- திறமையான வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது12 ஏப்ரல் 2024அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு சிறப்பான செய்தி எங்களிடம் உள்ளது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் -6 இன் போட்டி முடிவுகள் சிலநாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. தங்கள் பிரதிலிபி ப்ரொபைலில் முதல் முறையாக 60 பாகங்கள் கதையை பதிவிடும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் சிறப்பு கௌரவம் அளிக்கப்படும் என அறிவித்திருந்தோம். முதல்முறையாக ஒருவர் 60 பாகங்கள் கொண்ட தொடரை எழுதுவதற்கு கணிசமான நேரம், பொறுமை, திறமை, ஒழுக்கம் மற்றும் எழுத்து திறமை தேவை என்பதால் இது மிகவும் கடினமான சவாலாகவே இருந்தது. எழுத்தின் மீது மிகுந்த அன்பு இல்லாமல், இதைச் செய்வது எளிதல்ல. எங்களின் வியப்பை வெளிப்படுத்தவோ, எழுத்தாளர்களைப் பாராட்டவோ எங்களிடம் வார்த்தைகள் இல்லை. நமது தளத்தில் இத்தகைய திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறோம். இத்தகைய அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் எழுத்தாளர்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, பெரிதாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம். உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எழுத்தார்வம் எங்களை ஊக்கப்படுத்தியது மற்றும் இது மற்ற எழுத்தாளர்களையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும். எனவே, உங்களின் இந்த சிறப்பான சாதனையை பிரதிலிபி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்! நாங்கள் உறுதியளித்தபடி, 60 பாகங்கள் கொண்ட கதையை முதல்முறையாக எழுதிய எல்லா எழுத்தாளர்களின் நேர்காணலும் பிரதிலிபி பக்கத்தில் விரைவில் பதிப்பிக்கப்படும். இப்போட்டியில் முதல்முறையாக 60 மற்றும் அதற்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட தொடரை பதிவிட்ட அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல்- படைப்பின் பெயர் எழுத்தாளர் பெயர் காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்) Raji Anbu அழகிய அசுரா! ஸ்ரீ இதயத்தை திருடாதே சுபஸ்ரீ பூமிநாதன் சந்திர மாகாளி சண்முகா சேதுராமச்சந்திரன் மௌன ராகம் Pandi Selvi ஊருக்கு நாறும் தாழம்பூ ராணி பாலகிருஷ்ணன் இழந்த காதல் மீண்டும் மலர்ந்து ZN Story என் அன்புக் கீரவாணி! ப்ரியமுடன் விஜய் பொகுட்டெழினி இராஜசேகரன் நவநீதம் சின்னத் தாயவள் தியா தேவி என் கண்ணில் பாவை அன்றோ Susee Solaimalai ஆற்றோர நாணல்கள் Yasmine Begam Thooyavan நல்லதொரு வீணை செய்தே!!! Nanthini Vaishnavi சாதிப்பேன் மனோகரன் அழகுசோமசுந்தரம் கொலைதேடும் இரவுகள் Adithiya Magendran உயிர்வரை உந்தன் மடியிலே ஜெனி மோதும் மோகனங்கள் ஜெநிஷா தீன் கதிரவனுள் உறைந்திட வாராயோ வென்பனியே Subha Kartheesan BL நிலவில் மறைந்த சூரியன் தனலட்சுமி ஞானசேகரன்மேலும் பார்க்க
- 80 பாகங்கள் எழுதும் மைல்கல்லை எட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!01 ஏப்ரல் 2024அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு சிறப்பான செய்தி எங்களிடம் உள்ளது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் -6 இன் போட்டி முடிவுகள் சிலநாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. 80 அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்கள் கொண்ட தொடரை எழுதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரதிலிபியிலிருந்து உத்தரவாதமான பரிசுகளை அறிவித்திருந்தோம். ஒருவர் 80 பாகங்கள் கொண்ட தொடரை எழுதுவதற்கு கணிசமான நேரம், பொறுமை, திறமை, ஒழுக்கம் மற்றும் எழுத்து திறமை தேவை என்பதால் இது மிகவும் கடினமான சவாலாகவே இருந்தது. எழுத்தின் மீது மிகுந்த அன்பு இல்லாமல், இதைச் செய்வது எளிதல்ல. வெளிப்படையாகச் சொன்னால், எழுத்தளார்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். இந்த எழுத்துப் போட்டியில் பல எழுத்தாளர்கள் சவாலை ஏற்று 80 பாகத் தொடர்களை பதிவிட்டிருந்தனர்! அவர்களில் சிலர் 150/200/250 அல்லது அதற்கும் அதிகமான பாகங்களுடன் கதைகளை எழுதி இருந்தனர். எங்களின் வியப்பை வெளிப்படுத்தவோ, எழுத்தாளர்களைப் பாராட்டவோ எங்களிடம் வார்த்தைகள் இல்லை. நமது தளத்தில் இத்தகைய திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறோம். இத்தகைய அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் எழுத்தாளர்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, பெரிதாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம். உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எழுத்தார்வம் எங்களை ஊக்கப்படுத்தியது மற்றும் இது மற்ற எழுத்தாளர்களையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும். எனவே, உங்களின் இந்த சிறப்பான சாதனையை பிரதிலிபி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்! நாங்கள் உறுதியளித்தபடி, 80 பாகங்கள் கொண்ட கதையை எழுதி நிறைவு செய்யும் எல்லா எழுத்தாளர்களுக்கும் பிரதிலிபியின் மதிப்புமிக்க ராஜபத்திர பட்டய சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் 80 மற்றும் அதற்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட தொடரை பதிவிட்ட அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல்- படைப்பின் பெயர் எழுத்தாளர் பெயர் கூடுவிட்டு கூடு வந்து காரை ஆடலரசன் உன் சர்வமும் சர்வாதிகாரியும் நானே Sona Jeeva மந்திரப் புன்னகை ஆபுத்திரன் என் உயிரோசை நீயடா Rekha Sathish இதயத்தை திருடாதே சுபஸ்ரீ பூமிநாதன் உனக்கென மட்டும் வாழும் இதயமடி...உயிருள்ள வரை நான் உன் அடிமையடி... ஹேராம் மூன்று முடிச்சி Para Sakthi கிறுக்கியின் கணவரை காணவில்லை Merlin Moni உயிரினில் கலந்து உணர்வானவள் காஞ்சனா அன்புச்செல்வம் முற்றத்து நிலா லதா சுப்ரமணியன் என் தாளத்தில் நீ சேரவா Sangeetha Velu காதல் கிரிக்கெட்டு ராஜி என் சுவாசம் நீயடி Kiruthikha S கண்களால் கைது செய்யும் அரக்கனே தனிமை காதலி புயலைத் தாலாட்டும் தென்றலவன் விஜயராணி நடராஜன் மனம் கொய்த மாயவன் Laxmi Devi வழி மாறிய மலர்கள் ஒளிநிலா சந்திர மாகாளி சண்முகா சேதுராமச்சந்திரன் காதல் ஆசை யாரை விட்டதோ! Rosline Begam மயிலாய் வருடும் மகாலட்சுமியே...!! Kani Suresh ரா ர' (ராம ரகசியம்) விஜய் தமிழ் உயிரின் மூச்சாகி வா Satha உள்ளத்தை அள்ளித் தந்தேன் Tamil Selvi காத்திருப்பேன் மன்னவா Meera Jo காட்டுமாறன் ஜமீன் மர்மம் Artista மனோ நேச மழையே! செவ்வந்தி துரை என் உயிரில் கலந்த மாயாவி நீயடி(டா) Love Amore அரக்கனை அடக்கிய அக்னி தாரகை Swetha எனக்கு மட்டும் பிழையா Nivetha 6797 சொந்தம் சொல்லி தர வந்தவளே Mithila Mahadev மதுராபுரம் நாக நந்தினி நல்லதொரு வீணை செய்தே!!! Nanthini Vaishnavi காணாமல் போன கனவுகள் அன்பழகன்ஜி பூவும்.. புயலும்.. பிருந்தா சாந்தகுமார் தேனு(னூ)றும் இதழே!! Lakshmitha நிழலன் Rhea moorthy ரியா மூர்த்தி காதலன் குழந்தைதான் காதலி Kousalya Venkatesan தீராது அவன் இரு காதல்..! G அழகு லட்சுமிமேலும் பார்க்க
- ஒரு குளிர்காலக் காதல் கதை போட்டி முடிவுகள்01 ஏப்ரல் 2024அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, பிரதிலிபியின் 'ஒரு குளிர்காலக் காதல் கதை' போட்டியின் முடிவுகள் இதோ! கோல்டன் பேட்ஜ் இல்லாத எழுத்தாளர்களுக்கு மட்டும், 'ஒரு குளிர்காலக் காதல் கதை' என்ற சிறப்புத் தொடர்கதை எழுதும் போட்டியை பிரதிலிபி நடத்தியது. 10 அல்லது அதற்கும் மேற்பட்ட பாகம் தொடர்கதை எழுதி, பிரதிலிபியில் கோல்டன் பேட்ஜ் மற்றும் அதிக வாசகர்கள் மற்றும் பாலோவர்ஸ் பெறுவதற்காக ஒரு வாய்ப்பை உருவாக்கவே இந்த போட்டியை நடத்தினோம். இப்போட்டியில் கலந்து கொண்டு கோல்டன் பேட்ஜ் பெற்ற எழுத்தாளர்களுக்கும் எங்களின் வாழ்த்துகளை தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கோல்டன் பேட்ஜ் பெற்ற எழுத்தாளர்கள் தற்போது தங்கள் படைப்பை லாக் செய்யக்கூடிய பலனை பெற்றுள்ளார்கள். அதாவது, ஒரு புதிய தொடரை பதிவிடும்போதெல்லாம், 16வது பாகத்திலிருந்து முழுத்தொடரும் லாக் செய்யப்பட்டு, அந்தத் தொடர் பிரதிலிபி பிரீமியம் தொடராக மாறும் வசதி. வாசகர்கள் சந்தாக்களை வாங்குவதன் மூலமோ, நாணயங்களை செலுத்துவதன் மூலமோ அல்லது ஒவ்வொரு பாகமும் திறக்க அடுத்த நாள் வரை காத்திருப்பதன் மூலமோ கதைப் பாகங்களைத் திறக்க முடியும். பிரதிலிபி செயலியில் நீண்ட பல அத்தியாயத் தொடர்களை தொடர்ந்து பதிவிடுவதன் மூலமும், தொடரைப் பூட்டி வைப்பதன் மூலமும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிலிபி எழுத்தாளர்களின் சமூகத்தில் இணையும் வாய்ப்பை இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் பெற்றுள்ளார்கள். இதுமட்டுமல்ல, இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் தற்போது பிரதிலிபியின் சிறந்த எழுத்தாளர் விருதுகள் -7 போட்டியில் பங்கேற்கவும், ஆச்சரியமான பணப் பரிசுகள், பிரத்தியேக சட்டமிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பல விருதுகள் மற்றும் பலன்களைப் பெறவும் தகுதி பெறுவார்கள். 'ஒரு குளிர்காலக் காதல் கதை' போட்டியில் பங்கேற்று தொடரை சமர்ப்பித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். முதல்முறையாக கதை எழுதும் நிறைய எழுத்தாளர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று கதைகளை சமர்பித்திருந்தனர். வெற்றி தோல்வியை தாண்டி அவர்களின் எழுதுவதற்கான ஆர்வத்தையும் குறிப்பிட்ட காலத்தில் கதையை நிறைவு செய்ததையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். உங்கள் அனைவருக்கும் சிறப்பான எழுத்து வாழ்க்கை காத்திருக்கிறது, பிரதிலிபியில் தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான எழுத்து வாழ்க்கையை உருவாக்க நாங்கள் உதவுவோம் என்று உறுதியளிக்கிறோம். இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் சிறந்த கதைகளை கொடுத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றியாளர்கள் 1.ஸீரோ டிகிரி காதல்-ஜான்ஸ் டேவிட் அன்டோ (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) 2.ஜில்லுனு ஒரு காதல்-Dhusha (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) 3.முல்லைச் சிரிப்பினிலே-உமா விஜய் (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) 4.உறை பனியில் காதல்-கலையரசி கரிகாலன் (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) 5.மாயம் செய்தாயோ வெண்ணிலவே-தஸ்லிம் (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) 6.உன் காதல் குளிரால் என்னை நடுங்க வைக்கிறாய்-அலிஷா ஷமீர் (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) குறிப்பு - வெற்றி பெற்ற அனைவரும் தங்களது வீட்டு முகவரி, பின்கோட் (முழு முகவரியுடன்), தொலைபேசி எண், உங்களது பிரதிலிபி பக்கத்தின் லிங்க் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த போட்டியில் பங்கேற்று கோல்டன் பேட்ஜ் பெற்றவர்களுக்கு எங்களின் மனம்கனிந்த வாழ்த்துக்கள்! கோல்டன் பேட்ஜ் பெற்ற எழுத்தாளர்கள் பட்டியல்: 1.Karpagam Alagappan 2.ருக்மினி கண்ணனின் காதலி 3.கவி 4.Muhsina Saththar 5.j b போட்டி முடிவுகள் கதைகளின் தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாசகர் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்! பிரதிலிபி போட்டி குழு.மேலும் பார்க்க
- பிரதிலிபி மூலம் உங்கள் புத்தகத்தை வெளியிடுங்கள்01 மார்ச் 2024உங்கள் நாவலை வெறும் 5000 ரூபாய்க்கு அச்சுப் புத்தகமாக வெளியிடுங்கள். உங்களில் பலர் தங்கள் கதையை அச்சுப் புத்தகமாக வெளியிட விரும்புவதால், நாங்கள் இதை முன்னெடுக்கின்றோம். உங்கள் புத்தகத்தை மிகக் குறைந்த விலையில் வெளியிட, இந்த குறுகியகால சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் கதையை புத்தகமாக வெளியிட ஆர்வமாக இருந்தால், [email protected] ஐ அணுகவும் அடிப்படைத் திட்டம் (basic) : 40,000 வார்த்தைகளுக்கு 5,000 INR + 18% GST செலுத்தவேண்டும். 40,000 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால், கட்டணம் அதிகரிக்கும் அல்லது பிரதிகளின் குறையும். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். திட்டத்தில் அடங்குபவை : புத்தகத்தின் 10 பிரதிகள் அனுப்பும் செலவும் அடங்கும் அட்டைப்படம் பிரதிலிபியால் உருவாக்கப்படும் புத்தகத்திற்கான ISBN எண் காகித தரம் - ஆரம்பநிலையில் ஆனது மிக அடிப்படையான நூலாக்க வடிவமைப்பு (Typesetting) திட்டத்தில் இடம்பெறாதவை : மெய்ப்பு (Proofreading) நூலாக்க வடிவமைப்பு/மெய்ப்புக்கான வழிகாட்டுதல் : எழுத்துப்பிரதியில் எமோஜிகள் இடம்பெறக்கூடாது சொற்றொடர்களுக்கு இடையே தேவைக்கு அதிகமான இடைவெளி இருக்கக்கூடாது. தேவைக்கு அதிகமான நிறுத்தக்குறிகள், கமா, புள்ளிகள் இருக்கக்கூடாது. பிற முக்கிய விவரங்கள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே பணம் செலுத்த வேண்டும். மேலும் கட்டணத்தை ஒரே தவணையில் செலுத்தப்பட வேண்டும். செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், ஒப்பந்தத்தில் எழுத்தாளர் கையெழுத்திட வேண்டும். புத்தகம் எப்படி வரும் என்பதில் ஒரு யோசனையைப் பெறுவதற்காக ஒரு மாதிரி புத்தகத்தின் வீடியோ எழுத்தாளர்களுக்கு அனுப்பப்படும். (குறிப்பு இது உங்கள் புத்தகமாக இருக்காது. இது அச்சிடப்பட்ட மாதிரி புத்தகம்) எழுத்தாளர்களுக்கு தங்கள் புத்தகத்தில் மாற்றங்களைச் செய்ய 7-10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த நேரத்தில் எழுத்தாளர் Proofreading மற்றும் Typesetting செய்ய வேண்டும். இறுதி எழுத்தப்பிரதியை வழங்கியதிலிருந்து , நாங்கள் உங்களுக்கு அச்சுப்புத்தகத்தை அனுப்ப அதிகபட்சமாய் 30 நாட்கள் எடுத்துக்கொள்வோம். அட்டைப் படத்தை பிரதிலிபி முடிவு செய்யும். எழுத்தாளர் ஒரு மாதிரி அட்டைப் படத்தை கொடுக்க முடியும். ஆனால் இறுதி வடிவமைப்பை பிரதிலிபியே தீர்மானிக்கும். ஒரு நூலுக்கு ஒரே ஒரு அட்டைப் படம் மட்டுமே வடிவமைக்கப்படும். உள்ளடக்கத்தின் பதிப்புரிமை எழுத்தாளருக்குச் சொந்தமானது - (பிரதிலிபிக்கு பதிப்புரிமையை வழங்காத பட்சத்தில்) புத்தக அட்டையின் காப்புரிமை பிரதிலிபிக்கு சொந்தமானது. ஒப்பந்தத்திலும் இது குறிப்பிடப்படும். புத்தகத்தை அச்சுக்கு அனுப்பும் முன், பிரதிலிபி ஒரு pdf கோப்பை எழுத்தாளர்களின் பார்வைக்கு அனுப்பும். சில அடிப்படைக் கேள்விகள் : நான் இந்த திட்டத்தில் ஆர்வமாக உள்ளேன். நான் என்ன செய்யவேண்டும்? நீங்கள் உங்கள் கதையை புத்தகமாக வெளியிட ஆர்வமாக இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும். மின்னஞ்சலில் உங்களது தொடர்பு எண்ணை வழங்கவும். இதில் என்னென்ன படிகள் உள்ளன? நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியதும், நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் புத்தகத்தின் விவரங்களைப் பெறுவோம். பின்னர் spot draft மற்றும் பிரதிலிபியின் கணக்கு விவரங்கள் மூலம் கையெழுத்திட உங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை அனுப்புவோம். பணம் செலுத்தி ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதும், புத்தகத்தைப் பற்றிய மற்ற அனைத்து விவரங்களையும் சேகரிக்க மின்னஞ்ச்ல் மூலம் Google form பகிரப்படும். புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியையும் இறுதித் திருத்தத்திற்கு அனுப்புவோம். புத்தகத்தின் விவரங்களைப் பூர்த்தி செய்து, திருத்தப்பட்ட இறுதி பிரதியைப் பகிர்ந்தவுடன், நாங்கள் வெளியிடும் பணியைத் தொடங்குவோம் மற்றும் குறிப்பிடப்பட்ட மற்ற எல்லா விஷயங்களையும். புத்தகத்தின் பதிப்பாளர் யார்? பிரதிலிபி பேப்பர்பேக்ஸ் எனது தொடரின் காப்பியை உங்களுக்கு எப்படி வழங்குவது ? தொடர் பிரதிலிபியில் இருந்தால் , நாங்களே பதிவிறக்கம் செய்துகொள்வோம். எழுத்தாளர் திருத்தப்பட்ட நகலைப் பகிர விரும்பினால், அவர்கள் அதை Ms word கோப்பாகப் பகிர வேண்டும். பிரதிலிபியில் இல்லாத எனது புத்தகங்களை வெளியிட விரும்புகிறேன்.அதை எப்படி வழங்குவது? பிரதிலிபியில் இல்லாத புத்தகங்களையும் வெளியிடுகிறோம். புத்தகத்தை MS word கோப்பாக பகிர வேண்டும். எந்தக் கணக்கில் பணத்தைச் செலுத்த வேண்டும்? நீங்கள் அனைத்து விதிமுறைகளையும் புரிந்துகொண்டு, வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்டவுடன் நாங்கள் விவரங்களைப் பகிர்வோம். எனது புத்தகத்தின் விற்பனை விலை எவ்வளவு?பரஸ்பர விவாதங்களுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் (புத்தக விலை நிர்ணயம் தொடர்பாக சில காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்). எனது புத்தகத்தை ஆன்லைன் இணையதளங்களில் விற்பீர்களா? எ.கா- அமேசான். இல்லை, இந்த திட்டத்தில் உங்கள் புத்தகத்தை விற்க மாட்டோம். கூடுதல் கட்டணத்துடன் அதைச் செய்யலாம். புத்தகத்தின் அளவு என்ன? 8.5 x 5.5 inchesமேலும் பார்க்க
- சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6 போட்டி முடிவுகள்23 பிப்ரவரி 2024அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6 போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பல புதிய எழுத்தாளர்கள் கோல்டன் பேட்ஜ் பெற்று இந்தப் போட்டியில் கலந்து கொண்டு எண்ணற்ற அருமையான 60 பாக கதைகளை பதிவிட்டிருந்தனர். ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிய பிரதிலிபியின் அனைத்து சிறந்த எழுத்தாளர்களையும் மனதார வாழ்த்துகிறோம். எங்களுக்கு வந்த ஏராளமான கதைகளில் உங்கள் படைப்புகள் தனித்து நிற்கின்றன, மேலும் உங்கள் சாதனைகளை அங்கீகரிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அழகான காதல் கதைகள், அடுத்து என்ன என தொடர்ந்து கேட்க வைக்கும் க்ரைம் த்ரில்லர் கதைகள், முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்யும் திகில் கதைகள், சிறந்த கருத்துக்களைக் கொண்ட சமூகக் கதைகள், அறிவியல் புனைகதைகள், வரலாற்றுக் கதைகள் - அனைத்து வகை கதைகளையும் கண்டோம்! இந்தப் போட்டியில் எங்கள் எழுத்தாளர்களாகிய நீங்கள் பதிப்பித்த கதைகளின் தரம் மிகவும் குறிப்பிடத்தக்கது! ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் மிக அருமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. சிறந்த10 வாசகர் தேர்வுதொடர்கள்: போட்டியின் எல்லா விதிகளையும் (ஆரம்ப தேதி, முடிவு தேதி, ஒவ்வொரு பாகத்திற்குமான வார்த்தை எண்ணிக்கை முதலியன) பின்பற்றி சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகளில் இருந்தும் கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் முதல் 10 கதைகள் தேர்வு செய்திருக்கிறோம் : - எழுத்தாளரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் போட்டிக் கதையின் மொத்த வாசிப்பு எண்ணிக்கை. (வாசகர் எண்ணிக்கை/பாலோவர்ஸ்) - அதிக வாசிப்பு மதிப்பெண் (Highest Engagement Score), அதாவது எத்தனை சதவீத வாசகர்கள் கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுதாக வாசித்து முடித்துள்ளனர் என்ற அடிப்படையில் கணினித்தரவுகள் வழங்கும் மதிப்பீடு. --உன் சர்வமும் சர்வாதிகாரியும் நானே - SONAJEEVA (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --அரக்கனை அடக்கிய அக்னி தாரகை - ஸ்வேதா கார்த்திக் (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --எனக்கு மட்டும் பிழையா - Nivetha 6797 (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --கண்களால் கைது செய்யும் அரக்கனே - தமிழ் காதலி (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --மூங்கிலில் முகிழும் முத்தங்கள் நீ! - சனாகீத் (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --என் உயிரில் கலந்தவளே(னே) - Little princess Minu (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --மயிலாய் வருடும் மகாலட்சுமியே! - Kani suresh (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --மந்திரப் புன்னகை - ஆபுத்திரன் (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --சந்திர மாகாளி - சண்முகா சேதுராமச்சந்திரன் (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --லப்... டப்... - Aneesa Ali (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) ---------------------------------------------------------------------------------- நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 தொடர்கள் (ரேங்க் முறைமை இல்லை): தேர்வு செய்த அடிப்படை : தொடர் கதைகளை மதிப்பிடும் போது நடுவர்களால் பல முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்பட்டன. கதையின் தீம், எழுதும் நடை, கதைக்களம், கதையின் அமைப்பு, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நாவலின் போது கதாபாத்திரங்களின் வளர்ச்சி, உரையாடலின் முக்கியத்துவம், வாசிப்பில் ஆர்வத்தைத் தக்கவைக்க பொதுவான இலக்கணம், எழுத்துப்பிழைகள் மற்றும் பல விஷயங்கள். வாசகர் தேர்வுக்கான பத்து தொடர்களை நீக்கியபின், இந்தக் காரணிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளித்து கீழே உள்ள சிறந்த 10 தொடர்கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறோம். --நேச மழையே! - செவ்வந்தி துரை (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --தீராது அவன் இரு காதல் - G. அழகுலட்சுமி (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --நானே வருவேனே - Sudha Suresh (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --கொலைதேடும் இரவுகள் - Adithiya magendran (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --நிலவில் மறைந்த சூரியன் - தனலட்சும ஞானசேகரன் (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --காந்தள் நீயே காதல் தீயே - வைஷூ அய்யம் (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --என் உயிரோசை நீயடா - Rekha Sathish (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --நிலை இல்லா உலகில் நிலைக்கும் உன் பெயர் - Heera Heerthana (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --பகவான் அணுகிரகம் - வேலையா கார்த்திகேயன் (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --திக்...திக்...திரி(ல்)ஷா - கவிதா ராமதாஸ் (ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) --------------------------------------------------------------------------------- பிற குறிப்பிடத்தக்க படைப்புகள்: கீழே உள்ள கதைகளை குறிப்பிடாமல் விட்டால் அது நியாயமற்றது. மேலே இடம்பிடித்திருக்கும் கதைகளுக்கு சவாலான போட்டியாக இறுதி வரை இருந்த குறிப்பிடத்தக்க படைப்புகள் இவை. நிச்சயமாக அடுத்த போட்டியில் பரிசுபட்டியலில் இவர்கள் இடம்பெறுவார்கள் என நம்புகிறோம். பிறை அழகின் நிலவன் - சங்கீதா ராஜா சிதைக்கும் சித்திரவதை நீய(டி)டா - Nivi Ammu வழி மாறிய மலர்கள் - ஒளிநிலா மதுராபுரம் - நாக நந்தினி நிழலன் - ரியா மூர்த்தி நீயின்றி நானில்லை என் காதல் பொய்யுமில்லை - Vanmathy Hari மூடப்பட்ட ரகசியங்களும் மூழ்கிய பொக்கிஷங்களும் - Sparrow Rapunzel மந்திரக்கற்கள் - கார்த்திகா சக்கரவர்த்தி காட்டுமாறன் ஜமீன் மர்மம் - Artista மனோ மனம் கொய்த மாயவன் - Laxmi Devi காத்திருப்பேன் மன்னவா - Meera Jo பொகுட்டெழினி (காதல் புனலும் வீரக் கனலும்) - இராஜசேகரன் நவநீதம் உயிர்வரை உந்தன் மடியிலே - ஜெனி என் அன்புக் கீரவாணி! - ப்ரியமுடன் விஜய் என் மேல் விழுந்த மழையே! - Meenakshi Rajendran அனைத்து எழுத்தாளர்களுக்கும் மீண்டும் வாழ்த்துகள், உங்கள் பேனா தொடர்ந்து இது போன்ற அழகான புனைகதைகளை படைக்கும் என்று நம்புகிறோம்! இப்போட்டியில் 80 பாகங்களைக் கடந்து கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல் மற்றும் திறமையான வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது பட்டியல் அடுத்த 15-20 நாட்களுக்குள் வெளியிடப்படும். வலைபதிவுகள் பகுதியை அவ்வப்போது பார்த்துக்கொள்ளவும். போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களும் கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். பெயர் (சான்றிதழில் இடம்பெற): உங்கள் பிரதிலிபி ப்ரொபைல் லிங்க்: மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: இன்னொரு backup தொலைபேசி எண்: வெற்றிபெற்ற படைப்பின் பெயர் மற்றும் போட்டி: பரிசுத்தொகை: பெயர் (வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ளபடி ஆங்கிலத்தில்): வங்கிக்கணக்கு எண் : IFSC எண் : வங்கியின் பெயர்: வங்கிக்கிளை: PAN எண்: வீட்டு முகவரி (அஞ்சல் குறியீட்டுடன்): மேலே உள்ள விவரங்களை தெளிவாக [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 10 நாட்களில் அனுப்பிவைக்கவும் (நீங்கள் ஏற்கனவே எங்களிடம் உங்கள் விவரங்களை அனுப்பி இருந்தாலும் இப்போட்டியின் பரிசுத்தொகை பெற மீண்டும் மேல் உள்ள விவரங்களை அனுப்பவும்). நீங்கள் விரைவாக விவரங்களை வழங்கும்போது நாங்கள் பரிசுகளை விரைவாக உங்களுக்கு அனுப்ப தோதாக இருக்கும். -- இங்கே கிளிக் செய்வதன் மூலம் 'சிறந்த எழுத்தாளர் விருது - சூப்பர் 7' போட்டியில் பங்கேற்கலாம்! -- மாதம் ரூ.10,000/- சம்பாதிப்பதற்கான ரகசியங்களை அறிய இங்கே கிளிக் செய்து 'பிரதிலிபி படைப்பாளிகள் திட்டத்தில்' இணையுங்கள்! வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பிரதிலிபி போட்டிக்குழுமேலும் பார்க்க
- பிரதிலிபி வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது - போட்டி முடிவுகள்12 ஜனவரி 2024பிரதிலிபி வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது - போட்டி முடிவுகள் அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, பிரதிலிபி வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது போட்டியின் முடிவுகள் இதோ! கோல்டன் பேட்ஜ் இல்லாத எழுத்தாளர்களுக்கு மட்டும், 'பிரதிலிபி வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது' என்ற சிறப்புத் தொடர்கதை எழுதும் போட்டியை பிரதிலிபி நடத்தியது. 10 அல்லது அதற்கும் மேற்பட்ட பாகம் தொடர்கதை எழுதி, பிரதிலிபியில் கோல்டன் பேட்ஜ் மற்றும் அதிக வாசகர்கள் மற்றும் பாலோவர்ஸ் பெறுவதற்காக ஒரு வாய்ப்பை உருவாக்கவே இந்த போட்டியை நடத்தினோம். இப்போட்டியில் கலந்து கொண்டு கோல்டன் பேட்ஜ் பெற்ற எழுத்தாளர்களுக்கும் எங்களின் வாழ்த்துகளை தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கோல்டன் பேட்ஜ் பெற்ற எழுத்தாளர்கள் தற்போது தங்கள் படைப்பை லாக் செய்யக்கூடிய பலனை பெற்றுள்ளார்கள். அதாவது, ஒரு புதிய தொடரை பதிவிடும்போதெல்லாம், 16வது பாகத்திலிருந்து முழுத்தொடரும் லாக் செய்யப்பட்டு, அந்தத் தொடர் பிரதிலிபி பிரீமியம் தொடராக மாறும் வசதி. வாசகர்கள் சந்தாக்களை வாங்குவதன் மூலமோ, நாணயங்களை செலுத்துவதன் மூலமோ அல்லது ஒவ்வொரு பாகமும் திறக்க அடுத்த நாள் வரை காத்திருப்பதன் மூலமோ கதைப் பாகங்களைத் திறக்க முடியும். பிரதிலிபி செயலியில் நீண்ட பல அத்தியாயத் தொடர்களை தொடர்ந்து பதிவிடுவதன் மூலமும், தொடரைப் பூட்டி வைப்பதன் மூலமும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிலிபி எழுத்தாளர்களின் சமூகத்தில் இணையும் வாய்ப்பை இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் பெற்றுள்ளார்கள். இதுமட்டுமல்ல, இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் தற்போது பிரதிலிபியின் சிறந்த எழுத்தாளர் விருதுகள் -7 போட்டியில் பங்கேற்கவும், ஆச்சரியமான பணப் பரிசுகள், பிரத்தியேக சட்டமிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பல விருதுகள் மற்றும் பலன்களைப் பெறவும் தகுதி பெறுவார்கள். 'பிரதிலிபி வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது' போட்டியில் பங்கேற்று தொடரை சமர்ப்பித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். முதல்முறையாக கதை எழுதும் நிறைய எழுத்தாளர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று கதைகளை சமர்பித்திருந்தனர். வெற்றி தோல்வியை தாண்டி அவர்களின் எழுதுவதற்கான ஆர்வத்தையும் குறிப்பிட்ட காலத்தில் கதையை நிறைவு செய்ததையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். உங்கள் அனைவருக்கும் சிறப்பான எழுத்து வாழ்க்கை காத்திருக்கிறது, பிரதிலிபியில் தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான எழுத்து வாழ்க்கையை உருவாக்க நாங்கள் உதவுவோம் என்று உறுதியளிக்கிறோம். இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் சிறந்த கதைகளை கொடுத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றியாளர்கள் 1.வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்!-பிறை நிலா "ருத்வி" (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) 2.குறிச்சி குமரி-கீர்த்தனா (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) 3.தீரா தீஞ்சுவையே-Bharathi Karthick (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) 4.காதல் ஓளஷதம் நீ-அஞ்சனா சுபி (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) 5.தீராத வழக்கு-சி. விக்கனராஜ் (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) 6.சினேகம் டூ பிரேமம்-Sangi Krish (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்) குறிப்பு - வெற்றி பெற்ற அனைவரும் தங்களது வீட்டு முகவரி, பின்கோட் (முழு முகவரியுடன்), தொலைபேசி எண், உங்களது பிரதிலிபி பக்கத்தின் லிங்க் ஆகியவற்றை[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பிற குறிப்பிடத்தகுந்த படைப்புகள் - 1.ஆத்மாவாகிய அவள்-ரம்யா தங்கதுரை 2.சிவா மனசுல சக்தி-தஸ்லிம் 3.நீதி-C Sathyavanimuthu C 4.முடிவின் ஆரம்பம்-Karpagam Alagappan 5.கண்களினால் உயிரைப் பருகிய கள்வா-Gowri R 6.அன்பும் நீயே! அப்பாவும் நீயே!-malathi mani 7.கவலைப்படும் சம்சாரிகள் சங்கம்-Badrinarayanan Sri 8.செல்லமடி நீ எனக்கு-பாரியின் ஆதினி 9.தீயில் விழுந்த தேனா..!-𝙷𝚊𝚏𝚊 𝙵𝚊𝚝𝚑𝚒 10.யாதுமாகி நின்றாய் என்னுயிரே-Saru Ruba 11.என் நிழற்துணையே!-ப்ரியா விமல் 12.எதிர் விசை-பானு க 13.விலை(திரு) மகள்-ரிஷா.பி 14.மௌனமொழி-சரண்யா இளமாறன் 15.மன்னனைக் காத்த மாவீரன்-கரிகாலன் 16.டைவர்ஸ்-Fathima Sahana இந்த போட்டியில் பங்கேற்று கோல்டன் பேட்ஜ் பெற்றவர்களுக்கு எங்களின் மனம்கனிந்த வாழ்த்துக்கள்! கோல்டன் பேட்ஜ் பெற்ற எழுத்தாளர்கள் பட்டியல்: 1.Ila 2.சதீஷ் குமார் தங்கசாமி 3.Ponmani kannan 4.ப்ரியா விமல் 5.ராதேகிருஷ்ணா 6.uma Saravanan 7.varsha s 8.இவள் மகேஸ்வரி 9.விஜி 10.Tharanandhini 11.வைஷூ மஹா 12.Narthika nandhu போட்டி முடிவுகள் கதைகளின் தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாசகர் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்! பிரதிலிபி போட்டி குழு.மேலும் பார்க்க
- நிலையான சம்பாத்தியம் பெற 10 வழிகள்08 ஜனவரி 2024நிலையான சம்பாத்தியம் பெற 10 வழிகள்: 1.ஈர்க்கும் படைப்புகள் : உங்கள் ப்ரொஃபைலில் எப்போதும் நீண்ட தொடர் எழுதுவதை உறுதிசெய்யவும்! ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது 1000 சொற்களைக் கொண்டுள்ள 100+ பகுதிகளைக் கொண்ட நீண்ட தொடர்கள், சிறப்பாக செயல்படுவதை எங்களது தரவு தெரிவிக்கிறது. வாசகர்களை கவரும் வகையில் உங்கள் பிரீமியம் தொடர்களை தொடர்ந்து விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். 2. பதிப்பிப்பதில்நிலைத்தன்மை: பிரதிலிபி எனக்கு வாசகர்களைத் தருகிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க நான் படைப்பை வெளியிட்ட பிறகு காத்திருக்க வேண்டுமா? இல்லவே இல்லை. பிரதிலிபியில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் உள்ளனர், அவர்களுக்கு ஏராளமான தொடர்கள் உள்ளன. எனவே, வாசகர்களின் ஆர்வத்தைத் தக்கவைக்க தொடர்ந்து அத்தியாயங்களை வெளியிட்டாலே போதுமானது. உங்கள் தொடரின் பார்வையை அதிகரிக்க வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று பகுதிகளை வெளியிட வேண்டும். 3.ஒரு பழக்கத்தை உருவாக்குங்கள்: தினசரி 30-45 நிமிடங்கள் எழுதும் வழக்கத்தை உருவாக்கவும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் 800-1000 வார்த்தைகள் இருப்பதை உறுதிசெய்யவும். 4.வாசகருக்குப் பிடித்த தீம்களைப் பயன்படுத்தவும்: காதல், நாடகம், சஸ்பென்ஸ், திகில், க்ரைம்-த்ரில்லர் போன்ற பிரபலமான தீம்களைத் தேர்வு செய்யவும், இவை வாசகர்களால் விரும்பி வாசிக்கப்படும் தீம்கள். 5.'சூப்பர் ரைட்டர் விருது' போட்டியில் பங்கேற்கவும்: உங்கள் வருவாயை அதிகரிக்க, போட்டியில் கலந்துகொண்டு ஈர்க்கும்படியான நீண்ட தொடர்களை எழுதுங்கள். இந்த நடைமுறையானது ஒரு காலக்கெடுவுக்குள் சிறந்த நீண்ட தொடர்களை எழுதும் பழக்கத்தை உருவாக்கும், இதன் மூலம் உங்கள் எழுதும் வேகம் அதிகரிக்கலாம். 6. அத்தியாயத்தின்நீளம் மற்றும் சுவாரஸ்ய முடிவு: ஒவ்வொரு பகுதியையும் அழுத்தமான அல்லது சுவாரஸ்யமான இடத்துடன் முடிக்கவும், இது அடுத்த பகுதியை திறக்க வாசகர்களை ஊக்குவிக்கவும். பூட்டப்பட்ட பாகங்கள் தரமான மதிப்பை வழங்குகின்றன என்பது உறுதியானால் , வாசகர்கள் அவற்றை திறக்க ஆர்வமாகவும் இருப்பார்கள். 7.சப்ஸ்கிரிப்ஷனை ஊக்குவிக்கவும்: உங்கள் தொடருக்கான தடையில்லா அணுகலைப் பெற வாசகர்களை சப்ஸ்கிரைப் செய்யும்படி அறிவுறுத்தவும் . ஒரு நீண்ட தொடரை எழுதுவதற்கு நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள் என்றால், பூட்டப்பட்ட பகுதிகளை வாசிப்பதற்கு சப்ஸ்கிரைப் செய்யுமாறு உங்கள் வாசகர்களிடம் நீங்கள் நிச்சயம் வேண்டுகோள் விடுக்கலாம். இது உங்கள் எழுத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்ட உதவும். உங்கள் கடின உழைப்பு மற்றும் உங்கள் தொடரின் பின்னால் உள்ள விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்களை ஆதரிக்க உங்கள் வாசகர்களை உணர்ச்சிபூர்வமாக ஊக்குவிக்கும். 8.விளம்பர முயற்சிகள்: உங்கள் முடிவடைந்த மற்றும் நடந்துகொண்டிருக்கும் பிரீமியம் தொடர்களை தொடர்ந்து விளம்பரப்படுத்த, பிரதிலிபியின் போஸ்ட் அம்சம், செய்திகள் அம்சம் ஆகியவற்றைப் பயன்படுத்தவும். புதிய வாசகர்களை ஈர்க்கும் வகையில் சமூக ஊடகங்கள் அல்லது பிற தளங்களையும் பயன்படுத்தவும். 9.வாசகர் தொடர்பு: கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் செய்திகளுக்குப் பதிலளிக்கவும், விவாதங்களில் ஈடுபடவும் மற்றும் உங்கள் கதைசொல்லலை மேம்படுத்த வாசகர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவும். இது அவர்களுடன் வலுவான உறவை உருவாக்கவும், உங்கள் தொடருக்கான ஈடுபாடு மற்றும் ஆதரவை அதிகரிக்கவும் உதவும். 10. புதிய சீசன்கள் :உங்களது அதிகம் வாசிக்கப்பட்ட தொடருக்கு அடுத்த சீசனை நிச்சயம் எழுதலாம். வாசகர்கள் அதை விரும்புகிறார்கள். உங்கள் தொடரின் பிரபல கதாபாத்திரங்களை புதிய தொடரில் மீண்டும் அறிமுகப்படுத்தலாம். நீங்கள் நீண்ட தொடரை எழுத ஆயிரக்கணக்கான தலைப்புகள்/கதைக்கருக்கள் உள்ளன. மக்களின் நடத்தை மற்றும் உங்கள் சொந்த அனுபவங்களைக் கவனித்து உங்களைச் சுற்றியுள்ள உலகில் உத்வேகத்தைத் தேடுங்கள். யோசனைகள், அறிவுறுத்தல்கள், தலைப்புகள், ஒன்-லைனர்கள் போன்றவற்றைப் பெற இணையத்தையும் பயன்படுத்தலாம். கவனிக்க: உங்கள் 16+ பாகங்கள் கொண்ட தொடர் இதுவரை ப்ரீமியத்தில் இணையவில்லை என்றால், கீழ் உள்ள வழிகளைப் பின்பற்றவும் : (1) உங்கள் தொடரின் பிரதான பக்கத்திற்கு செல்லவும். (2) மற்ற விவரங்களை திருத்த என்ற ஆப்ஷனை சொடுக்கவும். (3) இந்தப் பக்கத்தில் சப்ஸ்கிரிப்ஷன் ஆம், இல்லை என வழங்கப்பட்டிருக்கும். (4) அதில் 'ஆம்' என்பதை தேர்வு செய்து உங்கள் தொடரை சப்ஸ்கிரிப்ஷனில் இணைக்கவும். Understand different points in detail by clicking on it: (ஆங்கிலத்தில் மட்டும்) 1.Why does Pratilipi ask authors to write long series? 2.How to develop a plot idea into a long series? 3.How to develop characters and sub-plots? 4.How to create an interesting series in Genre of Love? 5.How to write an interesting series in Family drama, Social, and Women's themes? 6.How to write an interesting series with Mystery, Fantasy, and Horror themes? 7.How to write an interesting Thriller series? 8.Understanding Point of view, Events - their sequence and Plot holes in series writing. 9.Understanding Parts and Scene writing. 10.Understand the style of dialogue writing and and first part. 11.What is a hook and plot twist? How to use it? and How to end the series. 12.How to write different emotions? 13.Analysis of Popular Series and their parts 14.How to attract readers? 15.How to make a writing schedule? 16.Common problems while writing and their solutions (blocks/stress/time) 17.Benefits of successfully writing a long seriesமேலும் பார்க்க
- பிரதிலிபி எவ்வாறு உங்களது படைப்புகளின் காப்புரிமையை பாதுகாக்கிறது08 ஜனவரி 2024அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, தனிப்பட்ட செய்திகள் மூலம் பல்வேறு தளங்கள் மற்றும் தனிநபர்களால் அணுகப்படுவது, மேலும் அதன்மூலம் மோசடிகளுக்கு இலக்காவது குறித்து பல எழுத்தாளர்களிடமிருந்து நாங்கள் புகார்களை பெற்றுள்ளோம்.எங்கள் எழுத்தாளர் சமூகத்திற்கு அதிக கவனத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த, பின்வரும் வழிகாட்டுதல்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம்: ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கு ஈடாக அவர்களுக்காக எழுதக் கோரும் எந்தவொரு தளத்தையும் அல்லது தனி நபரையும் எப்போதும் உடனடியாக ப்ளாக் செய்துவிடுங்கள். பொதுவாக, இதுபோன்ற ஒப்பந்தங்கள் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பிற்கான பதிப்புரிமையை வாழ்நாள் முழுவதும் இழக்க நேரிடும். தனிசெய்தியில் புதிய நபர்களிடமிருந்து வரும் கவர்ச்சிகரமான சலுகைகளை நம்பவேண்டாம். உங்கள் கதையை பிரதிலிபி அல்லது வேறு எந்த தளத்திலிருந்தும் அகற்றும்படி யாராவது உங்களிடம் கேட்டால், உங்கள் பதிப்புரிமையை நீங்கள் இழக்க நேரிடும் என்பதற்கான முதல் அறிகுறி இதுவாகும். பிரதிலிபியில், எழுத்தாளர்களிடமிருந்து முழு பதிப்புரிமையையும் நாங்கள் கோருவதில்லை. எங்கள் குழு ஏதேனும் உரிமைகளைக் கோரும்போது, ஒப்பந்த விதிமுறைகளின் எளிமைப்படுத்தப்பட்ட பதிப்பை விளக்கும் மின்னஞ்சலை நாங்கள் அனுப்புவோம். எங்கள் தகவல்தொடர்புகளில் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறோம். பிரதிலிபியில், மற்றவர்களுக்கு வழங்கக்கூடிய பல்வேறு வகையான உரிமைகளைப் புரிந்துகொள்வதில் எழுத்தாளர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். உதாரணமாக, குறிப்பிட்ட காலத்திற்கு பொருந்தும் உரிமைகளை (காமிக்ஸ், வெப் சீரிஸ், புத்தகங்கள், ஆடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் ஒரு கதையை மாற்றியமைக்கும் உரிமை) நாங்கள் பெறுகிறோம். நாங்கள் ஒரு கதையை முழுமையாகப் பெறுவதை நோக்கமாகக் கொண்டால், அது முன்கூட்டியே ஒப்பந்தத்தில் வெளிப்படையாகக் கூறப்பட்டும். எழுத்தாளரின் அடிப்படை உரிமை என நம்புவதால், எழுத்தாளர்கள் முழுமையான பதிப்புரிமையை கைவிடுவதைத் தவிர்க்க வேண்டும். கூடுதலாக, பல எழுத்தாளர்கள் எதிர்காலப் பயன்கள் பற்றி சிந்திக்கத் தவறுகிறார்கள். செயற்கை நுண்ணறிவின் பரிணாம வளர்ச்சியுடன்,பிரதிலிபி போன்ற தளங்களில் உங்கள்கதைகள் விரைவில் 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம், ஒவ்வொரு மொழியிலிருந்தும் எழுத்தாளர்கள் சம்பாதிக்க முடியும். ஆடியோ, திரைப்படம் மற்றும் காமிக்ஸ் போன்ற உருவாக்கங்களுக்கு தனித்தனியாக கதைகளை வழங்கலாம், இதன்மூலம் எழுத்தாளர்கள் பல்வேறு ஸ்ட்ரீம்களில் இருந்து சம்பாதிக்க முடியும். நீங்கள் ஈடுபடும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் புரிந்துகொள்ள, தயங்காமல் ஒரு வழக்கறிஞரை அணுகவும் அல்லது [email protected] மூலம் பிரதிலிபி குழுவின் உதவியை நாடவும்.பிரதிலிபி குழு உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் ஒப்பந்தத்தைத் தெளிவுபடுத்தும்.மேலும் பார்க்க
- 'சிறந்த எழுத்தாளர் விருதுகள்: சூப்பர் 7 சீசன் | விரைவில்'28 டிசம்பர் 2023எங்கள் அற்புதமான எழுத்தாளர்களே, 2024 புது வருடத்துடன் நம் பயணத்தை துவங்க இருக்கும் இவ்வேளையில், உங்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான ஆண்டாக புத்தாண்டு இருக்க பிரதிலிபியின் அன்பான வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்க விரும்புகிறோம்! கூடிய விரைவில் கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்களுக்கான 'சிறந்த எழுத்தாளர் விருதுகள்: சூப்பர் 7 சீசன்' தொடங்க இருக்கிறது. எங்கள் சவால்: புது வருடம் என்பது புதிய ஆரம்பம். இந்த புத்தாண்டில், ஒரு அற்புதமான கதையை எழுதுங்கள், கதை மிகவும் சுவாரசியமாக தொடங்குவதோடு, கதை முழுவதும் வாசகர்களை ஈர்த்து அவர்களை உங்களோடு இறுதிவரை பயணிக்க வைக்கும்படி இருக்க வேண்டும். புது ஆண்டின் புதிய பக்கங்களை உங்கள் எழுத்திற்காக அர்ப்பணித்து, பிரதிலிபியில் மில்லியன் கணக்கான வாசகர்களின் இதயத்தைத் தொடக்கூடிய கதைகளை உருவாக்க உங்களுக்கு நீங்களே சவால் விடுங்கள். உங்கள் தனித்துவமான எழுத்துத் திறமையையே கதையின் உண்மையான ஹீரோவாக மாற்றவும். உங்கள் கதைக்கான அவுட்லைன் மற்றும் கதாபாத்திரங்களை இப்போதே திட்டமிடத் தொடங்குங்கள். வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி இப்போட்டியை நாம் தொடங்குகிறோம்! இந்த சூப்பர் 7 சீசனில் நீங்கள் வெல்லக்கூடிய அற்புதமான பரிசுகளைப் பற்றி தெரிந்துகொள்ள காத்திருக்கவும்.மேலும் பார்க்க
- 100 பாகங்கள் எனும் மைல்கல்லைத் தொட்ட அனைத்து சிறந்த எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!18 அக்டோபர் 2023அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு சிறப்பான செய்தி எங்களிடம் உள்ளது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5 இன் போட்டி முடிவுகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அப்போட்டி குறித்து தெரியாதவர்களுக்கு, சிறந்த எழுத்தாளர் விருதுகள் ஓர் தேசிய அளவிலான போட்டியாகும், பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் நாங்கள் கடுமையான சவாலை வழங்கினோம். 100 அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்கள் கொண்ட தொடரை எழுதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரதிலிபியிலிருந்து உத்தரவாதமான பரிசுகளை அறிவித்திருந்தோம். பொதுவாக, தொடர்கதைகள் எழுதுவது என்பதே ஒரு சவால் தான். அதிலும், ஒருவர் 100 பாகங்கள் கொண்ட தொடரை எழுதுவதற்கு கணிசமான நேரம், பொறுமை, திறமை, ஒழுக்கம் மற்றும் எழுத்து திறமை தேவை என்பதால் இது மிகவும் கடினமான சவாலாகவே இருந்தது. எழுத்தின் மீது மிகுந்த அன்பு இல்லாமல், இதைச் செய்வது எளிதல்ல. வெளிப்படையாகச் சொன்னால், எழுத்தளார்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். இந்த எழுத்துப் போட்டியில் பல எழுத்தாளர்கள் சவாலை ஏற்று 100 பாகத் தொடர்களை பதிவிட்டிருந்தனர்! அவர்களில் சிலர், 9 மொழிகளில், 120/ 150/200/250 அல்லது அதற்கும் அதிகமான பாகங்களுடன் கதைகளை எழுதி இருந்தனர். எங்களின் வியப்பை வெளிப்படுத்தவோ, எழுத்தாளர்களைப் பாராட்டவோ எங்களிடம் வார்த்தைகள் இல்லை. எங்கள் தளத்தில் இத்தகைய திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இத்தகைய அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் நாங்கள் எழுத்தாளர்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, பெரிதாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம். உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எழுத்தார்வம் எங்களை ஊக்கப்படுத்தியது மற்றும் இது மற்ற எழுத்தாளர்களையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும். எனவே, உங்களின் இந்த சிறப்பான சாதனையை பிரதிலிபி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்! நாங்கள் உறுதியளித்தபடி, உங்கள் அனைவருக்கும் கூரியர் மூலம் ஒரு சிறப்பு சான்றிதழ் பரிசாக அனுப்புவோம். சில நாட்கள் காத்திருக்கவும், இது தொடர்பாக எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும். இந்தப் போட்டியில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட மிக நீளமான தொடர்- பிடிக்காதவளோடு பிறந்த காதல் - SONAJEEVA - 130 பாகங்கள் இப்போட்டியில் தமிழ் மொழியில் 100 மற்றும் அதற்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட தொடரை பதிவிட்ட அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல்- எழுத்தாளர் படைப்பு 1 உறவுப் பாலங்கள் murugesan Nallathambi 2 உழந்தும் உழவே தலை...1 நாக நந்தினி 3 உயிர் உறை 1 Priya Dharshini . S 4 ️உண்மை சொன்னால் நேசிப்பாயா️ Anitha Kumar 5 சர்க்கார் Vanmathy hari 6 உயிர் தேடும் உன் மடி!! (முழுத் தொகுப்பு ) Aashmi S 7 நிலைக்கு வருமா அலங்காரத் தேர் ஜெ.சுமதி ராஜேந்திரன் 8 காஞ்சியின் கனவு ( மாமல்லரின் சரிதம் ) பத்மினி கணேசன் 9 அனல் மேலே பனித்துளி Lakshmi Rajendran 10 காதலன் குழந்தைதான் காதலி. Kousalya Venkatesan 11 உறவாக நான் வரவா என் உயிரே 💞💞 Love Amore 12 என்னுயிர் மீனம்மா (நிறைவடைந்தது ) Rekha Sathish 13 யாழினை மீட்டிடும் காலன் ஆரா 14 பிலஹரி நீயடி Latha Sivanesan' 15 ️ அந்தி நிலவே ️ சங்கரேஸ்வரி 16 தூமகேது புவனா சந்திரசேகரன் 17 ஆதவனின் தென்றலவள் Kanchana Senthil 18 ரணமும் காதலானதே தனிமை காதலி 19 சோழ நாட்டு இளவரசியவள் Tamil Selvi 20 சிந்து நதி பூ Raja Lakshmi 21 மாலை டும் டும்... மஞ்சள் டும் டும்... கவிதா ராமதாஸ் 22 பாவை தேடிய ஜீவன் ஆர்த்தி வசந்தன் 23 உன் பார்வை தூண்டிலா.? (முடிவுற்றது) நந்தினி சுகுமாரன். 24 அஸ்வின் என்கிற அர்த்தநாரீஸ்வரன்..! காரை ஆடலரசன் எங்கள் பார்வையில், நீங்கள் அனைவரும் மிக சிறந்த எழுத்தாளர்கள்! தொடர்ந்து இதே அளவு ஆர்வத்துடன் எழுதுங்கள். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்! தற்போது நடைபெற்று வரும் சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6 போட்டியில் வாசகர் தேர்வு, திறமையான வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது என பல வடிவங்களில் முடிவுகள் வெளிவிடப்படும். நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை டிசம்பர் 25, 2023க்குள் வெளியிட வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/lqj5bkgz7w வாழ்த்துகளுடன், பிரதிலிபி போட்டிக்குழு.மேலும் பார்க்க
- ‘காதல் காலம்’ போட்டி முடிவுகள்14 அக்டோபர் 2023அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காதல் காலம் போட்டியின் முடிவுகள் இதோ! நாங்கள் இப்போட்டியை பிரதிலிபியில் எழுத தொடங்கி இருக்கும் புதிய எழுத்தாளர்களுக்காகவே பிரத்யேகமாக நடத்தினோம். புதிதாக தொடர்கதை எழுதுபவர்கள் அருமையான ஒரு சிறு தொடர்கதையை எழுதுவதன் மூலம் பிரதிலிபியில் தங்களுடைய கோல்டன் பேட்ஜை அடைவதற்கு ஒரு படியை நெருங்குவதே இப்போட்டியின் நோக்கம். பிரதிலிபியில் கோல்டன் பேட்ஜ் பெறுவது ஏன் இவ்வளவு முக்கியமானது என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம்! எளிமையாகச் சொல்வதென்றால், தங்களுடைய எழுத்துக்களிலிருந்து ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க விரும்பும் பிரதிலிபி எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் கோல்டன் பேட்ஜ் பெறுவது என்பது முதல் படியாகும். பிரதிலிபியில் 9 மொழிகளில் இப்போட்டியில் கலந்து கொண்டு கோல்டன் பேட்ஜ் பெற்ற 200க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளை தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த எழுத்தாளர்கள் தற்போது தங்கள் படைப்பை லாக் செய்யக்கூடிய பலனை பெற்றுள்ளார்கள். அதாவது, ஒரு புதிய தொடரை பதிவிடும்போதெல்லாம், 16வது பாகத்திலிருந்து முழுத்தொடரும் லாக் செய்யப்பட்டு, அந்தத் தொடர் பிரதிலிபி பிரீமியம் தொடராக மாறும் வசதி. வாசகர்கள் சந்தாக்களை வாங்குவதன் மூலமோ, நாணயங்களை செலுத்துவதன் மூலமோ அல்லது ஒவ்வொரு பாகமும் திறக்க அடுத்த நாள் வரை காத்திருப்பதன் மூலமோ கதைப் பாகங்களைத் திறக்க முடியும். பிரதிலிபி செயலியில் நீண்ட பல அத்தியாயத் தொடர்களை தொடர்ந்து பதிவிடுவதன் மூலமும், தொடரைப் பூட்டி வைப்பதன் மூலமும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிலிபி எழுத்தாளர்களின் சமூகத்தில் இணையும் வாய்ப்பை இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் பெற்றுள்ளார்கள். இதுமட்டுமல்ல, இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் தற்போது பிரதிலிபியின் சிறந்த எழுத்தாளர் விருதுகள் -6 போட்டியில் பங்கேற்கவும், ஆச்சரியமான பணப் பரிசுகள், பிரத்தியேக சட்டமிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பல விருதுகள் மற்றும் பலன்களைப் பெறவும் தகுதி பெறுவார்கள். 'காதல் காலம்' போட்டியில் பங்கேற்று தொடரை சமர்ப்பித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். முதல்முறையாக கதை எழுதும் நிறைய எழுத்தாளர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று கதைகளை சமர்பித்திருந்தனர். வெற்றி தோல்வியை தாண்டி அவர்களின் எழுதுவதற்கான ஆர்வத்தையும் குறிப்பிட்ட காலத்தில் கதையை நிறைவு செய்ததையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். உங்கள் அனைவருக்கும் சிறப்பான எழுத்து வாழ்க்கை காத்திருக்கிறது, பிரதிலிபியில் தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான எழுத்து வாழ்க்கையை உருவாக்க நாங்கள் உதவுவோம் என்று உறுதியளிக்கிறோம். இப்போட்டி சிறுகதைகளின் தொகுப்பு, எனவே நிறைய எழுத்தாளர்கள் போட்டியின் தலைப்பையே முதன்மை தலைப்பாக கொடுத்துள்ளனர். அதனால் வெற்றிபட்டியலில் 'காதல் காலம்' என்ற பெயரோடு அக்கதையின் எழுத்தாளரின் பெயரையும் பார்க்கவும். 'காதல் காலம்' போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் அற்புதமான கதைகளை வழங்கியதற்காக வாழ்த்துவோம். தலா ரூ .1000/- பரிசு பெறும் முதல் 7 படைப்புகள்: 1. காதல் காலம் - PALANI ROHITH (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 2.உனக்காகவே நான் வாழ்கிறேன் - varsha s (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 3. காதல் காலம் கதைகள் - சசி கலா (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 4. பாவாடை அவிழும் வயதில் - இளைய நிலா (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 5. காதல் காலம் - Wordsmith (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 6. என்னை மாற்றும் காதலே - விஜி (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 7. காதல் காலம் (சிறுகதைகள்) - பிறை நிலா (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) பிற குறிப்பிடத்தக்க படைப்புகள்: கதை எழுத்தாளர் 1 பாலினக் காதல் யாத்ரா கிருஷ்ணன் 2 காதல் மழையே பொ. அனிதா பாலகிருஷ்ணன் 3 காதலின் ஏழு நிலைகள் விஜயம்.கிமூ 4 காதல் காலம் Priya Krishnan 5 சட்டென்று மாறுது வானிலை Priyadarshini R 6 காதல் காலம் ப்ரியா விமல் 7 சிற்பிகாவிற்காக முதல்வன் யாவிகா கணகவி 8 காதல் காலம் கதை ரசிகை 9 காதலா....கண்ணாளா..... Sakeena Azeez 10 காதல் காலம் சுடர் பிரியா 11 புடிச்சு இருக்கு Rahumath Nisha 12 காதல் காலம் இருள் தேவதை 13 உன் காதலால் பைத்தியம் ஆனேன் Kani suresh 14 காதல் காலம் பிரியா 15 இரகசிய காதல் உஷா கிருஷ்ணன் வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! வெற்றியாளர்கள் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் பெறுவதற்கு தங்கள் மின்னஞ்சலில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை விரைவில் [email protected] இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும். நீங்கள் அனைவரும் விரைவில் கோல்டன் பேட்ஜ் பெற்று, தற்போது நடைபெற்று வரும் சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6 போட்டியில் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை பதிவிட வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/lqj5bkgz7w மனமார்ந்த வாழ்த்துக்களுடன், பிரதிலிபி போட்டிக்குழு.மேலும் பார்க்க
- சிறந்த எழுத்தாளர் விருதுகள் -5 போட்டி முடிவுகள்30 செப்டம்பர் 2023அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, இதோ வந்துவிட்டது நீங்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்த முடிவுகள்! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5 போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பல புதிய எழுத்தாளர்கள் கோல்டன் பேட்ஜ் பெற்று இந்தப் போட்டியில் கலந்து கொண்டு எண்ணற்ற அருமையான 60 பாக கதைகளை பதிவிட்டிருந்தனர். 'பிரதிலிபி சிறந்த எழுத்தளார் விருதுகள்' எப்படி நாட்டின் மிகவும் பிரபலமான ஆன்லைன் இலக்கிய விருதுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்பதைப் பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவில் உள்ள 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பிரபலமான மற்றும் புதிய எழுத்தாளர்கள் பங்கேற்று அதிக எண்ணிக்கையிலான மிகச்சிறந்த கதைகளை இப்போட்டிக்காக எழுதுகின்றனர் - இந்த தேசிய அளவிலான எழுத்துப் போட்டி நம் நாட்டில் உள்ள எழுத்தாளர்களின் அளப்பரிய எழுத்துத் திறமைகளை வெளிப்படுத்த அனைவருக்கும் ஒரு மகத்தான வாய்ப்பை வழங்கியுள்ளது! ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிய பிரதிலிபியின் அனைத்து சிறந்த எழுத்தாளர்களையும் மனதார வாழ்த்துகிறோம். எங்களுக்கு வந்த ஏராளமான கதைகளில் உங்கள் படைப்புகள் தனித்து நிற்கின்றன, மேலும் உங்கள் சாதனைகளை அங்கீகரிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் எழுத்தார்வம் எங்களை மேலும் ஊக்குவிக்கிறது. பிரதிலிபியில் இத்தனை திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நகம்கடிக்க வைக்கும் க்ரைம் த்ரில்லர் கதைகள், முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்யும் திகில் கதைகள், பிரமிக்க வைக்கும் காதல் கதைகள், வலுவான கருத்துக்களைக் கொண்ட சமூகக் கதைகள், அறிவியல் புனைகதைகள், வரலாற்றுக் கதைகள் - அனைத்து வகை கதைகளையும் கண்டோம்! இந்தப் போட்டியில் எங்கள் எழுத்தாளர்களாகிய நீங்கள் பதிப்பித்த கதைகளின் தரம் மிகவும் குறிப்பிடத்தக்கது! உண்மையில், இம்முறை போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில், ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் மிக அருமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. நூற்றுக்கணக்கான கதைகளில் இருந்து முதல் 20 கதைகளை தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக சவாலான விஷயமாகவே இருந்தது. இலக்கியத்தில் ஒப்பீட்டளவில் தீர்ப்பைக் கொண்டு வருவது என்பது சாத்தியமில்லை. எனினும், போட்டி விதிகளின்படி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! எனவே, அயராத முயற்சிகளுக்குப் பிறகு, எங்கள் நடுவர்கள் குழு சிறந்ததிலும் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்போட்டியின் சிறந்த எழுத்தாளர்கள் பெயர்களை கீழே காணவும். சிறந்த எழுத்தாளர்களின் வெற்றிப் பட்டியல் - 1. முதல் பரிசு:சிறைப்பாவை வெளிவருமா? -RADHA KUMAR (ரூ .11000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 2. இரண்டாம் பரிசு:சர்க்கார் - Vanmathy hari (ரூ .7000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 3. மூன்றாம் பரிசு: உள்ளே ஒரு வேட்கை - ஆபுத்திரன் (ரூ .5000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) சிறப்பு பரிசு பெரும் 17 படைப்புகள்- 4. உறவென்று சொன்னால் நீதானே - காஞ்சனா அன்புச்செல்வம் (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 5. தூமகேது - புவனா சந்திரசேகரன் (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 6. நிலைக்கு வருமா அலங்காரத் தேர் - ஜெ.சுமதி ராஜேந்திரன் (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 7. உன் பார்வை தூண்டிலா.? -நந்தினி சுகுமாரன். (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 8. முள்ளோடு தேனீ - கா ல தா ச பா ர தி (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 9. விக்கியும் ராவணனும் - பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார் (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 10. இராவண அதிகாரம்:- இராவணேச்சுரம்..! - தமிழ் பிரியன் (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 11. வதம் செய்யும் மெல்லிசையே - Moon girl (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 12. சாரல் காற்றே - Gayathri Senthil (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 13. வித்தகனின் விந்தையான விகசனமே - பிரியங்கா முத்துகுமார் (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 14. கல்யாணத் தேன் நிலா! - சித்ரவதனா (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 15. என்னில் உன் வாசம் - அனு சத்யா (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 16. உழந்தும் உழவே தலை - நாக நந்தினி (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 17. காதோரம் குளிர் மூட்டவா...! - ஈஸ் வரி (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 18. ராம் லீலா - Para Sakthi (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 19. மூடப்பட்ட ரகசியங்களும், மூழ்கிய பொக்கிஷங்களும் - Sparrow Rapunzel (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 20. நிழலென வந்தாய் நிஜமென ஆனாய் - kalpana-r (ரூ .3000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) பிற குறிப்பிடத்தக்க படைப்புகள்: கீழே உள்ள கதைகளை குறிப்பிடாமல் விட்டால் அது நியாயமற்றது. மேலே இடம்பிடித்திருக்கும் கதைகளுக்கு சவாலான போட்டியாக இறுதி வரை இருந்த குறிப்பிடத்தக்க படைப்புகள் இவை. நிச்சயமாக அடுத்த போட்டியில் பரிசுபட்டியலில் இவர்கள் இடம்பெறுவார்கள் என நம்புகிறோம். கதை எழுத்தாளர் 1 நான் என்பதே நீயல்லவா! G. Shyamala Gopu 2 பெண்ணவன் Sudha Suresh 3 ரணமும் காதலானதே தனிமை காதலி 4 சொ (கொ)ல்லத் துடிக்குது மனசு..!!! M ரிகல்ட்டா முத்துலிங்கம் 5 வேட்டையின் தாக(ப)ம் தீர்ந்திடுமா? Fajeeha mumthaj 6 மித்ரயாழினி Kadha Rasigai 7 சிவதாசன் எனும் நான்... Meera Jo 8 அனல் மேலே பனித்துளி Lakshmi Rajendran 9 தீய்க்கும் வெறுப்பில் தித்திக்கும் நின்காதல்! செவ்வந்தி துரை 10 ப்ரிய சகி உஷா ரமேஷ் 11 மெய் நிகரா பூங்கொடியே Nithya Mariappan 12 தாய்மை ( கண்ணீர் வழிய தேடுகிறது உன்னை என் இதயம்) nivi ammu 13 உறவாக நான் வரவா என் உயிரே Love Amore 14 நின் மோகம் என் செய்யுமோ .. கிருஷ்ண துளசி 15 எங்கே எந்தன் இதயம் அன்பே.... சக்தி பிரியா மிரா 16 ஆதியும் நீ.. என்னில் பாதியும் நீ.. மகா மணி 17 ஜீவனின் உயிர் ஜோதியவள் Vaishnavi Murugan 18 நிழலை வருடும் நிஜமானவள் Rama (ரமா) 19 பாவை தேடிய ஜீவன் ஆர்த்தி வசந்தன் 20 என்னுயிர் மீனம்மா Rekha Sathish இப்போட்டியில் 100 பாகங்களைக் கடந்து கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அவர்கள் அனைவருக்கும் பிரதிலிபியின் உத்தரவாதமான பரிசும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மின்-சான்றிதழ் அனுப்பப்படும். வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களும் கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். பெயர் (சான்றிதழில் இடம்பெற): உங்கள் பிரதிலிபி ப்ரொபைல் லிங்க்: மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: வெற்றிபெற்ற படைப்பின் பெயர் மற்றும் போட்டி: பரிசுத்தொகை: பெயர் (வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ளபடி ஆங்கிலத்தில்): வங்கிக்கணக்கு எண் : IFSC எண் : வங்கியின் பெயர்: வங்கிக்கிளை: PAN எண்: வீட்டு முகவரி (அஞ்சல் குறியீட்டுடன்): மேலே உள்ள விவரங்களை தெளிவாக [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 10 நாட்களில் அனுப்பிவைக்கவும் (நீங்கள் ஏற்கனவே எங்களிடம் உங்கள் விவரங்களை அனுப்பி இருந்தாலும் இப்போட்டியின் பரிசுத்தொகை பெற மீண்டும் மேல் உள்ள விவரங்களை அனுப்பவும்). நீங்கள் விரைவாக விவரங்களை வழங்கும்போது நாங்கள் பரிசுகளை விரைவாக உங்களுக்கு அனுப்ப தோதாக இருக்கும். தற்போது நடைபெற்று வரும் சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6 போட்டியில் வாசகர் தேர்வு, திறமையான வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது என பல வடிவங்களில் முடிவுகள் வெளிவிடப்படும். நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை டிசம்பர் 25, 2023க்குள் வெளியிட வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/lqj5bkgz7w மனமார்ந்த வாழ்த்துக்களுடன் பிரதிலிபி போட்டிக்குழுமேலும் பார்க்க
- பிரதிலிபியுடனான தங்களது அனுபவம் பற்றி எழுத்தாளர்கள் கூறியவை18 செப்டம்பர் 2023எழுத்தாளர்கள் பெயர்களை சொடுக்கி அவர்கள் எழுதிய பதிவுகளை வாசிக்கலாம். 1. தமிழ் மதுரா 2. உமாசாரல் 3. தேன் நிலா 4. Rhea Moorthy 5. அனு விக்னேஷ்வரி 6. ரம்யா சந்திரன் 7. மேகவாணி 8. நாக நந்தினி 9. லதாகணேஷ் 10.நந்தினி சுகுமாரன் 11.திக்ஷிதா-லட்சுமி 12. கனவு-காதலி 13. நித்யா மாரியப்பன் 14. வாணி அரவிந்த் 15. புவனா சந்திரசேகரன் 16. பிரவீணா தங்கராஜ் 17. செவ்வந்தி துரை 18. ஹேமா மணி 19. தரஹி கண்ணன் 20. ஆரா 21. பானுரதி துரைசிங்கம் 22. சிதராவதனா சிவா 23.பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார் 24.சுஜாதா நடராஜன் 25.ஜெயலட்சுமி கார்த்திக் 26. சஹானா சனா 27. ராதா குமார் 28. saranya 29.சனாகீத் 30.குட்டிமா தேவிமேலும் பார்க்க
- பிரதிலிபி சிறந்த எழுத்தாளர் விருதுகள்: உங்கள் 60 பாக கதையை எளிதாக எழுதுவதற்கான 6 ரகசியக் குறிப்புகள்21 ஆகஸ்ட் 2023அன்புள்ள எழுத்தாளருக்கு, இந்தியாவின் மிக பிரபலமான ஆன்லைன் இலக்கிய விருதான 'சிறந்த எழுத்தாளர் விருதுகள்' போட்டி மீண்டும் துவங்கி விட்டது! ஒரு அருமையான 60 பாக கதையை எழுதுவதன் மூலம் நீங்கள் பிரதிலிபியின் மதிப்பிற்குரிய சிறந்த எழுத்தாளர் ஆகும் வாய்ப்பை பெறுவதோடு, ஆச்சரியமூட்டும் பல பரிசுகள் மற்றும் கௌரவங்களையும் பெறலாம். உங்கள் பெஸ்ட்செல்லர் 60 பாகத் தொடரை எப்படி எளிதாகத் திட்டமிட்டு எழுதி முடிக்கலாம் என்பதற்கான 6 ரகசியக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 1. ஒரு வரி கதைக்கருவை எழுதுங்கள்: உங்கள் கதைக்கான 1 வரி கருவை ஒரு வெற்றுத்தாளில் எழுதுங்கள். இந்த கதைக்கருவை உங்கள் தினசரி வாழ்விலுருந்தோ/ செய்தித்தாள் கட்டுரை/ டிவி நிகழ்ச்சிகள்/ சமூக ஊடகங்களின் பதிவுகள்/ உங்கள் கதைகளின் விமர்சனங்களில் இருந்தோ அல்லது இப்படி உங்கள் மனதை தாக்கிய எங்கிருந்தும் எடுத்துக்கொள்ளலாம். 2. உங்கள் கதையின் அரைப்பக்க கதைசுருக்கத்தை உருவாக்குங்கள்: மேலே எழுதிய 1 வரி கதைக்கருவினை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் கதையின் சுருக்கமான கட்டமைப்பை சிந்தியுங்கள். கதை எங்கிருந்து தொடங்குகிறது, எப்படி/எங்கு முடிகிறது என்று எழுதுங்கள். உங்கள் கதையில் உங்களுக்குத் தேவைப்படும் முக்கியமான கதாபாத்திரங்களைப் பற்றி சிந்தியுங்கள். அவர்களை பற்றி சுருக்கமான குறிப்புகளை எழுதுங்கள். 3. கதையின் முக்கிய கதாபாத்திரங்களை வடிவமைக்கவும்: கதையின் முக்கிய கதாபாத்திரங்களை பற்றி சிந்தியுங்கள். அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் உள்ள சவால்கள் என்னென்ன? என்ன மாதிரியான ஆளுமை/குணம் கொண்டவர்கள்? உங்கள் கதையில் உங்களுக்கு தேவைப்படும் மற்ற கதாபாத்திரங்கள் யார்? சுமார் 4-5 வரிகளில் அவர்களை பற்றி சுருக்கமாக எழுதிக்கொள்ளுங்கள். 4. கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான முக்கியமான நிகழ்வுகளை குறித்துக்கொள்ளவும்: ஒரு வெற்றுப்பக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எழுதிய கதைசுருக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு, கதையில் என்னென்ன மாதிரியான முக்கிய நிகழ்வுகள் நடைபெறலாம் என்று சிந்தித்து எழுதுங்கள். நிகழ்வுகளை ஆரம்பம் முதல் இறுதி வரை 1,2,3 என்று வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நிகழ்வு பற்றியும் ஒரு வரியில் சுருக்கமாக எழுதுங்கள். 5. உங்கள் கதையை பாகங்களாக பிரித்துக்கொள்ளவும்: தற்போது போட்டிக்கான உங்கள் 60 பாகங்கள் கதையை திட்டமிடும் நேரம். கதையை மொத்தம் 6 பெரும் பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் கதையின் முக்கிய நிகழ்வுகளை பகிரவும்.1-10 பாகங்கள்11-20 பாகங்கள்21-30 பாகங்கள்31-40 பாகங்கள்41-50 பாகங்கள்51-60 பாகங்கள் இந்த ஒவ்வொரு பிரிவிலும் கதையில் என்ன நடக்கும்? நீங்கள் என்ன எழுதுவீர்கள் என்று உங்கள் யோசனையை 1-2 வரிகளில் எழுதவும். 6. ஒவ்வொரு பாகத்திற்கும் குறிப்பு எழுதுங்கள்: நாம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டோம்! நீங்கள் ஒவ்வொரு 10 பாக பிரிவுக்கும் யோசனையை எழுதிவிட்டீர்கள். இப்போது ஒவ்வொரு தனித்தனி பாகத்தையும் நாம் திட்டமிட வேண்டும். ஒவ்வொரு பாகத்திலும் என்ன நடக்கும் என்ற உங்கள் தோராயமான யோசனையை 1 வரியில் எழுதுங்கள். உதாரணமாக,பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4மற்றும் பல ******************************* இந்த முழுமையான திட்டமிடலுக்கு 2-3 நாட்கள் ஆகலாம். ஆனால், கதை எழுதுவதற்கு முன்னரான இந்தத் திட்டமிடல் உண்மையில் மிகவும் முக்கியமானது. பிரதிலிபி சிறந்த எழுத்தாளர் விருதுகள் போட்டிக்கான உங்கள் கதையை நீங்கள் பதிவிடத் தொடங்கும்போது, எந்தத் தடையும் இல்லாமல் ஒவ்வொரு கதைப் பாகத்தையும் சரளமாக எழுத இந்தத் திட்டமிடல் உங்களுக்கு பெரிதும் உதவும். நீங்கள் முன்னரே அனைத்தையும் திட்டமிட்டு விட்டதால் அடுத்து என்ன எழுதுவது என்ற யோசனைத் தடை உங்களுக்கு இருக்காது. இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள மற்றவர்களை விட நீங்கள் ஏற்கனவே முன்னிலையில் இருப்பீர்கள். பிரதிலிபி குழு பகிர்ந்துள்ள இந்த ரகசியக் குறிப்புகளை முயற்சிக்கவும்! முழுத் தொடர்கதை எழுதும் செயல்முறையும் உங்களுக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். டிசம்பர் 25க்கு முன்னரே 60 பாகங்கள் கொண்ட கதையை நீங்கள் எளிதாக எழுதி முடித்துவிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6 போட்டி பற்றிய முழு விவரங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்- https://tamil.pratilipi.com/event/lqj5bkgz7w இன்றே எழுதத் தொடங்குங்கள்! வாழ்த்துகளுடன்,பிரதிலிபி போட்டிக்குழு.மேலும் பார்க்க
- 'கோல்டன் பேட்ஜ் விருதுகள்' போட்டி முடிவுகள்16 ஆகஸ்ட் 2023அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கோல்டன் பேட்ஜ் விருதுகள் போட்டியின் முடிவுகள் இதோ! நாங்கள் இப்போட்டியை பிரதிலிபியில் எழுத தொடங்கி இருக்கும் புதிய எழுத்தாளர்களுக்காகவே பிரத்யேகமாக நடத்தினோம். புதிதாக தொடர்கதை எழுதுபவர்கள் அருமையான ஒரு சிறு தொடர்கதையை எழுதுவதன் மூலம் பிரதிலிபியில் தங்களுடைய கோல்டன் பேட்ஜை அடைவதற்கு ஒரு படிமுன்னேறுவதேஇப்போட்டியின் நோக்கம். பிரதிலிபியில் கோல்டன் பேட்ஜ் பெறுவது ஏன் இவ்வளவு முக்கியமானது என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம்! எளிமையாகச் சொல்வதென்றால், தங்களுடைய எழுத்துக்களிலிருந்து ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க விரும்பும் பிரதிலிபி எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் கோல்டன் பேட்ஜ் பெறுவது என்பது முதல் படியாகும். பிரதிலிபியில், 9 மொழிகளில், இப்போட்டியில் கலந்து கொண்டு கோல்டன் பேட்ஜ் பெற்ற 176 புதிய எழுத்தாளர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளை தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த எழுத்தாளர்கள் தற்போது தங்கள் படைப்பை லாக் செய்யக்கூடிய பலனை பெற்றுள்ளார்கள்.அதாவது, ஒரு புதிய தொடரை பதிவிடும்போதெல்லாம், 16வது பாகத்திலிருந்து முழுத்தொடரும் லாக் செய்யப்பட்டு, அந்தத் தொடர் பிரதிலிபி பிரீமியம் தொடராக மாறும் வசதி. வாசகர்கள் சந்தாக்களை வாங்குவதன் மூலமோ, நாணயங்களை செலுத்துவதன் மூலமோ அல்லது ஒவ்வொரு பாகமும் திறக்க அடுத்த நாள் வரை காத்திருப்பதன் மூலமோ கதைப் பாகங்களைத் திறக்க முடியும். பிரதிலிபி செயலியில் நீண்ட பல அத்தியாயத் தொடர்களை தொடர்ந்து பதிவிடுவதன் மூலமும், தொடரைப் பூட்டி வைப்பதன் மூலமும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிலிபி எழுத்தாளர்களின் சமூகத்தில் இணையும் வாய்ப்பை இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் பெற்றுள்ளார்கள். இதுமட்டுமல்ல, இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் தற்போது பிரதிலிபியின் 'சிறந்த எழுத்தாளர் விருதுகள் -6' போட்டியில் பங்கேற்கவும், ஆச்சரியமான பணப் பரிசுகள், பிரத்தியேக சட்டமிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பல விருதுகள் மற்றும் பலன்களைப் பெறவும் தகுதி பெறுவார்கள். 'கோல்டன் பேட்ஜ் விருதுகள்' போட்டியில் பங்கேற்று தொடரை சமர்ப்பித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இப்போட்டிக்காக பல புதிய எழுத்தாளர்கள் தங்கள் முதல் முதல் தொடர்கதையை பிரதிலிபியில் பதிவிட்டிருந்தனர், வெற்றி மற்றும் வாசித்தவர்கள் எண்ணிக்கையை தாண்டி எழுத்தின் மீதான அவர்களின் ஆர்வத்தையும் அதற்கான முயற்சியையும் நாங்கள் மனமார பாராட்டுகிறோம். இத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் எழுத்து வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில் லட்சக்கணக்கான வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் எழுத்தாளராக மாறுவதற்கான திறமை உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அத்திறமையை மெருகேற்றி பிரதிலிபி செயலியில் தொடர்ந்து நீண்ட தொடர்களை எழுதினால், நீங்கள் ஒரு வெற்றிகரமான எழுத்து வாழ்க்கையை உருவாக்க நாங்கள் உதவுவோம் என்று உறுதியளிக்கிறோம். 'கோல்டன் பேட்ஜ் விருதுகள்' போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் நம் இதயத்தைத் தொட்ட அற்புதமான கதைகளை வழங்கியதற்காக வாழ்த்துவோம்! தலா ரூ .1000/- பரிசு பெறும் முதல் 10 படைப்புகள்: 1. கண்மணி நீ வர காத்திருந்தேன் - மா னஸ் (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 2. பொட்டப்புள்ளை படிச்சது போதும் - G.MANIKANDAEASURAJA. (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 3. ஆஹா பொண்ணும் அதிரடி காவ(த)லனும் - யாத்ரா கிருஷ்ணன் (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 4. காற்றில் கலைந்த கனவுகள் - Kala Elumalai (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 5. முகிலே மூன்றாம் பிறையே - a"aara (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 6. இயற்கையின் மறுபக்கம் - அகமேந்தி (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 7. பிசி - 1 - தினேஷ் (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 8. என் காதல் மணவாளனே - ஆருத்ரா (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 9. இரத்தம் இல்லா மரணம் - Mari Mathi (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 10. வேந்தனின் ராகம் அவள் - தேவி சுமந்தர் (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) பிற குறிப்பிடத்தக்க படைப்புகள்: கதையின் பெயர் எழுத்தாளர் 11 தேவின் அமிர்தா Resri ரேஸ்ரீ 12 நாக வியூகம் சுபஸ்ரீ பிரேமா 13 செந்தணலின் தாகம்.... Riyathi riya 14 பற பற பற பறவை ஒன்று வெண்பனி s 15 மேக்னா 12 May 2023 Gowthami Karthikeyan 16 கலாப காதலி Geetha Lakshmi 17 அவளுக்கு வயது 18 யோகா ஆராதனா 18 உன்னைத் தேடி - 1 சண்முகா சேதுராமச்சந்திரன் 19 அலைவன் Anandachandrikai 20 கிளப் ஹவுஸ் ச பரத் 21 கள்ளிச்செடியில் பூத்த ரோஜா PALANI ROHITH 22 தாயுமானவளாய் வந்த தாரகை -1 (முழுத்தொகுப்பு) தமிழ் அழகி 23 மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! Priyakutty 24 கரிகாலன் (முழுத்தொகுப்பு) புவனேஸ்வரி 25 வைகை கரை காத்தே நில்லு அம்முலு 26 தாய்மையடையாத பெண்மை பெண்மையல்லவோ? ஸ்வாதி முருகன் 27 சந்தன தென்றல் -1 hamsa venkat 28 நீ என்பதே நான் தானடா(டி) ராஜி 29 தேனுவின் தீரன் விஜி 30 ஹரியின் அழகனே கலை ஶ்ரீ வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! போட்டியில் வெற்றி பெற்ற 10 எழுத்தாளர்களும் கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். பெயர் (சான்றிதழில் இடம்பெற): உங்கள் பிரதிலிபி ப்ரொபைல் லிங்க்: மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: வெற்றிபெற்ற படைப்பின் பெயர் மற்றும் போட்டி: பரிசுத்தொகை: பெயர் (வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ளபடி ஆங்கிலத்தில்): வங்கிக்கணக்கு எண் : IFSC எண் : வங்கியின் பெயர்: வங்கிக்கிளை: PAN எண்: வீட்டு முகவரி (அஞ்சல் குறியீட்டுடன்): மேலே உள்ள விவரங்களை தெளிவாக [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 10 நாட்களில் அனுப்பிவைக்கவும் (நீங்கள் ஏற்கனவே எங்களிடம் உங்கள் விவரங்களை அனுப்பி இருந்தாலும் இப்போட்டியின் பரிசுத்தொகை பெற மீண்டும் மேல் உள்ள விவரங்களை அனுப்பவும்). நீங்கள் விரைவாக விவரங்களை வழங்கும்போது நாங்கள் பரிசுகளை விரைவாக உங்களுக்கு அனுப்ப தோதாக இருக்கும். தற்போது நடைபெற்று வரும் சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6 போட்டியில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை பதிவிட வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/lqj5bkgz7w மனமார்ந்த வாழ்த்துக்களுடன் பிரதிலிபி போட்டிக்குழுமேலும் பார்க்க
- ப்ரீமியம்- புதிய மாற்றங்கள்01 ஆகஸ்ட் 2023நீங்கள் கோல்டன் பேட்ஜ் பெற்ற எழுத்தாளராக இருந்து, உங்களது தொடர் சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் கீழ் இருந்தால் புதிய மாற்றங்கள் கீழ்வரும் வழிகளில் உங்களுக்குப் பொருந்தும் - 1. பிரதிலிபியின் சம்பாதிக்கும் வாய்ப்பில் புதிய மாற்றங்கள் எவ்வாறு செயல்படுகிறது? இதன் மூலம் கோல்டன் பேட்ஜ் வைத்திருக்கும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் சமமான சம்பாதிக்கும் வாய்ப்பைக் கொண்டு வருகிறோம். இனி உங்கள் தொடர்களை ப்ரீமியத்தில் இணைக்கும்பொருட்டு பிரதிலிபி குழு உங்களைத் தொடர்புகொள்ளும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உங்களது முடிவடைந்த அல்லது நடப்பில் உள்ள தொடர்களில் எதையும் உங்களால் எப்போது வேண்டுமானாலும் 'ப்ரீமியம் திட்டத்தின்' கீழ் சேர்க்க முடியும். 2. சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் கீழ் நடப்பில் உள்ள என் தொடருக்கு என்ன ஆகும்? நடப்பில் உள்ள சூப்பர்ஃபேன் தொடர் தானாகவே ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் இணைந்துவிடும். எனினும் உங்கள் தொடரை வாசிக்கும் வாசகர்களுக்காக சில மாற்றங்களை செய்திருக்கிறோம். உங்கள் தொடர் 16ஆம் பாகத்திலிருந்து பூட்டப்படும். இதற்கு முன்பு பாகங்களை திறக்க வாசகர்கள் பதிப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 5 நாட்கள் காத்திருக்கவேண்டும். ஆனால் இப்போதைய புதிய மாற்றத்தின் படி வாசகர்கள் முந்தைய பாகத்திலிருந்து அடுத்த பாகத்தை திறக்க ஒரு நாள் காத்திருக்கவேண்டும். அதாவது, ப்ரீமியம் தொடர்கள் வாசிக்கப்படும் நடைமுறையில். 3. பிரதிலிபி ஏன் இந்த மாற்றத்தை கொண்டு வருகிறது? ப்ரீமியம் திட்டத்தின் மூலம் கோல்டன் பேட்ஜ் வைத்திருக்கும் எழுத்தாளர்கள் அனைவரும் சமமான சம்பாதிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால். ஏனெனில் தற்போதைய மாடலில், ஒருமுறை புதிய பகுதிகளை வெளியிட்டால், 5 நாட்களுக்குப் பிறகு அனைவரும் அவற்றை இலவசமாகப் படிக்கலாம். தொடர் முடிந்ததும் ஒரு புதிய வாசகர் உங்கள் தொடரைப் பார்வையிட்டால், அவர் எந்தப் பூட்டுமின்றி அனைத்து அத்தியாயங்களையும் படிக்க முடியும். ஆனால் இந்த புதிய மாற்றத்தால், 16வது பகுதிக்குப் பிறகு தொடர் நிரந்தரமாக பூட்டப்படும். வெளியீட்டுத் தேதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. முந்தைய பகுதிகளைப் படிப்பவர்களுக்கு மட்டுமே தொடரின் அடுத்தடுத்த பகுதிகள் திறக்கப்படும். 4. வாசகர்கள் என்னென்ன மாற்றங்களை காண்பார்கள் ? - 16ஆம் பாகத்திலிருந்து தொடர்கள் லாக் செய்யப்படும். அதற்கு முன்பு வரை, அதாவது 15ஆம் பாகம் வரை அவர்கள் இலவசமாக வாசிக்கலாம். - தொடரின் பூட்டப்பட்ட பகுதியைப் படிக்க வாசகர்கள் இனி 5 நாட்கள் காத்திருக்க வேண்டாம். பூட்டிய அடுத்த பகுதியை இலவசமாகப் படிக்க அவர்கள் அடுத்த நாள் வரை காத்திருந்தால் போதும். - ப்ரீமியம் தொடர்கள் போலவே , அவர்கள் அடுத்த நாள் வரை காத்திருந்து பூட்டப்பட்ட பகுதியை வாசிக்கலாம். உடனடியாக வாசிக்க ப்ரீமியத்திற்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்அல்லது எழுத்தாளருக்கு சப்ஸ்கிரைப் செய்து சூப்பர்ஃபேன் ஆகலாம் அல்லது 5 நாணயங்கள் அளித்து பாகத்தை உடனடியாக திறக்கலாம். 5. ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் என் நடப்பில் உள்ள தொடரை எவ்வாறு இணைப்பது? நீங்கள் தொடரை எழுதும்போது முதல் 15 பாகங்கள் இலவசமாக திறக்கும். 16ஆம் பாகத்தை பதிப்பித்தவுடன், தொடர் தானாகவே ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் வந்துவிடும். எழுத்தாளர்கள் தொடரின் 16ஆம் பாகத்தை பதிப்பிக்கும் வரை ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனில் இணைக்கும் ஆப்ஷனை தொடர் பக்கத்தில் பார்க்க இயலாது. 6. ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் என் முடிவடைந்த தொடரை இணைப்பது எப்படி? உங்களது நடப்பில் உள்ள சூப்பர்ஃபேன் தொடர் தானாகவே ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் இணைந்துவிடும். உங்களது முடிவடைந்த தொடரை இணக்க, எழுத பக்கத்திற்கு சென்று தொடரின் மற்ற விவரங்களை திருத்த என்ற பொத்தானை அழுத்தினால் உங்களது தொடரை ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் இணைப்பதற்கான ஆப்ஷனைக் காண்பீர்கள்( (சப்ஸ்கிரிப்ஷன் -ஆம் என தேர்வு செய்யவும்). இப்போதைய நிலையில், உங்களது ப்ரொஃபைல் பக்கத்திலிருந்து இதற்கான அணுகலைப் பெற இயலாது. எழுத பக்கத்திலிருந்து மேற்கூறியபடி தொடரை இணைக்கலாம். நீங்கள் தொடரை இணைத்தபிறகு , சில மணி நேரத்தில் (அதிகபட்சம் 24 மணிநேரம்) உங்கள் தொடர் புதிய அம்சத்தில் சேர்க்கப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள். 7. ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்திலிருந்து என் தொடரை நீக்குவது எப்படி? உங்களால் நேரடியாக தொடரை நீக்க இயலாது. தொடரை நீக்க தொடரின் பிரதான பக்கத்தில் உள்ள சம்பாத்திக்கும் திட்டத்தில் பங்குபெற என்ற ஆப்ஷனில் இல்லை என்பதை தேர்வு செய்யவும். அது எங்கள் குழுவிற்கு ஒரு கோரிக்கையை விடுக்கும். எங்கள் குழு 72 மணி நேரத்தில் உங்களைத் தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவும். 8. ஏன் எங்களால் நேரடியாக ப்ரீமியம் திட்டத்திலிருந்து தொடரை நீக்க முடியாது? பணம் செலுத்தி வாசிக்கும் வாசகர்களுக்கு நிலையான அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். திட்டத்தில் இருந்து தொடர்களை திடீரென அகற்றுவது, அந்தத் தொடரை முன்கூட்டியே படிக்க பணம் செலுத்திய வாசகர்களின் நம்பிக்கையை உடைக்கிறது. 9. எழுத்து மற்றும் பதிப்பிக்கும் முறையில் மாற்றங்கள் உள்ளதா? ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள தொடர்களுக்கு - - எழுத்தாளரால் தொடரின் பாகங்களை நீக்கவோ, வரைவுக்கு அனுப்பவோ இயலாது. ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டும் என்றால் எங்களை வாட்ஸப் எண் வழியாகவோ அல்லது[email protected]மூலமாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - எனினும், தொடரின் எந்தப் பகுதியையும் எழுத்தாளர் எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம் - வெளியிலிருந்து பாகங்களை இணைக்க இயலாது. - தொடரின் பாகங்களை மறுவரிசைப்படுத்த முடியாது. 10. எழுதும் முறையில் ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் ? ப்ரீமியம் சந்தாதாரர்களுக்கு ஏற்படும் மோசமான வாசிப்பு அனுபவத்தை தவிர்ப்பதற்காகவே நாங்கள் இதைச் செய்கிறோம். அதாவது ஒரு வாசகர் ப்ரீமியம்/சூப்பர் ஃபேன் சந்தாவை வாங்கி, குறிப்பிட்ட ஒரு தொடரைப் படிக்கத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த தொடரின் எழுத்தாளர், தொடரின் ஏதேனும் ஒரு பாகத்தை நீக்கினாலோ அல்லது பாகங்களை மறுவரிசைப்படுத்தினாலோ, குறிப்பிட்ட வாசகரின் வாசிப்பு அனுபவம் தடைபடுகிறது. இதைத் தவிர்ப்பதற்கே தொடரை திருத்தம் செய்வதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறோம். 11. நான் எனது தொடரை 'முடிந்தது' என்று குறிப்பிட்டால் என்ன நடக்கும்? எதுவும் மாறாது. உங்கள் தொடர் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் தான் இருக்கும். 16ஆம் பாகத்திலிருந்து தொடர் பூட்டப்பட்டிருக்கும். எனினும், ஒரு தொடரை நிறைவு செய்ததாக நீங்கள் குறிப்பிடுவது, உங்கள் படைப்பை அதிகளவு வாசகர்களுக்கு விளம்பரப்படுத்த எங்களுக்கு உதவும். 12. இந்தப் புதிய அமைப்பில், தொடரின் வரைவு/பாகங்களை நான் முன்பதிவேற்றம்(schedule) செய்யலாமா? நிச்சயமாக, உங்களால் முன்னரே பாகங்களை திட்டமிட முடியும். அந்த வசதி அப்படியே தான் இருக்கும். 13. எனது சூப்பர்பேன்களின் வாசிப்பு அனுபவத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா? இல்லை, அவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. . 14. எனது ப்ரீமியம் தொடர்கள் என்னவாகும்? ஏற்கனவே பிரீமியத்தில் உள்ள தொடர்களில் எந்த மாற்றமும் இருக்காது. எல்லாம் அப்படியே இருக்கும். 15. நான் ஏற்கனவே "முடிந்தது" என்று குறிப்பிட்ட தொடரை சப்ஸ்கிரிப்ஷன் கீழ் பதிப்பிக்கவில்லை. எனது அந்த கதை இந்த புதிய மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்குமா? ஆம். சப்ஸ்கிரிப்ஷன் கீழ் பதிவிடாத உங்களின் நிறைவடைந்த தொடரை, இந்த புதிய அமைப்பின் மூலம் எந்த நேரத்திலும் ப்ரீமியத்திற்கு நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். தொடரின் மற்ற விவரங்களை திருத்த என் ஆப்ஷனில் அதை தேர்வு செய்யலாம். 16. புதிய மாற்றத்தால் எனது சூப்பர்ஃபேன்கள் , வாசகர்கள் மற்றும் எனது வருமானம் ஆகியவை குறையும் அபாயத்தை உணர்கிறேன். - ஆரம்பத்தில் இந்த மாற்றம் வாசிப்பை பாதிக்கலாம். ஆனால், இந்த விளைவு எதிர்மறையாக மட்டுமே இருக்கும் என்ற அவசியமில்லை! நாளடைவில் இதனால் உங்களது சப்ஸ்கிரிப்ஷன் அதிகரிக்கும். - முன்பு போல் 5 நாட்களுக்கு பிறகு பொதுவாக எல்லா வாசகர்களுக்கும் பூட்டப்பட்ட பாகங்கள் இலவசமாக திறக்காது. குறிப்பிட்ட லாக் செய்யப்பட்ட அத்தியாயத்திற்கு முன் உள்ள அனைத்து அத்தியாயங்களையும் படித்த வாசகர்கள் மட்டுமே, அடுத்த நாள் வரை காத்திருந்து அடுத்த அத்தியாயத்தைப் படிக்கலாம். மற்ற வாசகர்களுக்காக அந்த பாகங்கள் பூட்டப்பட்டிருக்கும். ஒரு வாசகர் ஒரு நாளில் ஒரு இலவச அத்தியாயத்தை மட்டுமே படிக்க முடியும். மேலும், இலவச நாணயங்கள் இருந்தாலும், வாசகரால் எந்த நீண்ட கதையையும் ஒரே அமர்வில் படிக்க முடியாது. ஒரு வாசகர் அனைத்து அத்தியாயங்களையும் தொடர்ச்சியாகப் படிக்க விரும்பினால், பூட்டிய அத்தியாயங்களைப் படிக்க அவர்கள் குறிப்பிட்ட எழுத்தாளருக்கு சப்ஸ்கிரைப் செய்யவேண்டும் அல்லது பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் அல்லது நாணயங்களை வாங்க வேண்டும். 17.போட்டியில் இடம்பெற்றுள்ள எனது தொடர் இந்த மாற்றத்தின் கீழ் வருமா? நிச்சயம், இந்த மாற்றம் உங்களது போட்டிப் பங்கேற்பை பாதிக்காது. 18. எனது தொடரின் பாகங்கள் திறக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். எனது தொடர் ப்ரீமியத்திற்கு கீழ் உள்ளதா? உங்கள் தொடரில் ப்ரீமியம் (Diamond) சின்னம் இருந்தால் , தொடர் ப்ரீமியத்தின் கீழ் இருக்கின்றது என அர்த்தம். உங்களது தொடர் பாகங்கள் உங்களுக்கு திறந்திருந்தால் , வாசகர்களுக்கும் திறந்திருக்கும் என்று அர்த்தம் அல்ல. ப்ரீமியம் சின்னம் இருந்தால் வாசகர்களுக்கு 16ஆம் பாகத்திலிருந்து தொடர் பூட்டப்பட்டிருக்கும். 19. ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்திலிருந்து நான் பெறும் சம்பாத்தியத்தை எங்கு காணலாம்? மாதத்தின் இறுதி நாளில் உங்களது சம்பாத்தியம் பகுதியில் உங்களது ப்ரீமியம் சம்பாத்தியத்தைக் காணலாம்.மேலும் பார்க்க
- பேப்பர்பேக்05 ஜூன் 2023அன்புள்ள பிரதிலிபி வாசகர்களுக்கு, நாங்கள் உங்களிடம் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம் ! மதிப்புமிக்க எழுத்தாளர் Rajesh Kumar, அவர்கள் தங்கள் புத்தகங்கள் மூலம் நல்லதொரு உயரத்தை எட்டியுள்ளார். 'நிலவுக்கும் நெருப்பென்று பேர் !', 'ஃப்ளாட் நம்பர் 144அதிரா அபார்ட்மெண்ட்'பிரதிலிபியில் பதிப்பிக்கப்பட்ட இந்நூல்கள் தற்போது புகழ்பெற்ற பதிப்பகமான வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தின் மூலம் அச்சு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன! அவற்றை கீழே வழங்கப்பட்டுள்ள அமேசான் இணைப்பில் சென்று வாங்கிக்கொள்ளலாம் : Amazon link -1.நிலவுக்கும் நெருப்பென்று பேர் ! -https://www.amazon.in/dp/935776187X?ref=myi_title_dp2.ஃப்ளாட் நம்பர் 144அதிரா அபார்ட்மெண்ட் (Book 1) -https://www.amazon.in/dp/9357762906?ref=myi_title_dp3.ஃப்ளாட் நம்பர் 144அதிரா அபார்ட்மெண்ட் (Book 2) -https://www.amazon.in/dp/9357762841?ref=myi_title_dp பிரதிலிபி சமூகத்தின் ஒரு பகுதியாக [Writer Name] இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், மேலும் இந்த சாதனைக்கு அவரை வாழ்த்துகிறோம். மேற்காணும் புத்தகத்தை இன்னும் படிக்காதவர்கள், கீழே உள்ள இணைப்பின் மூலம் பிரதிலிபியில் வாசிக்கலாம் : Pratilipi content link -1.நிலவுக்கும் நெருப்பென்று பேர் ! -https://tamil.pratilipi.com/series/cv7vuex5gtas2.ஃப்ளாட் நம்பர் 144அதிரா அபார்ட்மெண்ட் -https://tamil.pratilipi.com/series/q8fr6aninv4r அச்சு நூலின் ஒரு பிரதியை வாங்கி, அவரது வசீகரிக்கும் கதைசொல்லலை நேரடியாக அனுபவிப்பதன் மூலம் [Writer Name] அவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குவீர்கள் என்று நம்புகிறோம். பிரதிலிபியில் ஓர் அங்கமாக இருப்பதற்கு நன்றி.மேலும் பார்க்க
- 100 பாகங்கள் எனும் மைல்கல்லைத் தொட்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!12 மே 2023அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு சிறப்பான செய்தி எங்களிடம் உள்ளது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் -4 இன் போட்டி முடிவுகள் சிலநாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அப்போட்டி குறித்து தெரியாதவர்களுக்கு, சிறந்த எழுத்தாளர் விருதுகள் ஓர் தேசிய அளவிலான போட்டியாகும், பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் நாங்கள் கடுமையான சவாலை வழங்கினோம். 100 அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்கள் கொண்ட தொடரை எழுதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரதிலிபியிலிருந்து உத்தரவாதமான பரிசுகளை அறிவித்திருந்தோம். ஒருவர் 100 பாகங்கள் கொண்ட தொடரை எழுதுவதற்கு கணிசமான நேரம், பொறுமை, திறமை, ஒழுக்கம் மற்றும் எழுத்து திறமை தேவை என்பதால் இது மிகவும் கடினமான சவாலாகவே இருந்தது. எழுத்தின் மீது மிகுந்த அன்பு இல்லாமல், இதைச் செய்வது எளிதல்ல. வெளிப்படையாகச் சொன்னால், எழுத்தளார்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். இந்த எழுத்துப் போட்டியில் பல எழுத்தாளர்கள் சவாலை ஏற்று 100 பாகத் தொடர்களை பதிவிட்டிருந்தனர்! அவர்களில் சிலர் 150/200/250 அல்லது அதற்கும் அதிகமான பாகங்களுடன் கதைகளை எழுதி இருந்தனர். எங்களின் வியப்பை வெளிப்படுத்தவோ, எழுத்தாளர்களைப் பாராட்டவோ எங்களிடம் வார்த்தைகள் இல்லை. எங்கள் தளத்தில் இத்தகைய திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இத்தகைய அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் நாங்கள் எழுத்தாளர்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, பெரிதாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம். உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எழுத்தார்வம் எங்களை ஊக்கப்படுத்தியது மற்றும் இது மற்ற எழுத்தாளர்களையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும். எனவே, உங்களின் இந்த சிறப்பான சாதனையை பிரதிலிபி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்! நாங்கள் உறுதியளித்தபடி, உங்கள் அனைவருக்கும் கூரியர் மூலம் ஒரு சிறப்பு பரிசு அனுப்புவோம். சில நாட்கள் காத்திருக்கவும், இது தொடர்பாக எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும். இந்தப் போட்டியில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட மிக நீளமான தொடர்- Artista மனோ - கொல்லிமலை இரகசியம் - 172 பாகங்கள் இப்போட்டியில் 100 மற்றும் அதற்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட தொடரை பதிவிட்ட அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல்- எழுத்தாளர் படைப்பு 1 Suramigaa Suresh Nagarcovil நங்கை 2 Love Amore அழகிய திமிர் நீயடி 3 Heera heerthana நாயகன் ஆடிடும் நாடகம் தான் யாருக்கு யார் என்று எழுதி வைப்பான்.. 4 பிருந்தா சாந்தகுமார் யாரடி நீ மோகினி.. 5 லதா சுப்ரமணியன் உணர்வில் உறைந்திடும் உயிர் நீ 6 ஓவியா பிளஸ்ஸி விண்ணைத் தாண்டி வந்தேன் 7 கனவு காதலி அன்பே! உன்னை மனம் கொண்டாடுதே! 8 ரம்யா சந்திரன் என்னுள் அடங்கிய அசுரனே..! 9 Flynahazna உனக்கென உருகினேன் 10 Daisy Josephraj உயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள் 11 கிருஷ்ண துளசி கொஞ்சமே கொஞ்சம் காதல் செய் II 12 விஜய் தமிழ் நடு-இரவு நர்த்தனம்' 13 Raja Lakshmi சண்டிவீரன் 14 M. ரிகல்ட்டா முத்துலிங்கம் கொஞ்சி கொஞ்சம் கொல்ல ...வா ?? 15 Meera Jo நான் தேடினேன் என் கண்ணனை 16 குட்டிமா தேவி ஸ்ரீ முன் ஜென்ம தேடல் நீ என் சகியே... சாராங்கே 17 indhumathi sridharan தேவதை வம்சம் நீயோ !!! 18 ஜெ.சுமதி ராஜேந்திரன் தொட்டுத் தொடர வா 19 தமிழ் பிரியன் ஆரண்யத்தின் அரூப நிழல்கள் 20 Sashmitha ஓ.. காதல் கண்மணியே 21 சங்கரேஸ்வரி நட்சத்திரக் கனவுகள் 22 சி.வெ.ரா நியோகாவும் இரு பெருந்திணைக் காதல்களும் 23 Anitha Kumar விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 24 murugesan Nallathambi காதலிக்க கற்க 25 சுபா நடராஜன் எனக்கே எதிரி என் நெஞ்சம்தானடி 26 Dhanakya Karthik உன் உயிரோடு உயிராகிறேன் என்னவ(ளே)னே 27 பிரியா மெகன் மாயவனின் அணங்கிவள் 28 S B தேடுகிறேன் உன்னை 29 Kousalya Venkatesan காப்பு கட்டு, கெடா வெட்டு 30 Kanchana Senthil பஞ்சவர்ண பறவைகள் 31 Padmapriya Jagannathan மாதவியின் மாயோன் 32 v Ramakrishnan புரியாத புதிர் 33 ராணி தென்றல் கதையின் பெயர் யாதெனில். 34 Ramajothi S வீட்டுக்கு வீடு வாசற்படி 35 மாலினி சுந்தர் தந்திரிகரம் 36 Surya Rajarajan அடங்காத காதல் அதிகாரா 37 திக்ஷிதா லட்சுமி மை_டியர்_ மாமியார் 38 அம்மு-இளையாள் தேவனின் மஞ்சமெனும் வீணை 39 Rhea Moorthy ரியா மூர்த்தி அகிதனின் அரண்மனை 40 Valli Subbiah சுந்தர பவனம் ஒரு அறிமுகம் 41 zeeraf நெருங்கிவா நெஞ்சமே 42 Aruna Ashokkumar முல்லை சிரிப்பில் மூர்க்கம் தவிர்த்தவள். 43 பத்மினி கணேசன் உயிரோடுதான் விளையாடுவேன் 44 Vaishu Ayyam சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ 45 Sparrow Rapunzel எறும்பு உலகம் 46 மு. ச. நறுமுகை நீதானா என்னுள்ளே வீழ்வது? 47 Heera heerthana சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு!!! 48 ஆரா தீரா நதி நீதானடா(டி) 49 nivi ammu வன்மையை மட்டுமே கொண்டவன் இந்த இராவணன் 50 நர்மதா சுப்ரமணியம் சுந்தர நேசங்கள் 51 ஆரா உயிர் இனிக்கும் உறவை தேடி! 52 Priya Dharshini . S தூவானம் 1 53 Lakshmi Bala அசுரனின் பதுமையவள் 54 Vimala krishnan நீரிலும் சுகமாய் எரிகின்றேன் 55 வட மலை சாமி லோக நாதன்(Lokanathan) வாழ்க்கை. 56 பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார் கடைசி வரை(ரி)யில் 57 ஷர்மிளா ராஜேஷ் மனதோடு பேசும் மாயனே! எங்கள் பார்வையில், நீங்கள் அனைவரும் சிறந்த எழுத்தாளர்கள்! தொடர்ந்து இதே அளவு ஆர்வத்துடன் எழுதுங்கள். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்! தற்போது நடைபெற்று வரும் சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5ல் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய, பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையாகும் கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை ஆகஸ்ட் 4க்குள் பதிவிட வேண்டும். போட்டியின் பிரத்யேக பரிசுகள் மற்றும் பிற விதிகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/bnye22ty35 வாழ்த்துக்களுடன் உங்களின் அடுத்த கதைக்காக காத்திருக்கிறோம், பிரதிலிபி போட்டிக்குழு.மேலும் பார்க்க
- 10 பாக தொடர்கதை போட்டி முடிவுகள்10 மே 2023அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, பிரதிலிபி அனைத்து எழுத்தாளர்களுக்காகவும், குறிப்பாக புதிதாக தொடர்கதை எழுத துவங்கியவர்களுக்காக, '10 பாக தொடர்கதை' என்ற போட்டியை இரண்டு மாதங்களுக்கு நடத்தியது. எங்களின் எதிர்பார்ப்பை விட அதிகமான அளவில் புதுமுக எழுத்தாளர்கள் ஆர்வமாக தங்களின் முதல் தொடர்கதையை சமர்ப்பித்திருந்தனர். ஏற்கனவே பிரபலமான, அனுபவமுள்ள எழுத்தளார்களும் குறுகிய கால படைப்பாக நிறைய படைப்புகளை எழுதி இருந்தனர். போட்டிக்கு வந்த நூற்றுக்கணக்கான படைப்புகளை கண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் எழுத்தார்வம் எங்களை மேலும் ஊக்குவிக்கிறது. பிரதிலிபியில் இத்தனை திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இலக்கியத்தில் ஒப்பீட்டளவில் தீர்ப்பைக் கொண்டு வருவது என்பது சாத்தியமில்லை. எனினும், போட்டி விதிகளின்படி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! எனவே, அயராத முயற்சிகளுக்குப் பிறகு, எங்கள் நடுவர்கள் குழு நூற்றுக்கணக்கான படைப்புகளில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். வெற்றிபெற்றவர்கள் பட்டியலை கீழே காணலாம். தலா ரூ .1000/- பரிசு பெரும் முதல் 7 படைப்புகள்: 1.இரவின் இருள்..- தஞ்சை ஆஹில் (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 2.ராகமஞ்சரி - Nithya Mariappan (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 3.பாங்கி - Karthi Sounder (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 4. பொம்மி பொம்மாயி - காயத்ரி அருண் (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 5. ஆறாம் புலன் - Kalyan Ananth (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 6. காளப்பட்டி வழக்கு பாகம் - 1 - சி. விக்கனராஜ் (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 7. கண்ணுக்குள்ளே கடல்கசியுதே - Jeya Lakshmi Karthik (ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) சிறப்பு பரிசாக சட்டமிடப்பட்ட சான்றிதழ் பெரும் 13 படைப்புகள்: 8 கையடக்க கால தூதன்..! ரம்யா சந்திரன்... 9 காதல் கனாவே!!! Sahi Veera 10 தனியொரு அன்றில் அவள்!! (முழுத்தொகுப்பு) Riyathi riya 11 அனல் மேலே பனித்துளி..! வாணி அரவிந்த் 12 உறுதி கொள் நெஞ்சே சக்தி மீனா 13 உனக்காக நான் Valli Subbiah 14 வானமடி நீ எனக்கு RAJI 15 குற்றத்தின் நிறம் சிவப்பு உமாபாலன் 16 அன்பும் அறனும் உடைத்தாயின் மாலினி சுந்தர் 17 இறைவி அருள்மொழி மணவாளன் 18 மாய்ச்சலூர் நங்கை Nagajothi 19 பிறை நிலா Hema Malini 20 அந்த ஒரு வினாடி... indhumathi sridharan மின் சான்றிதழ் பெரும் 30 படைப்புகள்: 1 வானம் எங்கும் உன் பிம்பம்... 2 முத்தே.. என் முத்தாரமே...! 3 விழி விளையாட்டு 4 சிறகடிக்க ஆசை 5 உயிரில் கலந்த துரோகங்கள்,,,!! 6 வாழ்வில் பேரானந்தம் நீ (முடிந்தது) 7 நதியிலே புதுப்புனல் 8 கத்தியின்றி இரத்தமின்றி 9 சி. ஐ. டி. சிவகாமி. 10 மண்ணிலே ஈரமுண்டு 11 நெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது... 12 திருக்கல்யாணம் 13 ஹீ இஸ் மை ஹீரோ 14 கன்னிகாதானம் 15 உறவெனும் புத்தகமே 16 கண்ணீரில் கரைவதோ காதலே...!! 17 இளங்கன்றும் பயமறியும் !! 18 விடியும் முன்...! 19 இறுதி வரை இதயத்திலே 20 குற்றப் பக்கங்கள் 21 நெஞ்சம் வீழ்ந்தது உன்னில் (முழுத்தொகுப்பு) 22 சீமாவும் மாயனும் 23 (வி)சித்திர வனம்.. ( முழுத்தொகுப்பு) 24 1 .எங்கே என் அவ(ள்)ன் 25 புதிதா(ரா)ன காதலிது 26 நீ.. நான்.. பிரதிலிபி.. 27 இன்பா - 1 28 பூ போல் கொய்து விட்டாள்! 29 1. பார்த்த நாள் முதல் (முடிந்தது) 30 அனலியின் துகினம் (முடிந்தது) வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களும் கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். பெயர் (சான்றிதழில் இடம்பெற): உங்கள் பிரதிலிபி ப்ரொபைல் லிங்க்: மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: வெற்றிபெற்ற படைப்பின் பெயர் மற்றும் போட்டி: பரிசுத்தொகை: பெயர் (வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ளபடி ஆங்கிலத்தில்): வங்கிக்கணக்கு எண் : IFSC எண் : வங்கியின் பெயர்: வங்கிக்கிளை: PAN எண்: வீட்டு முகவரி (அஞ்சல் குறியீட்டுடன்): மேலே உள்ள விவரங்களை தெளிவாக [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 10 நாட்களில் அனுப்பிவைக்கவும் (நீங்கள் ஏற்கனவே எங்களிடம் உங்கள் விவரங்களை அனுப்பி இருந்தாலும் இப்போட்டியின் பரிசுத்தொகை பெற மீண்டும் மேல் உள்ள விவரங்களை அனுப்பவும்). நீங்கள் விரைவாக விவரங்களை வழங்கும்போது நாங்கள் பரிசுகளை விரைவாக உங்களுக்கு அனுப்ப தோதாக இருக்கும். தற்போது நடைபெற்று வரும் சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5 போட்டியில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை ஆகஸ்ட் 4, 2023க்குள் வெளியிட வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/bnye22ty35 மனமார்ந்த வாழ்த்துக்களுடன் பிரதிலிபி போட்டிக்குழுமேலும் பார்க்க
- சிறந்த எழுத்தாளர் விருதுகள் -4 போட்டி முடிவுகள்04 மே 2023அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, உங்கள் காத்திருப்பு முடிவடைந்துவிட்டது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 4 போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வெற்றியாளர்களை அறிவிக்கும் முன் நாங்கள் உங்களிடம் சிலவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். பங்கேற்பு எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த போட்டியானது முந்தைய போட்டிகளின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளது. பல புதிய எழுத்தாளர்கள் கோல்டன் பேட்ஜ் பெற்று இந்தப் போட்டியில் கலந்து கொண்டு எண்ணற்ற அருமையான 60 பாக கதைகளை பதிவிட்டிருந்தனர். 'சிறந்த எழுத்தளார் விருதுகள்' எப்படி நாட்டின் மிகவும் பிரபலமான ஆன்லைன் இலக்கிய விருதுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்பதைப் பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவில் உள்ள 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பிரபலமான மற்றும் புதிய எழுத்தாளர்கள் பங்கேற்று அதிக எண்ணிக்கையிலான மிகச்சிறந்த கதைகளை இப்போட்டிக்காக எழுதுகின்றனர் - இந்த தேசிய அளவிலான எழுத்துப் போட்டி நம் நாட்டில் உள்ள எழுத்தாளர்களின் அளப்பரிய எழுத்துத் திறமைகளை வெளிப்படுத்த அனைவருக்கும் ஒரு மகத்தான வாய்ப்பை வழங்கியுள்ளது! ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிய பிரதிலிபியின் அனைத்து சிறந்த எழுத்தாளர்களையும் மனதார வாழ்த்துகிறோம். எங்களுக்கு வந்த ஏராளமான கதைகளில் உங்கள் படைப்புகள் தனித்து நிற்கின்றன, மேலும் உங்கள் சாதனைகளை அங்கீகரிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் எழுத்தார்வம் எங்களை மேலும் ஊக்குவிக்கிறது. பிரதிலிபியில் இத்தனை திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நகம்கடிக்க வைக்கும் க்ரைம் த்ரில்லர் கதைகள், முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்யும் திகில் கதைகள், பிரமிக்க வைக்கும் காதல் கதைகள், வலுவான கருத்துக்களைக் கொண்ட சமூகக் கதைகள், அறிவியல் புனைகதைகள், வரலாற்றுக் கதைகள் - அனைத்து வகை கதைகளையும் கண்டோம்! இந்தப் போட்டியில் எங்கள் எழுத்தாளர்களாகிய நீங்கள் பதிப்பித்த கதைகளின் தரம் மிகவும் குறிப்பிடத்தக்கது! உண்மையில், ஒவ்வொரு கதையும் எங்களின் இதயத்தைத் தொட்டது மற்றும் சில எப்போதும் அங்கேயே இருக்கும். இலக்கியத்தில் ஒப்பீட்டளவில் தீர்ப்பைக் கொண்டு வருவது என்பது சாத்தியமில்லை. எனினும், போட்டி விதிகளின்படி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! எனவே, அயராத முயற்சிகளுக்குப் பிறகு, எங்கள் நடுவர்கள் குழு பல ஆயிரம் படைப்புகளில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்போட்டியின் சிறந்த எழுத்தாளர்கள் பெயர்களை கீழே காணவும். சிறந்த எழுத்தாளர்களின் வெற்றிப் பட்டியல் - 1. முதல் பரிசு: கடலத்தனைக் காதல் - வேலையா கார்த்திகேயன் (ரூ .31000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு + ஒரு புத்தம் புதிய அமேசான் கிண்டில் கருவி + படைப்பு பிரதிலிபியின் சார்பில் புத்தகமாக வெளியிடப்படும் + எழுத்தாளருக்கு புத்தகத்தின் 20 இலவச எழுத்தாளர் பிரதிகள் வழங்கப்படும்.) 2. இரண்டாம் பரிசு: சந்திர-லேகா ! - சுஜாதா நடராஜன் (ரூ .26000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு + ஒரு புத்தம் புதிய அமேசான் கிண்டில் கருவி + படைப்பு பிரதிலிபியின் சார்பில் புத்தகமாக வெளியிடப்படும் + எழுத்தாளருக்கு புத்தகத்தின் 20 இலவச எழுத்தாளர் பிரதிகள் வழங்கப்படும்.) 3. மூன்றாம் பரிசு: நான் தேடினேன் என் கண்ணனை - Meera Jo (ரூ .17000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு + பிரதிலிபியிலிருந்து ஒரு அற்புதமான ஆச்சரியமூட்டும் பரிசு வழங்கப்படும்.) 4. நான்காம் பரிசு: யாரடி நீ மோகினி - பிருந்தா சாந்தகுமார் (ரூ .11000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு + பிரதிலிபியிலிருந்து ஒரு அற்புதமான ஆச்சரியமூட்டும் பரிசு வழங்கப்படும்) 5. ஐந்தாம் பரிசு: விண்ணைத் தாண்டி வந்தேன் - ஓவியா பிளஸ்ஸி (ரூ .7000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு + பிரதிலிபியிலிருந்து ஒரு அற்புதமான ஆச்சரியமூட்டும் பரிசு வழங்கப்படும்) தலா ரூ .3000/- சிறப்பு பரிசு பெரும் 5 படைப்புகள்: 6.நில் கவனி காதல் செய் - Praveena Thangaraj (ரூ .3000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 7. கொல்லிமலை இரகசியம் - Artista மனோ (ரூ .3000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 8. மௌனம் பேசியதே - Gayathri senthil (ரூ .3000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 9. சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு!!! - Heera heerthana (ரூ .3000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 10. உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே - சுவாதி லக்ஷ்மி (ரூ .3000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) தலா ரூ .1000/- சிறப்பு பரிசு பெரும் 25 படைப்புகள்: 11. கதையின் பெயர் யாதெனில்.- ராணி தென்றல் (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 12. மந்திரக்கற்கள் - சூரியகாந்தி (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 13. கண்ணாமூச்சிக் காதல் -Sudha Suresh (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 14. இதுவரை சொல்லாத உணர்விது - G. Shyamala Gopu (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 15. தந்திரிகரம் - மாலினி சுந்தர் (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 16. காதல் அலைவரிசை 29.24 - Nithya Mariappan (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 17. ஆழியின் அசுரா! என் காதல் அரக்கா! - செவ்வந்தி துரை (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 18. ஜென்ம சாபல்யம் - வெண்பா பூங்குழலி (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 19. எனக்காகப் பிறந்தவனே எனதழகா - ரம்யா சந்திரன் (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 20. நிறைமதியே நீதானடி - Vijaya Lakshmi (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ் + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 21. கொஞ்சி கொஞ்சம் கொல்ல ...வா ?? - M. ரிகல்ட்டா முத்துலிங்கம் (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 22. மாயவனின் அணங்கிவள் - பிரியா மெகன் (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 23. சடச்சி -யாதிரா (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 24. வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் - ஜெய லட்சுமி (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 25. முன் ஜென்ம தேடல் நீ என் சகியே... - குட்டிமா தேவி ஸ்ரீ (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 26. மருண்ட விழி பார்வையால் மயக்கியதேனடி - முகில்கீத்ஸ் (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 27. மாதவியின் மாயோன் - Padmapriya Jagannathan (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 28. சுந்தர நேசங்கள் - நர்மதா சுப்ரமணியம் (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 29. தேவதை வம்சம் நீயோ !!! - indhumathi sridharan (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 30. அழகிய திமிர் நீயடி - Love Amore (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 31.குலக்கதை - நந்தினி சுகுமாரன் (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 32. அட்சயா - ஆ. பொன்னி வர்மன் (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 33. நீதானா என்னுள்ளே வீழ்வது? - மு. ச. நறுமுகை (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 34. தேவனின் மஞ்சமெனும் வீணை - அம்மு-இளையாள் (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 35. யாரடா நீ - மித்ரா (ரூ .1000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) பிற குறிப்பிடத்தக்க படைப்புகள்: கீழே உள்ள கதைகளை குறிப்பிடாமல் விட்டால் அது நியாயமற்றது. இந்த முறை இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் இவர்களை, அடுத்த முறை மேலே உள்ள சிறந்த எழுத்தாளர்கள் பட்டியலில் பார்ப்போம் என்று நம்புகிறோம். 1. உன் உயிரோடு உயிராகிறேன் என்னவ(ளே)னே - Dhanakya Karthik 2. மைவிழியே மரணத்தீவே - வாணி அரவிந்த் 3. என்னுள்ளம் உன்னோடு..! - ஏகா 4. வன்மையை மட்டுமே கொண்டவன் இந்த இராவணன் - nivi ammu 5. உயிரோடுதான் விளையாடுவேன் - பத்மினி கணேசன் 6. சிவபுரி - Jeya Bharathi 7.அன்பே! உன்னை மனம் கொண்டாடுதே! - கனவு காதலி 8.மனம் தைத்த மங்கை - நாக நந்தினி 9.அடங்காத காதல் அதிகாரா - Surya Rajarajan 10. உயிர் இனிக்கும் உறவை தேடி! - ஆரா 11. அசுரனின் பதுமையவள் - Lakshmi Bala 12. தெய்வம் தந்த பூவே - உஷா ரமேஷ் இப்போட்டியில் 100 பாகங்களைக் கடந்து கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அவர்கள் அனைவருக்கும் பிரதிலிபியின் உத்தரவாதமான பரிசும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மின்-சான்றிதழ் அனுப்பப்படும். வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களும் கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். பெயர் (சான்றிதழில் இடம்பெற): உங்கள் பிரதிலிபி ப்ரொபைல் லிங்க்: மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: வெற்றிபெற்ற படைப்பின் பெயர் மற்றும் போட்டி: பரிசுத்தொகை: பெயர் (வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ளபடி ஆங்கிலத்தில்): வங்கிக்கணக்கு எண் : IFSC எண் : வங்கியின் பெயர்: வங்கிக்கிளை: PAN எண்: வீட்டு முகவரி (அஞ்சல் குறியீட்டுடன்): மேலே உள்ள விவரங்களை தெளிவாக [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 10 நாட்களில் அனுப்பிவைக்கவும் (நீங்கள் ஏற்கனவே எங்களிடம் உங்கள் விவரங்களை அனுப்பி இருந்தாலும் இப்போட்டியின் பரிசுத்தொகை பெற மீண்டும் மேல் உள்ள விவரங்களை அனுப்பவும்). நீங்கள் விரைவாக விவரங்களை வழங்கும்போது நாங்கள் பரிசுகளை விரைவாக உங்களுக்கு அனுப்ப தோதாக இருக்கும். தற்போது நடைபெற்று வரும் சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5 போட்டியில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை ஆகஸ்ட் 4, 2023க்குள் வெளியிட வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/bnye22ty35 மனமார்ந்த வாழ்த்துக்களுடன், பிரதிலிபி போட்டிக்குழுமேலும் பார்க்க