள். இதோ, நாங்கள் தற்போது ஒரு புதிய போட்டியைத் தொடங்கியுள்ளோம், பிரதிலிபி போட்டிகளில் பங்கேற்க இந்த லிங்க்கைக் கிளிக் செய்யவும்: இங்கே க்ளிக் செய்யவும் ஒரு நற்செய்தி! நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்காக ஒரு சூப்பரான செய்தி! வரவிருக்கும் வாரங்களில் ஐபோன்களுக்கான பிரதிலிபி செயலியில், பிரத்யேகமாக எழுதும் வசதி புதிய அப்டேட் மூலம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. :) பிரதிலிபியில் உங்கள் அனுபவம் குறித்து, அதாவது எது நன்றாக உள்ளது , எது நன்றாக இல்லை, எதை நாங்கள் இன்னும் மேம்படுத்தலாம் , அல்லது அடுத்ததாக நாங்கள் எதை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என எது குறித்தும் எங்களுடன் இந்தப் படிவ இணைப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள்- படிவ இணைப்பு எங்கள் குழு அனைத்து பதில்களையும் வாசிக்கும். அன்புடன்,பிரதிலிபி குழு.மேலும் பார்க்க
- உங்கள் பிரதிலிபி :)29 ஜூன் 2026மார்ச் 2026, எழுத்தாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்- அன்புள்ள எழுத்தாளருக்கு, நீண்ட காலமாக, ஒரு நிறுவன பிரதிநிதியாக அல்லாமல், பிரதிலிபியில் பணிபுரியும் உங்கள் தோழர்களாக உங்களுக்கு எழுத வேண்டும் என எண்ணினோம். மேலும், எங்கள் குழுவில் இருப்பவர்களில் பலர் எழுத்தாளர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒரு வாசகர் ஒரு கதையை வாசிக்கும் போது, அதன் இறுதி வடிவத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அந்த இறுதி நிலையை அடைய எவ்வளவு முயற்சி தேவைப்பட்டது என்பதை எழுத்தாளரே அறிவார். சோர்வூட்டும் அலுவலக வேலைக்குப் பிறகோ அல்லது வீட்டு வேலைக்குப் பிறகோ எழுதுவது, வாழ்க்கையையும், எழுத்தையும் சமநிலைப்படுத்த முயற்சிப்பது, சொல்லப்படாத கதையை பல நாட்களுக்கு மனதில் சுமந்து நடப்பது, நம்பிக்கையின்றி வாழ்வது, எழுத்துத் திட்டங்களை அடைய முடியாமல் தவிப்பது , பதிப்பிக்கும் போது ஏற்படும் பதட்டம்ஆனால் இவற்றையெல்லாம் மீறி, நம் கதை அதற்குரிய வாசகரை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பது என உங்கள் உணர்வுகளை நாங்கள் நெருக்கபமாக அறிவோம். எழுதுவது மிகவும் தனிமைநிறைந்ததாக இருக்கலாம். அதே சமயம், அது ஓர் ஆழமான ஆறுதலையும் அளிக்கவல்லது. பல ஆண்டுகளாக, பல எழுத்தாளர்களை நாங்கள் சந்திக்கின்றோம்எழுதுதல் அவர்களுக்கு வாழ்க்கையின் கடினமான கட்டங்களில், தனிப்பட்ட இழப்புகளில், உள்ளார்ந்த மனப் போராட்டங்களில் உதவியதாக குறிப்பிடுகிறார்கள். அதனால் தான் எழுத்துச் செயல்பாடை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். எழுதுதல் என்பது மிக அழகான கலை வடிவமாகும். கடந்த சில மாதங்களில், எங்கள் வாராந்திர சமூக அமர்வுகள் மூலம் உங்களில் பலருடன் நாங்கள் பேசினோம்.சமீப காலமாய் , நாங்கள் ஒரு முக்கியமான விஷயம் பற்றியும் சிந்தித்து வருகிறோம்: காதல் கதைகள் தவிர்த்த பிற கதைகள் வாசகர்களை எவ்வாறு அடையும்? காதல் கதைகள் எப்போதும் பிரதிலிபியில் ஒரு வலுவான இடத்தைப் பெற்றிருக்கின்றன். ஆனால், திகில் (horror), சஸ்பென்ஸ் (suspense), த்ரில்லர் (thriller) போன்ற பிற வகைகளில் சிறந்த தெரிவுநிலை (discovery) கிடைத்தால், வாசிப்பு எண்ணிக்கை அல்லது வருமானம் குறித்து கவலைப்படாமல் எழுத்தாளர்கள் புதிய கதைகளை முயற்சி செய்வதற்கான நம்பிக்கை பெறுவார்கள் . இதற்கான செயல்பாடுகளில் நாங்கள் இறங்கியுள்ளோம். அதன் ஒரு அம்சமாக , நீங்கள் திகில், குற்றம்- த்ரில்லர் அல்லது கற்பனை (fantasy) கதைகளை எழுதக்கூடிய ஒரு புதிய போட்டியையும் தற்போது நடத்துகிறோம். அதில் கலந்து கொண்டு, உங்கள் வாசகர்களை அதிகரிக்க இந்த இணைப்பை ( https://tamil.pratilipi.com/event/fmg585jwel ) அழுத்தவும். மேலும், இதை நீங்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்: நாங்கள் எப்போதும் உங்கள் கருத்துகளை அறிந்துகொண்டு அவற்றிலிருந்து மேம்படுத்த முயற்சிக்கிறோம். பிரதிலிபியில் உங்கள் அனுபவம் குறித்து, அதாவது எது நன்றாக உள்ளது , எது நன்றாக இல்லை, எதை நாங்கள் இன்னும் மேம்படுத்தலாம் , அல்லது அடுத்ததாக நாங்கள் எதை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என எது குறித்தும் எங்களுடன் இந்த இணைப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள். :https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdpKo3TwoLVhymoXUeYYYrqMMx7MKjLnvNBpVn5dhixQE5P0w/viewform?usp=publish-editor எங்கள் குழு அனைத்து பதில்களையும் வாசிக்கும். எழுதத் தொடங்கியமைக்கு நன்றி.பயணம் நிச்சயமற்றதாக இருந்த தருணங்களிலும் தொடர்ந்து எழுதியதற்கு நன்றி. பிரதிலிபி மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி. அன்புடன்,உங்கள் பிரதிலிபி.மேலும் பார்க்க
- பிரதிலிபி விருதுகள் சீசன் 1 போட்டி முடிவுகள்17 மார்ச் 2026பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதிலிபி விருதுகள் - சீசன் 1 போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எழுத்தாளர்கள் போட்டியில் பங்கேற்று சிறந்த காதல் கதைகள், விறுவிறுப்பான த்ரில்லர் கதைகள், திகில் மற்றும் மர்மக் கதைகள், சமூக கருத்துக்கள் கொண்ட பெண்மைய கதைகள் என பல வகைகளில் கதைகள் எழுதியிருந்தார்கள். போட்டிக்கு வந்த அனைத்து கதைகளுமே சுவாரஸ்யமானவை மற்றும் தனித்துவமானவை. போட்டியில் கலந்துகொண்டு 80+ பாகம் கொண்ட கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்! பெரும் போட்டிக்கு மத்தியில் நடுவர் தேர்வில் தேர்வாகி வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தேர்வு செய்த அடிப்படை : தொடர் கதைகளை மதிப்பிடும் போது நடுவர்களால் பல முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்பட்டன. கதையின் தீம், எழுதும் நடை, கதைக்களம், கதையின் அமைப்பு, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நாவலின் போது கதாபாத்திரங்களின் வளர்ச்சி, உரையாடலின் முக்கியத்துவம், வாசிப்பில் ஆர்வத்தைத் தக்கவைக்க பொதுவான இலக்கணம், எழுத்துப்பிழைகள் முதலியன. குறிப்பு: கீழே குறிப்பிட்டுள்ள வெற்றியாளர்களில் பணப்பரிசு பெறும் அனைவரும் பிரதிலிபியின் [email protected] எனும் ஈமெயிலில் இருந்து இன்னும் 2-3 நாட்களில் மின்னஞ்சல் பெறுவார்கள். அதனை நிரப்பி பரிசை பெற்றுக் கொள்ளவும். நடுவர் தேர்வில் வெற்றி பெற்ற படைப்புகள்: ₹7000 ரொக்கப்பரிசு + தனித்துவமான பிரதிலிபி விருதுக்கோப்பை+ மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ்பெறும் வெற்றியாளர்: முதல் பரிசு வானம் விட்டு வந்த வானவில் - செவ்வந்திதுரை ₹6000 ரொக்கப்பரிசு + தனித்துவமான பிரதிலிபி விருதுக்கோப்பை+ மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ்பெறும் வெற்றியாளர்: இரண்டாம் பரிசு என் இதய மொழியானவனே - சசிரேகா ராஜேந்திரன் ₹5000 ரொக்கப்பரிசு + தனித்துவமான பிரதிலிபி விருதுக்கோப்பை+ மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ்பெறும் வெற்றியாளர்: மூன்றாம் பரிசு 🔥🎠நர்வதி 🎠🔥 - ஜெய்லானி ஹுசைன் ₹2500ரொக்கப்பரிசு+ தனித்துவமானபிரதிலிபி விருதுக்கோப்பை +மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ்பெறும் வெற்றியாளர்கள்: 4-வது பரிசு அசாதாரணன் : நெருப்பு பாதை - Lakshmi Ganesan 5-வது பரிசு இரவில் தேயும் நிலவிலே..🌙 - கவிநிலா 6-வது பரிசு சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா - Malini Raja 7-வது பரிசு நிலவின் நிறம் கருப்பு - Martina Author 8-வது பரிசு நஞ்சே அமிர்தமானால்..? - ஹேமாஜெகன்நாதன் 9-வது பரிசு காதலே சாபம். லிவிங் டுகெதர் - கவிமகிழினி 10-வது பரிசு விஷத்தில் எரியும் தீபம் - Mariya ₹1000 ரொக்கப்பரிசு +தனித்துவமானபிரதிலிபி விருதுக்கோப்பை+மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ்பெறும் வெற்றியாளர்கள் : 11-வது பரிசு மௌனம் பேசும் விழிகள்👀️ - SangiKrish 12-வது பரிசு 🍁மோகத்தில் முத்தாடவா🍁 - SakthiSri 13-வது பரிசு உயிரில் உறைந்த உறவே - RudhraPrarthana 14-வது பரிசு ஆடுமேய்க்கி அம்மாவாசை - பழனிசாமிஎ.சி 15-வது பரிசு மண் வாசனை🌱🌿 - hemamalini 16-வது பரிசு தீரா மையல்: தீயை தழுவிய பனித்துளி - ஜெனிஷாஜேசுரெத்தினம் 17-வது பரிசு யுத்த வம்சம் - நீராயாழ்விழி 18-வது பரிசு இணை நீயே - இளவேனில் 19-வது பரிசு மன்னவனின் அரசியலில் மலரானவளே! - YOGAMURUGA 20-வது பரிசு என் உயிரின் உயிர் நீ 1 💏🤰🏇 - ரதி அருண் குமார் 21-வது பரிசு என்னவளே தியா - தூயவள் 22-வது பரிசு தீரா தேன்சுவை நீயடி சகி.... - Santhosh sanjay 23-வது பரிசு அஃறிணை யுத்தம் - ஆஹாகுமார் 24-வது பரிசு அம்மாவும் ஆதவனும்...1 - நாக நந்தினி 25-வது பரிசு என்னை சிறை எடுக்க வா - காஞ்சனாஅன்புச்செல்வம் 26-வது பரிசு விழிகளில் காதல் சொல்வாயா 🫴🏻💓 - Riyaa 🦋 27-வது பரிசு (நிறைவு) ஆங்கிலேயனின் ஆசைக்கிளி - ஷியாமகாசிவன் 28-வது பரிசு இயந்திர ஆண்மை நீயடா!! - விண்மீன்விழியின் நாவல்ஸ் 29-வது பரிசு அல்ஜஹ்ரா - கீதாராஜா 30-வது பரிசு முழுத்தொகுப்பு : உறங்காத நேரமும் உன் கனா - பார்ட் 1 2 - 🖊️மேகவாணி💖 சிறப்பு குறிப்பு மற்றும் மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் பெரும் எழுத்தாளர்கள் : 31-வது ரேங்க் திறமை 1 - லஷ்மிராமமூர்த்தி 32-வது ரேங்க் மையல் கொண்டேன் மாதீரா...! - ஜியாஜானவி 33-வது ரேங்க் அன்புள்ள அரக்கனே... - அவளின்கிறுக்கல் 34-வது ரேங்க் இராஜ முத்திரை - PommuNovels 35-வது ரேங்க் நெருங்காதே தகிக்குதே நெஞ்சம் - ஆழிதென்றல் 36-வது ரேங்க் என் கண்மணியே.. என் காதலி💝💝!! - 💕இந்துபிரபாகரன்💕 37-வது ரேங்க் (முடிவுற்றது )காட்டானின் கைதியவள் - VinishaSri 38-வது ரேங்க் அரக்கனின் அற்புத மலரிவள் - Sameeka 39-வது ரேங்க் எனக்காக பொறந்தாயே எனதழகி - BhavaniVarun 40-வது ரேங்க் ❤️🔥தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே❤️🔥 - ✨Thooriganovels ✨தூரிகா நாவல்ஸ்💕🧿🪽🦋 41-வது ரேங்க் ராபர்ட்டின் ரோபோட் குள்ளன்❤️🤖💛 - மோ.நித்யாசபரி நாவல்கள்❤️💛 42-வது ரேங்க் உன் நிழல் நான்... என் நிலா நீ... - தமிழ்நிலா 43-வது ரேங்க் கன்னியும் கட்டத்துரையும் - சித்ரா 44-வது ரேங்க் The Artist Case - I - கணேஷ்வரன் 😍😎💛 45-வது ரேங்க் 👑🤴🏻மாய சங்கிலி : நிலவும் நிழலும் .👑🤴🏻 ( முடிந்தது) - Kannika saravanan 46-வது ரேங்க் நதியில்லா நாணல் நான்,,, 🌾1 - 𝐒𝐚𝐬𝐢𝐤𝐚𝐥𝐚 𝐀𝐫𝐮𝐥𝐦𝐮𝐫𝐮𝐠𝐚𝐧 47-வது ரேங்க் சில்வர் நெஸ்ட் அபார்ட்மெண்ட்டின் மர்மங்கள் - yasmineBegam thooyavan 48-வது ரேங்க் எல்லாமே அவள்தான் - murugesanNallathambi 49-வது ரேங்க் கானல் நீராகுமோ என் காதல்... - சிலம்பொலி 50-வது ரேங்க் உன் நிழலுக்குள் உறைந்திட வா - நவினாகர்ணன் வாசகர் ஈடுபாட்டு விகிதத்தின் அடிப்படையில்முதல் 20 இடங்களை பெற்ற தொடர்கள் : (கீழே உள்ள பட்டியலில் 33 படைப்புகள் உள்ளது. அவை வாசகர் ஈடுபட்டு விகிதத்தின் அடிப்படையில் மேலிருந்து கீழாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே முதல் 30 இடங்களை பிடித்த எழுத்தாளர்கள் 13 பேர் இதில் இருக்கிறார்கள். இந்த எழுத்தாளர்களுக்கு நடுவர் தேர்வில் பிரதிலிபி சிறப்பு கோப்பை அனுப்பப்படும். வாசகர் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளதால் அந்த எழுத்தாளர்களுக்கு இருமுறை கோப்பை அனுப்பப்படாது. எனவே வாசகர் ஈடுபட்டு விகிதத்தின் அடிப்படையில் புதிதாக 13 பேருக்கு இந்த கோப்பை அனுப்ப முடிவு செய்துள்ளோம். அதற்காகவே 33 படைப்புகள் சேர்த்திருக்கிறோம். அந்த பட்டியலே கீழே உள்ளது. சிறப்புமிக்க இந்த பிரதிலிபி விருதுக்கோப்பை இவர்களது வீட்டு முகவரிக்குநேரடியாக அனுப்பப்படும்) வானம் விட்டு வந்த வானவில் - செவ்வந்திதுரை 🍁மோகத்தில் முத்தாடவா🍁 (முழுவதும்) - SakthiSri 1 : காதலே சாபம். லிவிங் டுகெதர்(முழுநாவல்) - கவிமகிழினி கொடூரனே..! கோதை நாயகனே..! - மகாமணி விடிய மறுக்கும் இரவே 🥀 - ஸ்ரீவினிதா நாவல்கள் 1. (முழுத்தொகுப்பு) நரகத்தின் வாசல் நின் காதலடா!! - MonicaSathish அசுரனும் அகதியும் 🔥(முழுநாவல்) - பிரதன்யா குழலி🪄PradhanyaKuzhali🪄 புன்னகையே போதுமடி! - திவ்யசோபனா விஷத்தில் எரியும் தீபம் (முடிந்தது) - Mariya மரணம் தாண்டி வாழும் காதல்... - mithilamahadev 🔥❣️ மூர்க்கனை மோதும் மோகப் புயல்❣️🔥 - 🩷 கலை நாவல்ஸ்✍️🩷 தோகைக்கு மோகம் தந்த கட்டழகா - AnjuRadhaKrishnan என் வாழ்வின் வசந்தமானவளே 💖 1 - அனுசத்யா இராஜ முத்திரை - PommuNovels இரவில் தேயும் நிலவிலே..🌙 - கவிநிலா தீரா தேன்சுவை நீயடி சகி.... - Santhosh sanjay காந்தத்திரள் கண்ணாளனே(முடிவுற்றது) - ✨✨தமிழ் காதலி✒️✒️ 🌺மலரே.. மௌனமா? (முழுத் தொகுப்பு) - மானஸ்📋✍️ அம்மாவும் ஆதவனும்...1 - நாக நந்தினி 💞 என் ஆயுள் ரேகை நீயடி 💞 - Jஅழகு லட்சுமி என்னை சிறை எடுக்க வா - காஞ்சனாஅன்புச்செல்வம் இளமயில் இதயத்திலே - நர்மதாசுப்ரமணியம் விழிகளில் காதல் சொல்வாயா 🫴🏻💓 - Riyaa 🦋 (நிறைவு) ஆங்கிலேயனின் ஆசைக்கிளி - ஷியாமகாசிவன் ஒவ்வொரு கல்லும் நானாக செதுக்கியது - sangeethavelu முழுத்தொகுப்பு : உறங்காத நேரமும் உன் கனா - பார்ட் 1 2 - 🖊️மேகவாணி💖 அந்தகார தாரகை..! - தமிழ்வெண்பா மயக்(ங்)குவதேன் மதுரநிலவே (நிறைவடைந்தது) - LaxmiDevi நிலவின் நிறம் கருப்பு (முடிந்தது) - MartinaAuthor வேந்தனிடம் மாட்டிய மான் - 📚🖋️ManiMathi🕊️❤️ தீராத மோக(ன)ம் உன்னிடத்தில்...... - RubaVahini இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே - சுபாநடராஜன் 100+ பாகங்கள் எழுதி பிரதிலிபியிடமிருந்து அதிகாரப்பூர்வபிரதிலிபி விருதுகள் சான்றிதழ்மின்னஞ்சலில் பெரும் எழுத்தாளர்கள் (சிறப்பு குறிப்பு): 🍁மோகத்தில் முத்தாடவா🍁 (முழுவதும்) - SakthiSri 1 : காதலே சாபம். லிவிங் டுகெதர்(முழுநாவல்) - கவிமகிழினி கொடூரனே..! கோதை நாயகனே..! - மகாமணி விடிய மறுக்கும் இரவே 🥀 - ஸ்ரீவினிதா நாவல்கள் 1. (முழுத்தொகுப்பு) நரகத்தின் வாசல் நின் காதலடா!! - MonicaSathish அசுரனும் அகதியும் 🔥(முழுநாவல்) - பிரதன்யா குழலி🪄PradhanyaKuzhali🪄 புன்னகையே போதுமடி! - திவ்யசோபனா விஷத்தில் எரியும் தீபம் (முடிந்தது) - Mariya 🔥❣️ மூர்க்கனை மோதும் மோகப் புயல்❣️🔥 - 🩷 கலை நாவல்ஸ்✍️🩷 இராஜ முத்திரை - PommuNovels தீரா தேன்சுவை நீயடி சகி.... - Santhosh sanjay காந்தத்திரள் கண்ணாளனே(முடிவுற்றது) - ✨✨தமிழ் காதலி✒️✒️ 🌺மலரே.. மௌனமா? (முழுத் தொகுப்பு) - மானஸ்📋✍️ 💞 என் ஆயுள் ரேகை நீயடி 💞 - Jஅழகு லட்சுமி விழிகளில் காதல் சொல்வாயா 🫴🏻💓 - Riyaa 🦋 ஒவ்வொரு கல்லும் நானாக செதுக்கியது - sangeethavelu முழுத்தொகுப்பு : உறங்காத நேரமும் உன் கனா - பார்ட் 1 2 - 🖊️மேகவாணி💖 மயக்(ங்)குவதேன் மதுரநிலவே (நிறைவடைந்தது) - LaxmiDevi வேந்தனிடம் மாட்டிய மான் - 📚🖋️ManiMathi🕊️❤️ தீராத மோக(ன)ம் உன்னிடத்தில்...... - RubaVahini உன் இதழ் மென்மையில் கரையவா💘 (முழுவதும்) - SakthiSri என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா - zeeraf தீயில் விழுந்த தூரிகை (பொண்டாட்டி part-2) முழு நாவல் - லயா (laya) நாவல்ஸ் 🌟 அன்போடு கைத்தலம் பற்ற.. - ரித்தி இயந்திர ஆண்மை நீயடா!! (முடிந்தது) - விண்மீன்விழியின் நாவல்ஸ் மையல் கொண்டேன் மாதீரா...! - ஜியாஜானவி மன்னவனின் அரசியலில் மலரானவளே! - YOGAMURUGA தீராத காதல் தீயே...💔 - SaranyaAyyanar...💞 அன்புள்ள அரக்கனே... ( முழு தொகுப்பு) - அவளின்கிறுக்கல் என் கண்மணியே.. என் காதலி💝💝!! - 💕இந்துபிரபாகரன்💕 (முடிவுற்றது )காட்டானின் கைதியவள் - VinishaSri ஆதவனின் வெண்ணிலவு (முடிந்தது) - இதழ்யா இசை 💖 எனக்காக பிறந்தவனே (ளே) - செல்விவசந்தகுமார் எனக்காக பொறந்தாயே எனதழகி - BhavaniVarun 💖வாழ்வு தொடங்கும் இடம் நீதானே💖 (முழு தொகுப்பு) - LillyPut காதலும் மயங்கியது❤️என் இராவணன்❤️🔥நீயென்றதும்❤️🔥 - மைவிழி (முடிந்தது)❤️🔥தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே❤️🔥 - ✨Thooriganovels ✨தூரிகா நாவல்ஸ்💕🧿🪽🦋 உன் நிழல் நான்... என் நிலா நீ... - தமிழ்நிலா காஃபிக்குள் கொஞ்சம் ஹார்லிக்ஸ்.....!(நாவல்) - கே. நஜீமா ஜமான் 🧝🏼♂️கந்தர்வ மைந்தன் King scar🫅🏻. - யாதுமாகி.. - யாதுமாகிதிருப்புகழ் அஃறிணை யுத்தம் - ஆஹாகுமார் 🩷காதலியாக நீயும் காவலனாக நானும்🩷 - RLakshmy The ArtistCase - I - கணேஷ்வரன் 😍😎💛 ராமனின் மோகனம் ஜானுவின் கீர்த்தனம் - G. ShyamalaGopu 👑🤴🏻மாய சங்கிலி : நிலவும் நிழலும் .👑🤴🏻 ( முடிந்தது) - Kannika saravanan சும்மா ஜாலி 💍 முடிஞ்சிடும் ஜோலி - M@nju வானவில் - BharathiKarthick என்னவளே தியா - தூயவள் காதல் பூக்கும் தருணம்......(முடிவுற்றது...) - மகிவேலுசாமி 🙋 கணவன் 💥 விற்பனைக்கு 💯 அரக்கன் மகளும் அசூரன் காதலியும் . - நிஷாநாயகன் வரமும் தவமும் நீயே - துளசிராஜ் திறமை 1 - லஷ்மிராமமூர்த்தி உன் நிழலுக்குள் உறைந்திட வா - நவினாகர்ணன் உன் ஜீவனில் நானடி - அனி 🖋🖋 சில்வர் நெஸ்ட் அபார்ட்மெண்ட்டின் மர்மங்கள். - yasmineBegam thooyavan ஈன்ற பொழுதின் (முழுத் தொகுப்பு) - யதுமுனி என்னவளின் காதல் (சீசன்1 முடிந்தது) - Thiru.Shiva என் நிழல் நீயடா!!!❤️ - நர்மதாநாராயணசாமி இதயத்தின் ஓசை 💔💔 மன்னவனின் மனம் - கார்த்திகா (கண்ணனின் காதலி) ExcitementQueen 1.தி பிளாக் பாக்ஸ் ஆஃப் லவ் - Mohana Arunwriter என் உயிரின் உயிர் நீ 1 💏🤰🏇 ரதி அருண் குமார் - ரதிஅருண் குமார் என்னுள் உறைந்தவளே 💞 - சகாk.M மௌனம் பேசும் விழிகள்👀️(முடிந்தது) - SangiKrish 🌺🌺🌺🌺🌺 அவளுக்கு அவன் விடிவெள்ளியாக 💐💐💐💐💐 - SeranArthi இந்தரின் தொலைந்த காதலி சீசன்2 - அபிஶ்ரீ எல்லாமே அவள்தான் - murugesanNallathambi அசாதாரணன் : நெருப்பு பாதை - Lakshmi Ganesan அன்பெனும் ஆயுதம்! - அன்பிழைAnbhizhai மண் வாசனை🌱🌿 - hemamalini ஆடுமேய்க்கி அம்மாவாசை - பழனிசாமிஎ.சி பாலைவன பாசமலர்கள் - 🔱கவிதா உன்னை சேரவே !! (முடிந்தது) - அபிராமி சரவணன் மோகினியின் காதலன் - கவியாழினி உயிரோடு கலந்திடு - B.Priya Dharshini இதற்கு பெயர்தான் காதலா!!!??? சசிரேகா - சசிரேகாராஜேந்திரன் உனக்காகவே நான் - விஜிM நீயே வாழ்கை என்பேன் - 💙💛𝐒𝐊.🤝லீலா சந்திரன்🔱 என் இதய மொழியானவனே - சசிரேகா - சசிரேகாராஜேந்திரன் பிரம்மச்சரிய காதல் ❤️🔥 - ShahiAbi உன் மோகம் தீண்டிய நிலவு நான் - 𝐒𝐚𝐬𝐢𝐤𝐚𝐥𝐚,,𝐀𝐫𝐮𝐥𝐦𝐮𝐫𝐮𝐠𝐚𝐧 மறக்கவா? மறைக்கவா? மறுக்கவா? - Peaceful Smiley 🩷 அசுரனின் நயனதிமிரே! - ❤️ அம்மு இளையாள் ❤️ (மா. அமுதா சுதர்சன்) வெற்றியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பிரதிலிபி போட்டிக்குழுமேலும் பார்க்க
- 100 பாகம் எழுதிய சாம்பியன்கள் - படைப்பாளிகள் சவால் 412 ஜனவரி 2026பிரதிலிபி படைப்பாளிகள் எழுத்து சவால் - சீசன் 4 போட்டியில் 100+ பாக தொடர் எழுதிய எழுத்தாளர்கள் மற்றும் மாரத்தான் எழுத்தாளர்களின் பட்டியலை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். சவாலில் பங்கேற்பதும் 100+ பாகங்களை தொடர்ந்து வெளியிடுவதும் எளிதான காரியம் அல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எழுத்தில் உங்கள் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் பாராட்டத்தக்கது. ஒரு எழுத்தாளராக வளர்வதில் இது ஒரு வலுவான முதல் படியாகும். இந்த பயணம் உங்களுக்கு அதிக தன்னம்பிக்கையை அளித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்களது எழுத்துப்பயணத்தில் மேலும் பல உயரங்களை அடைய மனதார வாழ்த்துகிறோம். 100 பாகம் எழுதிய சாம்பியன்கள்: தாபம் தீர்க்க வந்த தாரமே - தேனருவி தமிழ் நாவல்ஸ் தீரனின் தீட்சண்யமானவள் - Rajeshwari. S தேவனின் ஜீவன் நீயடி - Gowrimathu அவனின் வன்மம் அறிவாளா ரதியவள் - எழில் வெண்பா உன் விழியில் விழுந்தேன் - Martina Author மனம் கொய்த மலரே மணம் வீசுவாயா - R Lakshmy வரமாய் கிடைத்த தேவதையே.2.0(கல்யாண் காவேரி, சுபாஷ் கவிதா) New version. - கவிமகிழினி தீரானின் தீரா காதல் அவள் - J அழகு லட்சுமி யானும் நீயும் எவ்வழியறிதும்..!! 1 2 - Kavi Chandra உத்தம வில்லன் - Sakthi Sri சாணக்கியனின் சந்திரா - செங்கை மனோ மணி (வி.எம்.எம்.) அசுரனின் இறைவி.. - விண்மீன் விழியின் நாவல்ஸ் சண்டியனின் சந்தன காற்றே - Sakthi Sri ஆகாயம் தாண்டி வாழும் நேசம் - Ruba Vahini இந்தரின் தொலைந்த காதலி - அபிஶ்ரீ வாகைக்குழலே.. - பூவிழி நித்தமும் நின் காதல் கரையில்... - ஸ்ரீ காதலின் காதலி இராவணனின் சீதை அவள் - அவளின் கிறுக்கல் இனிய இரு மலர்கள் - துல்பத் நாச்சியா இசையின் ஸ்வரங்கள் நீய(டா)டி - தமிழ் காதலி கார்த்திகை குமரன் - சீசன் 2 - ராதேகிருஷ்ணா மூர்க்கனின் தள்ளாடும் காதல் தீயே - Sakthi Sri உறவுகள் தொடர்கதை தொடரும் - Aadhira நாவல்ஸ் எனக்காக பொறந்தாயே எனதழகி - Bhavani Varun இன்ஸ்பெக்டர் மாணிக்க வேல் - இதய நிலா S. இதயா நேசத்தின் மன்னவனே - Reena JS மாறுபட்ட நெஞ்சங்கள் இணைந்திடுமா - செல்வி வசந்தகுமார் அவன் எந்தன் ராக்ஷசன் - ShahiAbi என் காதல் அரக்கியே - V கண்ணம்மா நெஞ்சோடு கலந்திடு - Dreamer ARZ என் தாகம் தீர்த்(தாயே)டி கானலே - ShahiAbi 1. கடைக்கண்ணால் ரசித்தேனே..!! - கவிநிலா காதலிக்க நேரமில்லை,"கண்களில் ஈரமில்லை" - Yeswathi Zoya ஆதார் லவ் - தூயவள் என் சகி நீயடி - ஷாரா கணேஷ் அவனின் மஞ்சத்தில் தேன்மொழி - தேனருவி தமிழ் நாவல்ஸ் மறந்திடு! ஆனால் என்னை மறந்திடாதே... - Peaceful Smiley டெவிலின் இன்டர்ன் - தமிழ் நிலா அரசியல் பிழைத்தோர்க்கு... - யதுமுனி செழியனின் தூரிகை சீதா மகாலட்சுமி - AMMU ஜோ வி தா என்னவளின் காதல் என்பது யாதெனில் சீசன் 2 - Nithya Prasath வாசுகி - ஜோதி பிரகாஷ் தமிழதியன் கண்ணா உனக்காக - கீதா ராஜா விழியால் சந்திக்கும் முன்னே மொழியால் என்னுள் சங்கமித்தவளே! - தீபிகா செ உ என்னை சாய்த்தவளே - Fathima அரக்கனின் சுந்தரி அவள்!! - Monica Sathish 100 பாகங்களுக்கு மேல் எழுதி, முதல் 15 இடங்களை பெற்ற எழுத்தாளர்கள் : படைப்பு விவரம் மொத்த பாகங்கள் தாபம் தீர்க்க வந்த தாரமே - தேனருவி தமிழ் நாவல்ஸ் 267 தீரனின் தீட்சண்யமானவள் - Rajeshwari. S 199 தேவனின் ஜீவன் நீயடி - Gowrimathu 166 அவனின் வன்மம் அறிவாளா ரதியவள் - எழில் வெண்பா 163 உன் விழியில் விழுந்தேன் - Martina Author 159 மனம் கொய்த மலரே மணம் வீசுவாயா - R Lakshmy 145 வரமாய் கிடைத்த தேவதையே.2.0(கல்யாண் காவேரி, சுபாஷ் கவிதா) New version. - கவிமகிழினி 142 தீரானின் தீரா காதல் அவள் - J அழகு லட்சுமி 135 யானும் நீயும் எவ்வழியறிதும்..!! 1 2 - Kavi Chandra 131 உத்தம வில்லன் - Sakthi Sri 129 சாணக்கியனின் சந்திரா - செங்கை மனோ மணி (வி.எம்.எம்.) 127 அசுரனின் இறைவி.. - விண்மீன் விழியின் நாவல்ஸ் 126 சண்டியனின் சந்தன காற்றே - Sakthi Sri 125 ஆகாயம் தாண்டி வாழும் நேசம் - Ruba Vahini 123 இந்தரின் தொலைந்த காதலி - அபிஶ்ரீ 122 பங்கேற்ற அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்!மேலும் பார்க்க
- உங்கள் கதாபாத்திரங்கள் எங்களது வாழ்வை மாற்றின !30 டிசம்பர் 2025அன்புள்ள எழுத்தாளருக்கு, ரஞ்சித் எழுதுவது. நீண்ட நாட்களாக, இதை எழுத நினைத்திருந்தேன். நான் CEOவாக அல்லது எழுத்தாளர்களிடம் பேசும் ஒரு பிரதிலிபி அலுவலராக இதை எழுதவில்லை. உங்களுக்குக் கடன்பட்ட ஒரு மனிதனாக எழுதுகிறேன். முன்பு ஒருநாள் நான் ஒரு கனவு கண்டேன். எந்தவொரு கதைசொல்லியும் மொழி, தொழில்நுட்பம் அல்லது புவியியல் உள்ளிட்ட எந்தத் தடைகளும் இல்லாமல் தங்கள் கதைகளை உலகிற்குப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு தளத்தை உருவாக்கவேண்டும் என்பதே அக்கனவு. பெங்களூரில் ஐந்து பேருடன் பிரதிலிபி தொடங்கப்பட்ட அந்த சிறிய வீடு எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அப்போது இந்த உலகின் பார்வையில் படவில்லை. எங்களிடம் பெரிதாக தொழில்நுட்ப வளமோ, பொருளாதார வசதியோ அன்று இல்லை. ஆனால் எழுத்தாளர்களாகிய நீங்கள் எங்களுடன் இணைந்தீர்கள் ! அதுவரை நத்தைபோல் ஊர்ந்துகொண்டிருந்த எங்கள் தளத்திற்கு உங்கள் கதாபாத்திரங்களையும், உங்கள் ஆன்மாவையும் கொண்டு வந்தீர்கள். கடந்த 11 ஆண்டுகளில், எங்கள் பயணத்தில் பல கடினமான காலங்கள் இருந்தன. பாதையும், இலக்கும் சாத்தியமற்றதாகத் தோன்றிய எண்ணற்ற தருணங்கள் இருந்தன. இந்தக் கனவை துறந்துவிடலாம் என நினைக்கும் ஒவ்வொரு முறையும், பிரதிலிபியை திறந்து, உங்களில் ஒருவர் பதிவேற்றிய புதிய கதையைப் பார்ப்பேன். ஆம், நீங்கள் உங்கள் கதைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை. நீங்கள் எனக்கு பெரிய நம்பிக்கையை அளித்தீர்கள். ஒரு யோசனையை ஒரு தொடக்க நிறுவனமாகவும், ஒரு தொடக்க நிறுவனத்தை ஒரு குடும்பமாகவும் மாற்றியுள்ளீர்கள். பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், எழுத்தாளர்- உறவு மேலாளர்கள், வழக்கறிஞர்கள் என எண்ணற்ற மனிதர்களை உள்ளடக்கிய ஒரு குடும்பம். அதில் நீங்களும் இருக்கிறீர்கள் என்று நான் வெறுமனே பெயரளவில் சொல்லவில்லை. இந்தப் புத்தாண்டில் நுழையும் வேளையில், உங்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி சொல்கிறேன். தெய்வம் உங்களுக்கு நன்மை, ஆரோக்கியம், படைப்பாற்றலை அருளட்டும். 2026 உங்கள் கற்பனை வளம் எல்லையற்ற நதியைப் போலப் பாயும் ஆண்டாக இருக்கட்டும். வாசக உள்ளங்களையும் நீங்கள் வளப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். எங்கள் நோக்கம் இப்போதுதான் தொடங்குகிறது! தலைமுறைகள் கடந்து நீடிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்க நாங்கள் பாடுபடுகிறோம். எனது ஆழ்ந்த தனிப்பட்ட கனவு எளிமையானது: எழுத்தாளருக்கு பிற வேலைகள் தேவைப்படாத நிலை. பிரதிலிபி வருவாய் அவரது முதன்மைக் குடும்ப வருவாய் ஆகுவதை கனவு காண்கிறேன். உங்கள் எழுத்து வாழ்க்கையைத் தக்கவைக்கும் ஒரு எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறேன். பிரதிலிபியில் கிடைக்கும் வருவாய், உங்களுக்குப் பொருளாதார விடுதலையை அளிக்க வேண்டும்.எங்கள் பாதையில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், பிரச்சனைகளை நீங்கள் சுட்டிக்காட்டும்போது அல்லது இன்னும் மேம்படுத்துவதற்கு நீங்கள் அளிக்கும் கருத்துகளை நாங்கள் கவனமாக கேட்கிறோம் என்பதை உறுதியளிக்கிறேன். இந்தக் குடும்பத்தை பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும், உங்கள் நம்பிக்கைக்கு உரியதாகவும் மாற்ற நாங்கள் ஒவ்வொரு நாளும் உழைக்கிறோம். நீங்களே நாங்கள் இங்கு இருப்பதற்கு காரணம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். உங்கள் பயணத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அல்லது நாங்கள் இன்னும் ஏதேனும் சிறப்பாகச் செய்ய முடியும் என நீங்கள் கருதினால் தயவுசெய்து நான் உட்பட எங்களில் யாரையும் தொடர்பு கொள்ளவும். நான் எப்போதும் [email protected] இல் தொடர்பில் இருக்கிறேன். மேலும் நான் உங்களுக்கு பதிலளிக்க சரியான நபராக இல்லாவிட்டாலும், குழுவில் உள்ள பொருத்தமான நபரிடம் அதைக் கொண்டுசேர்க்கிறேன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகள். எங்களுடன் சேர்ந்து பிரதிலிபி எனும் கதையை எழுதிக்கொண்டிருப்பதற்கு நன்றி. நன்றியுடன், ரஞ்சித் பிரதாப் சிங் நிறுவனர்,பிரதிலிபி.மேலும் பார்க்க
- பிரதிலிபியில் TDSஐ புரிந்துகொள்ளுதல்26 நவம்பர் 2025பிரதிலிபியில் TDSஐ புரிந்துகொள்ளுதல் வணக்கம் எழுத்தாளர்களே. உங்களில் பலருக்கு TDS பற்றி கேள்விகள் இருக்கலாம், மேலும் உங்கள் சம்பாத்தியம் அல்லது போட்டிப் பரிசுகளிலிருந்து ஏன் சில தொகை கழிக்கப்படுகிறது, TDS என்றால் என்ன, அது ஏன் பயன்படுத்தப்படுகிறது, மற்றும் பிரதிலிபியில் பல்வேறு வகையான பணப் பரிமாற்றங்களில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்த வலைப்பதிவு விளக்குகிறது. TDS என்பது வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு விதி. TDS 1. மாதாந்திர எழுத்தாளர் சம்பாத்தியம் ஒரு நிதியாண்டில் ( ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) பிரதிலிபியில் உங்கள் மொத்த வருவாய் ₹50,000 ஐ எட்டும்போது, 10% TDS கழிக்கத் தொடங்குகிறது. அதாவது, ஒரு நிதியாண்டில் உங்கள் மொத்த வருவாய் ₹50,000 ஐத் தாண்டியதும், உங்கள் மொத்த வருவாயில் 10% TDS கழிக்கப்படும். அதாவது ₹5,000 (இது ₹50,000 இல் 10%) TDS ஆகக் கழிக்கப்படும், மீதமுள்ள தொகை உங்களுக்கு வழங்கப்படும். அடுத்த மாதங்களில் இருந்து, நிதியாண்டு முடியும் வரை ஒவ்வொரு மாத சம்பாத்தியத்திலிருந்து 10% TDS தொடர்ந்து கழிக்கப்படும். நீங்கள் ஒரு ஆடிட்டர் அல்லது வரி முகவரின் உதவியுடன் உங்கள் வருமான வரி வருமானத்தை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி வருமானம் செயலாக்கப்பட்டதும், கழிக்கப்பட்ட TDS தொகை உங்கள் வங்கிக் கணக்கில் திருப்பித் தரப்படும். நடப்பு நிதியாண்டு முடிவதற்கு முன்பு அனைத்து TDS சான்றிதழ்களும் வழங்கப்படும், மேலும் அவை காலாண்டு அடிப்படையில் உங்களுடன் பகிரப்படும். வருவாய் தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால் எழுத்தாளர்கள் எப்போதும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.2.போட்டிப் பரிசுகளில் TDS போட்டிப் பரிசுகளுக்கும் பொருந்தும், ஆனால் சதவீதம் வேறுபட்டது. ஒரு நிதியாண்டில் உங்களின் மொத்த பரிசு வெற்றிகள் ₹10,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், வருமான வரிச் சட்டத்தின் 115BB பிரிவின்படி 30% TDS கழிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு போட்டியில் ₹5,000 வென்றால், அந்த நிதியாண்டிற்கான ₹10,000 வரம்பை நீங்கள் தாண்டாததால் TDS எதுவும் கழிக்கப்படாது. அதே நிதியாண்டில் நீங்கள் மேலும் ₹5,000 வென்றால், உங்கள் ஒட்டுமொத்த பரிசுத் தொகை ₹10,000 ஆகிவிடும். இப்போது TDS வரம்பை மீறுவதால், மொத்த ₹10,000 (அதாவது ₹3,000) இல் 30% TDS இரண்டாவது கட்டணத்தில் கழிக்கப்படும். எனவே இரண்டாவது ₹5,000 பரிசில் இருந்து ₹3,000 TDS ஆகக் கழிக்கப்படும், எனவே முடிவில் ₹2,000 பெறுவீர்கள். அதே நிதியாண்டில் நீங்கள் ஏதேனும் கூடுதல் பரிசுத் தொகையை வென்றால், அந்தத் தொகையிலும் 30% TDS கழிக்கப்படும், மீதமுள்ள தொகை உங்களுக்குச் செலுத்தப்படும். இந்த 30% விலக்கு என்பது ஒரு கட்டாய அரசு விதி ஆகும். பிரிவு 115BB இன் படி, உங்களின் மொத்த ஆண்டு வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பிற்குக் குறைவாக இருந்தாலும், இந்த TDS தொகையைத் திரும்பப் பெற முடியாது. இது போன்ற போட்டி வெற்றிகளுக்கு 30% என்ற விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது, மேலும் இந்த வரி இறுதியானது. போட்டி தொடர்பான சந்தேகங்களுக்கு, எழுத்தாளர்கள் [email protected] இல தொடர்பு கொள்ளலாம் 3. ஐபி ஒப்பந்த பணப் பரிமாற்றங்கள். பிரதிலிபியில் அனைத்து IP தொடர்பான கட்டணங்களிலும் 10% TDS கழிக்கப்படுகிறது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத் தொகை ₹1,000, ₹5,000, ₹18,000 அல்லது வேறு ஏதேனும் தொகையாக இருந்தாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 10% TDS விதிக்கப்படும். தொகை உங்களுக்கு செலுத்தப்படும் முன்பு இந்த வரித் தொகை பிடிக்கப்படும். நீங்கள் வழங்கிய PAN எண்ணில் டிடிஎஸ் வரி செலுத்தப்படுகிறது. எனவே உங்கள் வருமான வரியை தாக்கல் செய்யும் போது இந்தத் தொகையைத் திரும்பப் பெறலாம். வருமான வரி போர்ட்டலில் உங்கள் படிவம் 26AS அல்லது AIS இல் கழித்தல் விவரங்கள் தோன்றும். ஏதேனும் ஐபி அல்லது ஒப்பந்தம் தொடர்பான சந்தேகங்களுக்கு, எழுத்தாளர்கள் [email protected]யில் தொடர்பு கொள்ளலாம். கவனிக்க (PAN) வழங்கப்படாவிட்டால், செயல்படவில்லை என்றால் (உதாரணமாக, ஆதாருடன் இணைக்கப்படவில்லை), அல்லது செல்லாததாக இருந்தால், வரி (TDS) அதிக விகிதத்தில் வசூலிக்கப்படும், பொதுவாக 20% முதல் 30% வரை. TDS தொகையை திரும்பப் பெறுதல். உங்கள் மொத்த ஆண்டு வருமானம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரி வரம்பை விடக் குறைவாக இருந்தால், உங்கள் பிரதிலிபி மாத வருவாய் அல்லது ஐபி வருவாயில் கழிக்கப்படும் 10% TDS ஐ நீங்கள் திரும்பப் பெறலாம். அதைக் கோர, நிதியாண்டு முடிந்த பிறகு, பொதுவாக ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் உங்கள் வருமான வரி வருமானத்தை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். உங்கள் ITR ஐ தாக்கல் செய்யும் போது ஒரு வரி நிபுணரின் உதவியைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் ITR வருமான வரித் துறையால் செயலாக்கப்பட்டதும், கழிக்கப்பட்ட TDS தொகை உங்கள் பதிவுசெய்யப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாகத் திரும்பப் பெறப்படும். அதிகாரப்பூர்வ வருமான வரி போர்ட்டலில் உங்கள் படிவம் 26AS அல்லது AIS ஐச் சரிபார்ப்பதன் மூலம் கழிக்கப்பட்ட TDS ஐக் காணலாம். (வருமான வரி வலைத்தள இணைப்பு - https://incometaxindia.gov.in/Pages/default.aspx) வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115BB இன் படி போட்டி பரிசுகளிலிருந்து கழிக்கப்படும் 30% TDS ஐத் திரும்பப் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். முக்கியப் புள்ளிகள் 1. TDS என்பது வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வத் தேவை மற்றும் உங்கள் மொத்த வருவாய் அல்லது பரிசுத் தொகையின் அடிப்படையில் தானாகவே பொருந்தும் வரியாகும். 2. நீங்கள் பிரதிலிபியில் பல மொழிகளில் எழுதினாலும், எல்லா கணக்குகளிலும் ஒரே PAN இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் மொத்த வருமானம் அல்லது அனைத்து மொழிகளிலும் உள்ள போட்டிப் பரிசுகள் ஒரே PAN எண்ணின் கீழ் கணக்கிடப்படும். 3. எடுத்துக்காட்டாக, ஒரு நிதியாண்டில் வெவ்வேறு மொழிகளில் நீங்கள் பெற்ற பரிசுகள் ₹10,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், 30% TDS கழிக்கப்படும். 4. போட்டி வெற்றிகளுக்கான TDS என்பது ஒரு போட்டிக்கு மட்டும் அல்ல, ஒரு நிதியாண்டில் மொத்த வெற்றிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உங்கள் மொத்த வெற்றிகள் ₹10,000ஐத் தாண்டியவுடன், தகுதியான மொத்தத் தொகைக்கு 30% TDS பொருந்தும். 5. ஏற்கனவே ஒரு நிதியாண்டில் ஒருமுறை TDS கழிக்கப்பட்டு, நீங்கள் மீண்டும் வெற்றி பெற்றால், அந்த நிதியாண்டிற்கான உங்களின் மொத்த வெற்றிகளின் அடிப்படையில் வரி கணக்கிடப்படும், மேலும் சட்டப்படி கூடுதல் விலக்குகள் பொருந்தும். 6. உங்கள் மொத்த வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பிற்குக் குறைவாக இருந்தால், உங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதன் மூலம் வழக்கமான வருமானம் அல்லது IP தொகை வரியில் 10% TDS திரும்பப் பெறலாம். 7. போட்டி வெற்றிகளுக்கான 30% டிடிஎஸ் இறுதியானது, அதைத் திரும்பப் பெறவோ அல்லது பின்னர் திருத்தவோ முடியாது. 8. வருமான வரி போர்ட்டலில் கிடைக்கும் படிவம் 26AS அல்லது AIS இல் நீங்கள் கழித்த டிடிஎஸ் விவரங்களை எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கலாம். 9. அனைத்து எழுத்தாளர் பரிவர்த்தனைகளுக்கும் இந்த விதிகள் பின்பற்றப்படுகிறது. TDS வரியை திரும்பப் பெறவோ அல்லது தவிர்க்கவோ முடியாது. 10. எந்த காலாண்டுக்கும் உங்களுக்கு படிவம் 16A தேவைப்பட்டால், [email protected] இல் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அதைக் கோரலாம். 11. பிரதிலிபியில் TDS எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த விளக்கம் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம். கூடுதலாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது உங்கள் கட்டண விவரங்களுக்கு உதவி தேவைப்பட்டால், செயலி மூலம் எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு உதவுவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். பிரதிலிபி குழு.மேலும் பார்க்க
- சிறந்த எழுத்தாளர் விருது 10 போட்டி முடிவுகள்14 அக்டோபர் 2025பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 10 போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எழுத்தாளர்கள் போட்டியில் பங்கேற்று சிறந்த காதல் கதைகள், விறுவிறுப்பான த்ரில்லர் கதைகள், திகில் மற்றும் மர்மக் கதைகள், சமூக கருத்துக்கள் கொண்ட பெண்மைய கதைகள் என பல வகைகளில் கதைகள் எழுதியிருந்தார்கள். போட்டிக்கு வந்த அனைத்து கதைகளுமே சுவாரஸ்யமானவை மற்றும் தனித்துவமானவை. போட்டியில் கலந்துகொண்டு 80+ பாகம் கொண்ட கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்! பெரும் போட்டிக்கு மத்தியில் நடுவர் தேர்வில் தேர்வாகி வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தேர்வு செய்த அடிப்படை : தொடர் கதைகளை மதிப்பிடும் போது நடுவர்களால் பல முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்பட்டன. கதையின் தீம், எழுதும் நடை, கதைக்களம், கதையின் அமைப்பு, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நாவலின் போது கதாபாத்திரங்களின் வளர்ச்சி, உரையாடலின் முக்கியத்துவம், வாசிப்பில் ஆர்வத்தைத் தக்கவைக்க பொதுவான இலக்கணம், எழுத்துப்பிழைகள் முதலியன. குறிப்பு: கீழே குறிப்பிட்டுள்ள வெற்றியாளர்களில் பணப்பரிசு பெறும் அனைவரும் பிரதிலிபியின் [email protected] எனும் ஈமெயிலில் இருந்து இன்னும் 2-3 நாட்களில் மின்னஞ்சல் பெறுவார்கள். அதனை நிரப்பி பரிசை பெற்றுக் கொள்ளவும். ₹5000 ரொக்கப்பரிசு +சிறப்பு விருது + மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் + பிரதிலிபி குழுவிடமிருந்து சிறப்பு கடிதம் பெறும் வெற்றியாளர்கள் : முதல் பரிசு யாயும் யாயும் - சபா இரண்டாம் பரிசு அந்தமான் சம்பவங்கள் (மனித வேட்டை) - artista-மனோ மூன்றாம் பரிசு சதிராடும் கண்கள் - 💜sushanthi-b ₹3000 ரொக்கப்பரிசு+சிறப்பு விருது + மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் + பிரதிலிபி குழுவிடமிருந்து சிறப்பு கடிதம்பெறும் வெற்றியாளர்கள் : 4-வது பரிசு மஞ்சுஷா தேவி - சிலம்பொலி 5-வது பரிசு 💀😱👻கொலையும் கற்று மற. அத்தியாயம் 1. - revathi-selvam 6-வது பரிசு நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே - ஜெனி ₹2000 ரொக்கப்பரிசு+சிறப்பு விருது + மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் + பிரதிலிபி குழுவிடமிருந்து சிறப்பு கடிதம்பெறும் வெற்றியாளர்கள் : 7-வது பரிசு என்னுயிர் நீதானே உன் வதை நான் தானே! - ஸ்ரீ 8-வது பரிசு இருவரல்ல ஒருவர்.... - thuva-santha-kumar 9-வது பரிசு இனி எல்லாம் சுகமே - நர்மதா-சுப்ரமணியம் 10-வது பரிசு முந்நீர் படிகம் 1 - மோனிகா-சேகர் ₹1000 ரொக்கப்பரிசு +ஃபிரேம் செய்யப்பட்ட சிறப்பு விருது + மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் + பிரதிலிபி குழுவிடமிருந்து சிறப்பு கடிதம் பெறும் வெற்றியாளர்கள் : நெஞ்சத்தர் ஆவர் விரைந்து (முழு தொகுப்பு) - யதுமுனி கரம் கோர்த்த தேவதையே - அம்பிகா-அபி கார்த்திகை குமரன் - ராதேகிருஷ்னா சொர்கமே என் அருகில் வந்ததென்ன - ஹேமா-ஜெகன்நாதன் காரிருளை அழகாக்கிய மின்மினியே! - தீபிகா-செ-உ வீரா 💙💙 - படிக்க பட வேண்டியவன் - mari-mathi அரக்கன் வஞ்சித்த வஞ்சிக்கொடி..! - ஆதிஸ்வரன் விழிகளிரண்டில் வீழ்ந்தேனடி - சீமா உன் சிறகினில் வாழ துடிக்கிறேன் - காஞ்சனா-அன்புச்செல்வம் க்ளைம் for க்ரைம் - ராணி-தென்றல் சித்ர மோகினி - சித்ரவதனா பூந்தென்றல் தகிப்பதேனோ - தமிழ்-தியாகராஜன் அக்னி-ஸ்ரீ - அத்தியாயம் -1A - priya-jagannathan Miss you - கணேஷ்வரன் உயிருக்குள் உயிர் சுமந்தேன் - தனு 100+ பாகங்கள் எழுதி பிரதிலிபியிடமிருந்து அதிகாரப்பூர்வ 'இலக்கிய பங்களிப்புக்கான மரியாதை சான்றிதழ்' மின்னஞ்சலில் பெரும் எழுத்தாளர்கள் (சிறப்பு குறிப்பு): நிலவின் காதலன் 💕💕💕...1 - geetha காலத்தை வென்ற காதல் அரக்கன்!! - விண்மீன்-விழியின்-நாவல்ஸ் பேசாத மெளனம் கேட்காத ஓசை ❤️🥰 - hema-malini தேவராட்சஷனோ! தேவரட்சகனோ! - ✨✨தமிழ்-காதலி-✒️✒️ உன் ஈரப் புன்னகை சுடுதே 1 - heram-s கயல்விழி - murugesan-nallathambi காதல் போதை...1 - indhumathi-sridharan தீரா காதல் தாராயோ ❤️🔥❤️🔥( முழு தொகுப்பு ) - mahendran-vaishnavi அழகிய அசுரனும் அடங்கா மான் குட்டியும் 💗💗 - கார்த்திகா-கண்ணனின்-காதலி-excitement-queen புயலை வருடிய தென்றல்.. - கவிமகிழினி கரம் கோர்த்த தேவதையே...🌹 - அம்பிகா-அபி 🔥 ரௌத்திரனின் ஆலிங்கனமே 🌷 - l-leelavathi அரக்கன் வஞ்சித்த வஞ்சிக்கொடி..! - ஆதிஸ்வரன் விழிகளிரண்டில் வீழ்ந்தேனடி - சீமா நல்லது கெட்டா அசிங்கம் - நிஷா-நாயகன் 🔥❤️🔥தீயை அணைத்திடவா வெண்முகிலே ❤️🔥☁️ - ammu-ஜோ-வி-தா உத்தம வில்லன் 💔🔥 - sakthi-sri உயிரே என் உறவே! நீ தானடி பெண்ணே! - ஜெய-லட்சுமி 1.எனை ஆளும் அவன் அரக்கனோ❤️🔥அன்பனோ..? - sumi-monu அவனால் அவளாகிறாள் (ஒரு வேசியின் காதல்) - martina-author எனக்கென வந்த தேவதையே - பாகம் - 1 - karthiga-balan தீ தீண்ட வில்லை. நீ தீண்டுகிறாய் ! - am-amuthan (முடிந்தது )💜 என் தீரா காதல் நீயடி 💜 - 💕thooriganovels--💕 காதல் கானல் நீர் இல்லை. - மனோகரன்-அழகுசோமசுந்தரம் தாவணி போட்ட தீபாவளி💕 - சக்தி கண்ணியம் கவர்ந்த காட்டுமிராண்டியே! - எழுத்துக்களின்-இளவரசி அடங்காத ராட்சசனே!(முடிந்தது) - 🦋ஓவியப்பெண்ணே🦋 இராவணனின் ரௌத்திரை இவள்..! - ptn-பத்மினி-நாராயணன்✍️✍️ மெல்ல மெல்ல என்னை சாய்த்தானே ️ 1 - 🐅𝓿𝓲𝓳𝓲-𝓟𝓻𝓲𝓰𝓪🐅🐅 ருத்ர தாரா 🔥❤️🔥 - nirmalan-kd அம்மாவின் டையிரி பாகம் 1 - radha-jeyalakshmi நீ உடல் நான் நிழல்... அத்தியாயம்-1 - shanmuga-devi ❤️ முரட்டு சண்டியன் முகிழும் செந்தூர பூவே ❤️ - 🩷-கலை-நாவல்ஸ்-✍️🩷 மேகோனின் மேன்மை நேசம் 1 - priya-dharshini-s பயங்கர இரவில் பவிஷா - கவிதா-ராமதாஸ் தியாவின் மிதுன் - nisha தினம் தினம் தொடு வானம் நீயடி💚,, 1 - sasikala-arulmurugan விதியின் மெல்லிய குரல் (முடிந்தது). - fathima-✍️✍️📖📖 1. சிந்தையிலும் நின்னை தொடேன் - k இதயத்தை நனைத்த பனியவள் ❄️❄️❄️ - deepika-kowshik Miss you 🌹💞 - கணேஷ்வரன் அரக்கனின் சுவாசமான மலர்..... - prabha-s 1.சொல்லவா... வேண்டாமா... ❣️❣️❣️ - கனவுகளின்-தோழி-ஆதிரா திடீர் திருப்பமே தித்திக்கும் பூகம்பமே! - aandal-venkatraghavan என்னவளே அடி என்னவளே - kousalya-venkatesan "அவள் ஒரு அம்மா" - chaturmukhi 1. கண்கள் நிறைந்த ஓவியமே - monica-sathish என் ஆதி அங்கமும் அவனே...🫂💟 - lakshmi-k அக்னி-ஸ்ரீ - அத்தியாயம் -1A - priya-jagannathan மெய்யாகுமோ என் கனவே!.. - 1 - bhuvi-mrk மான்ஸ்டரின் மைவிழியாள்❤️🔥😍( முடிந்தது) - pen-🖋️-kaviii அனலென எரிகிறேன்! குளிரென அணைக்கிறாய்!(முடிந்தது) - பிறை-நிலா மோகம் நீயடா - ச கண் பார்க்காத காது கேட்காத வாய் பேசாத ஒரு பிறவி - thomas-rozario மூர்கனின் முத்தம் அவள் (முழு தொகுப்பு) - 💞-சுடர்-புதினம்ஸ்-💞-✍️✍️ மனதை திருடி விட்டாய் - பரிமளா-பாஸ்கரன் காரிருளை அழகாக்கிய மின்மினியே! - தீபிகா-செ-உ சூரியனின் விடியல் அவள் - sri-kavi நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ( முடிந்தது) - lakshmi-venkedesh காரிகையின் கள்வன் அவன் - santhosh-sanjay அத்திரிமலை அதிசயம்🧐😱🔮🔮... - சண்முகா-சேதுராமச்சந்திரன் உறவுகள் தொடர்கதை தொடரும்.. - aadhira-deen யாயும் யாயும் - சபா காவலனே! என் கள்வனே! - abi-writer அந்தி சூரியன் நீ, அதில் மலரும் தாமரை நான் - காஞ்சனா-அன்புச்செல்வம் உன் சிறகினில் வாழ துடிக்கிறேன் - காஞ்சனா-அன்புச்செல்வம் அந்தமான் சம்பவங்கள் (மனித வேட்டை) - artista-மனோ கார்த்திகை குமரன் 😉 - ராதேகிருஷ்னா எல்லை தாண்டிய உறவு (Beyond the border) - sangeetha-velu நெஞ்சத்தர் ஆவர் விரைந்து (முழு தொகுப்பு) - யதுமுனி காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் - தேவி-சுப்ரமணியன் 1 ராட்சசனின் காதல் பாவை - mohana-arun-writer துன்பத் திருப்பத்தில் பூத்தவள்.... - ruba-vahini முதல்முறையாக 80 பாக தொடர் எழுதி மின்னஞ்சல் மூலம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் எழுத்தாளர்கள் : நிலவின் காதலன் 💕💕💕...1 - geetha இனம் புரியா உணர்விதுவோ - m மெய் சேர்ந்த மாது - அனுராதா-முத்துக்குமார் பூந்தென்றல் தகிப்பதேனோ - தமிழ்-தியாகராஜன் 💕💕 எனக்கானவளே!! 💕💕 - ஜெனிபர்-பிரகாஷ் வாரிசு?... - kumar-kumar நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே..💞 - ஜெனி உன்னை விட மாட்டேன் கண்மணி❤️❤️(நிறைவு பெற்றது) - 💕இந்து-பிரபாகரன்💕 1.எனை ஆளும் அவன் அரக்கனோ❤️🔥அன்பனோ..? - sumi-monu நிலவே உன்னிடம் மயங்குகிறேனடி 💞💕 - சுமித்ரா-✍️ திமிரும் காதலும் 💞 - கலா-பிரியா காதல் கானல் நீர் இல்லை. - மனோகரன்-அழகுசோமசுந்தரம் தாவணி போட்ட தீபாவளி💕 - சக்தி சொல்லாத ரகசியம் நீ தான் - krishna-sumitha இராவணனின் ரௌத்திரை இவள்..! - ptn-பத்மினி-நாராயணன்✍️✍️ என்னவளே என்னை மறந்தது ஏனோ... - ஹரித்தா-தேவி எந்தன் சிந்தை மயங்குதடி - kalai-varshini அம்மாவின் டையிரி பாகம் 1 - radha-jeyalakshmi 1.அரக்கனை அடக்கிய அமுதம் நீயடி - lakshmi-ammu தியாவின் மிதுன் - nisha உனக்கென நான் - sowmiya ரேணுகா 💝வேலன்(பாகம் -1) - durga-lakshmi விதியின் மெல்லிய குரல் (முடிந்தது). - fathima-✍️✍️📖📖 பரகேசரி ஆதித்த கரிகாலன் ..! ( பாகம் 2 : கரிகாலக் காண்டம் ) - jeyaseelan-j அனைத்துமாகிய நான் ...🌹 - fathima இராக்கதனின் ரதி அவள் - laya இதயத்தை நனைத்த பனியவள் ❄️❄️❄️ - deepika-kowshik என் இதயத்தின் மெல்லிசையே - தேவி-சுப்ரமணியன் அரக்கனின் சுவாசமான மலர்..... - prabha-s கானலாய் கிடந்தேன் - ஆனந்த-துர்கா திடீர் திருப்பமே தித்திக்கும் பூகம்பமே! - aandal-venkatraghavan 1. கண்கள் நிறைந்த ஓவியமே - monica-sathish "அத்தையம்மா"-சிறந்த எழுத்தாளர் விருது- 10.ஏ.விஜயா. - vijaya-e மோகம் நீயடா - ச தி டேன்ஜர் குயின் - சந்தியா-கனகராஜ் மனதை திருடி விட்டாய் - பரிமளா-பாஸ்கரன் மனோதத்துவம் - karpakam-rajesh சூரியனின் விடியல் அவள் - sri-kavi காதலின் ரகசியம் ❤️✨ - கதைப்பிரியன் 💖💖 தீராத தாபம் நீயடி(டா ) !! 💖💖 ( முடிவுற்றது ) - கௌதமி-ராஜ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ( முடிந்தது) - lakshmi-venkedesh காரிகையின் கள்வன் அவன் - santhosh-sanjay மனம் போல் மணவாழ்க்கை - தமிழால்-உயர்வோம் நம்முடைய எண்ணம் அத்தியாயம்1 - francis-anusha யாயும் யாயும் - சபா வெற்றியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பிரதிலிபி போட்டிக்குழுமேலும் பார்க்க
- பிரதிலிபி போட்டிகளுக்கான முடிவு எடுக்கும் செயல்முறை24 ஆகஸ்ட் 2025பிரதிலிபி போட்டிகளுக்கான முடிவு எடுக்கும் செயல்முறை 1. தகுதியான படைப்புகளை தேர்வு செய்வது: வெளியீட்டு தேதி தொடர் போட்டி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலக்கெடுவிற்குள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்ச அத்தியாயங்கள் போட்டி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச அத்தியாயங்கள்/பகுதிகள் தொடரில் இருக்க வேண்டும். சொற்களின் எண்ணிக்கை ஒவ்வொரு அத்தியாயமும், போட்டி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச சொற்களின் எண்ணிக்கையை கொண்டிருக்க வேண்டும். உள்ளடக்கம் பிரதிலிபியின் Explicit Content Policy-க்கு முரணான உள்ளடக்கம் இருந்தால் தொடர் தகுதி நீக்கம் செய்யப்படும். அதைப்பற்றிய விவரங்களை இங்கே பார்க்கவும். நகல் அல்லது அடுத்தவரின் படைப்புகள்/மறுபதிவு செய்யப்பட்ட படைப்புகள் நேரடியாக தகுதிநீக்கம் செய்யப்படும். 2. மதிப்பீட்டு செயல்முறை: போட்டிக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்கள், அந்தந்த மொழியில் நிபுணத்துவம் பெற்ற நடுவர்களால் மதிப்பிடப்படுகின்றன. அப்போது, கீழே உள்ள அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்: கதைசொல்லும் முறை வாசகர்களை கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை சுவாரசியம் குறையாமல் ஈர்க்கும் விதம். புதுமை சலிப்பான அல்லது பிரதிலிபியில் ஏற்கனவே உள்ளது போன்ற ஒரே மாதிரியான கதை களங்களைத் தவிர்த்து, புதிய மற்றும் தனித்துவமான சிந்தனைகள். வாசகர்களின் தாக்கம் வாசகர்களுடனான ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்டுத்தி, வாசித்து முடித்த பிறகும் அதைப்பற்றியே சிந்திக்க வைப்பது. இதற்கான பிரதிபலிப்பை உங்கள் தொடரின் பின்னூட்டங்களிலேயே காணலாம். கதைத் திருப்பங்கள் எதிர்பாராத திருப்பங்கள், கதையை இன்னும் சுவாரசியமாக்கி, வாசகர்களை தொடர்ந்து ஆர்வத்துடன் வைத்திருக்கும். கதையின் வேகம் கதையை இழுத்தடிக்காமல், அவசரப்படுத்தாமல், வாசகர்களின் ஆர்வத்தை குறைக்காமல் சரியான ஓட்டத்துடன் நகர்த்துதல். சுவாரசியமான திருப்புமுனைகள் திடீர் பரபரப்பை ஏற்படுத்தும், எதிர்பாராத நிகழ்வுகள், கதையின் சுவாரசியத்தை தக்கவைக்கும். கதாபாத்திரங்களின் உருவாக்கம் கதாபாத்திரங்கள் நம்பகத்தன்மையோடும் உயிர்ப்போடும் இருந்தால், வாசகர்கள் அந்த கதாபாத்திரங்களுடன் ஒரு இறுக்கமான பிணைப்பை உணர்வார்கள். குறிப்பு: ஒவ்வொரு நடுவரும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்குவார்கள். பின் அந்த மதிப்பெண்களின் சராசரி மதிப்பிடப்பட்டு, இறுதி தரவரிசை தீர்மானிக்கப்படும். 3. இருமுறை சரிபார்ப்பு இவ்வாறு நடுவர்கள் மதிப்பிட்ட தொடரை, இரண்டு பேர் கொண்ட பிரதிலிபி மொழி குழு மீண்டும் பரிசோதித்து விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா, மதிப்பீடு நியாயமாக உள்ளதா என உறுதி செய்யும். அதன் பின்னரே இறுதி வெற்றியாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. 4. முடிவுகள் அறிவித்தல் போட்டி முடிவுகள் அதிகாரப்பூர்வ பிரதிலிபி பகுதியில் வெளியிடப்படும். மேலும், வெற்றியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மற்றும் பிரதிலிபியின் செய்திகள் மூலம் தகவல் அனுப்பப்படும். கதைகளை எழுதுவதும் அதை மதிப்பிடுவதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வுகளைப் பொறுத்து மாறுபடும் என்பதை நாங்களும் புரிந்து வைத்துள்ளோம். ஒருவருக்கு பிடித்தது, இன்னொருவருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், எங்கள் மதிப்பீட்டு நடைமுறை, அனைவருக்கும் சமமாகவும், நியாயமாகவும், தெளிவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்களுடன் பிரதிலிபி குழு.மேலும் பார்க்க
- சிறந்த எழுத்தாளர் விருது 9 போட்டி முடிவுகள்05 மே 2025பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 9 போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எழுத்தாளர்கள் போட்டியில் பங்கேற்று சிறந்த காதல் கதைகள், விறுவிறுப்பான த்ரில்லர் கதைகள், திகில் மற்றும் மர்மக் கதைகள், சமூக கருத்துக்கள் கொண்ட பெண்மைய கதைகள் என பல வகைகளில் கதைகள் எழுதியிருந்தார்கள். போட்டிக்கு வந்த அனைத்து கதைகளுமே சுவாரஸ்யமானவை மற்றும் தனித்துவமானவை. போட்டியில் கலந்துகொண்டு 70+ பாகம் கொண்ட கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்! பெரும் போட்டிக்கு மத்தியில் வாசகர் தேர்வு மற்றும் நடுவர் தேர்வு ஆகியவற்றில் தேர்வாகி வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தேர்வு செய்த அடிப்படை : தொடர் கதைகளை மதிப்பிடும் போது நடுவர்களால் பல முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்பட்டன. கதையின் தீம், எழுதும் நடை, கதைக்களம், கதையின் அமைப்பு, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நாவலின் போது கதாபாத்திரங்களின் வளர்ச்சி, உரையாடலின் முக்கியத்துவம், வாசிப்பில் ஆர்வத்தைத் தக்கவைக்க பொதுவான இலக்கணம், எழுத்துப்பிழைகள் முதலியன. குறிப்பு: கீழே குறிப்பிட்டுள்ள வெற்றியாளர்களில் பணப்பரிசு பெறும் அனைவரும் பிரதிலிபியின் [email protected] எனும் ஈமெயிலில் இருந்து இன்றே மின்னஞ்சல் பெறுவார்கள். அதனை நிரப்பி பரிசை பெற்றுக் கொள்ளவும். ₹5000 ரொக்கப்பரிசு + மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் + பிரதிலிபியின் சமூக வலைத்தளத்தில் பிரத்யேகமாக 'எழுத்தாளர் பற்றிய பதிவு' பெறும் வெற்றியாளர்கள் : முதல் பரிசு Sangeetha Velu - விழுந்த விதை【 Fallen seed】 இரண்டாம் பரிசு Meenakshi Rajendran - விருகனின் அரத்தம் மூன்றாம் பரிசு Pradhanya Kuzhali - கண்கள் உன்னை தேடுது மானே ( தேனே) [முழுத்தொகுப்பு] ₹3000 ரொக்கப்பரிசு + மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் + பிரதிலிபியின் சமூக வலைத்தளத்தில் பிரத்யேகமாக 'எழுத்தாளர் பற்றிய பதிவு' பெறும் வெற்றியாளர்கள் : 4-வது பரிசு ஆபுத்திரன் - அம்மம்மா 5-வது பரிசு Priya Jagannathanpriya Jagannathan - ஸ்ரீ-ராமம் அத்தியாயம்-1 6-வது பரிசு சித்ரவதனா - புருஷ மிருகம்! 7-வது பரிசு சண்முகா சேதுராமச்சந்திரன்கதா💚 - ஆயிரம் ஜன்னல் வீடு.....❌💀 8-வது பரிசு ஸ்ரீகாதலின் காதலி - யாதுமாகி நின்றாயே! 9-வது பரிசு மகா மணிMahi - பூச்சூட நாள் பார்க்கவா... 10-வது பரிசு விண்மீன் விழியழகி✨️ - கருப்பியின் அரக்கன் இவன் சீசன் 2(முடிந்தது) ₹1000 ரொக்கப்பரிசு + மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் + பிரதிலிபியின் சமூக வலைத்தளத்தில் பிரத்யேகமாக 'எழுத்தாளர் பற்றிய பதிவு' பெறும் வெற்றியாளர்கள் : 11-வது பரிசு Santhosh Sanjaypriyamanavaley Sagi - கரம் கோர்க்க வருவாயா ராவணா 12-வது பரிசு Revathi Selvam - 🔥🔥மர்ம தேசம்.பார்ட் 2.👻😱💀பாகம் 1 13-வது பரிசு கார்த்திகா கண்ணனின் காதலிExcitement Queen - புல் வெளியில் பூத்த முல்லைப் பூவே 14-வது பரிசு Kadha Rasigai - அனிச்சப்பூவே!... 15-வது பரிசு காஞ்சனா அன்புச்செல்வம் - ஆர்யன் v / s மீனலோஷினி 16-வது பரிசு ராணி தென்றல் - தனி ஒருத்தி 17-வது பரிசு கிர்த்திகா விக்னேஷ்வரன்(கிவி) - செவ்விழி எய்ததோ அம்பு 💘💘💘 18-வது பரிசு வெண்பா பூங்குழலி - ஊழ்வினை ஆகாமியம் 19-வது பரிசு செவ்வந்தி துரைCrazy Writer - காதல் வோல்டேஜ் 20-வது பரிசு ஜெய ஸ்ரீஏகா - சேர்ந்திடவே உனையே... 1 21-வது பரிசு Sakthi Velவிடியல் மா. சக்தி - ராம் லீலா(முடிந்தது) முழு தொகுப்பு 22-வது பரிசு Dhumi Novels - தென்கொரியாவில் தேன்மொழி 23-வது பரிசு L Leelavathi - எனக்குள் உறைந்தவனே 🤍🤍🤍 24-வது பரிசு Laxmi Devi - எனைத் தழுவும் இளந்தென்றலே 25-வது பரிசு நர்மதா சுப்ரமணியம் - மயிலன்னவளின் மெய்த்தேடல் 26-வது பரிசு Manivannan Saravanan - தலைவன் -தலைவி 27-வது பரிசு சக்தி பிரியா மிரா💜 - காதலே..... உந்தன் முகவரி அவன் தானோ.....💙💜 28-வது பரிசு Saranya Ayyanar 💞கற்பனைகளின் காதலி..❤️ - அலைபாயுதே 💓 நெஞ்சம்... 29-வது பரிசு என் எஸ் உமா மகேஷ்மகேஷ் குமார் - சொர்க்கமே நரகம் மகேஷ் குமார் 30-வது பரிசு Sasikala Arulசிவனின் மகள், 🙏🏻🙏🏻🦋🦋🦋 - மௌன தாரகை.,🌷. மின்னஞ்சல் மூலம் வெற்றியாளர் சான்றிதழ் பெரும் எழுத்தாளர்கள் (சிறப்பு குறிப்பு): 31-வது பரிசு Kalai Varshini - தழலில் தென்றலாய்உறவிதுவோ? 32-வது பரிசு கவி மகிழினிநாவல்ஸ் - 1:அழகிய திமிரே நீயடி (டா).( Tom and Jerry)முழுநாவல் 33-வது பரிசு Pommu Novelsஆத்விகா பொம்மு - ராஜாளியின் ராணியிவள் ( முழுத்தொகுப்பு) 34-வது பரிசு எழுத்துக்களின் இளவரசி - டெவிலின் டெடிபியர் அவள்!✨️(முடிந்தது) 35-வது பரிசு Shyamalamadhu - வஞ்சம் தீர்க்க வந்த மன்மதனே 36-வது பரிசு Gomathi Lakshitha - உன்னால் என் ஜீவன் மல௫தே 37-வது பரிசு ஷசி எஸ் கேநிலா - விலகிபோகாதே தொலைந்து போவேனே நான் 38-வது பரிசு Kousalya Venkatesanv. K - என்னவளே அடி என்னவளே 39-வது பரிசு ✍️தேன்மொழி ✍️ 34 Thenmozhi 34 - நீ வீரமான கள்வன்!(முடிந்தது) 40-வது பரிசு Geetha Muthuraj - 💞 வரமாக வந்த உறவே 💞 41-வது பரிசு பிறை நிலாஇந்து - எரிமலையை ஆளும் பனிமலை அவள்(முடிந்தது) 42-வது பரிசு Nirmalan Kd - பாம்ஷெல் திரிலோ ❤️ 43-வது பரிசு 🌸 Jaya Lakshmi Saradha Devi 🌸 - மீள் ஒளி[🔹சீசன் 9 போட்டித் தொடருக்கான கதை🔹] 44-வது பரிசு யாத்ரா கிருஷ்ணன் - நன்னிலவே நீ நல்லை அல்லை🌙 45-வது பரிசு Vanathi Faizalவானதி - 💖மன்னவன் மாளிகையில் மஞ்சள் மயில்💖 (முழு தொகுப்பு) 46-வது பரிசு பாரதி கண்ணன்Jk - ஜென்மங்களாய் தொடர்வேன் 47-வது பரிசு Sakthi Sri - என் தளிர் மலரே 💕💕 (முழுவதும்) 48-வது பரிசு சங்கீதா ராஜா Sr - 🔥அம்பாரி அழகனின் மலரவள்🔥 49-வது பரிசு Bhavani Varun - வண்ணம் 50--வது பரிசு Satha 💛 - காதல் காற்றாய் நீ 100+ பாகங்கள் எழுதி பிரதிலிபியிடமிருந்து அதிகாரப்பூர்வ 'இலக்கிய பங்களிப்புக்கான மரியாதை சான்றிதழ்' மின்னஞ்சலில் பெரும் எழுத்தாளர்கள் (சிறப்பு குறிப்பு): Shanju Mathi - மன்னிப்பாயா மனமே(முடிந்தது) Shahiabi❤️🔥 தனிமையின் காதலி இவள் ❤️🔥 - மலரா மொட்டு 🌷 சீமா - இம்சைக்காரனின் இம்சைக்காரி Kanchana Senthil - துளிர் விடும் காதல் கவி மகிழினிநாவல்ஸ் - 1:அழகிய திமிரே நீயடி (டா).( Tom and Jerry)முழுநாவல் Saranya Ayyanar 💞கற்பனைகளின் காதலி..❤️ - அலைபாயுதே 💓 நெஞ்சம்... தனுகுட்டி - உன்னோடு நான் வாழ ( பேரன்பே) சுடர் - மாயம் செய்யும் மான் விழி நீயே (முடிந்தது) யதுமுனியதுமுனி - பசுமை நிறைந்த நினைவுகளே (முழுத்தொகுப்பு) Sasikala Arulசிவனின் மகள், 🙏🏻🙏🏻🦋🦋🦋 - மௌன தாரகை.,🌷. வேளாங்கண்ணி ஆபிரகாம்கண்டம்பாக்கத்தான் - 1. மைத்துனன் செல்வி வசந்தகுமார்கனவுகளின் தேவதை - பெண்களை வெறுப்பவன் ராணி தென்றல் - தனி ஒருத்தி விண்மீன் விழியழகி✨️ - கருப்பியின் அரக்கன் இவன் சீசன் 2(முடிந்தது) 💗ஷம்லா பஸ்லி💗ஷம்மு - 💕 ஜீவனின் ஜனனம் நீ....!! (முடிவுற்றது) எழுத்துக்களின் இளவரசி - டெவிலின் டெடிபியர் அவள்!✨️(முடிந்தது) பிறை நிலாஇந்து - எரிமலையை ஆளும் பனிமலை அவள்(முடிந்தது) கார்த்திகா கண்ணனின் காதலிExcitement Queen - புல் வெளியில் பூத்த முல்லைப் பூவே Am Amuthanam. Amuthan - கண்ணே கலங்காதே Laxmi Devi - எனைத் தழுவும் இளந்தென்றலே Sangeetha Velu - விழுந்த விதை【 Fallen seed】 ஸ்வர்ணிகாLittle Poetess - என் வாழ்வின் மோட்சம் நீயடி K S - மெய்க்காப்பாளன் Ramajothi S - மதிகெட்டான் சோலையின் மர்மம். Lakshmi Kலக்ஸ்💜 - என்னை மீட்டும் யாழ் 💞🎼 Latha Suntharamகற்பனையின் காதலி - இராவணனின் இராட்சச பாவை Mohana Arun Writermona - அரக்கனின் அடிமை அவள் காஞ்சனா அன்புச்செல்வம் - மை ஸ்வீட் லிட்டில் டால் லட்சுமி வெங்கட் - இதயத்துடிப்பில் மாற்றம்.... Am Amuthanam. Amuthan - கரிசல் காட்டு கண்மணி அனு விக்னேஷ்வரி - இருள் சூழ்ந்த இதயங்கள் (முடிவுற்றது) சரோ ஞானம்போராளி - "காந்த விழிகள்"( முடிந்தது) Bhavani Varun - வண்ணம் ✍️ மோகனா ✍️Mona - மணவாளனே! எனை வதைக்கும் முரடனே (முடிந்தது) கவி மகிழினிநாவல்ஸ் - ருத்ரனின் இனியவளே.. Kruraக்ரூரா - 6. காதல் இல்லா காதல் - 3 4 Priya Jagannathanpriya Jagannathan - ஸ்ரீ-ராமம் அத்தியாயம்-1 Nithi Riya - வில்லாதி வில்லனின் விஷமக் காதல்😈❤️🔥(முழுத்தொகுப்பு) பாரதி கண்ணன்Jk - ஜென்மங்களாய் தொடர்வேன் ரம்யா அம்முCrazy Kirukkals✍️ - கொஞ்சம் காரம்❤️🔥 காஃபி 🤎 காதல் ❤️ Chellammal Rajagopal - தித்திக்குமா காதல் Lilly Put - 💖 நான் வாழவே நீ காரணம் 💞 Adhiadhiran - யாழின் இசையாய்.. Satha 💛 - காதல் காற்றாய் நீ Muhsina Saththar - 😈😈 அசுரனின் அழகி 👰(சீசன் - 02) Ruba Vahiniஎதார்த்த கதையரசி - திருமணம் 👩❤️👨 அன்பின் ஆதாரம்.... Kousalya Venkatesanv. K - என்னவளே அடி என்னவளே Sakthi Sri - என் தளிர் மலரே 💕💕 (முழுவதும்) சங்கீதா ராஜா Sr - 🔥அம்பாரி அழகனின் மலரவள்🔥 தமிழ் காதலி✒️✒️எழுத்தாளினி✒️✒️ - எனை ஆளும் மொழியாளே. (முழுதொகுப்பு) 100+ பாகங்கள் எழுதி அதிக 'ரீடர் என்கேஜ்மென்ட் ஸ்கோர்' பெற்று, வீட்டு முகவரிக்கு சிறப்பு பரிசு பெரும் எழுத்தாளர்கள் : தனி ஒருத்தி - ராணி தென்றல் 🔥அம்பாரி அழகனின் மலரவள்🔥 - சங்கீதா ராஜா sr வில்லாதி வில்லனின் விஷமக் காதல்😈❤️🔥(முழுத்தொகுப்பு) - nithi riya எனை ஆளும் மொழியாளே. (முழுதொகுப்பு) - தமிழ் காதலி✒️✒️ மை ஸ்வீட் லிட்டில் டால் - காஞ்சனா அன்புச்செல்வம் கருப்பியின் அரக்கன் இவன் சீசன் 2(முடிந்தது) - விண்மீன் விழியழகி 1:அழகிய திமிரே நீயடி (டா).( Tom and Jerry)முழுநாவல் - கவி மகிழினி திருமணம் 👩❤️👨 அன்பின் ஆதாரம்.... - Ruba vahini எரிமலையை ஆளும் பனிமலை அவள்(முடிந்தது) - பிறை நிலா ஸ்ரீ-ராமம் - Priya jagannathan மணவாளனே! எனை வதைக்கும் முரடனே (முடிந்தது) - ✍️மோகனா✍️ டெவிலின் டெடிபியர் அவள்!✨️(முடிந்தது) - எழுத்துக்களின் இளவரசி அலைபாயுதே 💓 நெஞ்சம்... - Saranya ayyanar💞 விழுந்த விதை【 Fallen seed】- Sangeetha velu என் தளிர் மலரே 💕💕 (முழுவதும்) - Sakthi sri எனைத் தழுவும் இளந்தென்றலே - Laxmi devi இம்சைக்காரனின் இம்சைக்காரி - சீமா என் வாழ்வின் மோட்சம் நீயடி - ஸ்வர்ணிகா 💖 நான் வாழவே நீ காரணம் 💞- lilly put மாயம் செய்யும் மான் விழி நீயே (முடிந்தது) - சுடர் முதல்முறையாக 70 பாக தொடர் எழுதி மின்னஞ்சல் மூலம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் எழுத்தாளர்கள் : Santhosh Sanjaypriyamanavaley Sagi - கரம் கோர்க்க வருவாயா ராவணா கிருத்திகா ஜெயசீலன் - சத்திரியனா? சாணக்கியனா? தனுகுட்டி - உன்னோடு நான் வாழ ( பேரன்பே) Pommu Novelsஆத்விகா பொம்மு - ராஜாளியின் ராணியிவள் ( முழுத்தொகுப்பு) சுடர் - மாயம் செய்யும் மான் விழி நீயே (முடிந்தது) ரியாகற்பனையின் காதலி ✨ - ராட்சசியின் காதலன் ️ யதுமுனியதுமுனி - பசுமை நிறைந்த நினைவுகளே (முழுத்தொகுப்பு) Gomathi Lakshitha - உன்னால் என் ஜீவன் மல௫தே செல்வி வசந்தகுமார்கனவுகளின் தேவதை - பெண்களை வெறுப்பவன் கிர்த்திகா விக்னேஷ்வரன்(கிவி) - செவ்விழி எய்ததோ அம்பு 💘💘💘 Vennila Karthimeerasri - உயிரே மீண்டும் இணைவாயா !! ❤️ எழுத்துக்களின் இளவரசி - டெவிலின் டெடிபியர் அவள்!✨️(முடிந்தது) Sathya Vaniகவின் மொழி - காதல் தேனீ சந்திரபாபு பாபு - தொடர் கதை Ammu Djvஜோ வி தா - 🌈🌈என் வானவில் வசந்தம் நீயடி 🌼🌼 தேவி கண்மணி - இதரமானது உனது அதரம் ஸ்வர்ணிகாLittle Poetess - என் வாழ்வின் மோட்சம் நீயடி யாழிசை செல்வா - இராஜமோகினி பாரதிமணியன்பாரதிமணியன் - இதயம் தேடும் உயிரே! 🌸 Jaya Lakshmi Saradha Devi 🌸 - மீள் ஒளி[🔹சீசன் 9 போட்டித் தொடருக்கான கதை🔹] Santhosh Sanjaypriyamanavaley Sagi - உன்னில் கரைகிறேனடி சகி பிரியசகி💔 நாவல்ஸ் - பகலவனை கண்டு மறையும் பனிமலர் அவள்🌺 Lakshmi Kலக்ஸ்💜 - என்னை மீட்டும் யாழ் 💞🎼 என் எஸ் உமா மகேஷ்மகேஷ் குமார் - சொர்க்கமே நரகம் மகேஷ் குமார் Latha Suntharamகற்பனையின் காதலி - இராவணனின் இராட்சச பாவை சாய்ரேணுSairenu - உயிர் தா உறவே! Mohana Arun Writermona - அரக்கனின் அடிமை அவள் லட்சுமி வெங்கட் - இதயத்துடிப்பில் மாற்றம்.... ஜென்சி பிரபாபூவிதழினி - என் ஆயுளைக் கொள்ளையிடும் அழகி நீ மனோகரன் அழகுசோமசுந்தரம்மனோலயம் - கறுஞ்சிறுத்தையின் நீதி. பாகம் 1 ✍️ மோகனா ✍️Mona - மணவாளனே! எனை வதைக்கும் முரடனே (முடிந்தது) Vanathi Faizalவானதி - 💖மன்னவன் மாளிகையில் மஞ்சள் மயில்💖 (முழு தொகுப்பு) ❤️❤️❤️ கீதா காதல்😍😍😍 - என் தேவதை 😍😍 நர்மதா சுப்ரமணியம் - மயிலன்னவளின் மெய்த்தேடல் Vijaya E - தொடர்ந்து வா! தொட்டுவிடாதே!ஏ.விஜயா Saruprabha Arumugam - அவனுக்கு தேவதையா...? ராட்சசியா...? அவள்...! பாரதி கண்ணன்Jk - ஜென்மங்களாய் தொடர்வேன் Chellammal Rajagopal - தித்திக்குமா காதல் Adhiadhiran - யாழின் இசையாய்.. Muhsina Saththar - 😈😈 அசுரனின் அழகி 👰(சீசன் - 02) Sumi Monuஎழுத்துக்களின் 🫰 ரசிகை - 1.ஆதவனே☀️ என் வெண்மையில் வண்ணம்🌈 தீட்டிட வாராயோ 🌱 Dhumi Novels - தென்கொரியாவில் தேன்மொழி வெற்றியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பிரதிலிபி போட்டிக்குழுமேலும் பார்க்க
- எழுத்தாளர்களின் நேர்காணல்கள் - எழுத்து சவால்04 பிப்ரவரி 2025வணக்கம், பிரதிலிபி நடத்தியபடைப்பாளிகள் எழுத்து சவால் போட்டியில்குறைந்தபட்சம் 80+ பாகங்கள் எழுதி முடிக்கும் எழுத்தாளர்கள், அவர்களின் நேர்காணல் மற்றும் ப்ரொபைல் பக்கத்தை மொத்த பிரதிலிபி குடும்பத்தோடு பகிரும் வாய்ப்பை பெறுவார்கள்!" என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி எழுத்தாளர்களின் நேர்காணல்களை கீழே பார்க்கலாம். இந்த நேர்காணல் மூலம் வளரும் எழுத்தாளர்களுக்கு குறிப்புகள், யோசனைகள், தங்களின் எழுத்துமுறை மற்றும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. எழுத்தாளர் தமிழ் காதலி அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/1nzhydtwunuf எழுத்தாளர் மானஸ் அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/hutlwr1ul5rn எழுத்தாளர் விண்மீன் விழியழகி அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/rdqopiwowccu நன்றி.மேலும் பார்க்க
